சிறுகதைகள் (Short Stories in Tamil)
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/10/22/
சில குறிப்புகள்: செப்டம்பர் மாதம் பார்வையிட்டோர்:13,618 மொத்தம் பார்வையிட்டோர்: 16,47,687 செப்டம்பர் மாதம் படிக்கப்பட்ட கதைகள்: 72,625 மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:68,92,581
வெகுண்ட உள்ளங்கள் (குறுநாவல்)
ஆசிரியர் குறிப்பு: இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’பத்திரிகையில் தொடராக வெளியானது.98இல் அண்ணரின் முயற்சியில் குமரன் வெளியீடாக ‘வேலிகள்’ என வெளியாகிய சிறுகதைகள் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. என்னுடைய முதலும் முடிவுமான ஒரே புத்தகம் அது தான்! நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம். 28 ஆண்டுகளிற்குப் பிறகு உங்கள் தளத்திற்கு அனுப்புவோம் என எடுத்து மீள வாசித்த போதே…. வள்ளம்,படகு என்ற சொற்களை பாவித்ததில் சிறு குழப்பம் இடம் பெற்றிருப்பது தெரிந்தது.அதோடு
.
|
Read More
|
கார் வாங்கப் போறேன்
“நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” – வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். “அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே சோதனை ஓட்டம் போகலாம்னு படுத்தமாட்டீங்களே?” தர்மபத்தினி லாவண்யா. “வாழ்த்துக்கள் சுந்தர்! எவ்ளோ காசு ஆகும்டா?” அப்பா கிருஷ்ணன். “கண்ணு! உனக்கு திருப்தியா இருக்கா? எல்லாரும் ‘தாமதம் ஆகுது’ன்னு திட்டறாங்கன்னு ஏதோ ஒண்ணு வாங்கணும்னு அவசரப்படாத” அம்மா அம்புஜம். “அப்பாடா! மொதல்ல என் நண்பர்கள் எல்லார் கிட்டயும் சொல்லணும்” வெளியில் ஓடினான் பையன் கேசவ். “ஹையா ஜாலி!
.
|
Read More
|
அகநக நட்பு
‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’ பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில் இருந்த உற்சாகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருந்தாலும் அவனை சீண்டும் குரலில் கேட்டேன்: ‘ஏண்டா! என்னைப் பார்க்க வரவில்லையா?’ ‘அதில்லை பாட்டி! உன்னைப் பார்ப்பதில், உன் கை சமையலை ருசிப்பதில் எனக்கு எப்பவும் ஆர்வம் உண்டு. இந்த தடவை இவையெல்லாவற்றையும் விட சந்தோஷமான விஷயம் கரண் சென்னையில் இருக்கிறான் என்பது தான். உனக்குக் கரண் தெரியுமில்லையா?’
.
|
Read More
|
கனவுப் பாதை
மத்திய தில்லியிலுள்ள நிர்மால்யா சொசைட்டியின் பூங்காவில் பெண்களும் ஆண்களுமாக ஏகக் கூட்டம். அனைவரும் எதையோ எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். அங்கு திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் பாபி (அண்ணி) என்று அழைத்துக் கொள்வது வழக்கம். அவரவர்களின் கணவன்மார்கள் அடுத்த பெண்களுக்கு அண்ணன், தம்பி முறைதான் என்பதைத் தெரிவிக்க. ராஜேஷும் அவனது நண்பர்களும் பார்க் பென்ச்சில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பென்ச் பரந்து விரிந்த அத்தி மரத்தடியில் போடப்பட்டிருந்ததால் நிறைய ஆன்ட்டிகள் அம்மர நிழலில் நின்று பேசிக்
.
|
Read More
|
தீண்டும் இன்பம்
முதலிரவு அறை. பால் சொம்பேந்திய திருவாரூர் தேரை தோழி பொக்லைன்கள் நெட்டி அறைக்குள் தள்ளி விட்டு கதவை வெளிப்பக்கம் சாத்துகின்றன. பால் சொம்பை கையில் கொடுத்துவிட்டு கால் தொட்டு வணங்குதல் இல்லை.சற்று தள்ளியே அமர்ந்து கை வீணையை மீட்டக்கொடுத்துவிட்டு உச்சி சிலிர்க்க காலால் தரையில் கோலமிடும் தார்மீக வெட்கமில்லை. இப்படி இன்னும் அனேக இல்லைகளை எல்லை கடந்து சூழ்ந்து கொண்டு சூறாவளியாக அவனை வதைக்கத் தொடங்கியது அந்த இரவு. “சாரி…கண்ணன்.!..இந்த கல்யாணத்தை இப்போ வச்சிக்க வேணாம்…ஆறுமாசம் போகட்டும்னு
.
|
Read More
|
ஜாயல்!
