ராம சுப்புவின் சமாளிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 24,392 
 

வழக்கம் போல ராம சுப்பு ஒன்பது மணி அலுவலகத்துக்கு,பத்து நிமிடம் தாமதமாக வந்தான். அலுவலகத்துக்குள் நுழைந்ததும், அலுவலகம் அமைதியாக இருந்தது, வள வள வென பேசும் ஆபிஸ் பாய் பாண்டி கூட அமைதியாய் இருந்தான்,ராம சுப்பு பாண்டி முன்னால் வைத்திருக்கும் அட்டென்டஸ் ரிஜிஸ்டரை தேடினான், பாண்டி.. சார் ரிஜிஸ்டர் மானேஜர் ரூமுக்கு போயிடுச்சு,மானேஜர் உள்ளேதான் இருக்கறாரு. ஆடுத்து நடக்க இருக்கும் நாடகத்தை பார்ப்பதற்கு தயாரனவன் போல் முகத்தை வைத்திருந்தான்.

ராம சுப்புவுக்கு கால்கள் வெடவெடத்தன, எப்பொழுதும் 9.30க்குத்தான், மானேஜர் ரூமுக்கு அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் போகும், அதற்குள் தட்டுத்தடுமாறி வந்து கையெழுத்து போட்டுவிடுவான், இன்று வசமாக் மாட்டிக்கொண்டான், வீட்டிலிருந்து கிள்ம்பும்போதே மனைவி பேச்சை கேட்க கூடாது என் நினைப்பான், ஆனால் வீட்டம்மா கிள்ம்பும்போதே ஏங்க! ஆபிஸ் போற வழியில இந்த துணிகளை லாண்டாரி கடையில கொடுத்திடுங்க, என்பாள், இல்லையென்றால் மளிகை லிஸ்டை கடையில் கொடுத்து விட்டு செல்லுங்கள்  என்பாள், இப்படி அலுவலகம் செல்வதற்குள் ஏதேனும் ஒரு வேலை தராவிட்டால், அவளுக்கு அன்று நிம்மதி இருக்காது, இதுதான் ராமசுப்பு தினமும் லேட்டாக வரும் காரணம், உடனே நீங்கள் கேட்கலாம், ஏன் ஒரு அரைமணி நேரம் முன்னால் கிளம்பினால் என்ன? என்று அதில்தான் ஒரு மர்மம் இருக்கிறது, ராமசுப்பு ஒரு அலங்கார பிரியன், அவனுடய புத்திர சிகாமணிகள் சென்ற பின்னால் அவர்கள் வைத்திருக்கும் பவுடர், மற்றும் கிரிம்கள், எல்லாவற்றையும் எடுத்து தன்னை அழகு படுத்திக்கொள்வான், இதை அவன் வாரிசுகள் பார்த்தால் யுத்தகளம் ஆகிவிடும். என்ன ஒரு கொடுமை சார் சம்பாதிக்கும் ஒரு ஆண் மகன் தன்னை அலங்கா¢ப்பதற்கு கூட வீட்டிலுள்ளவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியுள்ளது,

இப்படி அழகு பார்த்து பார்த்து கிளம்பும்போது அவன் மனைவிக்கு பொறுக்காது, ஏங்க! என்று வேண்டுமென்றே பொ¢ய துணி மூட்டையாக கையில் கொடுத்து லாண்டா¢யில் கொடுக்க சொல்வாள்,இல்லாவிட்டால் எண்ணெய் டின்னாவது கையில் கொடுத்து கடையில் கொடுக்கச்சொல்வாள், ஒன்றுமில்லையென்றால் அழுகிய தக்காளி இரண்டையாவது அவன் கையில் கொடுத்து குப்பைத்தொட்டியில் போடச் சொல்லி தன் வயிற்றொரிச்சலை தீர்த்துக்கொள்வாள் ராமசுப்பு மனைவி சொன்னவுடன் செய்யகூடாது என நினைப்பான் ஆனால் நேரடியாக சொல்ல பயந்துகொண்டு தெருவில் நடக்கும் போது எதிரில் தெரியும் நாய், மற்றும் நாலு கால் ஜீவராசிகளை அவள் பெயரை சொல்லி திட்டி தன் கோபத்தை ஆற்றிக்கொள்வான், அதேபோல் வண்டி வாகனம் எதிலாவது மோதிவிட்டால் பயங்கரகோபம் வந்துவிடும் (நன்கு கவனிக்கவும் யாரும் அதை ஓட்டி வரக்கூடாது) அவனை பொறுத்தவரை வாயில்லா ஜீவன்கள் எதுவானாலும் அவனுக்கு கோபம் தலைக்கு மேல் வரும், மனித ஜென்மங்கள் மீது மோதிவிட்டால் உள்ளே திட்டி வெளியே சிரித்து பரவாயில்லை சார் என்று மா¢யாதையாக சொல்வான்.

