This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2020/12/19/

பிரெஞ்ச் கிஸ்…

மாலை 3 மணி வாக்கில் பாரிஸ் சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் இறங்கியது. ரம்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் விமானத்திலிருந்து இறங்கி இமிகிரேஷன் கவுண்டரை நோக்கி நடந்தார்கள். நீண்ட பயணம். களைப்பு தெரிந்தது. நல்லவேளையாக, பெரிய அளவில் வரிசை இல்லை வேகமாகச் சென்று அதிகாரியின் முன்னால் நின்றார்கள். அவனிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்கவில்லை. ரம்யாவிடம் திருமண பத்திரத்தைக் கேட்டார். இதற்கிடையில் அவருடைய திரையில் பீப் என்று ஒலித்தது. அதைப் பார்த்தவுடன் அவர் முகம் மாறியது. அவனுடைய கடவுச்சீட்டு

.


Read More


கொட்டில்

அப்புவின் கண்கள் அந்தக் கொட்டில் இருந்த இடத்தில் நிலைத்திருந்தன. முன்பு அது இருந்த இடத்தில் மண்மேடு. சுடலைப் பிட்டி போல…… அப்பு என அழைக்கப்படும் அப்புத்துரை அறுபத்தைந்து வயதைதக் கடந்தவர். தமக்குச் சீதனமாக வந்த வீட்டின் முன்னால் தமது இருபத்தைந்தாவது வயதில் அந்தக் கொட்டிலைச் சிற்றாள் ஒருவரின் உதவியுடன் தமது கையாலேயே போட்டவர் அவர். இயல்பாகவே வலுவான உடல்…. தோட்டத்தைக் கொத்திக் கொத்தி வைரம் பாய்ந்த கைகள் . எதையும் சாதிக்கத்துடிக்கும் இளமை வேகம். அப்பு தாமே

.


Read More


அந்த மரத்தை நீங்கள்?

எங்களது எஸ்டேட்டில் எங்கே இருந்து பாத்தாலும் முழுமையாக  தெரியூம். கறுப்பு நிறத்தில், ஒரு சொட்டு பச்சையை தவறுதலாக கலந்துவிட்டது போன்ற நிறத்தில் இலைகள்.அந்த மரத்தின் அடர்ந்த கிளைகளை என்றைக்குமே சூரியகதிர் ஊடுறுவியதில்லை.எவ்வளவு  மழைபெய்தாலும் ஒரு துளி தவறி கூட அந்த இடத்துல ஒழுகமுடியாத மாதிரி அவ்வளவு அடர்த்தியான மரம்.அங்கிருந்து தான் பலவருடம் யாருக்கும் எந்தகுறையூமில்லாமல் குசும்பன் மாடன் அருள்பாலித்து கொண்டிருந்தார். இது அவருடைய ஆயிரம் புனைப்பெயர்களில் ஒன்றுதான்.அவருடைய  உண்மையான பெயர் என்னவென்று கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.கேள்வி

.


Read More


பிச்சைக்காரியின் மகன்!

தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட கும்பல் ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. அவர்களை அங்கிருக்கும் மற்ற மக்களும் கண்டுகொள்வதாகவும் இல்லை. அந்தக் கும்பலில் ஒரு பையனும் பொண்ணும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். பையனுக்கு இருபது வயசு இருக்கலாம். பொண்ணுக்குப் பதினாலு வயது இருக்கலாம். “டே… வாங்கடா… இங்க கல்யாணம் ஒன்னு

.


Read More


சாகித்ய அகாடமி

கண்ணபிரான் காலை பத்துமணிக்குள் ஐந்தாறுமுறை வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்து சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்துவிட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியை கேள்விப்பட்டு செல்போனில் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைபார்த்து உறுதி செய்தபின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்த அவரின்

.


Read More


தனிமையிலே இனிமை காண முடியுமா…?

