கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,554 
 

50 ஆண்டுகட்கு முன்பு.

தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா.

த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.

முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாக சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. வரதநஞ்சைய பிள்ளையவர்கள் பேச வந்தார்கள்.

அவர் பேசத்தொடங்கும் பொழுதே ‘இந்த நாட்டாரும் நகரத்தாரும் பேசிய பிறகு. இந்தக் காட்டானை ஏன் ஐயா பேசவிட்டீர்கள், என்றார்.

கூட்டத்திலே சிரிப்பும் கைதட்டலும் அடங்கவே பல மணித்துளிகள் ஆயின.

குறிப்பு – சேலம் மாவட்டத்தில் சிற்றூரில் பிறந்தவர் அப்படி, அன்றி, உடையும் தோற்றமும் கூட அவர் கூற்றுக்குத் துணையாக இருந்தன.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *