ராஜாராமன் ஜட்டியில் ஊறுகாய்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 21,839 
 

மாப்பிள்ளே….இந்த ஊறுகாய ருசி பார்த்து சொல்லுங்க. நீங்க தொட்டா ராசியா செலவாகும்…என்று சுந்தரவல்லி நாச்சயார் என்கிற தாயாரு சொன்னன்னபோது மேற்படி ஊறுகாய் பிரபல்யம் டென்மார்க் வரை போகும் என்று யாரும் நம்பியிருக்கப்போவதில்லை…

கொஞ்சம் கூட உனக்கு மரியாத தெரில்லைம்மா….நீ வளத்த பிள்ளைன்னாலும் அவரு உன் மாப்பிள்ளை…..போயும் போயும் ஊறுகாயா தருவே….என்றாள் பிரியா….நீ செய்யறது எனக்குப் பிடிக்கலை…….

சும்மாயிரு பிரியா நமக்குள்ளே என்ன சம்பிரதாயம்…என்றது அத்தை…

அட எனக்கும் கொஞ்சம் குடுடீ….இவ தொக்குன்னா ஸ்ரீவல்லிபுத்ததூர் சாகும்… நம்ம ஜட்ஜ் இவளுக்கு ஒரு ஜோடி வளையலே செஞ்சு போட்டிருக்கார்…. என் புருஷனே பிரியப்பட்ட தொக்கு …சூப்பர்டி தாயாரு….எப்படிடா பிரசன்னா சிந்கப்பூர்லே இப்படி உனக்கு கெடக்குமா…

ஊருகாய் சூப்பர அத்தை..ஆஹா….மெயின் டிஷ் இல்லாம சைட் டிஷ் மாத்திரம் இருந்தா என்ன பிரயோஜனம் பிரியா…

அம்மா கேட்டியா மனுஷங்களைக் கெடுத்ததுடுவேம்மா நீ…..

விடு…பிரியா….பேசறதே தப்புன்னா எப்படி ஆகிறது….என்றது அத்தை….

அத்தே….வேண்டாம்…உங்க பிள்ளைய சப்போர்ட் ..பண்ணாதீங்க அனர்த்தம்….இந்த ஊறுகாய் நாக்குல ஏறுனதும் அவங்கவங்களுக்கு புத்தியே மாறிடுது….வீட்லே ஊறுகாய் போடறதையே நிறுத்திடறேன் பாரு…

***

சபி…..இங்க வச்சிருந்த ஊறுகாய பாத்ததியா…

ஏய்…..பாரு…உனக்கு நான் வாட்சுமேன் இல்லே…

நீ வாட்சுமேன் ஆக முடியாது ஏன்னா நீ….உமன்…

ஆஹா…..நான் பொம்பிளன்னு எப்பிடிடா கண்டுபிடிச்சே…சூரன்டா நீ….அக்கா இங்க வா…இவரு ஊருகாய் காணமாம்…புகார் சொல்றாரு…என்னன்னு கேளு…

டேய்…அவ லட்ச ரூபா சம்பாரிக்கரவ உன் ஊறுகாய் கானமின்னு அவளை எப்படிடா நீ கேட்கலாம் உன் ஊறுகாயை நீ எங்கடா வச்சே….

டிராயர்லே வச்சி பத்திரமா பூட்டிவச்சேன்…

கேவலண்டா….ஒரு எம்.டெக் .படிச்ச என்ஜினியர் கேவலம் ஒரு ஊருகாய் பாட்டலை டிராயர்லே வச்சேங்கறே…வெட்கமா இல்லே….

என் ஊறுகாய் நான் டிராயர்லே வைப்பேன் ஏன் ஜட்டியிலே கூட வைப்பேன்….என் கேபின் என் ஊறுகா என் ஜட்டி அதக்கேக்க நீங்க யாரு…

கரெக்ட்டா செல்லம்…..உன் ஊறுதகாயை நீ உன் ஜட்டிக்குள்ளே வச்சிக்கோ உன் சமாச்சாரத்தை ஊரக்கூட வச்சிக்கொ….எங்களை ஏன் கேக்கறே…

ஏன்னா ஏன்னா இதுவரை என் மூணு ஊரு காய் பாட்டில் காணாம போச்சி..

