This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/07/29/

அதிதி - காலபைரவன்

இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது. காற்றின் போக்குக்கு ஏற்ப, சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டியின் தாள்கள் அசைந்துகொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந் தவர்களை போர்வைக்குள் இருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்த வர்கள் மீது நீல வண்ணம் கவிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவைத் தூண்டியது. அதைத்

.


Read More


தூர் - செய்யாறு தி.தா.நாராயணன்

தமிழகத்தில் போன வருஷமும் சரியான மழை பொழிவு இல்லாததினால் ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. எங்கும் வெக்கையின் தீட்சணம் கொளுத்துகிறது. நாட்டின் சராசரி வெப்பம் 110°F. சென்னை குடிநீருக்கு ஆதாரமான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம், ஏரிகளெல்லாம் ஏற்கனவே வறண்டு போச்சு. வேற வழியில்லாமல் குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் அழுக்குத் தண்ணீரையெல்லாம் சுத்தப் படுத்தி சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட இன்னும் பத்து நாட்களுக்குத்தான் காணுமாம். அப்புறம்?. அரசுக்கு எந்த வழியும் தெரியவில்லை.

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை செந்தாமரை தன் வீட்டில் எல்லோரையும்,தாத்தாவையும், அழைத்துக் கொண்டு வடபழனி கோவிலுக்குப் போய் எல்லோர் முன்னிலையிலும் குருக்கள் மந்திரம் சொல்ல டேவிட் ராணிக்கு தாலி கட்டினான்.பிறகு செந்தாமரை எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் சரவண பவனில் கல்யாண சாப்பாடு போட்டாள்.சாப்பிட்டு முடிந்ததும் ஜென்னியும், தாமஸூம், செந்தாமரையைப் பார்த்து ”நீங்க கல்யாணத்தே ரொம்ப சிறப்பா செஞ்சீங்க. எங்களுக்கு ரொம்ப சந் தோஷமா இருக்குங்க.நாங்க ராணியை எங்க கூட இட்டுக் கிட்டு எங்க

.


Read More


பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் - மீ.மணிகண்டன்

அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி, என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா… கதவைத் திறந்தா என்ன… ம்… பெல் சத்தம் உனக்கும்தானே கேட்குது… நீ போய் கதவை திறயேன்… அறைக்குள் இருந்து பதில் கொடுத்தான் பிரகாஷ். அழைப்பு மணி மீண்டும் ஒலிக்கிறது. அப்பப்பா… போட்டி போட்டி.. எதுக்கெடுத்தாலும் போட்டி… சொல்லிக்கொண்டே கையில் கரண்டியோடு அறைக்குச்சென்றாள் பிரேமி… இப்போ நீங்க போய் கதவைத் திறக்கலே… திறக்கலே…. திறக்கலே…. ம்… திறக்கலே… சொல்லு சொல்ல வந்ததை

.


Read More


மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம் - ஸ்ரீ.தாமோதரன்

எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு அப்பா வீட்டிற்கு வந்திருந்த என் பெண் அப்பா உன் பீரோவை சுத்தம் பண்ணப்ப இந்த பேப்பர் கட்டு கட்டி இருந்தது. படிச்சு பார்த்தேன் நல்லா இருக்கு ! ஆனா பேப்பர்தான் பழுத்து எழுத்தெல்லாம் சரியா தெரிய மாட்டேங்குது, நீ கவிதை எல்லாம் எழுதுவியா? சொல்லிக்கொண்டே அந்த பேப்பர் கட்டை என் கையில் திணித்தாள். அந்த கட்டை

.


Read More


ஆன்மீகம்! - யுவகிருஷ்ணா

“அண்ணே! ‘ஆன்மீகம்’னா என்ன?” “தம்பி! ‘ஆன்மீகம்’னா வைப்ரேஷன், அதிர்வுகள்!” “புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” “நம்மை ஏதாவது ஒரு விஷயம் ஈர்க்கும்போது நம் உடலளவிலும், மனதளவிலும் சில அதிர்வுகள் ஏற்படும்!” “அதுமாதிரி நான் உணர்ந்ததில்லையே?” “கண்டிப்பாக எப்போதாவது உணர்ந்திருப்பாய். உனக்கு தெரிந்திருக்காது. அதீத மகிழ்ச்சியும், அதீத சோகமும் கூட இதுபோன்ற அதிர்வுகளை உன்னில் ஏற்படுத்தும்!” “சரி ஆன்மீக அதிர்வுகளை எப்படி உணர்வது?” “உனக்குள் தான் கடவுள் இருக்கிறார். உனக்கே திருப்தியான அளவில் நீ ஏதாவது பணியை

.


