This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/07/24/

ஒரு அமாவாசை நாள்! - சோம.வள்ளியப்பன்

வௌ்ளிக்கிழமை அமாவாசை தெரியுமில்ல மறக்காம தர்ப்பணம் பண்ணிடுங்க மனைவி சொன்னதும் திக் என்றிருந்தது. வியாழன், வௌ்ளி இரண்டு நாட்களும் மதுரையில் வேலை. தயாரிப்பாளர் நிறுவனம் நடத்தும் பயிற்சி. ரெசிடென்ஷியல் புரோகிராம் என்பதால் தங்கப்போவது அவர்களே ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டலில். கோயில் எங்கிருக்கோ, குளம் எங்கிருக்கோ! பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, வாழைக்காய், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வாங்கிப்போய் அய்யக்கு தானம் கொடுக்கணும். காலையில டிபன் வேண்டாம். தர்ப்பணம் செய்தபின் ரோ சாப்பாடுதான் சாப்பிடணும் இலை போட்டு தெளிவாக

.


Read More


குழந்தையின் அழகு! - ஆர்.சூடாமணி

“எங்க குழந்தை!” தம்மைத் தாண்டி வெளி வந்த சொற்கள் அந்த உதடுகளுக்கு இன்னமும் ஒரு புதிய ஒளி தான். இன்னமும் அதன் மகிழ்ச்சியில் அவை வியப்புற்று நின்றன. எதிர் முகத்தில் கேள்விக்குறி. “உங்க….?” “எங்க குழந்தை.” உதடுகளில் மலரும் புன்னகைப்பூ. நாவில் சுரக்கும் அதன் தேன். ராஜனை அவன் வசமின்றியே இன்பம் சிரிப்பாக ஆக்கிரமித்தது. எதிரே கல்லான மௌனம். சிரிப்பை நிறுத்திக் கொண்டு ராஜன் கேட்டான். ” என்ன அப்படித் திகைச்சுப் போயிட்டே வாசு? எங்க குழந்தை

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 இரவு பூராவும் தூக்கம் வராமல் கஷ்டப் பட்டுக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் புரண்டு புரண்டுப் படுத்தாள் கமலா.காதில் மசூதியில் இருந்து அல்லா பாட்டு கேட்டது கமலாவுக்கு. தன் கண்களை தேய்த்து கொண்டே மெலல எழுந்து .பெட் ரூமை விட்டு வெளியே வந்தாள். கமலா வின் கண்களைப் பார்த்த தேவி ”என்ன கமலா ரா பூரா நீதூங்கவே இல்லையா.உன் கண்ணு ரெண்டு இப்படி கோவைப் பழம் போல சிவந்து கிடக்குதே.ஏன் கமலா

.


Read More


ஃபானி புயலும் நானும்…- ஞானம்

“டேய் மழடா…” என்று அருகில் இருந்த நண்பர் ஆரவாரமாக கூச்சலிடும் போது, நான் அவர் அருகில் தான் அந்த வாடகை வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தேன். அந்த ஆரவாரம் கலந்த மகிழ்ச்சிக் குரலைக் கேட்டு “அப்டியாணா….” என்றபடி ஆர்வமுடன் எழுந்து வாசலை நோக்கி ஓடினேன். அந்த நண்பரும் என் பின்னாடியே வந்தார். மரத்தால் ஆன வாசல் கதவைத் தாண்டி இரண்டு அடியில் உள்ள இரும்பாலான வெளிக்கதவைத் திறந்து வெளியே பார்த்துக்கொண்டு “ஆமாணா, மழ பெய்து… ” என்று

.


Read More


நூறு ரூபாய் - ஸ்ரீ.தாமோதரன்

வணக்கம் சார் ! என்னடா இவன் யாருன்னே தெரிய லை வணக்கம் போடறான் அப்படீன்னு பாக்காதீங்க, உங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வணக்கம் போடறதுனால எனக்கு ஒண்ணும் குறைஞ்சுடாது, அதுக்கப்புறம் நீங்க என்னை ஒரு மாதிரி “அதாவது, நமக்கெல்லாம் வணக்கம் போடறானே”, அதுவும் இந்த பஜாருக்குள்ள, அப்படீன்னு நினைப்புல என்னை பார்ப்பீங்க,அப்ப மெதுவா ஆரம்பிப்பேன், சார் ஒரு “ஹ்ன்ரட் ருப்பீஸ்” இருக்குமா சார்? உடனே சுதாரிச்சுக்குவீங்க, எங்கிட்ட அதெல்லாம் இல்லை என்று அவசர அவசரமா என்னைய விட்டு கிளம்ப

.


Read More


நாய்க்காதலன்! - யுவகிருஷ்ணா

டமாருக்கு நாய்கள் என்றாலே ஆவாது. நைட்டு சரக்கடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு வரும்போது இருட்டில் தெருவில் தூங்கும் சொறிநாய்களை மிதித்துவிடுவான். ஒரு குடிகாரனுக்கு இதற்கு கூட உரிமையில்லையா என்ன? உயிரே போய்விட்டது போல அந்த நாய்கள் ‘வாள் வாளென்று’ கத்தி அதனாலேயே அவனுக்கு பலமுறை போதை தெளிந்துவிடும். மறுபடியும் போய் ஒரு கட்டிங் அடிக்க வேண்டும். இந்த மேட்டராலேயே நாய்கள் மீது கொலைவெறி ஏற்படும். எங்கு எந்த நாயைப் பார்த்தாலும் குறிபார்த்து கல்லால் அடிப்பதை டமாரு ஒரு வேண்டுதலாகவே

.


Read More


பச்சை மா - ஜே.கே

“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?” “இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்” “சரியான டைம் சொல்லுங்கோ”. இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இது எந்த ஊர் மணிக்கூடு என்ற குழப்பம் வந்தது. நித்தியானந்தன் தூக்கு மாட்டிய சமயம், அடுத்த அறையில் மனைவி கோமதி கொம்பியூட்டரில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஒரு ஏழு ஏழரை இருக்கலாம். நித்தியானந்தன் ரொட்டிக்கு மா பிசைந்துகொண்டிருந்தபோது எடுத்த திடீர்

.


Read More


அவள்…! - காரை ஆடலரசன்

எதிர்பாராதவிதமாக நந்தினியைப் பூங்காவில் தன்னந்தனியே பார்த்ததும் எனக்குள்ளிருந்த ஆசை துளிர்விட்டது. இவள் என் பால்ய சினேகிதி. ஒரே ஊர். பக்கத்துப் பக்கத்துத் தெரு. நாங்கள் ஒரே பள்ளிக்கூடம். ஒரே வகுப்பில்தான் படித்தோம். சின்ன வயசிலேயே அவள் பேரழகி. அப்போதிருந்தே எனக்கு அவள் மீது ஒரு கண். தொட்டுவிளையாட ஆசை. நான் முயற்சி செய்வதற்குள் இன்னொருத்தன் முந்திக்கொண்டு விட்டான். அவனும் எங்களோடு படித்தவன். கொஞ்சம் பணக்காரன். நல்ல வாட்டசாட்டம். நந்தினி மயங்கிவிட்டாள். அவன் மயக்கி விட்டான். அவர்கள் பெயர்கள்

.


Read More


கைதி எண் 202 - பா.அய்யாசாமி

யோவ்..இங்க வாய்யா! இதை போட்டுக்க, 202 எண் கொண்ட கைதி உடையை கொடுத்தனர். ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும், இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கனும், அங்கே போ! உடல் பரிசோதனைக்கு டாக்டர் வருவார்! என்று விரட்டினர். மருத்துவர் வந்த பின் அவரது உடல் முழு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவரே பேச்சுக் கொடுத்தார். உங்கள் பெயர்.? முத்துராமன் என்றார். படிச்சு இருக்கீங்களா? இல்லை! கைநாட்டு! என்ன குற்றம் செஞ்சீங்க? கொலை பண்ணினதா சொல்றாங்க! யாரை? என் மனைவியை. காரணம்? நான்தான்

.


Read More


சுயநலக் குணம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘ஸம்ஸ்கிருதத் தனிப்பாடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதன் தன்னையே மிகவும் நொந்து கொண்டார். இப்படியா ஒரு கூறுகெட்ட கோட்டிக்காரியிடம் போய் உளறித் தொலைவேன் என்று தன்னையே ஏசிக்கொண்டார். இனி அவருக்கு ரொம்ப வேண்டியவர்கள் என்று யாராவது மாற்றி மாற்றி வந்து தயங்கித் தயங்கியாவது இரண்டாம் கல்யாணம் என்று நாங்கள் கேள்விப்பட்டது நிஜம்தானா என்று சபரிநாதனைக் கேட்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதா?

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.