அதுக்கு நாங்க என்னடா செய்யமுடியும்…போய் ரிப்போர்ட் பண்ணு…திருடங்களைக் கண்டுபிடி……

சாமார்த்தியமா பேசினா தப்பிக்கமுடியாது…எனக்கு திருடங்க எப்பிடித்திருடராங்க தெரியும்……

திருடங்க…?

இல்லே திருடிங்க….எல்லாம் நீங்கதான்…உங்க யாரையும் நான் விடப்போறதல்லே…

விடாத கட்டிப்பிச்சுக்கோ …ஏன்டா முண்டம் காமிரா முன்னாலே திருட நாங்க என்ன கூமட்டையா…

பாவாடைக்கு கீழே வச்சிகிட்டா எந்தக்கேமிராவுக்கு தெரியும்…..

ஆஹா….

டேய்….

குத்துடி அவனை…..ஒரு கலவரத்துக்கு நம்ம ராஜாராமன் விதை போட்டிருந்தான்…

மலரு மலரு அவன் ..புரியாம பேசறான்…அவனுக்காக உன் கால்லே விழறேன்….குறுக்கே வந்தான் பரகாலன்….

தா பாரு…பொம்பிளை கால்லே தான் ஆம்பளை விழுந்தாகனும் ..புதுசா பேசறியே…போடா இனிமே இத எப்பிடி முடிக்ககிறதுன்னு நான்..பார்த்துக்கறேன்..நீ தள்ளி நின்னு வேடிக்கை பாரு….சரியா….பாவாடைக்கு அடியிலே நாங்க ஊறுகாயை வச்சிகிட்டதா சொலறான்…விடரதா அவனை…

என்ன செய்யப்போற மலரு….என்றான் பரகாலன்…

கொஞ்சமா கற்பழிக்கப்போறோம்…சரியா …போடா வந்துட்டானுங்க….ஏய் ..நம்ம சுய உதவிக்குழு எல்லாரும் வரட்டும்…..சரிடா கண்ணா…உன் ஊறகாய் இங்க இருக்கிறதை நீ எப்பிடிக் கண்டுபிடிக்கப் போற…மலர் கீழே காண்பித்த இடத்தை ராஜா கவனிக்கவில்லை…

அது ஈஸி மலரு நீ அஞ்சடி தள்ளி நின்னா கூட ஒரு தடவை மூக்காலே இழுத்தா மூளைக்கு சுர்ர்ன்னு ஏறுமில்லே…

அதுசரி மோந்து பார்த்தே தெரிஞ்சுகுவே ஓ.கே மாப்பிள்ளே… வேற ஊறுகாயா இல்ல உனதான்னு எப்படி கண்டுபிடிப்பே…..

அது சுலபம் மலரு…ஒரு நா அம்மா இத்தனூண்டு சும்மா இத்தனூண்டு ஊறுகா காமிச்சி இந்த ஊறுகா நல்லா இருக்கான்னு கேட்டாங்க …நாக்காலே தடவி நம்ம ஊறுகா இல்லேன்னு சொல்லிட்டேனில்லே….

தடவியா நக்கியா….

நக்கிதான்….நாக்காலே தடவினாலும் நக்கினாலும் ஒன்னுதான் மலரு …..

சூரன்டா ராஜா …மாமா..வந்து திவ்யப்பிரபந்தம் கேளுங்கோ.

டேய்…ராஜா அதிகமா பேசறடா….லூஸு …மலர் உன்வாயைப்பிடுங்கி சிக்க வக்கப்போறா…குப்புறப்படுத்து ஆப்பைப்பிடுங்கறடா நாயே….

என் ஊறுகாயத்திருடியது…அவங்க..அவங்கதான் மல்லாக்கப்படுத்து ஆப்பைச் சொறுக்கிகறாங்க….விடுவனா….

ஆவ் …ஊவ் ..கொல்லுடி அவனை….என்ன திமிறு…கலவரம் வெடித்தே விட்டது..

சிக்கிக்கிட்டேடா என்செல்லம் என்று கருவின மலர் ஆரம்பித்தாள்…..

எல்லா ஆம்பிளைகளும் அவன் சொன்னதைக் கொஞ்சம் கண்ணண மூடியோசிங்க மல்லாக்க படுத்து ஆப்பை சொருக்கிறதாம் புரியதா…. இருக்கட்டும்…..

ஏன்டா..கண்ணா ஊறுகாய்த்திருடியை எந்தப் பரிசோதனை செஞ்சு கண்டுபிடிக்கப்போற……..

