சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.sirukathaigal.com/2022/04/20/

எனதுயிரே…

 வார இறுதி பெசன்ட் நகர் பீச்.. சொல்லவே வேணாம், கடல்த் தண்ணிக்கு போட்டியா ததும்பி வழிந்து கொண்டிருந்தது கூட்டம்! பஸ்ஸ விட்டு இறங்கி சர்ச் எதிர்ல போய் மாதாவுக்கு செல்லமா ஒரு ஹாய் சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அவன் எங்க நிற்கிறான்னு தெரியல, மொபைலை எடுத்து அவன் நம்பருக்கு போட்டேன், கிடைக்கவில்லை.. சமயத்துல இப்பிடித்தான் கழுத்தறுக்கும். திரும்ப ட்ரை பண்ணினேன்.. ம்ம்ஹூம்…கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒருமுறை அஷ்ட லட்சுமி கோவிலுக்கு பக்கத்தில மீட் பண்ணிருக்கிறோம், ஒரு யூகத்தில் நடக்க

பாழடைந்த கிணறு

ஒரு பாழடைந்த ஓலைக்குடிசை வீடு…. வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய வட்ட கிணறு… எட்டிப்பார்த்தால், முகம் கண்ணாடியில் தெரிவது போல தெளிவாக தெரியும்… குடிசையோரம் ஒரு தொத்தலான ஆடு கட்டப்பட்டிருந்தது. ஒரு உருவம் நடுங்கியவாறே குடிசைக்குள் நுழைந்தது. குடிசைக்கு வெளியே ஒரு பூனை, ஒரு சுண்டெலியை துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. அடுத்த‌ இரண்டாவது நிமிடம், குடிசைக்கு வெளியே ஒரு சத்தம் கேட்டது. “பாட்டி.. பாட்டி..” “யாரு?” “நான் பிரபாகர்.. சுகாதாரத்துறையில இருக்கேன்.. கிராமம் முழுதும் எல்லாரையும் பார்த்து

தந்திரம் பலித்தது! – ஒரு பக்க கதை

திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதியது: என்னைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு வரப்போகும் கஷ்ட நஷ்டங்களை அவருடைய ஜாதகத்தைப் பார்த்து விவரமாக என்னால் தெரிவிக்கக் கூடும். அநேக பெரிய மனிதர்களிடமிருந்து நற்சாட்சிப் பத்திரங்கள் பெற்றிருக்கிறேன். தாங்கள் ஒரு பெரிய முதலாளி என்று கேள்விப்பட்டு உங்களுக்கு இதை எழுதலானேன். உங்கள் ஜாதகத்தை உடனே அனுப்பி வையுங்கள். பலன்களைத் தெரிவிக்கிறேன். இப்படிக்கு, வேலுசாமி ஜோஸ்யர். *** வேலுசாமிக்கு, திவான் பகதூர் குண்டப்பாவின்

பெருநாள் பரிசு

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அகலமான ஜரிகை பார்டர் போட்ட சிவப்பு நிற மதுரைச் ‘சிந்தோடி’ தாவணியைத் தன் துணைவிக்குப் பொறுக்கி யெடுத்தபோது அப்துல் காதரின் முகமெல்லாம் மலர்ந்தது. அதற்காக அறுபது ரூபாயை அலட்சியமாக வீசி எறிந்துவிட்டு, அதன் சரிபாதி விலையில் ஜிமிக்கி போட்ட நாகூர்ப் புடைவையைத் தன் தங்கைக்காக அவன் பேரம் செய்தபோது அவன் முகம் ஏனோ சுளித்து விட்டது! மீதியிருந்த பணத்தில் தன்னைப் பெற்றெடுத்தவள் என்ற

“ஆ” வில் ஐந்து

“ஆ” இது என்ன சத்தம் ஆண் குரல் போலும் இல்லை, பெண் குரலும் போல் இல்லை, அதுவும் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ! அறைக்குள் படுத்திருந்தாலும் கதவு திறந்து வெளியே வர பயம். ஆனால் அந்த “ஆ” என்ற மயிர்க்கூச்செரியும் சத்தம், பக்கத்தில் படுத்திருந்த மனைவியை பார்த்தேன் ஹூஹூம் எந்த அயர்வுமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தாள். சரி படுப்போம் பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும் மீண்டும் “ஆ” சட்டென எழுந்தவன் மெல்ல அறையை விட்டு வெளியே வந்து மனைவியின் தூங்கிக்கொண்டிருக்கும்

திரைக்குப் பின்னால்…!

