This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2018/12/15/

மாற்றங்களும் ஏற்றங்களும் - ரேவதி பாலு

 எழும்பூரில் ரெயில்வே குவார்ட்டர்ஸில் வசித்து வந்த எங்களுக்கு ரெயில்வேயில் பணி புரிந்து வந்த எங்கள் தாத்தா பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தான் வாழ்க்கையில் மாற்றங்கள் ஆரம்பித்தன. பாட்டி கூடத்தில் கால் நீட்டி அமர்ந்து தன் நீண்ட கூந்தலைப் பின்னி பிச்சோடாவாக முடிந்து கொள்வாள். ஒரு நாள் மாலை கூடத்தில் போட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடியபடியே தானும் தாத்தாவும் கும்பகோணத்தில் வீடு வாங்கிக் குடியேறப்போகும் உத்தேசத்தை பொதுவாக வீட்டில் அறிவித்தாள். அந்த நொடி அம்மா முகம் பயத்தில் வெளிறியது. மூன்று

.


Read More


உலகை மாற்றும் திறனாளி! - துடுப்பதி ரகுநாதன்

 சாந்தியின் அன்பு மகன் மோகனுக்கு அவனுடைய மூன்றாவது வயசிலேயே போலியோ தாக்கப்பட்டு வலது கால் சூம்பிப் போய் விட்டது. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. அது போல் தான் இந்த ஊனமும்! யாரும் விரும்பி ஊனம் அடைவதில்லை! பிறப்பால், விபத்தால், வியாதியால் ஊனம் ஏற்பட்டு விடுகிறது! இதை குழந்தை மோகனுக்குப் புரிய வைத்து, அவனுக்கு தன்னம்பிக்கையை எப்படி ஊட்டுவது என்றே ஒரே சிந்தனை தான் சாந்திக்கு! சாந்தியின் கணவன் சரவணன் குழந்தை மோகனுக்கு இரண்டு வயசு

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம் -8 | “ஹாய் கமலா,என்ன விஷயம்.இவ்வளவு காலையிலேயே எனக்கு போன் பண்ணி இருக்கே” என்று ஆசரியத்துடன் கேட்டான் நடராஜன்.“நிறைய சமாசாரம் இருக்குங்க பேச.நான் ஒரு ‘அவர்’ பர்மிஷன் போட்டு விட்டு நாலு மணிக்கே நான் சரவண பவனுக்கு வந்து விடறேன்.நீங்களும் தவறாம வந்து விடுங்க.உங்க கிட்டே

.


Read More


சதைச் சுருணைகள் - செய்யாறு தி.தா.நாராயணன்

 சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கும் என்னுடைய மூத்த மகள் பவித்ரா வெள்ளிக் கிழமை மாலை வீட்டுக்கு வந்திருந்தாள். வரும்போது கையில் ஒரு அட்டைப் பெட்டியை ஜாக்கிரதையாய் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தாள். “இன்னாதும்மா கண்ணே!?.”—அவள் முகமெல்லாம் மகிழ்ச்சி வழிய “திறந்து பாருங்க.” — “ஐயோ! இன்னா பீடிகை பலமாக இருக்கு?..”—-கட்டை அவிழ்த்து மெதுவாக திறந்தவன் அப்படியே நின்று விட் டேன். உள்ளே இன்னும் கண்களைக்கூட திறக்காத, சிறகுகளே முளைக்காத, சதைச் சுருணைகளாக,

.


Read More


ராமசாமிகள் கவனிக்கவும் - ந.பச்சைபாலன்

 ராமசாமியைத் தெரியுமா உங்களுக்கு? தெரியும். நீங்கள் கேட்பது எந்த ராமசாமி என்று திருப்பிக் கேட்பீர்கள். சினிமாவில் நடிப்பிசைப் புலவர் எனப் புகழப்பட்டு, ‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே’ பாடல் பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாரே கே.ஆர். ராமசாமி. அவரா என்றால் இல்லை. திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்துத் தமிழர்களிடையே மூடநம்பிக்கைகள் களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினாரே வைக்கம் வீரர், தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி. அவரா என்றால் அவரும் இல்லை. பிறகு எந்த ராமசாமி? சிவாஜி காலத்து நடிகராகத்

.


