சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

iew this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/06/10/

வடிகால்

 சுந்தரத்துக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. அவர் உள்ளே வரும்வரைகூடப் பொறுக்க முடியவில்லை. அப்பாவாக இல்லாமல் இன்னொருத்தராக இருந்திருந்தால் மனதுக்குள் தோன்றுகிற எல்லாவற்றையும் முகத்துக்கு முகம் கேட்டிருப்பான். தடதடவென்று கீழே இறங்கி வந்து ‘தார்சா வோடு இணைகிற மச்சுப் படியின் கடைசியில் நின்று…

உயர்ந்த மதிப்பு

 முருகனும், செந்திலும் மணலூரில் இருக்கும் இரு நண்பர்கள். அவர்கள் அவ்வூரில் எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு எப்படியோ வாழ்ந்து வந்தார்கள். ஒருமுறை வறட்சியால் அப்பகுதி வாடவே நண்பர்களிருவரும் பட்டணத்திற்குப் போய் பணம் சம்பாதிக்க நினைத்து தம்…

செப்டிக்

 ஐயர் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, கண்முன் பரத்தியிருந்த நிலக்கடலைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ‘நச் நச்’சென்று தரையில் உடைத்துப் பருப்புகளை முறத்தில் போட்டாள் தனபாக்கியம். மரகதபுரத்து அக்ரஹாரத்தில் இருந்த எல்லா வீடுகளுமே அவளுக்கும் அந்தச் சேரி மக்களுக்கும் அய்யர் வூடுகள்தாம். பெரிய அய்யரு,…

நரபலி

 கங்காராம் குடிசையின் சாளரத்தின் வழியாகத் தெரிந்த அந்த குல்மொஹர் மரத்தை அதன் ரத்தச் சிவப்பு மலர்களை வெறித்துப் பார்த்தான். மரம் இப்போது பூத்துக் குலுங்குவதிலிருந்து அவனுக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் ஓடிப்போனது புரிந்தது. கோடைக் காலத்தில் தான் இப்படி இலையே தெரியாமல்…

தாமதமாக வந்த புன்னகை

 அன்றைக்குக் காலையில் எழுந்த – போதே அலுவலகத்துக்கு இன்று விடுப்பு சொல்லி விட வேண்டும் என்று அகில் தீர்மானித்து விட்டான். கடந்த பத்து நாள்களாக இருமல், நீர்க்கோவை, ஜாட்டியம் ஆகிய பாதிப்புகளால் அவன் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். இனிமேலும் பொறுக்க…

பறவை தந்த பரிசு

 ஓர் ஊரில் கண்ணன் என்று பெயருடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக ஏழை. அவன் ஒரு பணக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தான். அந்தப் பணக்காரரின் வீடு மிகப் பெரியது. அந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு பெரிய பூந்தோட்டம் அமைந் திருந்தது. அந்தத்…

மீன்கள்

  தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான். மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும்…

நிழல்

 வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை. எனக்கும்தான் வேலை கெடைச்சது. சங்கம் பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மையத்திலே மொழி பெயர்ப்பாளர். போதாக் குறைக்கு இருபத்தியேழு வயசாகியும் சலிக்காம…

தாய்மொழி

 “ஏய்! என்னடா சொல்ற!… எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” – அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை…

மாடு சிரித்தது!

 பல நாட்களுக்குப் பிறகு வண்டிக்காரக் கார்த்திகேசுவை மறுபடியும் சந்தித்தேன். ரயிலடிக்கு யாரையோ கொண்டுபோய் விட்டுவிட்டு வெறும் வண்டியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தி என்னை ஏறிக்கொள்ளச் சொன்னான். 4 1/2, மைல் தூரத்துக்கும் கால் –…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று நிலாமகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

நிலாமகள்

 இயற்பெயர்: இரா. ஆதிலட்சுமி புனைப்பெயர்: நிலாமகள் துணைவர் : ச. செந்தில்குமார் (எ) நெய்வேலி பாரதிக்குமார் கல்விச் செல்வம்: முதுகலை தமிழ், இளங்கலை ஆசிரியப் பட்டப்படிப்பு. (M.A., B.Ed.) இருப்பிடம் : (முன்னாள்) குறியாமங்கலம், சிதம்பரம் வட்டம். (இந்நாள்) நெய்வேலி நகரம்,…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

ஹெப்சிபா ஜேசுதாசன்

 இவர்களது எழுத்துமுறை…ஹெப்சிபா ஜேசுதாசன் 1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மட்டேன். ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான் வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது. என்னதான் உந்தித் தள்ளினாலும் எழுத முடியாது.…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.