ஸ்டெல்லாவின் நீண்ட விரல்கள் என் கேசத்தைப் பூப்போல் நீவிவிடுவதை என்னால் உணர முடிகிறது… ஏதோ ஒரு ‘டிரான்ஸ்‘ என்று சொல்வார்களே அதில் நான் என்னை கரைத்துக் கொண்டிருந்தேன்.. “மேடம்..உங்க முடி எவ்வளவு அழகு தெரியுமா…??” ஒவ்வொரு முறையும் என் தலையை வாரிவிடும் போது அவள் இந்த வார்த்தைகளை சொல்லாமல் இருந்ததே இல்லை.. அவளுடைய மழலைத் தமிழில் அதைக் கேட்கும்போது எனக்கு வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு.. உண்மையிலையே எனக்கு நல்ல அடர்ந்த அலைஅலையான கூந்தல் தான்..இடுப்பு

உண்மை..!

“அப்பா எனக்கு கொஞ்ச நாளாக வயிற்று வலி தாங்க முடியவில்லை. என்னால் வாழ முடியவில்லை. நான் சாகப் போகிறேன்” என தன் மகள் கவிதா பதட்டமாக போனில் பேச பதறி அடித்து ஓடினார் ஆசிரியர் கதிரவன். தன் மகள் எரிந்த நிலையில் பிணமாய் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப் போனார். ஆசிரியர் கதிரவனுக்கு ஒரே மகள் கவிதா. 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் தன் மனைவி இறந்துவிட மகள் கவிதாவை msc வரை படிக்க வைத்தார்

வாழ்க்கை என்பது வயதிலில்லை…

முகேஷின் வருகை தணிகாசலத்தைச் சங்கடப்படுத்தியது. அவன் காலடி எடுத்து இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர் புழுவாக நெளிய ஆரம்பித்தார். மனம் எதையெதையோ நினைத்து ஒதுக்கினாலும் கடைசியில் நினைத்த இடத்திற்கே வந்து நிலையாக நின்றது. ‘நாம் தவறு செய்துவிட்டோமோ….?!’ என்று எண்ண ஆரம்பித்தார். இந்த வயதில் இது தேவைதானா..? நினைத்தார். நிச்சயமாக இது விதியாகத்தானிருக்க வேண்டும்..! இல்லையென்றால் 64 கிற்கும் 27 கிற்கும் திருமணம் நடக்குமென்று அவர் கனவில்கூட நினைக்கவில்லையே..! அவனது வரவில் மனைவி சுசித்ரா பொங்கி பூரித்திருப்பது

நிரந்தரமற்ற நிழல்

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரயில் கிளம்புவதற்கு பத்தே நிமிடங்கள் தான் இன்னும் டிக்கெட் எடுக்கவில்லை. ஒரு டிக்கெட் எடுக்கவா? ரெண்டு டிக்கட் எடுக்கவா? ஒரு டிக்கெட்தான் என்பதை அவளால் ஒப்புக் கெள்ளவே முடியவில்லை. ரெண்டு டிக்கெட் எடுத்திடலாம் வந்திருவார்தானே வராம என்ன? அதிகாலை ஆறுமணிக்கு முன்னமே வீட்டிலிருந்து கிளம்பி, ரோட்டில் வந்து, டாக்சிக்காகக் காத்திருக்கும்போதே… ஏற்கனவே கனத்துக் கொண்டிருந்த ராதிகா வின் மனம் மேலும் காயப்பட்டு ஓவென

 

கற்கண்டு

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1-2 | 3-4 3 சிங்கார முதலியார் வீட்டுக் குறட்டில் தருமன் ஏகப்பட்ட சட்டதிட்டமாக உட்கார்ந்திருக்கிறான் விசிப் பலகைமேல். வீரப்பக்கிழவர், எதிரில் போய் நின்று விநயமாக “தாங்க தானா சிங்கார மொதிலி யாரு?” என்கிறார். தருமன் : ஆமாங்க என்னா சேதி? எந்த ஊரு? வீர: நானு செதம்பரங்க. வீட்லே பொண்டுவ காலமாய்ட்டாங்க, நமக்கிண்ணு ஒருத்தி பொறுப்பா இருந்தா நல்லது. திடீ ருண்ணு

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று தமிழ் தரணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

எனது பெயர் ஷாஜாத்.M.A. வரலாறு. தமிழ் மீது உள்ள பற்றால் தமிழ் தரணி என்ற பெயரில் எழுதி வருகிறேன். My Vikatanல் எனது 7 சிறுகதைகள் வந்து உள்ளன.வேறு பத்திரிக்கைகளில் 3 சிறுகதைகள் வந்து உள்ளன.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.