This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

http://www.sirukathaigal.com/2019/08/21/

முத்தங்கள் நூறு! - இரா.சடகோபன்

அந்த தொலைபேசியில் வந்த செய்தி ஜெபநேசனை நிலைகுலையச்செய்தது. அவன் தலையில் இடிவிழுந்து மண்டை பிளந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு அவர் தலைவலிக்க ஆரம்பித்தது. அப்படியே மனம் தளர்ந்து அருகிலிருந்த நாற்காலியில் பொத்தென சாய்ந்தார். அவரது ஒரே ஒரு மகளான மேரி ரொஸலின் பாடசாலை விட்டு வரும் வழியில் வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்த்தபின் உயிரை விட்டிருக்கிறாள். ரொஸலினுக்கு அண்மையில்தான் பதினொரு வயது பூர்த்தியாகியிருந்தது. அவள் பிறக்கும்போதே அவளின் அம்மாவை இழந்து விட்டதால் அவள் அம்மாவை விழுங்கிவிட்டுத்தான்

.


Read More


புரியாத புதிர் - யோகராணி கணேசன்

அது ஒரு அதிகாலை வேளை, எப்பவும்போலவே ஒலிக்கும் வில்வையடிப்பிள்ளையார் கோயில் மணியோசை அன்று ஒலிக்கவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டால் கூட திடுக்கிடும் பயம் உடனே தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு ஊரே பேரமைதியாய் இருந்தது. அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த ஊரைச்சுற்றி முன்னூறுக்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களுக்குரிய அன்றாட வியாபார தளமாகவும் அரச அலுவலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் போன்ற பல தேவைகளை பூர்த்திசெய்வதற்குரிய மத்திய மையமாகவும் விளங்கியது இந்த

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 முதியோர் இல்லத்திற்கு வந்த கணபதியும்,சாந்தாவும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் இடத்தில் படுக்கப் போனார்கள்.படுத்ததும் கணபதி சந்தோஷத்தில் சாந்தாவைப் பார்த்து “சாந்தா,நாம இன்னைக்கு செந்தாமரையை கோவிலிலே பாப்போம்ன்னு கனவிலே கூட நினைக்கலே. நான் தினமும் வேண்டி வர அந்த முருகப் பெருமான் தான் அவளை நம் கண் முன்னாலே காட்டி, அவ நம்மை சென்னைக்கு அழைச்சுப் போற புத்தியையும் அவளுக்கு குடுத்து இருக்கார். இது அவர் அனுக்கிகம் தான் சாந்தா” என்று

.


Read More


கால் மணி நேரம் - நிலாரவி

“எம் புள்ளையை ஸ்கூல்ல யாரோஅடிச்சிட்டாங்கலாம்… அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அழைப்புமணி அடித்துக் காத்திருந்த குமாரை வரவேற்றது மனைவி விமலாவின் குரல். மணி ஏழைக் கடந்து விட்டிருந்ததைக் காட்டிய கடிகாரத்தின் விநாடி முள் வழக்கத்தை விட அதிகமாகத் துடிப்பது போலிருந்தது அவனுக்கு. நாள் முழுக்க கணினித்திரையை வெறித்தபடி வேலை பார்த்த கண்களில் அயர்ச்சி. இருசக்கர வாகனத்தில் அரைமணி நேரப் பயணம். களைப்பு தீர ஆயாசமாய் சற்று அமரநினைத்தவனை கலவரப்படுத்தியது அவளின் பேச்சு. அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு வந்து

.


Read More


சிறு துளி - ஸ்ரீ.தாமோதரன்

நல்ல வெயில், லாரிகளும் பேருந்துகளும் சென்றும், வந்தும் கொண்டிருந்த அந்த தார் சாலையில் வயதான் மனிதர் ஒருவர் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். தாகம் வாட்டியது, நா வறட்சியால் தண்ணீர் எங்காவது கிடைக்குமா என்று கண்கள் அலை பாய தேடிக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் ஒரு பழக்கடை கண்ணில் பட அங்கு சென்றவர் கொஞ்சம் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். தண்ணீர் இல்லை, காசு இருந்தால் ஜூஸ் தருகிறேன் என்று கடைக்காரர் சொன்னார். ஐயா என்னிடம்

.


