சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
view this email online
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://www.sirukathaigal.com/2022/05/24/
(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அல்ஹாம்ரா நீரூற்று : கிரானடா வெப்பம் மிகுந்த நாடு . குடிதண்ணீருக்குக்கூட அங்கே பஞ்சமாயிருந்தது. கிரானடா மன்னன் அரண்மனையின் பெயர் அல் ஹாம்ரா என்பது. அதன் அருகே தண்ணீருக்குப் பஞ்சமில்லை. நிழலும், குளிர்ச்சியான காற்றும் போது மான அளவு இருந்தன. ஏனென்றால் அங்கே ஒரு நறுநீர்க் கேணி இருந்தது. அதிலிருந்து நீரூற்றுப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதன் குளிர் நீர் வளத்தால் சுற்றுமுற்றும்
|
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முயலே, முயலே, ஓடி வா முன்னே பாய்ந்து ஓடி வா! தயங்கித் தயங்கித் தூர நீ தள்ளி நிற்க லாகுமோ? பயத்தை நீயும் விட்டிடு; பாய்ந்து முன்னே வந்திடு!” என்ற பாட்டை முணு முணுத்துக்கொண்டே ஓடோடி வந்தாள், மங்களம். வாசலைக்கூட அவள் தாண்ட வில்லை. அங்கே…அவளுடைய ஆசை, அன்பு எல்லாமே உருவான ஓர் உயிர் அவளுக்காகவே காத்துக்கொண்டிருந்தது. அது ஒரு முயல்குட்டி! மங்களம்
|
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராயப்பன் எங்கள் விற்பனைப் பையன்களுள் ஒருவன். கிறிஸ்தவப் பையன். ஆனால் அவன் வழக்கம். இரவில் எங்கேயாவது ஒரு விநாயகரைத் தொழுது விட்டு அங்கேயே விநாயகருக்குப் பின் படுத்துத் தூங்கிவிடுவான். வேறு நல்ல இடம் சொன்னாலும் அங்கே படுக்கமாட்டான். “ஏன் இவ்வாறு செய்கிறாய்?’ என்று கேட்டால் சும்மா சிரிப்பான். ரொம்ப வற்புறுத்தினால், ‘அது தான் எனக்கு மனம் நிம்மதி’ என்பான். “உங்கள் அப்பா கிறிஸ்தவராயிருந்தாரா,
|
(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸ்கூல் கேட்டருகே போனதும் அந்த நினைவுகள் ஒரு திரைப்படமாய் விரிந்தன. அவன் மனம் அப்படியே வெலவெலத்துக் கால்கள் கேட்டைத் தாண்டிப் போகத் தயாராகின. இன்று வகுப்பிற்குப் போனால் நிச்சயம் தலைமை ஆசிரியர் “சரஸ்வதி பூஜைக்கு காசு கொண்ணாந்தியா?” என்று கேட்பார். அவன், தான் கொண்டு வரவில்லை என்பதை உறுதிப்படுத்துவதைப் போல் எழுந்து தலையைக் கீழ் போட்டவாறு நிற்பான். அப்போது தலைமை ஆசிரியர் “மத்தவங்கள்
|
குமரேசபுரம் என்னும் ஒரு சிற்றூர், அந்த ஊரில் ஒரு நடு நிலை பள்ளியும், நூலகமும், சிறிய அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து அலுவலகம் இவைகள் எல்லாம் இருந்தன. அந்த ஊரில் பொதுவாக எல்லாரும் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். ஓரளவு படித்தவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்று இரவு ஊருக்கு திரும்பி வந்து விடுவார்கள். அந்த ஊரிலிருந்து மூன்று முறை பேருந்து வந்து சென்றதால் வெளியூருக்கு வேலைக்கும், மற்றபடி பொருட்கள் வாங்கி வருவதற்கும் அந்த ஊர் மக்களுக்கு வசதியாக இருந்தது. அந்த
|
“ஏங்க..பிள்ளை ஒழுங்கா போய் சேந்திருப்பானா..? போயி ஒரு வாரம் இருக்குமா..?கண்ணுக்குள்ளே இருக்காங்க..” “ஏன்..கண்ணுக்குள்ளேயே பொத்தி வச்சிக்கிடறதுதானே..!! தொறந்து ஏன் வெளியே விட்ட? வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாது பாரு…நல்லா பெத்து வச்சிருக்க…!! “ஏன்.. உங்களுக்குத் தெரியாம பெத்துகிட்டு வந்திட்ட மாதிரியில்ல பேசுதீங்க…!!” “ஏண்டி.. அக்கம் பக்கம் யாரு இருக்காங்கன்னு பாத்து பேசமாட்ட.?” “அதேதான் நானும் கேக்குதேன்…!!” “அம்மா..!! அண்ணன் வேலைக்கு போயி ஒரு வாரங்கூட ஆவல . மறுபடியும் சண்ட போட ஆரம்பிச்சிட்டீங்களா…? “ஆமா…உங்க அண்ணன்
|
