(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் அறிஞர் ஒரு காட்டு வழியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடத்திலே ஆடை யைத் தவிர வேறெவ்விதமான பொருளுங் கிடையாது. அதனால் அவர் சிறிதும் அச்சமில்லாமற் சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று ஐந்தாறு வேடர்கள் அவருக்கு முன் தோன்றினார்கள். புலவரைப் பார்த்து, ‘நில்லும்’ என்று கூறி அதட்டினார்கள். புலவர் நின்றார். “என் னிடத்திலே எத்தகைய பொருளும் இல்லை. என்னை வீணாக ஏன் வழிமறிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
வேடர்கள் புலவரைப் பார்த்து, “பொருளில்லா விட்டால் போகட்டும். உம்மைக் கத்தியால் வெட்டி நீர் துடிதுடித்துப் பதைத்துச் சாவதையாவது நாங்கள் பார்த்து மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறினார்கள்.
கவருதற்குப் பொருள் இல்லாவிட்டாலும், வழிப் போக்கர்களை வருத்தி அவர்கள் துடிதுடித்துச் சாவதைப் பார்த்து மகிழ்வது வேடர்களுடைய பழக் கம் என்பதை அறிந்திருந்த புலவர், அவ் வேடர்களைப் பார்த்து, “நண்பர்களே! நீங்கள் வீணாகத் தீவினை செய்யாதீர்கள். இப் பிறப்பிலே தீவினையைச் செய் கிறவர்கள் தாம் மறுபிறப்பிலே மிகவும் இழிவான நிலைமையிற் பிறந்து பலவகையான துன்பங்களை அடைகிறார்கள்,” என்று அவ்வேடர்களுக்குப் பலவாறு அறிவுரை கூறினார். அவ் வறிவுரையால் வேடர்கள் மனந் திருந்தினார்கள். அறிஞருடைய உயிரும் பிழைத்தது.
“வேண்டி வினைசெயேல்” (இ – ள்.) வேண்டி – விரும்பி, வினை – தீவினையை. செயேல் செய்யாதே .
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955