This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/05/03/.

கண்கள் திறந்தன! - படுதலம் சுகுமாரன்

பணி இட மாறுதலில் வந்திருந்தான், முரளி. சுறுசுறுப்பாக இருந்ததுடன், சீனியர் பத்மநாபனிடம், நல்ல பேரை சம்பாதிக்க, பவ்யமாகவும் நடந்தான். அதைக் கவனித்த பத்மநாபன், ‘இங்க பாருப்பா… நீ, உன் வேலைய கவனமாக செய்தாலே போதும்; அதுவே, எனக்கு கொடுக்கிற மரியாதை. மற்றபடி, முகஸ்துதி செய்வதோ, கூழைக் கும்பிடு போடுவதோ வேணாம்…’ என்று, ‘பட்’டென்று சொல்லி விட்டார். ஆனாலும், மேலதிகாரி என்ற பந்தா இல்லாமல், சினேகமாக பழகிய பத்மநாபனை, முரளிக்கு பிடித்து விட்டது. மேலும், அவர் இலக்கிய ஆர்வம்

.


Read More


போர்வை - எஸ்.அகஸ்தியர்

இவன் தற்காலத்து நாகரிகப் பையன். ஆனால், யாழ்ப்பாண வைதீகப் பிடிப்பு இறுக்கம். சமய ஆசாரங்கள், விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் என்று நிகழ்ந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன் கண்ட அரசியல் ஞானம். இளம் சந்ததியான இவனுக்கும் பழம் முத்துப் பாட்டியே ஞானக்குரு. ‘இந்தா ரண்டரையாகுது….’ சுரேஷ் மனசுள் லேசான கீத சுகம் நீவிற்று. சோர்ந்த உடல் சுரீரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி ‘வார்ச்’ பார்க்க, முகத்தில் குதூகல மையல்

.


Read More


நம்பிக்கை - முல்லா

முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது. புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்! ஒரு பெரிய படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள். படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல் காற்று வீசி படகு அங்கும் இங்குமாக தள்ளாடியது. முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார். இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்! முல்லாவிடமே கேட்டுவிட்டாள். முல்லா பதில்

.


Read More


மஞ்சள் அழகி? - ஹேமி கிருஷ்

சண்மூவின் உள்ளங்கை தவளையின் உட்புறத்தில் இருப்பதைப் போலவே எப்பொழுதும் வியர்வையின் ஈரத்தன்மையுடன் இருக்கும்… நான் கீத்துவிடம் சொல்வேன்… “சண்மூவோட உள்ளங்கையைப் பிடிச்சுப் பாரேன். லேப்ல தவளையைத் தொடற மாதிரியே இருக்கும்.’ அவள் என்தலையில் செல்லமாக அடித்து, “ஏய் உனக்கு கம்பேர் பண்ண வேற ஒண்ணும் கிடைக்கலையா?’ என்றாள். சண்மூவிடமே சொல்லி இருக்கேன்… முறைத்துக் கொண்டு அடிக்க வருவாள்.. ஒல்லியான குச்சி போன்ற தேகத்தில் இருக்கும் மஞ்சள் அழகி அவள். வேறொரு ஊரிலிருந்து தினமும் எங்கள் ஊருக்கு வந்து

.


Read More


கெளதமனின் வாழ்வு! - வ.ந.கிரிதரன்

அ. கெளதமனும், மனோரஞ்சிதமும்! வானமிருண்டு கறுத்துக் கிடந்ததொரு அந்திப் பொழுதில் வழக்கம்போல் கெளதமன் தான் வசிக்கும் ‘அபார்ட்மென்ட்’ பலகணியிலிருந்து முடிவற்று விரிந்து, பரந்து கிடக்கும் மெல்லிய இருளில் கறுப்புப் படுதாவாகக் காட்சியளிக்கும் நீல வானைப் பார்த்தபடி பல்வேறு விதமான சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தபோது அவனது சிந்தனைகளில் வழக்கம்போல் அதிக இடத்தினை ஆக்கிரமித்திருந்த சிந்தனையாக ‘இருப்பும் அது பற்றிய காரணமும்’, அடுத்ததாக ‘மனிதரும் அவர்தம் உணர்வுகளும், செயல்களும்’ இருந்ததென்பதை நிச்சயமாகக் கூற முடியும். விடைதெரியாப் புதிரெனத் தொடரும் இருப்புப்

.


