This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/01/27/.

மனதின் குரல் - நாங்குநேரி வாசஸ்ரீ

 ஐஸ் கிரீம் பார்லரில் இவ்வளவு பிரச்சினை வரும் என எதிர் பார்க்கவில்லை தான். இனிமேல் பேச்சில் கவனம் தேவை. எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். என்னப்பா இது வெண்ணிலா ஐஸ் கிரீம் மேல தேன் மட்டும் உட்டு கொடுத்திருக்காங்க. எனக்கு சாக்கலேட் சிப்ஸ், பாதாம் எல்லாம் போட்ட பபிள்கம் ஐஸ்கிரீம் வேணும்னு தானே இவ்ளோ தூரம் வந்தோம். மகனின் குமுறலுக்குப் பின் மனைவி உங்கப்பா வாய்க்குள்ள முணுமுணுத்திருப்பார். அதனால வந்த வினை. இதில ஏதோ தப்பு நடந்திருக்கு.

.


Read More


முடியுமா? - காசாங்காடு வீ.காசிநாதன்

 அந்த எண்ணம் முதன்முதலில் எப்போது எப்படி ஏற்பட்டது என சொல்வது சற்று கடினம். ஆனால் அந்த எண்ணம் ஏற்பட்டபின், இரவுபகலாக அது என்னை முழுதும் ஆக்கிரமித்து விட்டது. மகள் சாந்தினியுடன் பேசுவதில்லை என்று வள்ளியம்மை தனது 57 வயதில் எடுத்த தீர்க்கமான முடிவுதான் அது. காரணம் சில நாட்களுக்கு முன்பு நடந்த “தொலைபேசி உரையாடல்.” விமானம் தாழ்வாகப் பறந்து தரையை டயர்கள் தொட்டபோது அதிர்ந்து, ஜெர்க் ஆகி குலுங்கி டாக்சியாக ஓடியது, இரண்டாவது வரிசையில் இருந்தவர் பைலட்

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 “என்னங்க இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்க. என்னால் இதை தாங்கிக்கவே முடியலீங்க.எனக்கு இனிமே குழந்தையே பிறக்காதா.எனக்கு இன்னும் ஒரு குழந்தை வேணுங்க.இன்னும் ஒரு குழந்தை வேணுங்க” என்று சொல்லி அவள் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தாள் கமலா.நடராஜன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.பிறகு நிதானமா இந்த ஜென்மத்லெ நமக்கு இந்த ஒரு குழந்தை ஒன்னு தான்னு அந்த ஆண்டவன் அருளி இருக்காரு.நாம இதை ஏத்துக்கிட்டு சந்தோஷமாய் இருந்து வரணும்

.


Read More


கனவு காணும் உலகம் - கே.எஸ்.சுதாகர்

 தர்மு ஒரு கடின உழைப்பாளி – ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான். அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது – மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் – வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. வெளியே கடும் குளிர்.

.


Read More


முட்டாள்களின் கேள்விகள் - பீர்பால்

 பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்றும்,அவமானப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆவலாயிருந்தனர். அவர்களில் சைதான்கான் முதன்மையானவர். சைதான்கான் தன்னைப்போலவே பீர்பாலின் மீது பொறாமை கொண்ட மற்றவர்களுடன் சேர்ந்து அவரை அவமானப்படுத்தத் திட்டங்கள் தீட்டினார். அவற்றுள் ஒரு திட்டம் அனைவருக்கும் பிடித்துப்

.


Read More


பாசம் பத்தும் செய்யும் - வா.மு.கோமு

 வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போனதும் மின்விசிறி வினோத சப்தமுடன் நின்றவுடன் இவனுக்கு தூக்கம் போயிற்று. மனைவி ரம்யா சமையல் அறையில் இருந்தாள் போலிருக்கவே படுக்கையிலிருந்து எழுந்தான். அருகில் படுத்திருந்த வினோதினி ‘பிறந்த நாளுக்கு ரெட் கலர் சுடி வேணும்ப்பா’ என்று பேசிக் கொண்டே புரண்டு தூங்கினாள். பாலகிருஷ்ணன் பெருமூச்சு விட்டபடி சமையல் அறைக்கு வந்தான். மனைவி ரம்யா நூறுநாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து சாலைப்

.


