சிறுகதைகள் (Short Stories in Tamil)
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://www.sirukathaigal.com/2019/09/18/
புதுமைப் பெண் - இரா.சடகோபன்
செல்வியை அவளது அப்பா ஒரு புதுமைப் பெண்ணாக வளர்த்திருந்தார் . அதற்கு ஏற்றாற் போலவே அவளும் இலக்கணம் மீறிய கவிதை போல் வளர்ந்து இருந்தாள். ஆண்கள் தன்னிடம் நட்பாக பழக வேண்டும் என்றே விரும்பினாள் அன்றி காதல் கத்தரிக்காய் என்று எல்லாம் உளறக் கூடாது என்பதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தாள்.அப்படி அணுகும் ஆண்களை அவள் புறக்கணித்து வந்தாள். ஆனால் அவள் எவ்வளவு கண்டிப்பாக இருந்தாலும் அவளுடன் பழகும் ஆண்கள் அவள் அழகை ரசிக்கத்தான் செய்தார்கள்.அதற்கு ஏற்றாற்போல
.
|
Read More
|
காதல் சொல்ல வந்தேன் - சித்ரா தணிகைவேல்
“டேய்! நான் நடுரோட்டுக்கு வந்துட்டேண்டா!” என்றான் கார்த்திக். “என்னடா சொல்றே?” என்றான் மாதவன் அதிர்ச்சியுடன். “மிடில் ரோடுக்கு வந்துட்டேன்கிறதைத் தமிழ்ப்படுத்திச் சொல்றேன்டா!” கார்த்திக். “நல்லாத் தமிழ்ப்படுத்துறீங்கடா! தமிழைப் ‘படுத்துறீங்க’!” “நீ எங்கடா இருக்கே?” “நானும் அதே நடுரோட்லதான் இருக்கேன். ஆனா நான் இருக்கறது பூகிஸ் நூலகத்துக்கிட்ட இருக்கிற நடுரோடு!” மாதவன். “நான் இருக்கிறது ‘ரோச்சோர்’கிட்ட உள்ள நடுரோட்டில்! முன்னாலேயே சொல்லித் தொலைச்சிருக்கக் கூடாது? இரு பைக்ல பறந்து வந்திடறேன்!” “நீ பறந்து வரியோ மிதந்து வரியோ எனக்குத்
.
|
Read More
|
உறவின் நிறங்கள் - தேவவிரதன்
சமீபத்தில் எனக்குப் பரிச்சயமாகி நண்பரான திருவாளர் விசுவம் என் கண்களுக்கு ஒரு விந்தையான மனிதராகத் தென்பட்டார். இளங்காலை நேரங்களில் நடைபயிலும் பெசன்ட் நகர் மேட்டுக்குடி மக்களின் கடற்கரைப் பகுதியில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அறுபது வயதானாலே எது வருகிறதோ இல்லையோ சொல்லாமலே ஆஜர் ஆவது மூட்டுவலி; ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான இந்தத் தொல்லையையும், துன்புறுத்தலையும் விரட்ட மருத்துவர்கள் உபதேசிப்பது உடற்பயிற்சியைத்தான். என்ன உடற்பயிற்சி? ’ஸிக்ஸ் பேக்’ உள்ள பலகை போன்ற மார்பையா, வயிற்றுப் பகுதியா? ம்ஹும்,
.
|
Read More
|
வெந்து தணிந்த மழலைகள் - கிரிஜா ஜின்னா
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் சக்திவேலின் மேசை மேல் இருந்த அனைத்துத் தொலைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலித்தன. அவருடைய நேரடி தொலைபேசியும் அந்தரங்க காரியதரிசி மூலம் வரும் தொலைபேசிகளும் ஒலித்தன. இது காணாது என்று சக்திவேலின் கைப்பேசிகள் வேறு அலறின. கடந்த பதி னைந்து நிமிடங்கள் வரை மிக மிக அமைதியாக இருந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் தீடிரென்று ஒரு பெரிய நிகழ்வு நடக்கும் இடமாக மாறிவிட்டது. அதுவும் இப்போது எண்ணிக்கையில் அடங்காத செய்தி தொலைக்காட்சிகள் வந்து விட்டதால்
.