அவன் அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் கனவு தேசத்திற்குச் செல்வதற்கு விசா கிடைத்ததே அதற்குக் காரணம். போனமாதம் பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. அவன் படித்த எலெக்ட்ரிகல் டிப்ளமோவிற்கு வெளி நாட்டில் அதுவும் அரசாங்க கம்பனியில் வேலைக் கிடைக்குமென்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரே வாரத்தில் பணிக்கான ஆர்டரும் வந்துவிட்டது. ஐந்து வருட கான்டிராக்ட். ‘விசா’ கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணியிருந்தான். அரசாங்க கம்பெனி என்பதால் விசா கிடைப்பதில் எந்தச் சிரமமும் இல்லை என எத்தனை முறை
.
|
Read More
|
சங்கீதாவின் கோள்
கோள் விசும்பை நோக்கி வளரும் என்பது அவளுக்குத் தெரிந்து இருந்தும் அதற்கே என்று வாங்கிய பெரியதொரு பூச்சாடியில் அதை வீட்டிற்குள் கொலுவிருத்தினாள். அரம்பையின் எண்ணம் வேறாகியது. இலங்கையில் இருந்து அதைக் கடத்திக் கொண்டு வருவதற்குச் செய்த பிரயத்தனம் சங்கீதாவின் நினைவில் வந்து போயிற்று. இலங்கையில் இருந்து அதன் கிழங்கைச் சட்டப்படி நோர்வேக்குள் கொண்டுவர முடியாது. ஈட்டி இலைக் கிழங்கை மிகவும் சிறிய முளை உடன் கொண்டு சென்றால் மட்டுமே அது பிழைத்து வாழ்வதற்குச் சாத்தியமாய் இருக்கும் என்று
.
|
Read More
|
திருட்டுப்பட்டம்
“மகாத்மா காந்தி நினைவு” பள்ளியில் அடுத்த வாரம் பள்ளிஆண்டு விழா வருகிறது. அந்த விழாவிற்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஜீவானந்தம் அவர்கள் விருந்தினராக வருகிறார் என்று பள்ளி தலைமையாசிரியர் அறிவித்தார்.அங்குள்ள மாணவ்ர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் ஜீவானந்தம் அவர்கள் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்த மூன்று மாதத்திலேயே பல் நல்ல செயல்களை செய்து புகழ் பெற்று விட்டார்.அந்த ஊரில் அதுவரை தொடர்ந்து நடந்து வந்த வழிப்பறிகள், கொள்ளைகள் போன்ற தீய செயல்களை பெருமளவு குறைத்து விட்டார்.அது
.
|
Read More
|
ஆளவந்தவர்..!
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார். ”உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !” நெகிழ்ந்தார். ”பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.” காறாராய்ச் சொன்னான் காசிநாதன். ”என்ன சொல்லு ?” ஏறிட்டார். ”என் தெரு முருகேசு பயல். தான் அரசாங்க உத்தியோகஸ்த்தன் என்கிறதை மறந்து நமக்கு எதிராய் வேலை செய்து ஓட்டையெல்லாம் பிரிச்சான். அவனை
.
|
Read More
|
டாக்டர் வீடு
நான் கடந்த முப்பது வருடங்களாக பெங்களூரில் ஒரு மல்டி நேஷனல் ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் சந்தோஷமாக வேலை செய்கிறேன். நான், என் மனைவி சரஸ்வதி; மகன் ராகுல்; மருமகள் ஜனனி மற்றும் என் பேத்தி விபா ஆகியோர் டாட்டா நகரில் முப்பதாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறோம். அடுத்த இரண்டு வருடங்களில் வைஸ்-பிரசிடெண்டாக ஓய்வு பெறப்போகும் என்னுடைய ஒரே தீராத ஆசை பெங்களூரில் ஒரு நல்ல வீடு சொந்தமாக வாங்கி செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான்.
.
|
Read More
|
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content
To change your subscription, click here.
|