Read More


குட்டி - ஜே.கே

என் கொல்லைப்புறத்து காதலிகள் எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவே வளர்ந்தது. காய்த்து கொட்டியது. இலைகளை விட காய்களின் எண்ணிக்கை தான் அதிகம். வளரும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. காய்க்க ஆரம்பித்துவிட்டதா? பாத்தி எல்லாம் கட்டி ஒரே அமர்க்களம் தான். தனியாக தண்ணீர் பாய்ச்சி, தேயிலை சாயம், கோழிச்செட்டை எல்லாம் வெட்டித்தாட்டு பெற்ற பிள்ளையை கவனிப்பது போல கவனிக்கத்தொடங்கினோம்.

.


Read More


மாமன் மனசு..! - காரை ஆடலரசன்

ஆர்த்தி மனசுக்குள் ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம், உறுத்தல். ‘ இன்றைக்கு எப்படியும் இதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் ! ‘ – என்று நினைத்தவள் அருகில் நின்ற அம்பிகாவை அழைத்துக் கொண்டு தனிமையில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் அருகில் சென்று நின்றாள். ” மாமா…! ” அழைத்தாள். ” என்னம்மா…? ” அவர் வாசிப்பை நிறுத்தி இருவரையும் அன்னாந்து பார்த்தார். ” எங்களுக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சரியா பதில்

.


Read More


உடன் பிறந்தவளானவள் - ஸ்ரீ.தாமோதரன்

கண் முன்னால் தன் தகப்பனை கற்பனையில் கொண்டு வந்து கண்டபடி பேச ஆரம்பித்தான் தனபால், இன்னதுதான் என்றில்லை, வாயில் வர்க்கூடாத வார்த்தை எல்லாம் பேசினான். கூட இருந்த மகேஸ்வரி “யோவ் போதும்யா” பாவம்யா அவங்க என்னா பண்ணுவாங்க, நீ நாதாறியா போனதுக்கு அவங்களை குத்தம் சொல்லிட்டு இருக்கற” இல்லே மகேஷ், எங்கப்பன் அப்பவே என்னை நாலு சாத்து சாத்தி வீட்டுல இருடான்னு சொல்லியிருந்தா நான் இப்படி ஆயிருக்க மாட்டேன்னுல்ல. மகேஸ்வரி அப்புறம் எப்படி ஆயிருப்பியாமா? யோவ் இப்ப

.


Read More


பிறவித் துறவி - பா.அய்யாசாமி

ஆடுதுறையில் ஒரு நடுத்தர உணவகம், காலை நேர பரபரப்புடனும் , இறைப் பக்தி பாடலுடன் உணவு பரிமாறிக்கொண்டு இருந்தார்கள். பாதிக்கு மேல் இருக்கைகள் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு காலத்தில் உட்கார இடம் கிடைக்காமல் காத்து இருந்து சாப்பிட்டு, பாராட்டி விட்டுச் சென்றவர்கள் சமீப காலமாக வருவது குறைந்தே போன உணவகத்தில் இதுவும் ஒன்று. கல்லாவில் அமர்ந்து இருந்தவரிடம் ஒரு வயதானவர் வந்து, இங்கே ரமணி சார் யாருங்க? ஏன்? நான்தான். என்ன? என எரிந்து விழுந்தார். முதலாளி

.


Read More


மச்சு வீடு - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘சுவர்க் கிறுக்கிகள்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) “அப்ப நல்ல நாள் பாத்து ஆரம்பிச்சிரலாமா தாயி?” “தொணைக்கு இன்னும் ஒரேயொரு கொத்தனார் மட்டும் வச்சிக்குங்க அண்ணாச்சி.” “சரி தாயி.” “சித்தாள் வேண்டாம், நானே அந்த வேலையை பாத்துக்குறேன். நீங்க பாட்டுக்க ஒங்க வேலையைப் பாத்திட்டே போங்க. செங்கல்லு, சுண்ணாம்பு, மண்ணு எல்லாம் நானே போய் பாத்து பாத்து வாங்கிப் போட்டுடறேன்.” “கதவு, சன்னலு, நெலை எல்லாத்துக்கும் வார்னிஷ் அடிக்கணும்னு சொல்றியே தாயி.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.