சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உள்ளுக்குள் உள் உள்ளேன்!

 ‘சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி!…..’ சினிமா பாட்டு வரிகள் கேட்கும் போதெல்லாம் முகந்தனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தோடும். ‘அடி தாங்கும் உள்ளம் இனி இடி தாங்குமா?….இடி போல பிள்ளை வந்தால் அடி தாங்குமா?……ஒரு நாளும் நான் இது போல்…

லச்சுமியின் கனவு கனிந்தது

 சூரியனின் கதிர்கள் மெதுவாக அந்த தகரக் கொட்டகை மீது இருந்த சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுளைந்து ஆங்காங்கே நிலத்தில் பட்டு தெறிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே சூழ்ந்திருந்த இருள் மெதுவாக அகன்று வெளிச்சம் வர ஆரம்பித்தது. நாள்தோறும் இந்த மெல்லிய வெளிச்சம்தான்…

தனி ஒருவனுக்கு…

 “..தோலிருக்கச் சுளை வாங்கிகளின் தத் துவச்சிருஸ்டியான “சுரண்டல் வித்தை” என்னும் நித்திய தரித்திர நாராயண னின் ஆசீர்வாதம், தின்ற வயிறு பாதி தின்னாத வயிறு மீதியாக “அநித்தியம்” என்ற இந்தப் பூலோக வாழ்க் கையில் அந்த இரண்டு ஜீவன்களும் உழன்று கிடந்தன.”…

இந்தக் கொரோனாவால!

 அன்று ஒரு நாள், வைகாசி மாதத்து வெள்ளிக்கிழமை.வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. பனித்தூறல் சாளரத்தில் பட்டுப் பட பட வென்று தட்டி எழுப்புவதுபோல் ஓசையெழுப்பியது. இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டபடி மெல்லக் கண்விளித்தான் ரிசி. இரண்டு பெரிய…

வாடகை வீடு

 நாமதான் இந்த மாத கடைசியிலே வீட்டைக் காலி பண்றதாகச் சொல்லிட்டோம் இல்ல, பின்னே ஏன் அவசரமா காலி பண்ணச் சொல்லி நெருக்குறாங்க? எனக் கேட்டாள் ஜெயந்தி. அவங்க அவசரம் அவங்களுக்கு. என்றார் ராமலிங்கம். என்ன அவசரமாக இருந்தாலும் என்ன? நாம முன்னேயே…

அழகர்சாமியின் குதிரை வண்டி!

 நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ, அபார மூளையோ, அதிர்ஷ்டமோ, அப்பா, அம்மா செய்த புண்ணியமோ. இதில் எதுவுமே கிடையாது. எல்லா புகழும் அந்த அழகர் சாமிக்கே… யார்…

இவர்களும் அவர்களும்

 ‘சுந்தரம்ஸ் அன்ட் கோ’வின் பிரதம பங்காளியும்’ மானே ஜிங் டைரக்டருமான ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர் களும், ‘ஆறுமுகம் பிள்ளை அன்ட் சன்ஸ்’ உரிமையாளர் திருவாளர் ஆறுமுகம் பிள்ளை அவர்களும் ஜன்ம விரோதிகள். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். எதையும் குறைத்துச் சொல்வது…

பாடம்…!

 “பெரிய பொல்லாத சைக்கிள். ஓட்டை வண்டி. ! தொடைக்கனுமாம் தொடைக்க..!” – பத்தாவது படிக்கும் நிர்மல் வெறுப்பும் சலிப்புமாய் வாசலில் நிற்கும் சைக்கிளை ஒரு உதை விட்டுவிட்டு பொறுமிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான். “அம்மா..! அம்மா !” கூப்பாடு போட்டான். நளினிக்கு இவனென்றால்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 ராஜம் விடாமல் ”சுரேஷ்,நீ சென்னைக்கு உடனே ‘போன்’ பண்ணி,ரமா நம்ம ஆத்லே அவ எழுதி வச்சுட்டுப் போன ‘லெட்டரை’ பத்தி விவரமா சொல்லி,குழந்தைக்கு ஒரு வருஷம் தான் ஆறது, அந்த குழந்தையே ரமா அவசியமா பாத்துக்கணும்ன்னு.அதனால்லே ரமாவை…

இட்லிக்காரி

 எப்போதும்போல அன்று காலையும் ஐந்து மணிக்கே எழுந்து குளித்து சாமி கும்பிட்டுவிட்டு, இட்லிகளை வேக வைத்தாள் அந்த இட்லிக்காரி. கணவன் சில வருடங்களுக்கு முன் இறந்தபிறகு, வீட்டிலேயே இட்லிகள் செய்து விற்க ஆரம்பித்தாள். வியாபாரம் சூடு பிடிக்கவே இட்லி தவிர வடை,…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று நீர்வை பொன்னையன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா (Dominic Jeeva, சூன் 27, 1927 – சனவரி 28, 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது தந்தை ஆவுறம்பிள்ள; தாய் யோசப் மரியம்மா. இவர் மல்லிகை என்னும் சஞ்சிகையின் ஆசிரியராவார். புரட்சிமோகன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்துள்ளார். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் – ஜெயமோகன்

 ஒரு நண்பரின் கடிதம் …….எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை அறிந்து கொண்டு, மேலே செல்ல ஆசை….…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:29,27,886
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,08,41,632

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.