சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
view this email online
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://www.sirukathaigal.com/2022/02/01/
என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது. “சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன். “எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …” “ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா
|
“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?” ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். “இது புத்தர் வாழ்க்கையியில் நடந்தது. ஒரு முறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு கிராமத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம். ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார்.
|
பிறகு அவனுக்கு இருபத்தி எட்டு வயதானது. அப்போது அவன் தன்னையே கௌதம புத்தராகவும் தனது எட்டாவது வயதில் வேம்பு படர்ந்த இம்பீரியல் தியேட்டரில் தான் பார்த்த கடற் கன்னி படத்தில் வரும் மீன் உடல் கொண்ட பெண்ணைத் தேடு பவனாகவும் துண்டிக்கப்படாத தனது வலது கரம் பற்றிய துயரத் தோடு இரும்புக் கை மாயாவியாக முடியாமல் போனதற்காக மனம் பிறழ்வுற்றுக் கொஞ்ச காலம் மனநலக் காப்பகம் எனும் இடத்தில் வசித்தவனாகவுமிருந்தது நடந்தேறியது. மொட்டையடிக்கப்பட்ட தலையோடு அலைந்து கொண்டிருந்த
|
நாளை மறுநாள் நேர்முக பரிட்சைக்காக அரசவங்கியில் இருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது கல்முனயில் இருந்து கொழும்பிற்கு செல்ல வேண்டும். நண்பர்களிடம் சொல்லிப்பார்த்தான் ‘டேய் தொழில் இல்லாட்டி பறவாயில்லை உயிர்தாண்டா முக்கியம் கொழும்புக்கு போறதப்பற்றியே நினைக்காத” வீட்டில் அதைவிட மேலும் பல வார்தைகளை கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். ”மகன் தொழில் இல்லாட்டி எப்பசரி எடுத்துக்கொள்ளலாம் நீ எங்களுக்கு வேண்டும்” பெற்றோர்கள் ஒரு பிடியில் நின்றார்கள் “நான் யாருக்கு என்னதீங்கு செய்தன் எனக்கு எதுவுமே நடக்காது எனக்கு அல்லாஹ்
|
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் காளையை இருநூறு ரூபாய் கொடுத்து அவன் வாங்கியபோது, கிராமத்துப் பெரியவர்கள் அவன் ‘செட்டாக’க் குடித்தனம் செய்து, பணம் மிச்சம் பிடித்து, நல்ல காளை வாங்கினான் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வேலை வெட்டியைக் கவனிக்காமல் இருக்கும் உழவர்களையும், கிராமத்துப் பெரியவர்கள், கண்டித்துப் புத்திமதி கூறும்போது, சின்னப்பனை தான் உதாரணம் காட்டிப் பேசுவார்கள், அவன் புத்திசாலி, கெட்டிக்காரன், வீண் ஜோலிக்குப் போகமாட்டான், சளைக்காமல்
|
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரமேவும் வினோத்தும் பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரே நாலு கால் பாய்ச்சலில் ஒரு காளை மாடு தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தது. “ரமேஷ், காளை மாடுடா! மிரண்டு போய் ஓடி, வரது!” என்று ரமேஷின் கையைப் பிடித்து இழுத்து ஓரமாக ஒதுங்கிக் கொண்டான் வினோத், நன்றி தெரிவிக்க வேண்டிய ரமேஷ், “என்னடா இப்படி பயத்தாங்கொள்ளியா இருக்கே!” என்று வாய்க் கொழுப்பாகக்
|
வேலம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டு தன் புருஷனை உற்றுப் பார்த்தாள். ‘இன்னும் ஏன்யா குத்துக்கல் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க? போய்யா, போய் எங்கியாவது நாலு காசு தேத்திக்கிட்டு வாய்யா!…வயிறு ரெண்டு நாளா தண்ணியைத் தவிர ஒண்ணும் காணலய்யா!…’ ‘…’ ‘நீ ஆம்பள! உனக்கு எங்கியாவது எதாவது கெடச்சுடும். இந்தப் புள்ளிங்களப் பாரு. சுருண்டு, சுருண்டு தூங்குதுங்க. இப்படியே உட்டோம், செத்துரும்.’ முருகன் குத்துக்காலிட்டுக் கொண்டு பீடி புகைத்தான். அவன் காதில் செருகி
|
”அண்ணனைப் பார்க்க வந்தேன் அண்ணி ! ” என்றவாறு கிராமத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த குமரேசனிடம் அந்த கை பேசியைக் காட்டவே மனசில்லை லதாவிற்கு. என்றாலும்… ஏதோ எல்லோருக்குள்ளும் உழலும் ஒரு மனுச மன உந்துதல் வீட்டில் ஒரு புதுப் பொருள் வாங்கி வந்து விட்டால் எல்லோருக்கும் காட்டி மகிழவேண்டும் என்கின்ற இயல்பான ஆசை. “இதோ பார்த்தீங்களா தம்பி. நேத்திக்கு ஆன் லைனில் வாங்கியது.!” என்று அந்த புத்தம் புது கைபேசியை எடுத்துக் காட்டினாள். வாங்கிப்
|
கண்டியில் இருந்து நுவெரேலியாவுக்கு போகும் வளைந்த A5 மலைப் பாதையில் 45 கிமீ தூரத்தில் புசெல்லாவா கிராமம் அமைந்துள்ளது பாதையில் இரு பக்கத்திலும் பச்சம் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களும் ரம்போட போன்ற நீர்வீழ்ச்சிகளும் கண்களை கவரும் . அந்த புசெல்லாவா கிராமத்தில் 500 தொழிலார்களை கொண்ட ஸ்டெல்லேன்பேர்க் (Stellenberg) தேயிலை தொட்டம் உள்ளது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் அனேகர் தமிழ் நாட்டில் இருந்து கண்காணி முறையினால் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் . ஒரு அறை
|
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 லோரிட்டாவுக்கு வாஷிங்டனில் ‘போர்’ அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. ‘என்ன இருந்தாலும் ‘டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்’சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக் கொண்டாள். வசந்தாவின் நினைவு தோன்றவே, உடனே தன் ‘தோளிக்கு லெட்டர் எழுதப் போய்விட்டாள். “டியர் வசண்டா! இப்போது
|
ஆசிரியர் பகுதி:
கதையாசிரியர் பகுதியில் இன்று கோகிலா மகேந்திரன்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.
கோகிலா மகேந்திரன்
கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன.
சிறுகதை பற்றி:
சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.
சிறுகதையாற்றுப்படை – வைரமுத்து
நம் மனவெளிகள் விரிவானால் தமிழ் என்ற குறுவட்டம் தாண்டி எல்லா மொழிகளின் மீதும் தமிழ் இலக்கியம் பாயும்
கதைசொல்லல் என்பது உலகின் எல்லா இனக்குழுக் களுக்குமான பொதுப் பண்புதான். ஆனால் படைப்பாளுமையால் கட்டமைக்கப்பட்ட சிறுகதை என்பது அமெரிக்க ஐரோப்பிய மேதைகளால் உலக மொழிகளுக்குப் பரவிய ஒரு கலைவடிவம். அது மொழிவழி வந்த பெருங்கலைகளின் அடியாகப் பிறந்த ஒரு நுண்கலை.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
|