சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/24/

கம்மங்கதிர்

 (2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவர்கள் விலகிச்சென்றார்கள். திரும்ப முடியவில்லை. நெருங்கி அழைத்து நேர் நின்று பார்க்க முடியாமல் போகும். சந்திக்க நேர்ந்தால் ஒவ்வொரு கணமும் கழுமரம். கடந்த மலைகளுக்கு அப்பால் மறைந்து போனார்கள். திரும் பவும் பயணமான நிலப்பரப்பில் வெளியில் நிலைகுத்திய பார்வை. அசையும்வானத்தில் துழாவி களைப்புற்ற பயணம். மெலிந்துபோன சுவாதீனத்துடன் நடந்து போகிறான். முள் மரங்கள் உலர்ந்த பாதை. வண்டித்தடம் மனதை இழுத்து நகரும் தொலைவில்

 

வாஷிங்டனில் திருமணம்

 (1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 “மணி என்ன? நவார்த்தம் இருக்குமா?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி. “இங்கிலீஷ் பேசுமய்யா. இது வாஷிங்டன். நவார்த்தமாம், நவார்த்தம்! நைன் தர்ட்டி என்று சொல்லுமேன்” என்றார் அம்மாஞ்சி. “ராக்ஃபெல்லர் மாமி ஆளுக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்தால் சௌகரியமாயிருக்கும்” என்றார் இன்னொரு சாஸ்திரி. “நமக்கெல்லாம் வயிற்றிலே கடிகாரம் இருக்கிற போது தனியாக ரிஸ்ட் வாட்ச்

 

சாய்மனை கதிரை

 ஜந்துமணிக்கு எழும்பி வேலை வேலையென ஓடும் ரவியை நினைக்க பாவமாக இருந்தது. அங்கும் அப்படித்தான் ஐந்து மணிக்கு நல்லூர் மணியும் பெருமாள் கோவில் ஓலி பெருக்கியும் நித்திரையை குழப்பிக்கொண்டிருக்கும். .அம்மாவும் சுப்பிரபாதத்தை முனுமுனுத்தபடி பூப்பறிப்பதில் ஒரு கண்ணும் எங்களை எழுப்புவதில் இன்னுமொரு கண்ணுமாக இருப்பா. படிக்கிற பிள்ளைகள் இப்படி விடிய விடிய நித்திரை கொண்டால் என்ன ஆகும்? அம்மா இந்த முறையும் அக்காவை பெயிலாவினம். என குமார் அம்மாவுக்கு பக்கவாத்தியம் வாசிப்பான். ஓமடா குமார் உனக்கிருக்கிற அக்கறையில

 

விரல்கள்

 இந்தக் கதையை எழுதி பனிரெண்டு வருடங்களாகிறது (13 -11 – 1999). நிரஞ்சனா என்ற மாதத்திற்கு இரண்டு பிரதிகள் மட்டுமே விற்கிற சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்து நான் மட்டுமே அதை அச்சில் வாசித்தேன். அச்சாவதற்கு முன் அதன் ஆசிரியர். வாசித்த காலத்தில் சுஜாதாவின் நூல்களை காய்ந்த மாடு போல் மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த பாதிப்பு கதையில் வெளிப்படையாகவே தெரிகிறது. *** பெண்கள் இல்லாத கதை. ஆனாலும் கதைக்குக் காரணம் ஒரு பெண். அன்புள்ள அப்பாவுக்கு, நான் இங்கு

 

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

 அழகிய குடும்பம் போதிய வருமானம் ஊடலும் கூடலும் நிறைந்த வாழ்க்கை. நகமும் சதையும் போல இணைப்பிரியா வாழும் காதல் தம்பதிகள் பாபுவும் ரமாவும். திருமணமாகி 5 வருடங்கள் கழிந்த நிலையில் குழந்தைக்காக ஏங்கிய இருவரும் மருத்துவமனையில் ஆலோசனை பெற்று வந்தனர். ஒரு நாள் மாலைப் பொழுதில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான் பாபு, கொஞ்சலும் கெஞ்சலுமாய் திரியும் மனைவி அன்று சற்று மாற்றமாய் முகம் வாடி காணப்பட்டாள், ஏன் ஒரு மாதிரி இருக்க மா?என்ன ஆச்சு? என்றான் பாபு.