Read More


தியாகம்? - யுவகிருஷ்ணா

“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” டிவியில் ஏதோ செய்திகளுக்கு இடையில் காட்டப்பட்ட அந்த தேசத்தலைவரை பார்த்ததும் கேள்வி கேட்டான் நவீனன். பத்து வயது தான் ஆகிறது. பதினாறு வயதுக்கான அறிவு அவனுக்கு. கண்டது, கேட்டது எதையுமே கேள்விக்குள்ளாக்குவான். “அது ஒரு பெரிய கதை நவீனா!” மஜூம்தார் பதிலளித்தார். சமகால புரட்சி தமிழ் எழுத்துக்களை வாசித்தவர்கள் யாரும் மஜூம்தாரை புறக்கணிக்க முடியாது. மிகப்பிரபலமான மாற்று சிந்தனை எழுத்தாளர். “கதை கேட்பது எனக்கு பிடிக்கும் என்பது உனக்கு

.


Read More


சமாதானத்தின் கதை - ஜே.கே

எண்ணூற்று ஐம்பத்தாறாம் இலக்கப் பேருந்தில் பயணித்து, ஆலடிச்சந்தித் தரிப்பிடத்தில் இறங்கும் பலரும் அங்கிருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்கும் கேள்வி இது, “சமாதானத்திட்ட எப்பிடிப் போறது?” கடைக்காரரும் வெளியே வந்து கைகளால் சுட்டிப் பாதையை விவரிப்பார். “இப்பிடியே இந்த நரிக்குண்டு ரோட்டால ஒரு கட்டை நடந்தீங்கள் எண்டால் கிழக்கால வயக்காச்சி அம்மன் கோயில் வரும். அதிண்ட தேர் முட்டிப்பக்கம் ஒரு சின்னக் கொட்டில் இருக்கு. அங்கனதான் சமாதானம் கிடக்கும்” இதனையே மதியத்துக்கு மேலே, இரண்டு மணிப் பேருந்தில் வந்து

.


Read More


தணிகாசலம்…! - காரை ஆடலரசன்

தலைமை ஆசிரியர் சுந்தரராமன் பேச்சு, போக்கு… மனசுக்குள் கஷ்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. இரவு 8. 00. மணிக்கு மேல் வீட்டை வீட்டுக் கிளம்பி… ஊரின் ஒதுக்குப்புறமாய் இருக்கும் காமராசர் உயர்நிலைப்பள்ளி கட்டிட வளாகம் காம்பவுண்ட் சுவருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். இந்தப் பள்ளி மென்மேலும் நல்லப் பெயர் எடுக்க வேண்டுமென்கின்ற எண்ணத்தில் இந்தப்பள்ளிக்கு மூத்தவன், முதலாமானவன் என்கிற முறையில் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்து… ” சுந்தரராமன் சார். ஒரு சின்ன யோசனை. அறிவியல் பாடம் நடத்துற சிவசுப்ரமணியமும்,

.


Read More


மயக்கம் 2 - பாலசுப்ரமணியன் சிவராமன்

ஹரி இன்று எப்படியும் தன் மனதில் உள்ளதை ம்ஹாவிடம் சொல்லி விடவேண்டும் என எண்ணி அவளோட இருக்கைக்கே சென்று விட்டான். ஆனால் அங்கு மஹாவுடன் நிறைய பேர் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அவன் சொல்ல வேண்டியதை இன்றைக்கும் சொல்ல முடியாமல் போனது. ஹ்ரிக்கு பெங்களூரில் ஒரு 20 நாட்கள் ஆபிஸ் விஷயமாக போக வேண்டியிருந்தது. எப்படிதான் தன் மனதில் உள்ளதை சொல்ல போகிறோமோ என வருத்தத்துடன் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான். இதையே நினைத்து…நினைத்து… ஹரிஹரனுக்கு

.


Read More


அடுத்த பெண்மணி - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மகள்களின் சம்மதம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) வழக்கமாக அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் சுகுணாவின் கணவன் சுப்பையா, அன்று ஆறு மணிக்கே திரும்பிவிட்டான். வீடு அமைதியாக இருந்ததை நுழைந்ததுமே கவனித்து விட்டான். எப்போதும் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும் டி.வி. இன்று சுகுணாவைப்போல் அமைதியாக இருந்தது. “என்ன இன்னிக்கி வீடு சப்தமே இல்லாம கெடக்கு?” சுகுணாவிடமிருந்து பதில் வரவில்லை. சுப்பையாவுக்கு புத்திசாலித்தனம் சற்று அதிகம். உடனே பதில் வராவிட்டால்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.