|
Read More
|
எல்லோரும் நல்லவர்களே - ஸ்ரீ.தாமோதரன்
என்ன சார் அநியாயம் இது, நீங்க எல்லாம் பாத்துட்டுத்தானே இருக்கறீங்க, ஏதுக்கு இப்படி பண்ணறேன்னு கேட்கமாட்டீங்களா? நாம என்ன பண்ண முடியும் பத்பனாபன். இல்லே சார் இதை நான் விடறதாயில்லை, கார்ப்பரேசன் ஆபிசுக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணத்தான் போறேன். உங்களுக்கு இங்கத்த நடை முறை தெரிய மாட்டேங்குது பத்பநாபன், இங்க எல்லோரும் ஒரே மாதிரிதான், சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாமும் மாறிக்கணும். சார் தயவு செய்து என்னைய அப்படி நினைச்சுக்காதீங்க, நான் இந்த மாதிரி அநியாயமெல்லாம் பாத்துகிட்டு சும்மா
.
|
Read More
|
காக்கைச் சிறகினிலே - செல்வராஜ் ஜெகதீசன்
அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு
.
|
Read More
|
பாசக்கயிறு - செய்யாறு தி.தா.நாராயணன்
டாக்டர் மாதவன் காரை நிறுத்திவிட்டு, வந்து தன் வீட்டின் காலிங் பெல்லை அடித்த போது காலை ஒன்பது நாற்பது. பசி வயிற்றை கிள்ளுகிறது. உடல் முழுக்க அப்படியொரு வலி. நைட் டியூட்டியை முடித்துவிட்டு வருகிறார். இரவு முழுக்க தூக்கமில்லை. ஏழெட்டு ஆக்ஸிடெண்ட் கேஸ்கள். அதில் மூன்று டெத். சில ஆண்டுகளாகவே தினசரி ஆக்ஸிடெண்ட் மரணங்கள் ஒன்றிரண்டை தாண்டும் என்பது சராசரி நிகழ்வாக போய்விட்டது. கிளம்பும் போது வருத்தமுடன் டெத் சர்டிஃபிகெட்களில் கையெழுத்திட்டு விட்டு கிளம்பினார். எல்லாமே அவருடைய
.
|
Read More
|
களவாணி - காரை ஆடலரசன்
கை பேசியில் பேசி முடித்த கமலாம்மாள் முகத்தில் கலவரம். ” என்ன..? ” கேட்டேன். ‘’ போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன். ‘’ ‘’ஏன்…? ‘’ ‘’ ஜவுளி கடைக்குப் போன சின்னப்ப பொண்ணும் மாப்பிள்ளையும் அங்கே இருக்காங்களாம். வரச் சொல்லி அழைப்பு.’’ ‘’ என்ன விஷயம்..? ‘’ ‘’ தெரியல…’’ ‘’ சரி வாங்க போகலாம்..’’ எழுந்தேன். சம்பந்தி வேறு எந்த பேச்சும் பேசாமல் கிளம்பி இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்தாள். வண்டி காவல் நிலையம்
.
|
Read More
|
எனக்கு உடனே வளருணுங்க… - ஜெ.சங்கரன்
அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தருக்கு வயசு ஏறிக் கிட்டே போய்க் கிட்டு இருந்தது.அவன் கல்யாண பண்ணிக் கொள்ளச் சொல அவன் பெற்றோர் கள் வற்புருத்த ஆரம்பித்தார்கள்.ஆனால் கண்ணாடி முன் தன் தலையைப் பார்த்த அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.பின் புறம் கொஞ்சமா இருந்த சொட்டைஇப்போது அதிகமாகி இப்போ முன் தலைக்கும் வந்து விட்டது.‘இந்த மாதிரி இருக்கும் தலை அழ கைப் பாத்தா எந்த வயசு பொண்ணு நம்மை கல்யாணம் கட்டி ப்பாங்க’ என்று வருத்தப்பட்டுக் கொண்டு தன்
.
|
Read More
|
ஆரம்ப விரிசல்கள் - எஸ்.கண்ணன்
(இதற்கு முந்தைய ‘விரட்டும் இளைஞர்கள்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) மரகதத்துடன் இதே குற்றாலத்திற்கு எத்தனையோ தடவைகள் சபரிநாதன் வந்திருக்கிறார். ஆனால் ஒருத்தன்கூட அவளை உற்றுப் பார்த்ததில்லை. பத்து நாட்கள் குற்றாலத்தில் இருக்கலாம் என்று சொல்லி ராஜலக்ஷ்மியை அழைத்து வந்தவர், நான்காம் நாளே மூட்டையைக் கட்டச் சொன்னதில் அவள் மனசு லேசாகக் காயப்பட்டது. அதைப் புரிந்து கொள்ளாத சபரிநாதன் “ராஜி, இனிமே ஒன்னை குற்றாலத்துக்கே கூட்டிட்டு வரமாட்டேன்” என்று ஒருவித துவேஷத்துடன் சொன்னபோது அவளுக்கு
.
|
Read More
|
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.
|