மௌனமே பேசு..!

 யன்னல் காட்சிகள் ரசிப்பதற்கு மிகவும் அழகானவை என்பதை எங்க புதிய வீட்டு யன்னலை முதல் நாள் திறந்து பார்த்த போதுதான் எனக்குத் தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்றால், யன்னல்கள் காட்சிகள் அற்புதமானவை. வெளி உலகைப் பார்ப்பதற்கு எப்பொழுதும், முக்கியமாக எங்களைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இந்த யன்னல்கள்தான் இருந்திருக்கின்றன. பள்ளிப்படிப்பு காரணமாக பள்ளிக்குக் கிட்டவாக புதிதாக ஒரு காணி வாங்கி ஆசையாசையாய் நாங்கள் ஒரு கல்வீடு கட்டிக் குடிபுகுந்தோம்.

ஈரம்

 கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணரந்திருந்தான். செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன்

காக்கைகள்

 அந்த ஆடம்பரமான பங்களாவின் நடுக்கூடத்தில் விருந்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்காகச் செய்துவிட்டு ஒதுங்கி வந்து தனியே அமர்ந்தான் நாகலிங்கம். டீபாயில் கிடக்கும் தினசரிகளில் ஒன்றை எடுத்து விரித்தான். காவல்காரன்பட்டி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் 1973 – 76 ஆம் இளநிலை பட்டப்படிப்பு கணிதம் படித்த மாணவ – மாணவியர்கள் விளம்பரம் கண்ட பத்தாம் நாள்…. தாங்கள் நாட்டில் எந்த நிலையில் இருந்தாலும், எந்த மூலையில் இருந்தாலும் உடன் வரவும். அவ்வாண்டு அதே வருடங்களில் தங்களோடு படித்த

நெல்லிமரப் பள்ளிக்கூடம்

 அந்தப் பள்ளிக்கூடம் கட்டப்பட்ட காலம் பற்றி இவனுக்கு எதுவும் தெரியாது. இவனது அம்மா அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும், இவனது மாமா குஞ்சியப்புமார் எல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும் இவன் அறிந்திருந்தான். மதுர மரங்கள் சூழப்பெற்ற வயல் வெளித் தாமரைக் குளத்தைத் தாண்டி வரம்பினால் நடந்து ஒரு மண் ஒழுங்கையால் ஏறி இவன் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போயிருக்கிறான். பெரிய தாட்டான் குரங்குகள் வாகை மரங்களில் தாவுகின்ற குழைக்கடைச் சந்தியால் திரும்பி கேணியடியால் செல்லும் பிறிதொரு பாதையாலும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு

 

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்

 உலகமே திடீரென்று வெறிச்சோடி போனது போல தோன்றியது சாரதாவுக்கு. தன் கணவர் நாகசாமி இல்லாத உலகில் இருப்பது பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலியின் நிலை மாதிரி இருந்தது அவளுக்கு. ஆயிற்றே, பத்து வருஷங்கள்! உருண்டு ஓடிப் போயிற்றே, அவர் தெய்வமாகி! அப்போது மகன் சரவணன் இரண்டாவது வருஷம் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் படித்துக் கொண்டிருந்தான். மகள் சேவதி முதலாம் வருஷம் சிவில் படித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப சந்தோஷமான குடும்பம். யார் கண் பட்டது? நல்ல ஓடி ஓடி உழைக்கும்

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று குப்பிழான் ஐ.சண்முகன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
 
சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 

இன்று சற்றே தேக்கமுற்றதுபோல் தோன்றும் நவீனத் தமிழ்ச் சிறுகதை நூறு வயதைத் தாண்டிவிட்டது என்பதை எண்ணும்போது ஒரு அரை நொடிக்குத் திகைப்பும், மகிழ்ச்சியும், அவற்றைத் தொடர்ந்து கலக்கமும் ஏற்படுகின்றன. நூறாண்டுகள் குறித்துப் பெருமை கொள்வதற்குimages நிறைய காரணங்கள் இருப்பதைப் போன்றே கவலை கொள்வதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.