சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/02/

பெயரில்லாத நாடகம்

 “நான் உங்கள மட்டும்தான் கூப்பிடறேன். வேறயாருட்டயும் சொல்லிட்டிருக்க வேண்டாம்”. இன்னும் வியப்பு தணியாத விழிகளுடன் அவன் மற்றுமொரு முறையாகத் தலையசைத்தான். நிர்மலாவின் கூரிய பார்வையில் அவன் ஆணிவைத்து அறைந்ததுபோல் உறைந்திருந்தான். இவனின் எண்ண ஓட்டங்களை உணர்ந்தறியும் முயற்சியாக சற்று மௌனம் நிலவவிட்டாள். “நீங்க ஒன்பது மணிக்கெல்லாம் வந்துட்டீங்கன்னா ரொம்ப நல்லது. அதுக்கு முன்னாலேயே வந்துட்டாக்கூட நல்லதுதான்”. ரஷ“த் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தான். இந்தப் பத்து நிமிட நேரத்துக்குள் அவள் மூன்றாவது முறையாகவும் இதைச் சொன்னாள். ஆயினும் அவனுக்கு

 

பலியாடுகள்

 விடிந்தால் சனிக்கிழமை! வைகாசி மாதத்தின் கடைசிச் சனிக் கிழமை. தெளிந்த வானத்தில் போட்டி போட்டுக் கொண்டு மின்னும் நட் சத்திரங்கள். ஒரு முன்னிரவுப் பொழுது! நேரம் எட்டு மணி இருக்கலாம். அந்த நேரத்தில் பொதுவாக அமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்த ஊர்த்தெரு இன்று வழமைக்கு மீறிய தொரு புதுமையாய்.. பெரிய அமளிப்பட்டது. சைக்கிள் மணிகளின் கிணிங்… கிணிங்.. ஒலிகளும் ஓடிச் செல் லும் சிறுவர்களின் கூச்சலும், காலடிச் சத்தங்களும் மெதுவாக நடந்து செல்வோர் கதைக்கும் ஓசையும்…! “இந்த

 

மாறித் ஹிப்சன்

 மணி காலை ஐந்து. மாறித் ஹிப்சன் எழுந்து, தனது பிடரியைத் திருகும்வரை கட்டில் பீடத்திலிருந்து மணி ஐந்து என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தது அந்தச் சிறிய, சதுர வெள்ளை மணிக் கூடு. அது எதிர்பார்த்தது போலவே மூன்று சத்தத்தின்பின் மாறித் ஹிப்சன் அதன் பிடரியைத் திருகி சத்தத்தை நிறுத்தினாள். சன்னல் திரைச்சீலையை மெதுவாக நீக்கி தெருவை நோட்டமிட்டாள் கிழவி. இருள் கலையாத காலை. ஆனாலும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சத் துண்டுகளை பன்மடங்காக்கி கண்களுக்கெட்டிய தூரம்வரை பட்டப்பகல்போல் மிளிரச் செய்து கொண்டிருந்தது

 

ஜி.எச்

 எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ என்னால் உறுதியாச் சொல்லி விட முடியாது. இதே பதில்தான் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கும். இளமைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் அது இருப்பது போலவும் தோன்றுகிறது. மத்திம மற்றும் இறுதி நாட்களில் அது இருக்கிறது என்று நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஆவிகள் இருக்கிறதா என்ற கேள்வி வந்தால் அதற்கான பதில் என்னைப்

 

சாருவின் காரு

 அந்த கிரிக்கெட்டுல என்னதான் இருக்கோ? மணி பதினொன்னு ஆகியும் டிவி பார்த்துட்டு என்னை தூங்க விடாம அப்பாவும் மகளும் படுத்தறீங்க… உனக்கு தூக்கம் வந்தா ரூம் கதவை சாத்திட்டு தூங்கு.. நான் தூங்கறது இருக்கட்டும்,காலையில ஏழு மணிக்கு ட்ரெயின் ஞாபகம் இருக்கா இல்லையா? மம்மி, முக்கியமான மேட்ச் போயிட்டிருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க… ஆமாண்டி நாலு மணிக்கு அலாரம் வெச்சிடு .. அந்த அலாரம் கூட நான் தான் வைக்கணுமா இந்த வீட்ல? அம்மாடி நானே வெச்சுக்கிறேன்,டென்ஷன்

வாழ்வும் வளமும் நம் கையில் தான்…

 ரோஷினி நன்றாக படிக்க கூடிய திறன் உடையவளாக இருந்தாள். என்றாலும் படிப்பில என்றும் மேம்போக்காகவே படித்துக்கொண்டு இருந்தாள். சித்தம் போக்கு சிவம் போக்கு என்றபடி எதையும் காதில் வாங்காமல் அவள்எண்ணப்படியே இருந்தாள். அவள் அம்மா ரோஷினியை “நன்றாகப் படி. அப்போதுதான் உன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” என்று பலமுறை வற்புறுத்தி கூறினாலும் காதில் வாங்கிக் கொள்வது இல்லை. ஒரே பெண் என்று செல்லமாகவும் செல்வமாகவும் வளரும் பெண். பிளஸ்-2 வந்து விட்டாள். எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ்மார்க் கட்டாயம்

கவரிமான்

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று சனிக்கிழமை. அது, ராயப்பு அம்மானின் முழுக்கு நாள்.. அம்மான் முழுகப்போகிறாரென்றால், வீடு, ‘அமர்க்களப்படப்போகிறது’ என்று அர்த்தம். இந்த முழுக்கு நாளில் தான் சவுந்தரியின் நினைவும் அலைமோதி எழும். இன்றும் அப்படி. அவளை நினைக்க நெஞ்சு நீவிப் பெருமூச்சு எகிறிக் குதிக்கிறது. கண்களில் ஒரு காந்த மயக்கம். உத்தம வேதக்காரராதலால், அது பக்தி மயக்கமாகவுமிருக்கலாம். ஒரு வாரத்துக்கு முன்புதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம்

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். – கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு வெகு நேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே

வழி திறக்கவில்லை

 வாகனத்தின் வானொலியை இயக்கினான்.’ குட்டிக்கதை’ ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார். இதில் இடம் பெறுகிறது ‘மனம்’ என்ற இத்தூணித்துண்டு. அது தலையிலே, நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும். “ஒரு ராஜா….” ஏன் அவரை இழுக்கிறார்கள். பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார். என்ன, நடை பயில்கிறாரா?. எளிமையாகப் போகிராராம். ஊரிலே தெரு, கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார். நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன்

 

நிர்விகற்ப சமாதி

 ஸ்ரீமான் உலகநாத பிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத் தன்மைக்கு மாறாக சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஒதுக்கி, மடத்துச் சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்துக்குள் தம்மை இழந்தார். ஊர்க் குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது. காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல. பணம் இன்மை. கிராமத்துத் தபாலாபீஸில் போஸ்ட் மாஸ்டராக உத்தியோகம் பார்ப்பதில் உள்ள சங்கடங்களும் சௌகரியங்களும் பல. எந்நேரத்துக்கு வந்தாலும் ஆபீஸ் மூடிவிட்டது என்று சொல்லி தபால் வில்லைகளை விற்பதற்கு மறுக்க முடியாது. மாதத்தில் இருபத்தியொன்பது

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.