This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/04/30/.

நடுவழியில் ஒரு பயணம்! - வ.ந.கிரிதரன்

பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். ‘டவரின்’ வீதியும் ‘புளோர்’ வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு ‘தொராண்டோ’ நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). ‘பஸ்’சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக ‘பஸ்’ தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து

.


Read More


முல்லாவின் உடைவாள்!  - முல்லா

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார். அவர் முல்லாவை நோக்கி, “முல்லா! அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது

.


Read More


பலூன்கார் - பிரதீப்குமார் (அறிமுகம்)

அன்று மாலை கடற்கரையில் உப்பு காற்றில், ஊதா,சிவப்பு,மஞ்சள் இன்னும் பல நிறங்களில் ஆடிய பலூன்கள். அதை பார்க்கும் பொழுதே நினைத்தேன் உடன் இருக்கும் என் அக்கா மகனின் கவனம் அங்கு தான் செல்லும் என்று. “மாமா, பலூன்!”,என்றான் மழலை. வாங்கி தர்றேன்! வாங்கி தர்றேன்! என்று வாங்கி அவன் கையில் தந்தேன். அந்த கருப்பு முகத்தில் அந்த மழலை சிரிப்பு !,அதை காணவே எத்தனை பலூன் வேண்டுமானாலும் வாங்கி தரளாம் எனத் தோன்றியது. ஏன் நானும் ஒரு

.


Read More


கயல்விழியாள் - பாரத் ராஜ் (அறிமுகம்)

“யோவ், எவ்ளோ வாட்டி சொல்லறது,நா கேக்குற மாறி இருந்தா மட்டும் சொல்லு,சும்மா அப்படி இருக்குனு இப்படி இருக்குனு சொல்லிட்டு இருக்காத என்ன புரிதா.” என்று கத்திகொண்டே கதிர் தன் போனை ‘டம்’என டேபிளுக்கு குடுத்தான். ஒரு 10 நிமிடம் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான். மீண்டும் ஒரு 2 நாள் கழித்து அதே போன் கால் ஆனால் இந்த முறை அவனுக்கு சாதகமாக பதில் வந்தது. “சர், நா தான் பிரேம் பேசுறேன் ,நீங்க

.


Read More


ஆந்தைகளின் மொழி - பீர்பால்

அன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார். அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது

.


Read More


டொக் …டொக் …டொக் - ஜே.கே

விசுக்கென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டான் நரேன். பக்கத்தில் நடுங்கியபடியே, ஓடிவந்த மூச்சிறைப்புடன் அபி. இத்தனை பதட்டத்திலும் கூட, அவளை அழகு என்று விவரிக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் அழகு. பயத்தில் இன்னமும் சிவந்துபோய் இருந்தவளை பார்க்க நரேனுக்கு இந்த நேரத்திலும் முத்தமிடவேண்டும் போல .. “ஏன் ..ச்சே ..கதவை திறந்தால் உயிர் போய்விடும்.. இந்த இடத்தில் எதற்கு இப்பிடி ஒரு சிந்தனை?”, நரேன் அவளை அணைத்துக்கொண்டே அறையினுள்ளே வந்தான். ஒரேயொரு மேசை. மேலே ஒரு

.


Read More


நெருப்பு! - காரை ஆடலரசன்

மீனுக்குட்டி எலிகளைக் கடித்துக் குதறிவிட்டு தன் காலால் வாயைத் துடைக்கும் அழகே தனி. புலி, சிங்கம் கெட்டது. ! வீட்டு வளர்ப்பு விலங்குகளில் நாயும் பூனையும் தனித்தனி ரகம். நாய் மனித விசுவாசி. வளர்ப்பவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே வரும். பூனை அப்படி கிடையாது. பத்து நாட்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் சென்றாலும்…அது வீட்டை விட்டு எங்கும் நகராது. எனக்கு இரண்டையும் பிடிக்குமென்றாலும் நாயைவிட பூனையைத்தான் அதிகம் பிடிக்கும். நாயைக் குட்டியாய் இருக்கும் போதுதான் தூக்கி

.


Read More


முனியாண்டியின் மூளை - ஸ்ரீ.தாமோதரன்

முனியாண்டி இரண்டு நாளாய் கவனித்து கொண்டுதான் இருக்கிறான். அவன் அப்பா காத்தமுத்து பயந்துவிட்டவர் போல் காணப்படுகிறார். இவன் பள்ளிக்கு செல்லும் முன்னர் அப்பாவிடம் சொல்லி விட்டுத்தான் செல்வான். இந்த இரண்டு நாட்களாக அப்பா சரியில்லை என்பது அவர் முகபாவனையில் கண்டு கொண்டான். முன்னெல்லாம், போயிட்டு வர்றேம்ப்பா என்று சொன்னால் சூதனாமா போயிட்டு வா என்று மகிழ்ச்சியுடன் சொல்லி அனுப்புவார். இப்பொழுது அவனை பயந்து பயந்து பார்க்கிறார். பத்திரம்,பத்திரம் அடிக்கடி சொல்லி அனுப்புகிறார்.காலையில் அம்மாவிடம் கூட முனியாண்டி கேட்டான்,

.


Read More


பயணங்கள் ஓய்வதில்லை - பா.அய்யாசாமி

ரமா, நான் போய் வருகிறேன், என தனது மனைவியிடம் சொல்லிவிட்டு தனது இரு சக்ர வாகனத்தை உருட்டிக் கொண்டு வேலை நிமித்தமாக புகை வண்டி நிலையம் செல்கிறார். முரளி. முரளி, மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர், தனது பயிற்று விக்கும் திறமையால், பல மாநிலங்கள் சென்று கற்று, மனித ஆற்றலை பெருக்கும் கலையை கை வரப் பெற்றவர். தற்போது காரைக்குடியில் அமைந்துள்ள சுமார் ஐநூறு நபர்கள் வேலை செய்யும் தொழில் நிறுவனமான Ram Tech என்ற கம்பெனியில்,

.


Read More


சுவர்க் கிறுக்கிகள் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘இசக்கியின் பள்ளிப் பருவம்’ படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது) ஊர் சுவர்களில் தன்னைப்பற்றி நக்கல் செய்து கண்டபடி எவனோ எழுதிப் போட்டுக்கொண்டு திரிந்ததைப் பார்த்தபோது இசக்கிக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. எழுதினது யாரென்று தெரிந்தால் வேகமாகப் போய் அவன் மண்டையை உடைக்கலாம். அர்த்த ராத்திரியில் அல்லவா பயந்தாங்கொள்ளிப் பயல்கள் எழுதிப் போடுகிறார்கள். பார்த்தான் இசக்கி… அவனும் ஒரு அடுப்புக் கரியை எடுத்தான். பட்டப் பகல்லேயே பயப்படாமல், ‘நீ நல்லவனா இருந்தா

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.