கொழும்பு -14.4.20. ‘இந்த நேரம் நேற்று இந்த உலகத்தைவிட்டு மறைந்து விடவேணுமென்று நினைத்தேன்;’ அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னைத் திடுக்கிடப் பண்ணின.அவளின் கண்கள் என் முகத்தில் நிலைத்திருந்தன. எனது பார்வையும் அவள் முகத்தில் சட்டென்று படிந்து நின்றதும் எனக்குத் தெரியும். என்ன சொல்கிறாள்? நேற்று மாலை ஏழுமணியளவில் இந்த உலகத்திலிருந்து பிரிந்தோட நினைத்தாளா? ‘ஏனம்மா அப்படிநினைத்தாய்?’ எனது குரலில் படபடப்பு. தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுமளவுக்கு என்ன துயர் இவளுக்கு?; அவளின் பெயர் சுலைகா.மும்பத்தைந்துக்கும் நாற்பதுக்குமிடையில் வயதுள்ள
|
அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் உள்ளே நுழைந்த சுமதியைப் பார்த்ததுமே தாய்க்கும் மகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னம்மா…?” “என்னக்கா…?” பதறி வரவேற்றார்கள். “ஓ…. ஒண்ணுமில்லே..!..” சொல்லி வந்து தூணில் சாய்ந்து சுமதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ‘கோ’ வென்று அழுதாள். “என்னடீ..! சொல்லிட்டுத்தான் அழேன்.” தாய் துடித்து அதட்டினாள். வித்யா தன் பங்கிற்கு அக்காவின் அருகில் வந்து வாஞ்சையாய் அமர்ந்தாள். “என்னக்கா..?” சுமதி தலையை வருடினாள். “அவர்…. அவர்…”கேவினாள். “என்ன சொல்லு..?” “அவர் இரண்டாம் கலியாணம் பண்ணிக்கப்போறாராம்…!”
|
(2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஸேர். போஸ்ட்…” வீட்டினுள்ளே அன்றைய தினசரிகளை படித்துக் கொண்டிருந்த ஆக்கில் ஹாஜியார்…. – வெளியே வந்து கையொப்பமிட்டு நீண்ட கடித உறையொன்றைப் பெற்றுக் கொள்கிறார்… அது வெளிநாட்டுக் கடிதம்…. தன் மகள் கமரிய்யாவின் பெயரில் அவள் கணவன் இயாஸ் அனுப்பியுள்ள பதிவுத் தபால்…. “கமரிய்யா. மகள் கமரிய்யா…” “ஓம் வாப்பா, இதோ வந்திட்டன்”. குசினியினுள் வேலையாயிருந்த கமரிய்யா, கைகளைத் துடைத்துக் கொண்டு வருகிறாள்.
|
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 6 | அத்தியாயம் 7 ஆதிகேசவனின் உடல் நிலை இப்பொழுது கொஞ்சம் அபி விருத்தி அடைந்திருந்தது. ஆனால் அவர் விட்டைவிட்டு வெளி யேறாமல் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். தன் பங்களாவின் முன்னால் இருந்த சிறிய பூந்தோட்டத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஆராய்ச்சி சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் புரட்டிய வண்ணம் இருந்தார். அவர் இன்னும் பூரண குணமடைய வில்லை என்று முகத்தோற்றம் வெளிப்படுத்தியது. அந்தச்
|
ஆசிரியர் பகுதி:
கதையாசிரியர் பகுதியில் இன்று எம்.பி.எம்.நிஸ்வான் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.
சிறுவயதில், தினகரன் மாணவர் பகுதியில் கட்டுரை எழுத ஆரம்பித்த நான், பல பத்திரிகைகளில் கட்டுரை எழுதினேன். அவை ஒன்றும் என் கைவசம் இல்லை; ஆனால் என் முதல் சிறுகதை என் கையில் இருந்தது. நான் எழுதிய என் முதல் சிறுகதை அன்றைய ஜனரஞ்சக பத்திரிகைகளில் ஒன்றாகிய “ராதா” இதழில் 1965ம் ஆண்டுக் காலப்பகுதியில் வெளிவந்தது. என் கதை வெளிவந்த அன்று எனக்குத் தெரியாது. நான் காலை வேளை வீட்டுத் தேவை ஒன்றுக்காக கடை வீதிக்கு செல்லும் நேரம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தி தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்திய நற்றமிழ் மொழி அறிஞர் அல்லாமா ம.மு. உவைஸ் அவர்கள், அவர் வீட்டு கேட்டடி வாசலில் இருந்து கைகளைத் தட்டி முகம் மலர “அடே நிஸ்வான்….. இங்கே வா…. ஒன்ட கத பேப்பரில் வந்திருச்சிய” என்றார்.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
|