“செல்வம் அண்ணா ! சீக்கிரம் வண்டிய எடுங்க.. வகுப்புக்கு நேரமாகுது….போன வாரமே நானு போறதுக்குக்குள்ள பாடம் ஆரம்பிச்சிட்டாங்க… இனிமே லேட்டாக வந்தா வகுப்ப மிஸ் பண்ண வேண்டியதுதான்னு சொல்லிட்டாங்க…..” “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணும்மா….தாத்தா பாத்ரூமில இருக்காரு….இப்ப வந்திடுவாரு…” “இந்த தாத்தா ஏன் எப்பவும் கிளம்பற சமயம் பாத்துதான் பாத்ரூம் போணுமா …?” “வயசானவர் இல்லையா பானும்மா…? நாமதான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும் …” “சுத்த போர்… முதல்ல எங்கள இறக்கிவிட்டு வந்தப்புறம் தாத்தாவ பீச்சுக்கு கூட்டிட்டு

.


Read More


ரிட்டன் கிப்ட்

பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சந்திரன் பரபரப்பாக இருந்தான். இரண்டாம் வகுப்பு படிக்கிறான்; படு சுட்டி, படிப்பிலும் கெட்டிக்காரன். ஒரு நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் இழுத்து கீழே போட்டுவிடுவான். சுவரெல்லாம் கலர் பென்சிலால் கோடு, கோடாக வரைந்து வைத்திருந்தான். “பெரிய ஓவியனாக வருவானாக்கும்” என வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள் கணவனும், மனைவியும். அன்றும் அப்படித்தான் அறைக்குள் ஓடுவதும் ஏதாவதொரு ஆடையை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டி “அம்மா, இந்த டிரஸ் நல்லா இருக்கா பாரு”

.


Read More


தம்பிப் பெண்..!

மனசுக்குள் வலியாக இருந்தது. அறையில் வந்து மல்லாந்து படுத்தேன். அறைக்கு வெளியே கூடத்தில் தம்பி, தம்பி குடும்பம் . பார்க்க வந்த எங்களுக்கு அறையை ஒழித்துக் கொடுத்து விட்டு அங்கே படுத்திருந்தார்கள். புரண்டு படுத்தேன். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவனுக்கு இரண்டும் பெண். அவனுக்குப் பாரம் குறைக்கலாம் என்ற எண்ணத்தில்… “ஒரு பெண்ணை நான் வளர்த்து ஆளாக்கி நல்லது கேட்டது செய்யிறேன்டா.! “என்று பல நாட்களாக மனதில் நினைத்திருந்த ஆசையை அவனிடம் சொன்னேன். “அது சரிபடாதுண்ணே.

.


Read More


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருவரும் “குழந்தை தங்க விக்ரகம் போல இருக்கு. குழந்தை நல்ல கலரும் கூட”என்று புகழ்ந்து விட்டு விமலா கொடுத்த ‘காபி’யை குடித்து விட்டு கொஞ்ச நேரம் இருந்தார்கள்.குப்புசாமியும்,மரகதமும் சம்மந்தி ரெண்டு பேர்,முகத்திலேயும் மாப்பிள் ளை,பொண்ணு முகத்திலேயும் சந்தோஷம் இல்லாமல் இருந்ததை கவனித்தார்கள். ‘சரி,நாம வெறுமனே இவா படற வேதனையை இன்னும் எத்தனை நாள் பாத்துண்டு இங்கே இருக்கறது’ என்று நினைத்து குப்புசாமி “நாங்க இன்னிக்குப் கிராமத்துக்கு போயிட்டு,குழந்தைக்கு

.


Read More


அறம் சார்ந்த வாழ்க்கை

எண்பத்தியேழு வயது விஸ்வநாத ஐயர் காலையில் சந்தியாவந்தனம் செய்துவிட்டு அன்றைய பேப்பரை எடுத்துக்கொண்டு ஈஸி சேரில் வந்து அமர்ந்தார். கொள்ளுப் பேரன் ஸ்ரீராம் அங்கு வந்து, “தாத்தா நானும் கமலியும் இன்னிக்கி தனிக்குடித்தனம் போகிறோம்…” என்றான். “எதுக்குடா இப்ப தனிக்குடித்தனம்?” “கமலிக்கு இங்க ப்ரைவஸி இல்ல தாத்தா… மேலும் இப்ப பார்த்திருக்கிற வாடகைவீடு அவளோட கம்பெனி கிட்டயே இருக்கு….” “சரி… சரி நல்லபடியா இருங்கோ…” ‘இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் பொண்டாட்டி தாசனாகவே மாறியாச்சு… தற்போதைய வாழ்வியல்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2020]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.