ராஜாராமனுக்கு பாவம் பிரக்ஞையே இல்லை…மலரு…எனக்கு இந்த பரிசோதனை பிரிசோதனை விரிசோதனை குறிசோதனை எதுவும் தெரியாது..ஆனா கண்டுபிடிப்பேன்…….

சண்டாளா….தெரியாது தெரியாதுன்னு இத்தனை சொல்றியேடா பாபி….என்றார் மாமா…

நல்லா பேசறே டா தங்கம்….என்றாள் மலர்…பரிசோதனை…..அப்புறம் பிரிசோதனை

விரிசோதனை ……. என்னாது …….. விரிசோதனை அய்யா…. அப்புறம் குறி சோதனை..அடடா….புள்ள என்ன தீர்க்கமா பேசறான்….

இது அடுக்கு மொழி மலரு…என்றான் ராஜா…..

அப்பிடியா தங்கம்…..இருக்கட்டும் ……இருக்கட்டும் ……என்றாள் மலர்…

அக்கா இது அடுக்கு மொழி இல்லே….டுபுக்கு மொழி….என்றாள் சபிதா…

டுபுக்கு மொழி எந்த ஊரு பாஷை மாமா…அப்பாவியாகக் கேட்டான் ராஜாராமன்…

அது தேவ பாஷை நைனா என்றார் மாமா…..என்ன திவ்வியமா பேசறடா….

நேத்து மீட்டிங்லே பேசின்னானில்லே……..அழகா பேசறான் மாமா….உடுவனா…பேசிட்டேன்

நீ பேசிட்டே….இப்ப அவ பேசுவா…. உடுவா பாரு…சரவெடியா…அணுகுண்டா….பேருமாளே…

இந்த பெருமாள்தான் மாமா பேசுது …திரிசோதனை…அப்புறம் பத்தாதுக்கு குறிசோதனை….

அவன் திரிசோதனைன்னு சொல்லல்லியே மலர் ….என்றார் மாமா..

சொன்னானே…பாவி..பரிசோதனை…பிரிசோதனை..விரிசோதனை…மூனு சேர்ந்தா திரிசோதனை மாமா…விரிசொதனைன்னா என்ன மாமா…

பாரு மலரு ..எனக்கு பேத்தி வந்தாச்சு…என்னை விட்டிரு….

பசுபதிண்ணா விரி சோதனைன்னா என்ன….

சாமி..இப்பத்தான் டைவர்ஸ் நோட்டீஸ்லேயிருந்து தப்பிச்சு வந்திருகேன்…நான் இந்த விளையாட்டுக்கு வரலை தாயி ஆளை விடு…

நான் சொலறேன் மலரு என்று முன்னே வந்தது ராஜாராமன்….

அவனக்கு அவனேதான் சூனியம் வச்சிக்குவான்,,,வேற ஆளே வேண்டாம்…என்றான் பரகாலன்

அவன் கெடக்கறான் ராஜாக்கண்ணா நீ சொல்லு விரிசோதன்னா என்ன ராசா…

அது மலரு பூதக்கண்ணாடி வச்சி..விரிவாப்பாத்தா அது விரிசோதனை ……கையை விரித்துக்காட்டினான் ராஜாராமன்….

அப்பிடிப்போட்ரா என் ராசாத்தி….அப்ப பூதக்கண்ணாடி வேற வச்சிபாக்கனுங்கறே ..கையை விரிச்சுக்காட்டினே…அது எதுக்கு சாமி….

விரிசோதனையை கையை விரிச்சு காமிச்சேன்…படுத்திருந்தா காலை விரிச்சுக்காட்டலாம்…சர்தானே…..ஏன் மலரு….

ஓவராப்போறடா நாயே….உனக்குக் கேடுகாலம்…செத்தே வாயை மூடேண்டா…என்றான் பரகாலன்….

மாமா…நாலு வகை சோதனை…அப்புறம் கையை விரிச்சு காலை அகட்டி….என்று ஆரம்பித்த மலரைத் திருத்தினான் ராஜா….

நான் காலை விரிச்சுன்னதான் சொன்னேன் மலரு……

கரெக்ட் கண்ணா நான் ஒரு இவ…..மாமா ..ராஜா எவ்வளவு கரெக்ட் பாத்தீங்ளா….அப்புறம் பூதக்கண்ணாடி வேற வச்சி பாக்கனுமாம்,,…அதானே ….