Read More


யாக்கை - ம.நவீன்

 “ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்” என்று அவள் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியது அவனுக்குப் பிடித்திருந்தது. முடியை இழுத்துவாரி குதிரைவால் கொண்டை கட்டியிருந்தாள். கொண்டைக்கு மட்டும் பழுப்பு நிற வண்ணம். சிலிவ்லெஸ் உடலோடு ஒட்டாதபடிக்கு மார்புகள் நிமிர்ந்திருந்தன. வெள்ளை லேகிங்ஸில் பிட்டங்கள் ததும்பித்திமிரின. கருஞ்சிவப்பு உதட்டுச்சாயமும் நகப்பூச்சும் இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் அழகாக தெரியலாம் என நினைத்துக்கொண்டான். முயக்கத்தில் ஒத்த நிறம் கொண்ட

.


Read More


நரகம் சொர்க்கம் மோட்சம் - காரைநகரான்

 நோர்வே சொற்காபுரியாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல எங்கள் இயலாமை என்பது தரனுக்குத் தெரியும். அதன் காரணம் தெரிவதால் நரகம் ஒன்றும் சொர்க்கமாகி விடுவதில்லை. அடர்ந்த பனைக் காட்டில் கூட்டமாக உறவுகளோடு இருந்தவனை அரசியல், பொருளாதாரக் காரணங்கள் வலுவில் பிடுங்கி வந்து பனிக் காட்டில் விட்ட தனிமை உணர். அந்தத் தனிமை என்பது தனிமை மட்டும் அல்ல. அது அதைவிடக் கொடுமையானது. அது எதுவும் அற்ற

.


Read More


திருட்டுப்பட்டம் - ஸ்ரீ.தாமோதரன்

 “மகாத்மா காந்தி நினைவு” பள்ளியில் அடுத்த வாரம் பள்ளிஆண்டு விழா வருகிறது. அந்த விழாவிற்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஜீவானந்தம் அவர்கள் விருந்தினராக வருகிறார் என்று பள்ளி தலைமையாசிரியர் அறிவித்தார்.அங்குள்ள மாணவ்ர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் ஜீவானந்தம் அவர்கள் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்த மூன்று மாதத்திலேயே பல் நல்ல செயல்களை செய்து புகழ் பெற்று விட்டார்.அந்த ஊரில் அதுவரை தொடர்ந்து நடந்து வந்த வழிப்பறிகள், கொள்ளைகள் போன்ற தீய செயல்களை பெருமளவு குறைத்து விட்டார்.அது

.


Read More


வெறி - காரை ஆடலரசன்

 எங்கள் தெருவிற்கு எங்கிருந்தோ இளமையான, நல்ல வாலிபமான மெருன் நிறத்தில் ஆண் நாய் ஒன்று அடுத்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அவர்கள், ஒரு வருடம் அந்த வீட்டில் வசித்து காலி செய்து விடடு போன பிறகு அந்த நாய் அவர்களோடு செல்லாமல் எங்கள் தெருவின் அனைத்து வீடுகளிலும் உண்டு உறங்கி செல்ல நாயாக மாறியது. எங்கள் தெரு ரொம்ப சின்னது. எண்ணி பத்தே பத்து வீடுகள். இந்த பத்து வீடுகளிலும் அந்த நாய்க்குத் தட்டு வைத்து சோறு

.


Read More


புத்தாண்டு சபதம் - எஸ்.கண்ணன்

 ஆயிற்று… புது வருடம் 2019 சீக்கிரம் பிறந்துவிடும். ஒவ்வொரு வருட துவக்கத்தையும் சில முக்கிய சபதங்களுடன் நான் ஆரம்பிப்பேன். அதில் மிகவும் முக்கியமான சபதம் சிகரெட் புகைப்பதை விட்டுவிடுவது. . சிகரெட் புகைப்பதை முற்றிலுமாக விட்டுவிட வேண்டும் என்பதுதான் பல வருடங்களாக என்னுடைய புது வருட வைராக்கியம். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் விஷயத்தில் மட்டும் என்னுடைய வைராக்கியம் மிகப் பரிதாபமாக தோல்வியடைந்துவிடும். ஏனோ அதைமட்டும் என்னால் விடவே முடியவில்லை. அதனால் வரும் 2019ம் ஆண்டு முதல்

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.



To change your subscription, click here.