Title சிறுகதைகள் செய்திமடல்
  பெப்ரவரி 2015 / மடல் #11
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், தி.ஞானசேகரன் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தி.ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார். மேலும் படிக்க..

கதைகள்

பெப்ரவரி 2015 மாதம் வெளியான கதைகள்:

  • கண்ணதாசனின் கல்லறை - இரா.நாராயணன்
  • பேஸ் புக்! - துடுப்பதி ரகுநாதன்
  • குருதட்சணை - ஆனந்தி       
  • நெடுஞ்சாலையில் ஒரு பயணம் - நிர்மலா ராகவன்
  • பட்டாசுக் கூளங்கள் - செய்யாறு தி.தா.நாராயணன்
  • செருப்படி…! - விஜய் விக்கி       
  • ”சுலைமானி” ஆபரேட்டர் - மு.கோபி சரபோஜி
  • மீண்டும் வருவேன் - ச.தாமோதரன்
  • தீப்பூக்கும் வாகை! - திலகபாமா
  • நள்ளிரவு - அ.ந.கந்தசாமி

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
       
நான் விரும்பிய மிகச் சிறிய கதை
கதையாசிரியர்: சுஜாதா
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: Aug 2, 2012
பார்வையிட்டோர்: 7129

பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள். அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது.

நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம்.
மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள்...அனுத்தமா

1. எழுதுவதற்கென்று ஒரு நேரம் என்றெல்லாம் எனக்குக் கிடையாது. காகிதத்தில் பேனாவை வைத்தால், கதை (அ) சிந்தனை முற்றும்வரை
எழுதிக்கொண்டே இருப்பேன்.

2. எழுதியதை முழுமையாகப் படித்துப் பார்த்து சரி செய்வேன்.  கதையின் கருவைப் பொறுத்தே தலைப்புக் கொடுப்பது வழக்கம்.

3. எனது 'ஒரே ஒரு வார்த்தை' என்ற கதையைப் படித்துவிட்டு என் அப்பாவின் நண்பர் ஒருவர், 'இது என்ன குறிக்கோளே இல்லாம, சோம்பேறித்தனத்தை வளக்கிற கதை' என்று விமர்சனம் செய்ய எனக்கு முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்புறம் உடனேயே 'வாழ வழி இருக்கிறதைப் பத்தியும், பிரச்சினையில்லாத வாழ்க்கையப் பத்தியும்தான் நிறையப்பேர் சொல்லியிருக்காங்களே அதனாலே நான் யதார்த்த வாழத் தெரியாத பிரச்சினை பற்றி சொன்னேன்' என்றேன். ஏற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

வணக்கம். நான் ஒரு எழுத்தாளர். பெண்கள் இதழ்களான மங்கையர்மலர், குமுதம் சிநேகிதி, பெண்மணி, அவள்விகடன் போன்ற தமிழ் இதழ்களிலும், ஞான ஆலயம், தீபம், சக்தி விகடன், பக்தி போன்ற ஆன்மீக பத்திரிகைகளிலும் என் எழுத்துக்கள் வெளியாகி  வருகின்றன. தங்களின் சிறுகதைகள் தளத்தை சமீபத்தில் பார்த்தேன். தளம் மிக அருமையாக உள்ளது. சிறுகதைகள் அருகி வரும் இந்நாளில், தங்கள் தளம் சிறுகதை வாசிப்பை சீர்தூக்கும் விதமாக செயல்படுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது.அதில் என் சிறுகதையை இணைக்க விரும்புகிறேன். - ராதா பாலு

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

பெப்ரவரி மாதம் பார்வையிட்டோர்:22,622

மொத்தம் பார்வையிட்டோர்:
659,952

பெப்ரவரி மாதம் படிக்கப்பட்ட கதைகள்:676,214

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:3,036,691

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2015]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.