(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முதுகுன்று என்னும் ஊரிலே முத்துமாணிக்கம் என் னும் பெயருடைய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பொழுது விடிந்து சாம நாழிகைக்கு மேலே தான் படுக்கையைவிட்டு எழுந்திருப்பான். அவனு டைய தாய் தந்தையரும் முத்துமாணிக்கத்தினுடைய இந்தக் கெட்ட பழக்கத்தைக் கண்டித்துத் திருத்துவ தற்கு முயலவில்லை. ‘நம்முடைய அருமைக் குழந்தை தூங்கினால் தூங்கட்டுமே; இதனால் குடிமூழ்கியா போய் விடப்போகிறது,’ என்று எண்ணிக்கொண்டு பேசாமல் இருந்தார்கள்.
ஒருநாள் முத்துமாணிக்கத்தினுடைய வீட்டிற்கு அவனுடைய உறவினர் ஒருவர் வந்தார். அவர் முத்துமாணிக்கம் நீண்ட நேரம் உறங்குவதைப் பார்த் தார். அவர் முத்துமாணிக்கத்தைப் பார்த்துத், “தம்பி! இவ்வாறு நீண்டநேரம் உறங்காதே . இதனால் உன்னுடைய வாணாள் குன்றிப்போகும்” என்று கூறினார். “அஃதெவ்வாறு?” என்று முத்துமாணிக்கம் கேட் டான். அந்த உறவினர் முத்துமாணிக்கத்தைப் பார்த்து, “கதிரவனுடைய தேரோட்டுபவனாகிய அருணன் மக்கள் வாணாளைக் கணக்கிடுபவனாவான். அந்த அருணன், தான் எழுவதற்கு முன் எழாதவர்களைத் தன்னுடைய ஒளியாகிய கையினால் தொடுவான். அவ் வாறு தொட்டுக்கூட எழாதவர்களுடைய வாணாளைக் குறைத்து எழுதிவிடுவான். அதனால் கூற்றுவன் மிக விரைவில் அவர்களுடைய உயிரையும், உடலையும் வேறு பிரித்துவிடுவான்,” என்று கூறினார். அன்று முதல் முத்துமாணிக்கம் பொழுது விடிவதற்கு முன் படுக்கையை விட்டு எழத் தொடங்கினான்.
“வைகறைத் துயிலெழு” (இ – ள்.) வைகறை – விடியற்காலத்திலே, துயில் – உறக்கத்தைவிட்டு; எழு – எழுந்திரு.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955