Read More


தூங்காத இரவு வேண்டும் - ஜே.கே

கோமளா சிவலிங்கத்தைப் பார்த்து சன்னமாக கேட்டாள். குரல் எழவில்லை. “கண்ண…ன் ஒழு…ங்கா சா..ப்பிட்ட..வனா?” சிவலிங்கம் பதில் சொல்லவில்லை. மெதுவாக கோமளாவின் தலையை தடவிக் கொடுத்தார். அவளிடத்தில் பெரிதாக சலனமில்லை. முடி எதுவும் இல்லாத தலை. நெற்றியில் குட்டி குங்குமம். கண்கள் சற்று செருகியிருந்தன. முகம் கொஞ்சம் உள்ளே ஒடுங்கியிருந்தது. சொண்டு வெடித்து, கொஞ்சம் வெளிறி, கடைவாயில் சின்ன மாறவே மாறாத அந்த சிரிப்பு, கோமளா அந்த அயர்ச்சியிலும் அழகாக இருந்தாள் போன்றே தோன்றியது. காலையில்தான் தாதியர் அவளை

.


Read More


ஓ…பாஞ்சாலியே…! - காரை ஆடலரசன்

மனம் முழுக்க கனம். கணேஷ் வந்து மொட்டை மாடியில் அமர்ந்தான். கூடவே தினேசும் அவன் அருகில் அமர்ந்தான். இருவரும் தர்மலிங்கத்தின் சொந்த அக்கா, தங்கை மகன்கள். கணேஷ் பத்து வயதாகும்போதே அவன் அம்மா விதவை. அது மட்டுமில்லாமல் ஏழை. கிராமத்தில் தாயும் மகனும் கஷ்டப்பட்டார்கள். கணவனைப் பிரிந்த துக்கம் அவள் கூடிய சீக்கிரமே சீக்காய்ப்போய்… விரைவிலேயே செத்தும் போனாள்.பையன் அனாதை.! ஆதரவு. .?….. தாய் மாமன் தர்மலிங்கம் அழைத்து வந்துவிட்டார். தினேஷின் கதை இன்னும் பரிதாபம். அம்மா,

.


Read More


கையறுநிலை - பா.அய்யாசாமி

என்ன ஆச்சு ராமுக்கு ?நல்லாத்தானே இருந்தான். என்று வருத்தமாக ராமுவின் மனைவி சாராதாவிடம் கேட்ட குமார். ராமுவின் பள்ளிக்காலத்திலிருந்தே தோழன், மற்றும் சாரதாவின் உறவினர். தெரியலை! திடீர்னு அன்றைக்கு காலையில் எழுந்தவர், எனக்கு தலை சுற்றுகிறது, தலை வலியும் அதிகமாக இருக்கு என்றார். அதிலிருந்து அடிக்கடி தலைவலி வருவதும், ஞாபக மறதியும் அதிகமாயிடுச்சு, என்ன செய்யறதுன்னு தெரியலை, டாக்டர்கிட்டே போய் வந்தோம். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையில் ஒரு கட்டி ஒன்று உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தாலும்

.


Read More


கோணல் பார்வை - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘சுயநலக் குணம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சமையல்காரர் சிவக்குமார் உள்ளே போய் பாலக்காடு கிளம்புவதற்காக ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார். சபரிநாதனுக்கு இது ஒரு புது எரிச்சல். காலையில் எழுந்ததும் இனி அவர்தான் கையில் கரண்டியைப் பிடிக்கணும். அவசரத்திற்கு எத்தனையோ நாட்கள் சபரிநாதனின் கை கரண்டி பிடித்த கைதான். ஆனால் இப்போது அதுவும் ஒரு சோதனை போல அவர் மனசை வெறுப்பேத்தியது. பாசுரம் சொல்லச் சுத்தமாக மறந்து போய்விட்டது. ‘சும்மா சும்மா

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.