கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,773 
 

சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் –

ஆம்,ஆம், , யானை விலை குதிரை

குதிரை விலை மாடு
மாட்டின் விலை ஆடு
ஆடு விலை கோழி
கோழி விலை குஞ்சு
குஞ்சு விலை முட்டை
முட்டை விலை கத்தரிக்காய்

ஆமாம் விற்கிறது – என்ன செய்வது? என்றேன்.

அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற ஆண்டு விலை.

இப்பொழுது விற்பது – யானை விலை குதிரையல்ல மாடு; மாட்டு விலை ஆடல்ல கோழி” என்று சொல்லிக் கொண்டே போனார்.

‘எப்படி வாழ்வது’ என்று வருந்தினார். இதைக் கேட்கும் நமக்கும் விருத்தமாக இருக்கிறது – என்ன செய்வது?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *