சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

http://www.sirukathaigal.com/2021/06/20/

துறவரசர் இளங்கோவடிகள்

 சிங்காதனத்தில் சேரமன்னன் வீற்றிருந்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது அவன் பெயர். அவனுக்குப் பின் ஒராசனத்தில் அவனுடைய குமரர் இருவரும் அமர்ந்திருந்தனர், மூத்தவன் செங்குட்டுவன். இளையவன் பெயர் இளங்கோ என்று சொல்வார்கள். சின்ன ராஜா என்று அதற்கு அர்த்தம். மந்திரிகளும் வேறு பெரியவர்களும்…

பிரார்த்தனை

 “அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே விளையாட்டுத்தானா? வந்து சாமியைக் கும்பிடடி! கண்ணைத் திறந்து பாரடியம்மா; காமாட்சி என்று சேவிச்சுக்கோ காலையிலே எழுந்ததும், கனகாம்பரமும் கையுமா இருக்கிறாய். மாலையிலே மல்லிகைப் பூவுடன் மகிழ்கிறாய். இப்படியே இருந்துவிடுமா காலம்? வா, வா, விழுந்து…

கன்னி

 இது தான் முதல் தடவை அவன் ஒரு திரைப்பட ‘ஸ்டுடியோ’வுக்குள் நுழைவது. அவன் நாவலை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இயக்குநரின் வற்புறுத்தல் பேரில் அவன் வந்தான். வந்த அரை மணிக்குள் அவனுக்கு ‘போர’ டிக்கத் தொடங்கியது. சமைக்கும்போது சமையலறைக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற…

அருள்

 சென்டிரல் ரயில் நிலையக் கட்டடத்தில் சுதந்திரத் தினத் தீப அலங்காரம் மிகப் பிரமாதமாக இருந்தது. இரவு நேரத்தில் வான இருளின் பின்னணியில் தோரண வரிசையாக விளங்கும் மின்சார தீபங்கள் வண்ணமீன்கள் முளைத்தனவோ எனத் தோற்றமளித்தன. எதிரே ஜெனரல் ஆஸ்பத்திரிச் சுவரில் சாய்ந்து…

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

 பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் மனைவி பெயர் தங்கம்மாள் . அவர்கள் வீட்டில் பணம் நிறைய இருந்தது. சொன்ன வேலையைச் செய்ய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் பேசிச் சிரித்து விளையாட ஒரு பிள்ளை இல்லை .…

தங்கரேகை

 புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி. புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எனினும் வந்திருந்த இருவரையும் பார்த்து ‘வாருங்கள்‘ என்பதுபோலத் தலையாட்டிச் சிரித்தவாறே அவர்களை வரவேற்றுவிட்டு, முற்றத்தில் இருந்த…

பரிணாமம்

 ஒரு நாள் ஞானக்கிறுக்கன் திருவருட்பா படித்துக் கொண்டிருந்தான். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…’ ஏற்கனவே இவனதை இரண்டொரு முறை காது வழி கேட்டிருத்தாலும் இப்போதுதான் அது தெஞ்சை முழுமையாகத் தாக்குவதாக இருந்தது. வாடிய பயிருக்கும் வாடும் மனுஷ மனமா? அவனுள்ளே…

அவள்

 ‘எப்பொழுது ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாய்? ‘ ‘நானா?’ ‘இல்லை; எப்போது உன்னை வெளியே தள்ளி விட்டார்கள்? ‘ ‘நேற்று’ ‘இதுதான் உனக்கு முதல் பிரசவமா?’ ‘ஆமாம், இதுவே முதலும் கடைசியுமென்று எண்ணுகிறேன்’ பெரியவள் சிரித்தாள். ‘ஏன் சிரிக்கிறாய்?’ ‘இதுவே முதலும் கடைசியுமாக…

பழையதும் புதியதும்

 “ஏய்! ஏய்!” என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்திகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என்பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப்பார்வை பார்த்தான். அதற்கு…

சிங்கமும் சீடனும்

 தன்முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதா ளம் எள்ளி…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று கலைமாமணி விக்கிரமன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

விக்கிரமன்

கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 – டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

எழுதுவது எதற்காக? – எழுத்தாணி

ஒரு நாடகத்திலோ அல்லது நாவலிலோ வரும் பாத்திரத் தின் தன்மை என்ன, அதன் பங்கு அதில் எத்தகையது என் னும் கேள்விகள் எமக்குள் எழும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இவற்றிலும் முக்கியமாக நாம் விடை காணவேண்டிய கேள்வி சமுதாயத்தில் ஒரு எழுத்தாளன் வகிக்கும் பாத்திரம் என்ன என்பது பற்றியதாகும்…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.