தமிழின் ஆட்சி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,226 
 

பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த பாழ்கொண்டாய்… ஆனால் கொடுக்கும் இயல்பினர் இலாமையால் பசியைக் கொண்டனை! சுற்றி அலைந்தும் வறுமை தீர்ப்பார் எவருமிலையே என்று சோர்வுற்று நிற்கிறாய்.

நின் நிலையை நான் அறிவேன்… நீ நேரே கிள்ளி வளவனைச் சென்று பார் ! அவன் வாயிலில், காத்து நிற்கவேண்டி இராது. அப்படிக் காத்து நிற்பதும், ஒருகால் நிகழலாம்… ஆனால், அரசன் உன்னைப் பார்த்து விட்டானோ, பொன்னாற் செய்த தாமரைப் பூவை, உனக்கு அளிக்க மட்டும் தவறான். “போ….. உறையூருக்குப் போ என்று ஆலத்தூர் கிழார் கத்தினார்….

கந்தல் உடை தரித்த நான் எங்கே? பொன்னாற் செய்த தாமரை எங்கே என்று கேட்டான் பாணன்.

“தமிழ் ஆண்டு கொண்டிருக்கும் போது, இசைமாண்டு கொண்டிருக்குமோ? என்று திருப்பிக் கேட்டார் கிழார்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *