This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். http://www.sirukathaigal.com/2019/07/21/.

தொடு உணர்ச்சி! - ஆர்னிகா நாசர்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான் செல்வன். அவன் மனைவி கவிதா, கிறிஸ்துவ மேனிலைப் பள்ளியில், பிளஸ் 2 ஆசிரியையாக பணிபுரிகிறாள். இருவருக்கும் இடையே படுத்திருந்த அவர்களின், ஐந்து வயது மகள் ஸ்பூர்த்தி, ”அம்மா… ஒன் பாத் ரூம் வருது,” என்றாள். ”அம்மாப்பா துக்கத்தை கெடுக்காதே; நீயே, பாத்ரூமுக்கு போய்ட்டு வந்திரு,” என்றாள் கவிதா. தலையாட்டியபடி, படுக்கையிலிருந்து உருண்டு எழுந்து, உள்ளாடையை கழற்றி,

.


Read More


பூங்கொடியாபுரம் - பா.கலுசுலிங்கம்

இன்றைய ராஜபாளையத்திற்கு அருகே முன்னொரு காலத்தில் பூங்கொடியாபுரம் என்ற ஒரு கிராமம் இருந்தது. பச்சை நிறத்தில் பந்தல் போர்த்தியது போல ஊரெங்கும் வளமையாக இருந்தது. ஆனாலும், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகவும், சாதி அடிப்படையிலும் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. அங்கு வாழும் மக்களுக்கு குலத்தொழில் நெசவு. இருப்பினும் வேளாண்மையும் பிரதானமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் பசி வந்தால் பஞ்சை சாப்பிட முடியாதல்லவா? சாத்தப்பன்-முத்தம்மாள் என்ற தம்பதிகள் இதே ஊரில் பிறந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். முத்தம்மாளுக்கு தற்போது 9வது

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 டாக்டர் கொடுத்த மாத்திரைகளை ராஜ் தவறாம சாப்பிட்டு வந்தாலும் அவர் உடம்பு தேறவே இல்லை.ரெண்டு வாரத் துக்கு அவர் உடம்பு சுமாராய் இருந்து வந்தாலும்,அடுத்த ரெண்டு வாரத் துக்கு ஜுரம் வந்து படுத்த படுக்கையாய் ஆகி வந்தார். சரஸ்வதிக்கு உடம்பு அதிகம் ஆகி விடவே சரவணன் அவள பக்கத்தில் இருந்த ‘நர்ஸிங்க்’ ஹோமில் சேர்த்தார். நான்கு நாள் வைத்தியத்திற்கு பிறகு சரஸ்வதிக்கு உடம்பு சா¢யாகமல் அவள் இறந்துப் போனாள்.சரவணன் அவள் ‘பாடியை’ ஒரு

.


Read More


நதியொழுக்கு - கோ.புண்ணியவான்

முப்பது முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது. ஆள் வெகுவாக மாறிவிடவில்லை. அந்த வயதில் விழுந்திருக்க வேண்டிய தொப்பை இல்லை. டக் இன் செய்யப்பட்டும் சிறிதும் விம்மாத கட்டுடம்பு. தலைமுடியில் ஓரிழைகூட உதிராமல் அடர்ந்து , வகிடெடுத்து வாரப்பட்ட நேர்த்தி. நரைகூடிக் கிழப்பருவம் எய்திவிடவில்லை! ஆங்கிலம் கசடறக் கைகூடிவிட்டதற்கான மொழியாடல். முகத்தில் தேஜஸ். உடற்கட்டில் ஒரு ஆண்மை மையமிட்டிருந்தது. அவன் ஓட்டிவந்த கார் அவன் ஒட்டுமொத்த தகுதியின் அடிநாதம். அவன்தான் என அடையாளம் கண்ட மறுகணமே, அத்து

.

 

Read More


டைரக்டர் - ஸ்ரீ.தாமோதரன்

உருகி உருகி காதலித்துக்கொண்டிருந்தான் தினேஷ். கயல்விழி அவனது காதல் மொழிகளை முகம் சிவக்க இரசித்துக்கொண்டிருந்தாள்.”கட்” டைரக்டர் சொன்னதும், இதுவரை இவர்கள் இருவரின் காதல் பேச்சுக்களை உற்று கவனித்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் மூச்சு விட்டு “அப்பாடி” என்றனர். அதுவரை அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாயிற்று”. தினேசுக்கும், கயல் விழிக்கும் மறுபடி தங்கள் இயல்புக்கு வர நினைத்தனர். உதவி டைரகடர் வேண்டாம் அடுத்த சீன் டைரக்டர் கண்டினியூ பண்ணுவாரு அப்படீனு நினைக்கிறேன், சொன்னவர்களை பரிதாபமாய் பார்த்தனர் இருவரும். காலையில் வெறும்

.


