சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/04/23/

பக்குவம்

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘கந்தர் மடம் செல்லம்மா’ ‘அஞ்சு’ ‘கொட்டடி ஆச்சிப்பிள்ளை’ ‘அஞ்சு’ ‘கொக்குவில் வேலாயுதபிள்ளை’ ‘பத்து’ ‘சீட்டுக்கார நல்லாம்பிப் பகுதி’ ‘இருபது’ ‘சங்கக்கடை ரத்தினம் பெண் சாதி’ ஒவ்வொருவரும் வந்து காசைப் போடப்போட, சின்னத்துரை கொப்பியில் எழுதிக் கொண்டே வந்தார். துரையப்பாதான் பெயர்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல், வெற்றிலைச் கருளைக் கையிலே ஏந்தியபடி நின்று கொண்டிருந்தாள் அவள். அந்தச் சின்னஞ்சிறு உடலை

சைக்கிள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதன் முதல் நீங்கள் சைக்கில் கற்றுக் கொண்டதை நினைத்துப்பாருங்களேன், சிரிப்பு வரும். எனக்கு அப்போது 13 வயது. ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேர் முட்டியில், கோபுர வாசலுக்கு வெளியே சின்னராஜு கடையில் வாடகை சைக்கிள்கள் இருக்கும். எல்லாமே சின்னராஜு சொந்தத் திறமையில் தயாரித்தது. ‘அவர்’ சைக்கிள் ஒரு மணி நேரத்துக்கு இரண்டணா ரேட். ஆளுக்கு காலணா செலுத்தி – எஸ்.எஸ்.எஸ்.- சீரங்கம் சைக்கிள் சங்கம்

உண்டியல்

அகிலாவுக்கு வயது பதின்ரெண்டு.சுட்டியான பெண். படிப்பிலும் அவள் கெட்டிக்காரி. சற்று மாறு பட்ட சிந்தனைகள் உள்ள்வள். துரு துருத்த கண்கள். ஓரிடத்தில் இருக்க மாட்டாள். புத்தகப் பிரியை அந்த வீட்டு கூட்டுக் குடும்பத்தில் அவள் செல்லப்பிள்ளை, காரணம் வேறு ஒரு குழந்தைகளும் அந்த வீட்டில் இல்லை. அவளின் பெற்றோர் தாத்தா பாட்டி , சித்தி, சித்தப்பா, மாமா மட்டுமே அந்த பெரிய வீட்டில் வாசித்தார்கள். அகிலாவின் தந்தை மகாதேவன் என்ற தேவன் ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங்

சரஸ்வதி பூஜை

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சரஸ்வதி பூஜை-செப்டம்பர் மாதம் இருபத்தாமும் தேதி செவ்வாய்க்கிழமை!” என்று ஹாலில் உட்கார்ந்திருந்த தாத்தா, பஞ்சாங்கத்திலிருச்ச இரைந்து படித்தார். மாடியிலிருந்து அந்தச் சமயத்தில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த சரஸ்வதியின் காதில் அது நன்றாக விழுந்தது. “தாத்தா! சரஸ்வதி பூஜை செவ்வாய்க் கிழமை யில்லையாம்; ஞாயிற்றுக்கிழமை தானாம். அதனால் சர்க்கார் ஆபீஸ்களுக்கு லீவு கிடையாதாம். நேற்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தாரே, நீ கேட்க வில்லையா?”

இப்படியும் நடக்குமா? – ஒரு பக்க கதை

“யார் அது?” என்று அதட்டிய ஒரு குரலைக் கேட்டு நடராஜன் அப்படியே திடுக்கிட்டு நின்றான். சில விநாடிகளில், புதர்களுக்குப் பின் ஒளிந்திருந்த பத்து முரடர்கள் திடீர் என்று வெளியே வந்து, நடராஜனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பெரிய குண்டாந்தடி இருந்தது. காட்டுப் பாதையில் இருட்டு வேளையில் செல்வது அபாயகரமானது என்று நடராஜனின் நண்பன் கோவிந்தராவ் எவ்வளவோ முறை எச்சரித்திருந்தான். அதை அலட்சியம் செய்துவிட்டு அந்தப் பாதையில் வந்தது, அதுவும் தனியாக வந்தது எவ்வளவு முட்டாள்தனம்

அம்மாவின் தாலி..!