இதே போல் ராமசுப்புவுக்கு, தற்போது விரோதியாக்த்தோன்றும் மானேஜர் ஹீரோ போல நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார், எப்பொழுதும் 9.30க்கு உள்ளே வந்து உட்காரும் அவர் இன்று வீட்டின் சச்சரவு தாளாமல், ராமசுப்புவைப்போல் இல்லாமல் மனித ஜென்மங்களை கடித்து குத்ற வேண்டுமென்று சீக்கிரமே வந்து யாராவது மாட்டுவார்களா என வருகைப் பதிவேட்டை கண்களால் மேய்ந்தார், அவருடைய துரதிர்ஷ்டம், நம்ம கதாநாயகன்
ராமசுப்பு மட்டுமே அன்று வகையாக மாட்டிக்கொள்ள ஆஹா ஒருத்தன் மாட்டுனானய்யா என்று மனதுக்குள் சந்தோசப்பட்டு வருபவனை “காய்ச்சி” எடுக்க தன்னை தயார்படுத்திக்கொண்டார்.அதே போல ராமசுப்புவும் மனதுக்குள் கணக்கு போட்டான், என்ன பொய் சொல்லாம், இன்றைய மார்க்கெட் நிலவரப்படி எந்த பொய் செல்லுபடியாகும் என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டான்.

பூனை போல் மெல்ல தலையை மானேஜர் ரூமுக்குள் எட்டி பார்த்தான்.சண்டைக்கு தயாராக இருக்கும் “கட்டுச்சேவல்” போல அமர்ந்திருக்கும் மானேஜர் எஸ்..கமின் என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். (கவனிக்க எப்பொழுதும் ஒருவரை திட்டுவதானால் ஆங்கிலத்தில் ஆரம்பிப்பது நல்லது) ஆனால் நமது ராமசுப்புவுக்கு ஆங்கிலம் தடுமாற்றமானதால் லேட்டாக வந்ததை ஆங்கிலத்தில் விளக்கலாமா? தமிழில் விளக்கலாமா? என்று யோசித்து தொ¢யாத சரக்கை விட தொ¢ந்த சரக்கே நல்லது என்று சார் லேட்டாயிடுச்சு சார் என்று இழுத்தான்…அதற்குள் என்ன பொய் சொல்லலாம் என மனதுக்குள் கணக்கு போட்டான், அதுதான் லேட்டாயிடுசே! ஏன் லேட்டுன்னு கேட்டேன்? சார் கேஸ் கனெக்சனுக்கு ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து கேஸ் கம்பெனியில கொடுத்துட்டு வர்றேன், கடையில கொஞ்சம் கூட்டமாயிடுச்சு அதான் லேட் சார்.. (இது போன வாரம் அவன் சம்சாரம் செய்த வேலை)

பழம் நழுவி பாலில் விழுவது போல சண்டைக்கு தயாரான கட்டுச்சேவலான மானேஜருக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை! அவருக்கும் இந்த ஆதார் + கேஸ் கனெக்சன் பிரச்னையால் ஒருவாரமாக வீட்டில் சண்டை இப்பொழுது நமக்கும் காரியம் ஆக வேண்டும் அதற்கு ராமசுப்புவின் உதவி தேவை, என்ன செய்யலாம் சடாரென தன் தோரணையை மாற்றினார், சாரி..சாரி..இதுதான் ‘பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்’ ஒனபது மணியானா டாண்ணு கையெழுத்து போட்டுடனும், என்று முதலில் இவரே வெள்ளைக்கொடி ஏற்றி பிரச்னையை முடித்து வைத்தார். பின் மெதுவாக சுப்பு எனக்கும் கேஸ் கம்பெனிக்கு ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கனும், நாளைக்கி நான் என்னோட ஆதார் கார்டை எடுத்துட்டு வர்றேன், கொஞ்சம் முடிச்சு கொடுய்யா.. சா¢ங்க சார்..( இந்த வேலை செய்யவேமுடியாது என்று அவன் மனைவி அவனை திட்டி போன வாரம் அவளே செய்தாள்). என்னென்ன கொண்டு வரவேண்டும் என்று மானேஜருக்கு லிஸ்ட் கொடுத்தான்.

வெளியே வந்து மற்றவர்களை கம்பீரமாக பார்த்தான், அவர்களுக்கு நாடகம் சப்பென்று முடிந்ததில் வருத்தம்.. என்ன செயவது.  நாளையும் ராம்சுப்பு லேட்டாகத்தான் வருவான்.  காரணம் உங்களுக்கும் புரியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *