சிறுகதைகள் (Short Stories in Tamil)
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/07/14/.
பிறகு மழை பெய்தது - பொ.கருணாகரமூர்த்தி
விஷாகனின் பணியிடத்தில் ஒன்றாக பணிபுரிபவரும், நெடுநாள் நண்பருமான ஒருவரின் மகனது 18வதுபிறந்தநாள் விருந்து ஆடம்பரமாக அந்த ஹொட்டலில் நடந்துகொண்டிருந்தது. அவ்விருந்துக்கு வருவான் என வசீகரன் எதிபார்த்திருந்தவன் மகிழுந்தை நிறுத்திடத்தில் வைத்துவிட்டு அரங்கினுள் நிதானமாக நுழைந்தான். வசீகரன் சற்றுத்தூரத்தில் நின்ற இன்னொருவனை ‘உவன்தானா வென்று உறுதிப்படுத்துமுகமாக சைகையால் கேட்டான். அவனும் ‘ஆம்’ என்பதாகத் தலை அசைக்கவும் புலியைப்போல் துல்லியமாய் விரைந்து அடியெடுத்துப்போய் அவனின் அருகில்நின்று பிளேசருக்குள் மறைத்து வைத்திருந்த கிறிஸ்கத்தியை எடுத்து பலாப்பழத்திற் செருகுவதைப்போல் அவனது பளுவில் நிதானமாகச்
|
Read More
|
மனோவியல் பாடம் - இரா.சடகோபன்
நான் அந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். எங்களுக்கு மனோவியல் தொடர்பில் விரிவுரை எடுக்க வருபவர் ஒரு மனோவியல் பேராசிரியர். ஆரம்பத்தில் எங்களுக்கு அவரைக் கண்டால் பயமாக இருக்கும். அவரது இறுக்கமான முகத்தோற்றம் அவர் ஒரு கடுமையான ஆசாமியாக இருப்பார் என்ற மன உணர்வையே எங்களுக்குத் தோற்றுவித்தது. அத்துடன் மனோவியல் என்பதும் ஒரு கஷ்டமான பாடமாகத்தான் இருக்கும் என்றும் நாங்கள் நினைத்தோம். ஆனால் பேராசிரியருடன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே எங்களுக்கிருந்த எல்லா
|
Read More
|
சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்
அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 உடனே தேவி “அப்படியா செந்தாமு.நீ அவ்வளவு படிப்பு படிச்சு,எல்லா படிப்பிலேயும் முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக்கியா.எனக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்று சொல்லி செந்தாமரையைக் கட்டிக் கொண்டாள்.உடனே ராஜ்ஜும் “அப்படியாம்மா.நீ இத்தனை படிப்பு படிச்சி இருக்கேன்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.நீ இந்த குடிசையிலே இருக்க வேண்டிய பொண்ணே இலேம்மா.நீ உண்மையிலேயே ரொம்ப படிப்பாளிப் பொண்ணும்மா. உன் திற மையைத் தெரிஞ்சுத்தான்,அந்த நல்ல மனுஷன் உன்னை மதுரைக்குக் கூட்டிப் போய்
|
Read More
|
ஞாபகம் வருதே - ஸ்ரீ.தாமோதரன்
நடந்து சென்று கொண்டிருந்த என் மீது யாரோ புண்ணீயவான் காரை ஓட்டி வந்து, மோதி உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் ஆழ்ந்த மயக்க நிலை (கோமா) இருக்கிறேன். அப்பொழுது இரண்டு உருவங்கள் என்னை பிடித்து எங்கோ கொண்டு போகிறார்கள். நான் மெல்ல திமிற முயற்சிக்கலாம் என்று பார்க்கிறேன், ஆனால் அவர்கள் பிடி இரும்பு பிடி என்பார்களே அப்படி இருந்தது. என்னை எங்கோ நிறுத்தி வைத்திருப்பது தெரிகிறது, எங்கு என்று தெரியவில்லை, எங்கும் புகை மண்டலமாக இருக்கிறது. ஆனால் ஆச்சர்யம்
|
Read More
|
தரிசனம்
அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா ஆடை துறந்து திடீரென அம்மண கோலம் பூண்டது போல சிமிந்துத் தரை விரிந்து திறந்தபடி கிடந்தது. வெற்றுத் தரையில் முற்றிய மாலை வெயில் பாய்ந்து பரவி விழுந்திருந்தது. வெயில் ஏறி ஏறி உச்ச சூட்டில் கனன்று சிமிந்துத்தரை வெடித்துப் பிளந்துவிடுமோ எனத் தோணியது . தரையின் அகன்ற வெளிச்சம் விழுந்து கண்கள் கூசின. தரை வெப்பத்தால் உடலில்
|
Read More
|
ஷகீரா! - யுவகிருஷ்ணா
ஷகீயை பார்த்த நொடியிலிருந்தே எனக்கு “அந்த” விபரீத ஆசை துளிர்விட ஆரம்பித்தது. இதுவரை நான் கண்ட அழகிகளிலேயே பேரழகி அவள். அவளது குரல் தரும் போதைக்கு நிகரில்லை. அவளது கண்கள் டூமா கோலி குண்டுகள். அளந்துவைத்த மூக்கு. மல்லிகை மொட்டுகளாய் உதடு. செக்கச் சிவந்த நாக்கு. சங்கு கழுத்து. அப்புறம்…. எப்படியாவது ஒரே ஒரு முறை அவளை… ஆறு மாதத்துக்கு முன்பு சங்கரோடு கடைவீதியில் சைட் அடித்து கொண்டிருந்தபோது தான் அவளை பார்த்தேன். மேகத்திலிருந்து இறங்கும் வெள்ளை
|
Read More
|
MH 370 - ஜே.கே
சுப்புரத்தினம், கிராம சேவையாளர் கி/255 வட்டக்….” “கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது
|
Read More
|
திருமணம்…! - காரை ஆடலரசன்
‘ இந்திய நேரம் காலை சரியாய் எட்டு மணியளவில் ஐநூறு பயணிகளுடன் துபாயிலிருந்து இந்தியா நோக்கி வந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறி கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த அத்தனைப் பயணிகளும் பலி! ‘ – செய்தி எங்கெல்லாம் இடிகளை இறக்கியதோ தெரியாவில்லை. குணாளனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கியது. ” ஐயோ. …ஓஓஓ !! ” தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அரண்டு, அலறினார்கள். காரணம், அடுத்த வாரம் இந்த வீட்டில் திருமணம். குணாளன்
|
Read More
|
கல்யாணமாம் கல்யாணம்! - பா.அய்யாசாமி
விஜியிடமிருந்து குறுஞ்செய்தி வந்து இருந்தது பிரபுவுக்கு. மாலை சந்திக்கவும் என்று. என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் ஆபிஸ் வேலைகள் தேங்கின. இப்படி அழைக்கமாட்டாளே, என்னவாகிருக்கும் என்று குழம்பினான் பிரபு. விஜி நல்ல வயதும், வனப்பும் மிகு, பிரபுவிற்கு ஏற்ற காதலியாகி வீட்டிற்கு தெரியாமல் இரண்டு வருடமாகிறது. அப்ப அப்ப ஏற்படும் சண்டையில் பிரிந்து எப்போது சகஜமாவார்கள் என்று இருவருக்கும் தெரியாது. என்னவாக இருக்கும் என்ற கவலையிலே வழக்கமாக சந்திக்கும் இடம் வந்து காத்து இருந்தான். வழக்கம் போல்
|
Read More
|
பிரிவு - எஸ்.கண்ணன்
அது சென்னையில் ஒரு ஐடி கம்பெனி. காலை மீட்டிங் முடிந்து தன்னுடைய இருக்கைக்கு வந்து லேப்டாப்பைத் திறந்தான் ஸ்ரீவத்சன். மனைவி ரோகிணியிடமிருந்து தமிழில் ஒரு நீண்ட ஈ மெயில் வந்திருந்தது. அவசரமாகப் படித்தான். அன்புள்ள ஸ்ரீவத்சன், நான் என்னுடைய பிறந்த வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்ன, ஏதுன்னு வம்பு பேச ஆரம்பிச்சுட்டா. ரொம்ப நாளைக்கு விஷயத்தைப் என்னால் பொத்தி வைக்கவும் முடியாது. மிகவும் நன்றாக யோசித்தேன். என்னால் இனி உங்களுடன்
|
Read More
|
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.
|