சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இருளைத் தேடி…

பத்து வருடங்களுக்குப் பின், சிறிதும் எதிர்பாராத நிலையில், சற்று முன் பட்டணத்துச் சந்தடியில் சந்திக்க நேர்ந்துவிட்ட பட்டுவும் ருக்குவும் அந்த ஓட்டலின் தனியறையை நாடி வந்தனர்; காப்பி குடிக்கவும், கொஞ்சம் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசவும் அது வசதியான இடம். வாழ்க்கைச்…

சாமி கண்ண குத்திடுச்சு

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர்…

வழிபாடு

உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் ஓர் ஏழை அந்தணனுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று பொருமினான் வடுக நாய்க்கன். தனக்கு இத்தனை பெரிய வீடும், கட்டிக்காக்க ஆட்களும், செல்வமும் இருந்து என்ன பயன்? வரதையனுக்கு லட்சுமி கடாட்சம் இல்லாவிட்டாலும், அவன் மனைவி லட்சுமி இருக்கிறாள்.…

கடைசியில்

“ஏன் விசாலம், இன்னிக்குமா சாம்பார் பண்ணலை?” “பண்ணலை …” “அதான் தெரியறதே, ஏன்னு கேட்டா?” “தொவரம்பருப்பு என்ன வெலை விக்கறது தெரியுமா? எட்டு ரூபா அறுபது பைசா! இந்த லட்சணத்துல தோட்டத்துல காய்ச்சுக் கொட்டற மாதிரி தெனமும் பருப்பு அள்ளிப் போட்டு…

நஞ்சு

சுற்றிலும் இருந்த மையிருட்டில் தான் மூழ்கிப்போனது போல் இருந்தது அவளுக்கு. கொல்லை முழுவதும் கிளை பரப்பியிருந்த மாமரமும் பலாமரமும் இருளுக்குக் கருமை யூட்டின. இன்று நட்சத்திரம் கூட கண் சிமிட்டாமல் சோகம் காத்தது. ரங்கமணிக்கு லேசாகச் சிலிர்த்தது. தன்னுடைய உடலில் ஓடும்…

காலம் இனி வரும்

பக்கத்தில், நீளமாய் ஒரு காலை மடக்கியும் ஒன்றை நீட்டியும், சற்றே வாய் பிளந்து, வெற்றிலைக் காவிநிறப் பற்கள் தெரிய, கைகளைப் பரப்பியவாறு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பிரபுவைப் பார்த்தாள் சத்யா. ‘இரையுண்ட மலைப் பாம்பு படுத்துக் கிடப்பதுபோல’ என அவள் மனதில்…

பொய் சொல்லத் தெரியாமல்…

அவனுக்கு ஒரு பாவமும் தெரியாது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல அந்த நிகழ்ச்சி நடந்திருந்தது. கல்லூரி முழுவதும் அவனை ஆதரித்து அவனுக்காகப் போராடக்கூடக் காத்திருந்தது. ஆனாலும் அந்த ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்று வசதியாக அவற்றில் குளிர்காய அவனுக்கு மட்டும் விருப்பமில்லை.…

ஆக்கினைகள் செய்து வைப்போம்

கீழேயிருந்து தாலாட்டுப்பாட்டுக் குரல் வந்தது. என் நண்பன் சுந்தரம் படித்துக்கொண்டிருந்த புஸ்தகத்திலிருந்து திரும்பி அதை கவனித்தான். நான் அவசரமாகப்பத்திரிகைக்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். பாட்டு என் காதில் விழுந்ததானாலும் மனத்தில் உறைக்கவில்லை. திடீரென்று சுந்தரம் என் கவனத்தைக் கட்டுரையிலிருந்து கலைத் தான்.…

பேரன்பு

“இன்னிக்கி ஏதாவது நல்ல ராஜா ராணிக் கதை சொல்லு பாட்டி” என்று சுந்தாப்பாட்டியின் மடிமேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணினாள் சரோஜா. “ராஜா ராணிக் கதையா? எனக்குத் தெரிஞ்ச ராஜா ராணிக் கதைகளையெல்லாம் உனக்குச் சொல்லியாயிடுத்தே!” என்றாள் சுந்தாப்பாட்டி. “புதுசா…

இவர்களைப் பிரித்தது…?

இதெல்லாம் எப்படி உண்டாகிறது என்று தெரியலை. அந்தக் குடும்பங்களுக்குள் உள்ள ஒற்றுமைபோல அந்த ஊரிலேயே கிடையாது. நாலு அண்ணந்தம்பிகள்; ராம லெட்சுமண பரத சத்துருக்காள் போல, எந்தப் பாவிச் சிங்கம் வந்து இந்தக் காளைகளைப் பிரிச்சதுண்ணு தெரியலை. நாலுபேருக்கும் கல்யாணம் ஆனவுடன்,…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ம.நவீன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ம.நவீன்

 மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பாவின் வாசிப்பு தத்துவம் சார்ந்தது. அம்மா இலக்கியம்.…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:36,067
மொத்தம் பார்வையிட்டோர்:2,968,152
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:100,481
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:10,953,089

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.