Read More


எலுமிச்சம்பழத்தின் ஆசை - ஸ்ரீ.தாமோதரன்

 ஒரு பெரிய தோட்டம் இருந்தது, அந்த தோட்டத்தில் ஏராளமான காய்கறிகள்,பழங்கள் காய்த்து இருந்தன. ஒரு பக்கம் கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,தக்காளி, பாகற்காய், போனறவைகளும், மறு புறம் ஆங்கில வகை காய்கறிகளான பீட்ரூட், நூல்கோல், காலி பிளவர், போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் அன்னாசி, எலுமிச்சை,பிளம்ஸ், போன்ற பழ வகைகளும் பயிரிடப்பட்டிருந்தன. தினமும் ஆட்கள் அந்த தோட்டத்துக்குள் வந்து காய்கறிகளையும், பழங்களையும்,பறித்து வண்டியில் எடுத்து சந்தைக்கு கொண்டு செல்வர். ஒரு நாள் காய்கறிகள் அனைத்தும் ஏற்றப்பட்டு விட்டன. பழ

.


Read More


உதயம் - காரைநகரான்

 இந்திரன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தரை அங்கே கண்டு கொள்ளலாம் என்கின்ற திடமான நம்பிக்கை அவனிடம் இருந்தது. இந்திரன் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான். பௌத்த துறவி போலக் காவி தரிக்காவிட்டாலும் அவனும் காவி தரித்திருந்தான். தலை மொட்டையாக மழிக்கப்பட்டு இருந்தது. முகத்திலும் துளியளவு ரோமம் இல்லை. அதுவும் சுத்தமாக மழிக்கப்பட்டு பளிங்காக மினுமினுத்தது. அவன் இன்னும் பௌத்த துறவியாக மாறிவிடவில்லை. எதுவாக மாறவேண்டும் என்பதைப் பற்றி அவன் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்கு முன்பு

.


Read More


முதலாளிகள்..!! - காரை ஆடலரசன்

 இன்றைக்கு வேலைக்கு சேர்ந்து முதன் முதலாக புதுக் கம்பெனி முதலாளியை வைத்து இனோவா காரை ஓட்டிக்கொண்டிருந்த கணேசனுக்கு ஹாரனில் கை வைக்கவே நடுக்கமாய் இருந்தது. அதிலும்…. ‘கம்பெனி அருகில் செல்லும்போது கண்டிப்பாய் ஹாரன் அடிக்கும் சந்தர்ப்பம் வரவேக் கூடாது !’ என்று வேண்டிக்கொண்டு வண்டியை ஓட்டினான். இவன் வேண்டுதலுக்குக் காரணம்….அல்லல், அனுபவம். ஒருவாரத்திற்கு முன்வரை ஐந்து ஆண்டுகளாக இவனுக்கு நிர்மல்-விமல் கம்பெனியில்தான் வேலை. உண்மை ஊழியன். அந்த கம்பெனியில் இவன் வேலைக்குச் சேர்ந்த புதிது. முதல் வாரத்தில்

.


Read More


சாப்பாட்டுக் காதல் - எஸ்.கண்ணன்

 அனுபமாவுக்கு இருபது வயது. எம்பிஏ படித்துக் கொண்டிருக்கிறாள். பார்ப்பதற்கு முகம் மட்டும் லட்சணம். ஆனால் உடம்பு வாளிப்பாக, புஷ்டியாக இருக்கும். எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பாள். அவளது வாய் அசைந்து கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறையாவது சாப்பிடுவாள். அது தவிர நொறுக்குத் தீனிகள் தனி. சுருங்கச் சொன்னால் சரியான தீனிப் பண்டாரம். “ஏண்டி அனு, இப்படி நாக்கை வளர்த்து வச்சிருக்கியே… இருபது வயசிலேயே இப்படி இருந்தியான்னா போகப் போக இன்னும் எப்படியோ

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.