Read More


அவள்! - யுவகிருஷ்ணா

விக்கித்துப் போயிருந்தான். அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை. “நீ மட்டும் யோக்கியமா?” யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்? ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்ஸ்… வார்த்தைகளுக்கு வாய்ப்பின்றி காலைக் கட்டிக் கொண்டு அழுத மாமா. ”நீங்கதான் எங்க குடும்ப தெய்வம்” – அழுதுகொண்டே அரற்றிய அத்தை. “மாமா நீங்க இந்த நேரத்துலே உதவலேன்னா குடும்பத்தோடு தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடுவோம்” – மாமா மகன். தன்னை வளர்த்தெடுத்த குடும்பம் ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்து அவனும் அழுதான். மூலையில் குத்துக்காலிட்டு

.


Read More


தீராக் காதலன் - ஜே.கே

படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட நீர்த்திவலைகள் தெறிக்காவண்ணம் மிகப்பக்குவமாக துடுப்பு வலித்துக்கொண்டிருந்தான். ஒப்பாரி முடிந்து தூங்குகின்ற பாலைத் தலைவியின் இரவு போன்று சுற்றுவட்டாரம் முழுதும் ஒருவித நிசப்தம் நிரவியிருந்தது. தினமும் ஆற்றிலே பாய்மரமேற்றி மீன் பிடிக்கும் வலைஞர்களின் பாடல்கள் எங்கேயும் ஒலிக்கவில்லை. காலையில் மேலாற்று வழியாக தாவிக்குதித்து சூரிய நமஸ்காரம் செய்யும் வாலை

.


Read More


தெளிவு…! - காரை ஆடலரசன்

” ஜோசியம். .. ஜோசியம். ..! ” தெருவில் குரல் கேட்டதும் வீட்டினுள் அமர்ந்திருந்த ரெங்கநாயகிக்கு ஒரு வினாடிகூட சும்மா இருக்க முடியவில்லை. உடலும் உள்ளமும் சேர்ந்து துடித்தது. உடனே வீட்டை விட்டு வெளியே வந்தாள். கையில் மந்திரக்கோல் மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டிருந்த ஜோசியக்காரி வாசலில் தெரிந்தாள். ” ஏ. .. ஜோசியம். .! ” அழைத்தாள். ” என்னம்மா. .? ” அவள் திரும்பி குரல் கொடுத்தாள். ” ஜோசியம் பார்க்கணும். இங்கே வா. ..”

.


Read More


கு(கொ)லை விழும் நேரம் - பா.அய்யாசாமி

பாலையூர் போலீஸ் ஸ்டேசனா? சார்! சீக்கிரமா வாங்க, இங்க பூட்டின வீட்டுத் தோட்டத்திலே ஒருத்தன் விழுந்து கிடக்கின்றான். என்ன, ஏது, யாருனு தெரியலை என்று அன்றைய சூரியோதயத்தை ஆரம்பித்து வைத்தனர் , வளர்ந்து வரும் பகுதியான கவி நகர் குடியிருப்பு வாசிகள். ஆய்வாளர் வேற லீவுல இருக்கார், உதவி ஆய்வாளர் சங்கர் கிட்டே சொல்லிடுவோம் என அவரிடம் தகவலை கொடுத்தார் நிலைய எழுத்தர் . உதவி ஆய்வாளர் ரொம்ப துடிப்பான , முரடான தோற்றமும், பணியில் நிறைய

.


Read More


ஸம்ஸ்க்ருதத் தனிப்பாடல் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘தவிப்பு’ கதையைப் படித்தபின் இதை ப் படித்தால் புரிதல் எளிது) “ஏட்டி, வாசல்ல நின்னுட்டு என்னலா செய்யுத.?” வீட்டுக்குள் இருந்து காந்திமதியின் அம்மையின் குரல் கேட்டது. “சட்டியும் பானையும் செய்யுறேன்.. வந்து பாரு!” அடுப்புத் தீயில் எறிந்த மிளகாய் வத்தல் மாதிரி காந்திமதி சுள்ளென்று வெடித்தாள். “என்னதான் இருக்கோ அந்த வாசல்ல பொழுதுக்கும்…” திருப்பி பட்டாணி வெடி உள்ளே இருந்து! “பொழுதுக்கும் வீட்டுக்குள்ளேயே கெடந்து உசிரைவிட முடியாது என்னால” வெகுதூரம் போய்விட்ட சபரிநாதனின் காதுவரைக்கும் காந்திமதியின்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.