சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/07/15/

வாசக் கட்டி

 செல்வச் சந்நிதி முருகன், பக்தர்கள் புடை சூழ, பவனி வந்து கொண்டிருந்தார். இறைவனுக்கு முன்னாலும் பின் னாலும் கற்பூரச் சட்டிகளும், காவடிகளும் வந்து கொண் டிருந்தன. வீதி வலம் வந்து கொண்டிருந்த முருகனுக்குப் பின்னால் பாடவல்ல பஜனைக் கோஷ்டியினர் தோத்திரப் பாடல்களைப்…

இணை

 அவனுள் தவிப்பே மேலோங்கி நின்றது. திரு மணமானதின்பின் வந்த இந்த இரண்டு மாதங்களும் ஏதோ நிறைவின்றிக் கழிந்ததுபோல அவனுக்குப்பட்டது . வார்த்தைகளில் சொல்லமுடியாத, நெஞ்சினுள் கெம்பிக்கெம்பி மேலெழும்புகின்ற, முள்ளாய் உறுத்துகின்ற, மெல்லிய சோகமாய் உள்ளெல்லாம் இழையூடுகின்ற, அவனுக்கும் அவளுக்குமிடையில் உணர்ச்சிகளின் பூரணமான,…

முட்டாளின் அதிர்ஷ்டம்

 “ஏன்டி செல்லம்மா! சோத்துல உப்பு போடாத போடாதன்னு எத்தனை தடவடி சொல்றது உனக்கு, நீ கேக்கவே மாட்டியாடி…” என்று முதல் சோற்றுப் பருக்கையை எடுத்து வாயில் வைத்த உடனே ராமசாமி தன் மனைவி செல்லம்மாவை வசை பாடினான். பச்சை மிளகாயை வறுத்து…

குறைந்த லாபம் – ஒரு பக்க கதை

 ஒரு துண்டு வியாபாரி மனைவியிடம், இருபது துண்டு இருக்கிறது, நான் சந்தைக்கு போய் விற்பனை செய்து வருகிறேன் என்று சொன்னார். மனைவி என்னங்க! வரும்போது ஒரு சிற்பம் அரிசி வாங்கிட்டு வந்துருங்க. அரிசி இன்னைக்கு சமைக்க மட்டும் தான் இருக்குது. வியாபாரி…

சுப்பையா பிள்ளையின் காதல்கள்

 1 வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற ‘செமன்ட்’ கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம்…

மென்மை

 பிரிகேடியர் சரவணப் பெரு மாளைச் சந்திக்கச் சென்றேன். நாங் பள் இருவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர் ராணுவத் இல் இருந்தவர். நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவன். ராணுவ உயர்மட்ட அதிகாரி களுக்கு கமிஷண்ட் ஆஃபீஸர்ஸ் என் பது…

காதலுக்குப் பேதமில்லை

 இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து விளையாடும் சப்தம் காதைப் பிளக்கிறது.இதமான மெல்லிய தென்றல் உடலைத் தடவிச் செல்கிறது.மூக்குக்கண்ணாடியைக் கழட்டிக் கைக்குட்டையாற்; துடைத்தவிட்டு போட்டுக் கொள்கிறேன். அக்கம்…

கல்யாணத்துக்கு கல்யாணம்

 கல்யாணத்துக்கு, பலவருஷங்களாய் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வயசு ஏறிக்கொண்டே சென்றது. வயசு ஏறுவதற்கு மட்டும் ஏணியோ அல்லது சின்னதா ஒரு ஸ்டூல் கூட தேவையில்லை. தானாகவே ஏறிவிடும், விலைவாசி போலவே. அவனோட ஜாதகத்தில், சந்தோஷம் ஒன்னை தவிர எல்லா தோஷமும் இருந்தது.செவ்வாய் தோஷம்,…

காலம் மறந்த இடம்

 அத்தியாயம்:௧ | அத்தியாயம்:௨ உதவி பொழுது புலர்ந்த நிலையில் நான் உறங்கியிருக்க வேண்டும். இப்படியே எத்துணை நாட்கள் இருந்தேன் என்றே தெரியவில்லை. அவை மணிக்கணக்காக இருக்கும் என்று தோன்றவில்லை. இறுதியில் என் கண்களை விழித்துப் பார்க்கும் போது பகல் வெளிச்சம் முகத்தில்…

இனம்

 கம்பி கேட்டை ஒரு கையால் திறக்க முயன்றான். மறுகையில் மொப்பெட் வண்டி. இயலாது போக, பின்பு மொபட்டை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு வந்து, கேட்டைத் திறந்தான். உள்ளே, இரண்டாம் நம்பர் பிளாட் அம்மா வாசலில் நிற்பது தெரிந்தது. ‘கஷ்ட காலம். மொபெட்டை…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று இரா.சடகோபன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

உடுவை.எஸ்.தில்லைநடராசா

1947 ல் யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி என்னும் கிராமத்தில் பிறந்த தில்லைநடராசா இலங்கை அரசில் 1967ல் பொது முகாமைத்துவ எழுதுவினைஞராக நியமனம் பெற்று,1978ல் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று 2007 வரை கடமையாற்றி ஓய்வு பெற்றார். பாடசாலை நாட்களிலேயே பத்திரிகைகள் வானொலிக்கு எழுதியதுடன் நடிப்பு, நாடகத்தயாரிப்பு,நிகழ்ச்சித்தொகுப்பு என மேடை நிகழ்வுகளிலும் ஈடுபட்டார்.…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

கதைக்கு இரண்டு கால்கள் – பெ.தூரன்

கதைக்குக் காலில்லை என்று கூறுவார்கள். நான் இதை ஒப்புக்கொள்ளுவதில்லை. கதைக்கு நல்ல உறுதியான இரண்டு கால்கள் இருக்கவேண்டும். கவர்ச்சியான சம்பவம் அல்லது உணர்ச்சி, சொல்லும் திறமை ஆகிய இவ்விரு கால்களும் இல்லாமல் மக்களின் உள்ளத்திலே கதை நிலைத்து நிற்க முடியாது,…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.