விரிசோதனை……என்று முடித்தான் நம்ம ராஜாராமன்…..

உவ்வே…..வாந்தி வருது…..என்றாள் மாலா

சரிடா கண்ணா..எங்களை திருடின்னு சொல்லிட்டே…அதும் அடியிலே வச்சி எடுத்துட்டோம்னு சொல்லிட்டே..நீயா அடியிலே பாத்து எங்களைத்திருடி பட்டத்திலேயிருந்து விடுவிக்கறே…எப்பிடி….

அப்போ எல்லாத்தையும் பார்க்கனுமங்கறே….பத்து பேரையும் பாரக்க லேட்டாகாது…ரொம்ப போர் அடிக்கும் மலரு…

பெரிய கலகம்…. தொடர்ந்து சத்தம் …. டேய்…டேய் …என்ன வார்த்தை சொல்றான் ஐயோ…. போரடிக்குமின்னு சொல்றானே ….தாங்க முடியல்லியே …அக்கா…நேத்து என் புருஷன் வேற இதே வாரத்தை சொன்னானே….டேய்….ஏண்டா நாங்க ..அது போரடிக்குதா……அலைவானுங்க அப்புறம் …பேசுவிங்கடா புடிச்சு வெட்டனும்….

மவனே..உங்கறளக்கொல்லனும்டா….. எதுடா போரடிக்குது…டாய் சொல்லுடா எது போரடிக்குது….

இருங்கடி..சாமியாடாதீங்க..ஏய்…உன் புருஷனுக்கு பல்லு விளக்க குண்டி கழுவக்கூட போரடிக்கும் …அவனை வச்சி பேசாதே…நம்ம ராஜா அப்பிடியில்லே…இதுநாள் வரை அவன் பார்ரத்ததில்லல்லே…போரடிக்கும்கறான்…ஒரு சரமாச்சாரத்திலே பூந்துட்டா விடுவானா மாமா…

நோண்டி நுங்கெடுத்துடமாட்டேன்…..என்றான் ராஜாராமன்….

அந்தப் பெருமாளே வந்து கூட உன்னைக்காப்பாத்த மாட்டாண்டா..என்றார் மாமா

ஏன் மலரு உன் பரிசோதனைகளை எங்க வச்சி செய்யப்போற….என்றான் சிவராம்…நாந்கள்ளாம் ரொம்ப ஆவலா இருக்கோம்……

சேப்பாக்கம் மைதானத்திலே வச்சி நடத்தப்போறேன் …ஆளுக்கொரு பைனாகுலரோட

வந்துருங்க…சரியா…பாரு .உம் பொண்டாட்டியையும் கூட்டியாந்துரு…என்ன…

சிவராம் என்கிறவன் மாயமானான்….

நம்ம ராஜாப்பயலைக்குழுவினர் ஆடு மாதிரி கதறகதற இழுத்துக்கொண்டு போனார்கள்……

****

சரி…. மலரு….இப்ப நீங்க பத்து பேரும் சேர்ந்து என்னை என்னசெய்யப்போறீங்க..

நாங்க ஒன்னும் செய்யப்போறதில்லே…..நீ செய்யப்போற….என்ன ..சோதனை…நாலு வித சோதனை…பூதக்கண்ணாடி குடும்மா…வச்சிக்கோ…என் கிட்ட இருந்து ஆரம்பிய்யா ..ஓ.கே..முழங்கால் வரை தூக்கி நின்றாள் மலர்..ம்…ஆரம்பி….

இரு மலரு..இப்ப என்ன..நீங்க திருடலைன்னு சொல்லிடறேன்…வேணா மன்னிப்பு கேட்டுக்கலாம்..விஷயம்…முடிஞ்சது…சர்தானே …

பல்லு நோகாம அவன் பேசறான் பாரேன்…அயோக்கியன்….

டேய்…நீயா சொல்லுவே அப்புறம் மன்னிப்பு கேட்டு முடிச்சுருவே..பாரு..ஒரு மயிர் விழுந்தா சாகிற கவரிமான் ஜாதி நாங்க…

அக்கா நான் ஐயங்கார் ஜாதி…

நான்..தேவர்க்கா….

மூடுங்கடி..ஜாதி பார்த்ததான் உங்க கம்ப்யூட்டர் தொரக்குதோ…டேய்….