சில நாட்களாக அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள் என்று மாமாவிடம் இருந்து வந்த தகவலை கேட்டு தான் பணிபுரியும் திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டான் கார்த்தி. பேருந்து புறப்பட தன் அம்மாவின் நினைவுகளில் மூழ்கினான். சிறு வயதில் தந்தை இறந்துவிட கார்த்தி மற்றும் அவன் அண்ணன் அருண் இருவரையும் அம்மாதான் வளர்த்தாள். அம்மாவின் அன்புடன் கண்டிப்பும் சேர்ந்து இருக்க கார்த்திக்கும் அவன் அம்மாவிற்கும் தினமும் சண்டைதான். படிப்பு முடிந்தவுடன் அருணுக்கு அரசு உத்தியோகம் கிடைக்க பின்பு அருணுக்கு திருமணம்

நேரம் – ஒரு பக்க கதை

‘மணி எட்டாகிறதே…எழுந்திருக்காம இன்னும் படுக்கையிலேயே…?’ “ம்..ம்..இன்னும் பத்து நிமிடம்…” ‘ஆறு மணிக்கே எழுந்திருக்க போவதாய் நேற்றிரவு சொன்னாயே…’ ‘ஆமா, சொன்னேன்…அப்போ விழித்திருந்தேன்…’ ‘இப்போ?’ “தூக்கத்தின் சுகம்…பத்து நிமிடம்தானே…” ‘நேரம் வீணாகவில்லையா?’ “கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு…” ‘வருந்தினா மட்டும் போதுமா? அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?’ எழுந்திரு…எழுந்திரு…’ எனக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியது யார் என்று படுக்கையிலிருந்தே பார்த்தேன். அறையில் என்னைத் தவிர வேறு யாருமில்லை…நிம்மதியாக தூங்கலாம் என்றால்… யாருடைய குரல் என்னை எழுப்பியது? ஒரு வழியாக எழுந்தாயிற்று. கையில்

பகைவனுக்கருள்வாய்

சோதி மயமான ஒரு பொழுது விடிந்த நேரம். தாரணிக்கு மனம் சம நிலையில் இருக்கும் பழக்கத்தினால், அவளின் உள் மையம் அசைவுகளற்ற பரப் பிர்ம்ம நிலையிலே தான், என்றும் இருப்பது வழக்கம். அவள் அப்படித் தான் பழக்கப்படிருந்தாள். இந்த பழக்கமும் மனித சுபாவத்திற்கு மாறான தெய்வீகப் போக்கும், அவளுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல..வாழ்க்கை ஆரவாரங்களுக்குள் முழ்கி தன்னிலை மறக்கிற போக்கு என்றைக்குமே அவளுக்கு வந்ததில்லை.. சிறுவயதிலிருந்தே, அவள் அப்படியொரு தேவதை தான். சராசரி பெண்களைப் போல பட்டிலும்

மூமின்

1 இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை

 

கற்கண்டு

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 3-4 | 5-6 5 தருமன் சிங்கார முதலியார் வீட்டில் யோசனை யோடு உட்கார்ந்திருக்கிறான். சின்னான் சிறுத்தொண் டன் கதை பாடுவதற்கு முன் அது சம்பந்தமான வச னம் பேசுகிறான். இச்சமயம் புஷ்பரதனும் குறட்டில் வந்து நிற்கிறான். சின்னன் : ஆத்தி மரத்தடியிலே சாமி குந்தியிருந்தாரா? அங்கே சிறுத்தொண்டப்பத்தனா கப் பட்டவன் அவுரு காலில் உழுந்தானா? உழுந்து அழைச்சானா? அதுக்குச் சாமி ஒங்க

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று க.நவசோதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

குழந்தை இலக்கி யத்தை வளர்க்கவேண்டும் என்ற இலட்சியமுடைய இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சஞ்சிகை, தமிழோசை, விவேகி, கலாநிதி, கலைமதி, வெண்ணிலா, சிறுவர் சுடர், மாணவ முரசு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.