சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி

 ‘உனக்கு பயமாயில்லையா? எத்தனை நாளைக்கு சுவர்களை பார்த்துக்கொண்டு?’ மேசையின் எதிர்முனையில் அமர்ந்திருந்த அவளிடமிருந்து பதிலில்லை, எழுந்துகொண்டாள். தட்டில் தோசை விள்ளல்களாக சிதைந்திருந்தன. இவர் என்ன சொன்னார் என்பதையாவது காதில் வாங்கியிருப்பாளா என்கிற சந்தேகம் எழுந்தது. தட்டினை அவள் கையில் எடுக்கவும், இவருக்கு…

இரண்டு இட்லியும் ரத்னா கபேயும்

 எழிலகம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினான் சுந்தர். இந்த எழிலகக் கட்டடம் பின்புறமுள்ள பழங்கால அரசு கட்டடத்தில் தான் விஜி வேலை பார்க்கும் அலுவலகம் உள்ளது. விஜி தான் வரச் சொல்லியிருந்தாள் சுந்தரை. சுந்தரும் விஜியைப் பார்க்கும் ஆவலில் இருந்தான். அதற்காகவே முகநூலிலெல்லாம்…

சுனை வற்றாது

 செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவள் மனம் இனம் புரியாத பரபரப்பில் ஆழ்ந்து போனது. தொண்டைக் குழிக்குள் தமிழ் நாட்டு ‘கோலி சோடா’ போன்ற ஓர் உருண்டை உருளுவது போன்ற உணர்வு. போகலாமா… வேண்டாமா… அதற்கான பதிலை மனதின் ஆழத்தில் தேடித் தேடிப் பார்த்தாள்.…

லஞ்சம்

 தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ் அப்போது திரையில் ஓடிய பிளாஷ் நியூஸ் ஐ பார்த்து அதிர்ச்சியில் அம்மா,அம்மா என குரல்கொடுத்தான், அவசரமாக ஓடிவந்த அம்மா, என்னடா, என்ன ஆச்சு என கேட்டாள்? T. V. யை பாரும்மா என்றான் அழுகையுடன், அப்போது…

ஒரு கடன் மறுக்கப்படுகிறது

 அந்த ஏழை ஊரில் பணக்கார மிடுக்குடன் தெரிந்த ஒரே கட்டிடத்துக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் டயர் செருப்பை வெளியே பத்திரமாக வைத்து விட்டுத் தலையை மட்டும் உள்ளே பயத்துடன் நீட்டினான் பன்னீர். “ஏய்யா! என்ன வேணும்?” – ‘போரப்போ!’ விளம்பரத்தில்…

துளிரவிடுங்கள். ப்ளீஸ்…

 இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் A பிளாக்கில், நாலாம் நம்பர் வீட்டில், பிரபல பண்பலை வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த, பாடல் ஒன்றை தலையை ஆட்டி ரசித்த வண்ணம், மதிய உணவை ருசித்துக் கொண்டிருந்த ரத்தினம், அழைப்பு மணி அழைக்க, யாருப்பா என்றவாறு…

கடல் அலைகள் குமுறுகின்றன!

 செக்கல் பொழுது. ஊருக்கு தெற்கேயுள்ள கடலோரச் சுடுகாடும் உறைந்துவிட்டது, கடல் அம்மாறு போட்டுக்கொண்டிருந்தது. கிராமத்து வயல் எல்லைகளில் நாய்கள் கடல் உறுமிபோல் ஊளையிட்டுக் கேட்டது. மேகத்திரைகள் கொண்டல் பக்க வாட்டாகக் கவிந்து மேற்கு வானம் ஒரே கணவாய் மை நிறமடித்துத் தெரிகிறது.…

அடுப்படி இல்லறம்..!

 காலையில் கண் விழிக்கும் பொது மணி 6.30. ! ‘ஐயோ..!’ அடித்துப் பிடித்து எழுந்தேன். “நிர்மல் ! விமல் !”- அருகில் மெத்தையில் படுத்துறங்கியவர்களைத் தட்டி எழுப்பினேன். சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தார்கள். அவரசரமாக வந்து வாசல் திறந்தேன். படியில் பால்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 மெதுவாக  ‘போனை வைத்து விட்டு வைத்து விட்டு சுதா உடனே ஒரு காகிதத்தை எடுத்து ஒரு ‘லெட்டர்’ எழுதினாள்.அந்த ‘லெட்டரை’ நாலாக மடித்தாள்.தன் ரூமில் இருந்த மேஜை மேலே எல்லோவறையும் எடுத்து தூர வைத்து விட்டு தான்,எழுதின…

மரணம்

 (இதற்கு முந்தைய ‘அத்தை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). “அனந்து நீ சொல்றது முற்றிலும் சரிதான். எனக்கும் அது தெரியாமல் இல்லை. அவள் உயிர் வைத்துகொண்டிருப்பதே எனக்காகத்தான். தனக்கு என்று ஒருநாள் கூட அவள் வாழ்ந்தது கிடையாது. சிறுவயது…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

 அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன். எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறு கதை என்றால் என்ன? – காஷ்யபன்

 வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனை “பொறி”தான் சிறுகதை.அது எவ்வளவு சிறியதாக இருக்கலாம்? பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல்,அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம் என்கிறார் ஏச்.ஜி. வெல்ஸ். அதன் உள்ளடக்கம் , கட்டுமானம் பற்றி எதுவும் இல்லை.ஆனால் இன்று…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:2,896,074
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:123,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:10,752,802

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2020]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.