அக்கா..ஒரு விஷயம் என்று ஒருத்தி குறுக்கிட்டாள்…

என்னடி உன் சமாச்சாரம்..என்று சலித்துக்கொண்டாள் மலர்..

நான் கவரிமான் ஜாதி இல்லே..நீர் யானை ஜாதி நேத்துதான் வழு வழன்னு..

சாகடிக்காதீங்கடி…..டேய் நீ ஆரம்பிடா…நேரமாகுது…..நான் ரெடி…

டெஸ்ட்ன்னா எனக்கு பயம் மலரு. பரிட்சைன்னுவந்தாஎனக்குக் காய்ச்சல் வந்துடும்.. ..வேற சான்ஸ் குடு..என் கண்ணிலே..என்றான் நம்ம ஆள்….நீ காலேஜ்லே ப்யூட்டி க்வீன்…நீ இப்படி நின்னா எனக்கு கூச்சமா இருக்கு….உன கால் அழகா இருக்கு மலரு……

ம்… ஐஸ்..ம்….நான் இப்ப உனக்கு ..கண்ணு…கில்லாடிடா நீ….ஏமாந்தா ஏத்திடுவீங்கடா..சரிடா…அடுத்த சான்ஸ் பத்து பேர் கால்லே தனித்தனியா சாஷ்டாங்கமா விழுந்து மன்னிப்பு கேளு..சரியா…

அக்கா விடு..அவன் பாக்கட்டும்…நானும் ரெடி…

முண்டம்…இங்க மெடிக்கல் கேம்பா நடக்குது தூக்கிக்கிட்டு நிக்க…சனியனே..அலையாதடி…உனக்கு வேற ஆள் காத்திருக்கான்…இப்போது இன்னொருத்தி ஐடியா கொடுத்தாள்….அக்கா அவன் ஜட்டியிலே ஊறுகாயை வச்சி காப்பத்தினவனாம்…

சிக்கிட்டாண்டி சித்தப்பு…..கரெக்டா ஐடியா கொடுத்தேடி….டேய் கண்ணா உனக்கு மூனாவது சான்ஸ் ….இப்ப அழகா உன் ஜட்டியைக்கழட்டரே…நாங்க அங்க நீ ஊருகாய் வச்சிருக்கறயா பார்க்கனும்…எப்பிடி நம்ம ப்ளான் …..

சூப்பர்க்கா…..டேய் …இதோட நீ க்ளீன் போல்டுடா ராஜாராமா…. நாங்களா ஊறுகாய்த்திருடிங்க…..ம்…சாவுடா….

அடங்குடி…டேய்…எப்பிடி..உன் ப்ளான்….ஜட்டி கழட்ட ரெடியாவுடா….

இது ஜாஸ்தி மலரு….நான் இதுக்கு ஒத்துக்க முடியாது…

சரிங்க ஸார் பாருங்கம்மா இன்னிலேயிருந்து…நமக்கும் இவனுக்கம் ஒன்னும் கெடையாது…வாங்கம்மா…

இரு..இரு …மலரு இப்ப நீ என்ன செய்யனும்கறே….

அப்பிடிக்கேளு…. பேண்ட் ஜட்டியைக்கழட்டிட்டு ஓடிரு நல்ல பையனா….ஏண்டா… திருடிம்பிங்க..நாங்க விட்டுருவம்…டேய்…பேண்ட் ஜட்டி……அவ்வளவுதான்……நாங்க வேணா கூட கழட்டறோம்…

அக்கா…நான் கழட்டறேங்கா…ஆசையா இருக்கு…

தமி.ழ் நாட்டோட லட்சியப்பொண்ணுடி நீ அஞ்சு நிமிஷம் பொறும்மா உலகத்தின்

எட்டாவது அதிசயம் புடுக்குனு வெளியே வரும்….சரியா ..டேய் டென்ஷன் பன்னாதேடா..சீக்கிரம் .. ஆரம்பி……

வேண்டாம்..அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க மலரு….

டேய் கழட்டுடா பேண்ட் ஜட்டியை…ஒன்னு…..

சீக்கிரமா பேண்ட் ஜட்டியைக் கழட்டுடா…. ரெண்டு…ரெண்டு ரெண்டு..

மலர் மூனு சொல்லுமுன் பேண்ட் ஜட்டியைக்கழட்டி வீசினான் நம்ம பயல்…

படக்கென்று லைட் அணைந்த்து….உடனே வந்தும் விட்டது…

அப்பா …உசிர்வத்துச்சி ஐயோ அக்கா இவனுக்கு ஒன்னையும் காணோமேக்கா……….

ஊவ்….என்னடா ப்ளெய்னா இருக்கு…..

ஐயோ… என்னவோ சதிக்கா….ஏமாத்திட்டாங்க்கா…..

அடித்தா….என்ற கெட்டவாரத்தை உதிர்த்தாள் மலர்…..

அக்கா எல்லாம் தலை கீழா இருக்கு….

எல்லாம் நேராத்தான் இருக்கு எனக்குத்தெரியுது …கில்லாடிடா… நீ…..மலரையே ஏமாத்தின முத ஆள் நீதாண்டா….

ராஜாராமன் கையை காலை விரித்து அகல நின்றான்…..பாரு மலரு அப்படியே ஆபிஸ் முழுக்க வரப்போறேன்….சரியா கண்ணுங்களா……என் கிட்டயா…கொய்யாலே….

****

டேய் எப்பிடிடா ஜட்டிக்கு கீழே எப்பிடிடா… முக்கால் டிராயர் வந்தது……மாமா கேட்டார்.

அதுதான் அதிர்ஷ்ட்டம்கறது மாமா….. பாத்ரூம்லே..அம்மாஜட்டிக்குப்பதிலா தப்பா முக்கா டிராயர் எடுத்துப்போட்டுட்டங்க..சரின்னு போட்டுகிட்டேன்….

பேண்ட் போடறபோது இந்த பரகாலன் அவசரமா கத்தறான் ….ட்ரங்ஸ் நாடா அவுக்க வரலை ….மேலே ஜட்டி பேண்ட்…போட்டுட்டேன்……ஜட்டி பேண்ட் அவுக்க சொன்னாங்களா சந்தோஷமா அவுத்துட்டேன்…..ஏமாந்துட்டாங்க இல்லே……சாவுங்கடி……

ஆனா நல்ல சான்ஸை விட்டுட்டியேடா…ஐயோ ..பத்து பேர்டா….வாய் ஊறுது…..ஏமாந்துட்டயே…

ச்சீ…முண்டம்..நீ பச்சப்படம் பாக்க நினைக்கலாம்..கண்ணிலே..மொளகாப்பொடி அப்பிடுவா….பதினைஞ்சு நாளைக்கு உனதையே நீ பாக்க முடியாம பன்னிடுவா…

நீலப் படத்தைப் பச்சப் படம்கறே…..

சினிமாவா பார்த்தா நீலப்படம்….நேராக்காபார்த்தா அது பச்சப்படம் என்ன மாமா ….

கொன்னுட்டேடா மாப்பிள்ளே…லட்சத்துலே ஒரு வார்த்தை….

***

அந்த சுப்பன் இப்பல்லாம் ஊறுகாய் பத்தி பேசறதே இல்லக்கா…

தப்பிச்சு தெரிச்சு ஒடிட்டான் இல்லே….

மெள்ள மெள்ள விஷயம் நம்ம ஆள் காதுக்கு வந்தும் சேரந்து விட்டது…

அப்பிடியா என்று சப்புக்கொட்டினான் ராஜாராமன்…..வக்கிரேன் ஆப்பு….

***

சபி ஒரு விஷயமில்லே ..

என்னப்பா…

என் ஊறுகாய்த் திருடிக்கு சாபம் விட்டிருக்கேன்…..பேப்பர்லே பேரு வரும்…மானமேபோகும்…

சாபம் விட்டா மானம் எப்படிடா போகும் உளராதே…லூஸு….

போகும்மா….ஊருகாய்த்திருடிக்கு ஆண் குழந் தை பிறக்கும்….முக்கியம் என்னன்னா அந்தக்குழந்தைக்கு ரேண்டு குஞ்சி இருக்கும்….அப்ப பேப்பர்லே வருமில்லே…ரெண்டு பக்கம் மூச்சா விடுவான்…வேடிக்கையா இருக்கில்லே….

ஆமாம்…நீ பெரிய ஞானி…சாபம் விட்டதும் நடக்கும்…ச்சீ போ…..

எங்க போற சபி…..பொறக்கும்போது தெரிஞ்க்குவே ஐயாவைப்பத்தி….

போய் உன் லீடர்கிட்டே கோள்மூட்டு….

கொஞ்ச நேரத்தில் மலர் வந்தாள்….

அடங்கமாட்டயாடா நீ…..

ஹலோ…என் ஊறுகாய் ..நான் சாபம் விடறேன்….ஊறுகாய் உறைக்கிறமாதிரி சாபமும் உறைக்கும்….

கிருக்கன்டா நீ…..

சரிக்கா நீ டென்ஷன் ஆகாதே…உனக்கு வேணா அது பலிக்காம இருக்கட்டும்…என்று மலரைப்பார்த்து சொன்னான் ராஜா….

செறுப்பாலே அடிப்பேன்…

***

மத்தியாணம் சபி ஆரம்பித்தாள்…ராஜா வேலையே ஓடலை…

ஏன் உடம்பு சரியில்லையா சபி…

ராஜா….உன் சாபம் பலிச்சிடுமா…

என்ன அப்பிடிக்கேட்டுட்டே…..நான் சாபம் விட்டா பலிக்கும்னு அம்மா சொல்லுவாங்க..

என்னப்பா மெரட்டரே..என் புருஷன் சாபம் அது இதுன்னா பயப்படுவாரு…

அத விடு..அந்தப்பையன் பெரிசானா அவனுக்கு ரெண்டு பெண்ட்டாட்டி கட்டனும் தமாஷாஇல்ல சபி…..

ஐயோ டெவலப் பண்ணாதப்பா… ராஜா இந்த சாபத்துக்கு விமோசனம் கிடையாதா…

இருக்கே…சாபம் விட்டவன் எடுக்கலாம்……இந்தரனுக்கு ஆயிரம் வந்துடிச்சாம்…அப்போ மூச்சா போனா ஸ்பிரே மாதிரி அடிக்குமோ…..சபி….

ராஜா..ராஜா…மன்னிச்சுக்கோ…தப்பு போட்டுக்கறேன்…ராத்திரி பூரா உன் சாபமே ஞாபகத்துக்கு வரும்…எனக்கு குழந்தை அப்பிடிப்பொறந்துடுமோன்னு எப்பவும் திகில் வந்தடும்…ஏய்… ஏய்… நான்தான் குழந்தை உண்டானதில் இருந்து வாய் மாதிரியா இருந்ததா ஊறுகாய் எடுத்தேன்…கெஞ்சிக்கேட்டுக்கறேன்…சாபத்தை எடுத்துடு சாமி..ராஜா ..ராஜா ப்ளீஸ் ராஜா…..

சரி …தப்பை ஒத்துகிட்டே ..சாபம் நீர்த்துப்போகும்..சரியா…உன் தலையிலே கையை வச்சி மூனு தடவை விட்டேன்னு சொல்லுவேன்…சாபம் போயிடும் ..சரியா…

சரி..சரி..எனக்கு நல்ல குழந்தை பிறக்கனும்னும்….வேண்டிக்கிவையா……

நிச்சயமா…நீ என் தலையிலே கையை வச்சிக்கோ…நான்உன் தலையிலே கையை வச்சி கண்ணை மூடி வேண்டிக்கறேன்….கண்ணை மூடி வேண்டிக்கோ…..சரியா…

சரி….சபி கண்ணை மூடிக்கொண்டாள்…பெருமாளே…

என்ன வேண்டிகிட்டே சபி…

பெருமாளே…எனக்கு ராஜாராம் மாதிரி ஒரு புத்தசாலிக்குழந்தை வேணுமின்னு கேட்டேன் கண்ணா….

பாரேன்…நானும் அதேதான் கேட்டேன்….யதாஸ்த்து….அப்பிடியே நடக்கும் சபி….

அப்புறம் சபி ..உனக்கு தம்பி இல்லைன்னு கவலைப்பட்டேயல்லே….கவலைப்படாதே நான் உனக்குத்தம்பி….உன் குழந்தைக்குத்தாய் மாமன்….செயின் வளை எல்லாம் போடுவேன்…..என் அக்கா அத்தை அம்மா எல்லாம் பக்கத்திலேயிருந்து பார்த்துக்குவோம்…..சந்தோஷமா…

சபி ராஜாராமனின் இரண்டு கைகளைத் தன் மார்பில் இழுத்து சேர்த்துக்கொண்டு ஓ வென்று அழ ஆரம்பித்தாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *