புகையில் தெரிந்த முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 15,606 
 

சாப்பிட்டுவிட்டு ஒரு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில்சாய்ந்தேன்.

மேலே எலெக்ட்ரிக் லைட் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்குமேலிருக்கும். என் அறையிலும் வெளியிலும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது.

புகைப் போட்ட திறம் யாழ்ப்பாணத்துப் புகையிலை (என்று தான் கடைக்காரன் சொல்லித் தந்தான்) குழப்பம் செய்யாமல் நன்றாக எரிந்தது. எனது சொற்ப நேர விறுவிறுப்பு இன்பத்துக்கு அந்தப் புகையிலைச் சுருட்டு தன் உடலையே அக்கினிக்கு அர்ப்பணித்துக் கொண்டது. இந்தக் காலத்திலே பிறர் நலத்துக்காக இம்மாதிரித் தியாகம் செய்யும் தியாகசீலர்கள் சமுதாயத்துக்கொருவர் இருந்துவிட்டால் உலகம் எப்பேர்ப்பட்ட சீரும் சிறப்பும் அடைந்துவிடும்!.

புகையிலைச் சுருட்டு எரிந்துகொண்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை வட்டம் வட்டமாகச் சுழன்று மேலே மேலே மிதந்துபோயிற்று.

இந்தச் சுருட்டுப் புகையை உள்ளுக்கிழுத்து வாயை ஏதோ ஒருமாதிரி கோணிப் பிடித்துக் கொண்டு வெளியே ஊதிவிட்டால் அது வட்டமாகச் சுழன்று கொண்டு போகும். பார்ப்பதற்கு அழகாயிருக்கும்.

சுருட்டுப்புகை பிடிக்காதவர்கள் கூட அதைப் பார்த்து ரசிப்பார்கள். சினிமா தியேட்டர்களில் இந்த மாதிரிப் புகை ஐhலங்கள் நடைபெற்றதைப் பல சமயங்களில் அவதானித்திருக்கிறேன்.

இப்பொழுது நான் தனியெ இருந்தால் அந்த வித்தையைப் பாPட்சை செய்து பார்த்துக்கொண்டிருந்தேன். பலமுறைப் பிரயத்தனங்களுக்குப் பின் அதில் வெற்றி கிடைத்துவிட்டது.

ஊதிய புகை குபீரென்று முகத்துக்குமுன்னே போய் அந்தரத்தில் நின்று வட்டம் போட்டது. சில விநாடி நேரம் அப்படியே நின்றுவிட்டுப் பின்னர் கலையத் தொடங்கியது.

கலைந்து மேலே எழும்பிக்கொண்டிருந்த சுருட்டுப் புகைப்படலம் ஒரு ஆளின் முகமாக அமைந்து அப்படியே நிலைத்து நின்றது.

ஆமாம், ஆள் முகம்தான்! அழகான தாமரைகள் கண்கள், அந்தக் கண்களிலே ஒரு சோகம் கலந்த பார்வை, பட்டிக்காட்டு மண்காவி படிந்து நெற்றியில் சுருண்டு விழுந்த கேசம் – ஒரு யௌவனப் பெண்ணின் முகம் எனக்கு முன்னே அப்படியே தெரிந்தது.

எனக்குத் தேகம் ஒரு தடவை நடுங்கிப் போயிற்று. “பயப்படாதே ராமலிங்கம், உன்னை எனக்குத் தெரியவில்லையா? நான் தான் காந்திமதி…..”

காந்திமதியா? யார் அது காந்திமதி…..
“என்னப்பா முழிக்கிறே! அதற்குள்ளாக என்னை மறந்துபோய்விட்டியா? உன் ஊரிலே புகையிலைத் தோட்டக்காரர் பொன்னுச்சாமியின் மகள்….”

பொன்னுச்சாமியின் மகள் காந்திமதி! கனவு கண்டதுபோல எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆனால் அவள் அவளது அத்தானோடு கூடிக்கொண்டு ஊரை விட்டே ஓடிவிட்டாள் என்றல்லவா ஊரெல்லாம் கதையாயிருந்தது….

“ராமலிங்கம் நீ யோசிக்கிறதென்னவென்று எனக்குத் தெரியும். காந்திமதி ஊரைவிட்டு எங்கேயோ ஓடிப்போய்விட்டாள் என்று நீ மட்டும் எண்ணவில்லை. ஊர் முழுக்கவே அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறது ஆனால் உண்மை பொன்னர் தோட்டத்துக் கிணற்றடியில் நிற்கும் பூவரசு மரம் ஒன்றுக்குத்தான் தெரியும். பத்து வருஷங்களுக்கு முன் ஒரு விடியப் புறச்சாமத்திலே பொன்னர் என்னையும் என்னுடனிருந்த என் அத்தானையும் மண்வெட்டிப் பிடியினால் ஒரே வீச்சில் அடித்துக் கொன்றபொழுது அந்தப் பூவரசு மரம் ஒன்றுதான் விழித்திருந்தது. விழித்திருந்தது என்று என் சொல்லுகிறேனென்றால் நாங்கள் இருபேரும் ஐயோ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தபோது பூவரசுமரத்திலிருந்த காகம் ஒன்று சிறகடித்த சத்தம் கேட்டது….

எனக்குத் தேகமெல்லாம் புல்லரித்துப் போயிற்று. நான் மனத்தில் நினைக்கிறதை இந்த உருவம் சொல்லுகிறது, ஒரு பக்கமிருக்கட்டும். தன்னை யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்களென்று கதை வேறு அளக்கிறதே. அப்படியானால் இப்போ என் முன்னே நிற்பது பேயா பசாசா?

என் ஊரிலே பொன்னுச்சாமி என்ற புகையிலை வியாபாரி ஒருவர் இருந்தது எனக்குத் தெரியும். அவருக்கு காந்திமதி என்று ஒரு மகள் இருந்தும் ஞாபகமிருக்கிறது. அவள் தன் அத்தான் முறையான ஒருவனைத் தவிர வேறு யாரையும் கட்டிக்கொள்ள மாட்டேனென்று பிடிவாதம் பிடித்ததும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

அவளுடைய தகப்பன் யாரோ உத்தியோக மாப்பிள்ளைமீது இலக்கு வைத்துக்கொண்டிருந்தாரென்றும் ஊரிலே சிலர் அப்பொழுது கதைத்தார்கள்…..

“ராமலிங்கம், என்ன மீண்டும் யோசனையில் ஆழ்ந்துபோய்விட்டாய். கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுது எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? நான் என் அத்தான் முருகேசனைத்தான் கல்யாணம் கட்டிக்கொள்வதென்று பிடிவாதம் பிடித்தேன். தோட்டக்காரனாயிருந்தாலும் எனக்கு அவன்மேலே என்னவோ பிரியம் விழுந்து விட்டது. எங்களது தோட்டத்துக்குப் பக்கமாகவே அவனது தோட்டமும் இருந்தது. அவன் துலாவிலே மேலும் கீழுமாக ஏறி இறங்கும்போது பார்வை எல்லாம் எங்கள் தோட்டப்பக்கமாகத் தானிருக்கும். விடியற் காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பாகவும் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிற்பாடும் நான் அவனுக்குத் தரிசனம் கொடுக்க தவறுவதில்லை. அவனை ஒரு நாள் தரிசனம் பண்ணாவிட்டால் எனக்கும் அன்றைக்கு என்னவோபோலவிருக்கும்.

இந்தமாதிரி நாங்கள் இருபேரும் ஒரு திசையில்போய்க் கொண்டிருந்தது அப்பாவுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் என்னைக் கண்டிக்க ஆரம்பித்தார்.

அப்பா ஒரு முரடன். அத்தோடு பேராசைபிடித்த பேய்மனிசன். எனக்கு விரைவாகவே ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட ஏற்பாடுகள் பண்ணத் தொடங்கினார். நாள் முகூர்த்தம்கூட வைத்துவிட்டார். கொழும்பில் எங்கேயோ ஒரு கந்தோரில் கால்சட்டை போட்டு உத்தியோகம் பார்ப்பவனாம். அவனைத்தான் எனக்குக் கட்டியடிக்க அப்பா நிச்சயம் பண்ணிவிட்டார். கால் சட்டைக்கார மாப்பிள்ளைகள் மேலே அப்பாவுக்கு ஒரே காதல்! அவர்மட்டும் ஒரு பெண்ணாயிருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷத்தோடு அந்த மாப்பிள்ளையை அவர் கட்டிக்கொண்டிருப்பார்!

கல்யாணத்துக்கு நாள் வைத்தாய்விட்டது. ஆனால் எனக்கு அது தூக்குத்தண்டனைக்கு நாள் வைத்ததுபோலிருந்தது. என் அத்தானைவிட்டு ஒரு நிமிஷமும் பிரிந்திருக்க முடியாதுபோல் தோன்றியது. அவனுக்கு இந்தமாதிரி துரோகம் செய்வதைவிட உயிரையே தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருந்தது….”

…… இவ்வளவு பிடிவாதம் அந்தப் பட்டிக் காட்டுப் பெண்ணாண காந்திமதிக்கு இருந்ததாவென்று நான் சந்தேகப்படவில்லை. புலிக்குப் பிறந்தது பூனையாகவா இருக்கும்?

ஆனால், அந்த மனுஷன் பொன்னுச்சாமிக்கு அந்தப் பையன் மேலே அவ்வளவு கோபம் இருக்கக் காரணம் என்ன? ஏன் இவ்வளவு வன்மம் சாதிக்கவேண்டும், இத்தனைக்கும் அவன் அவரது ஒன்றுவிட்ட சகோதரி பிள்ளையாயிற்றே!

எந்தப் புற்றில் என்ன பாம் இருக்குமோ யார் கண்டார்கள்?

கிராமத்திலுள்ளவர்கள் பட்டணத்து வாசிகளைப்போல் அல்ல. அவர்களது வாழ்க்கையே ஒரு தினிசு. அவர்கள் சண்டைபிடிக்கும் காரியங்கள், சந்தோஷப்படும் சம்பவங்கள் எல்லாமே ஒரு தினிசு. இதற்காகத்தானா இவ்வளவு ஆத்திரப்பட்டார்கள் என்று நமக்கு ஆச்சரியமாகவிருக்கும். ஆனால் அவர்களுக்கோ அது பாரதூரமானதாயிருக்கும். அதையிட்டுத் தீராத வைராக்கியம் சாதிப்பார்கள். எடுத்த எடுப்பில் எதையும் முன்பின் பாராமல் கவிழ்த்துக் கொட்டிவிடுவார்கள்.

புகையிலைத் தோட்டத்துப் பொன்னுச்சாமி கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து அந்த செம்பாட்டு மண்ணிலேயெ கிடந்துபுரண்ட மனுஷன். மருமகள் விஷயத்தில் அத்தனை கோபம் அவருக்கு ஏற்பட காரணம் என்னவாயிருக்கலாம்?

பத்துவருஷங்களுக்கு முன்னே மனம் தாவிப்போயிற்று.

பத்து வருஷங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்தில் வண்டிச் சவாரி இப்போது மாதிரியல்ல. இன்றைக்கு நகர வாசிகளைப் பிடித்து ஆட்டிவைக்கும் ரேஸ் பைத்தியம் அந்த நாளில் வண்டிச் சவாரி என்று கிராம வாசிகளைப் பலமாக ஆட்டிவைத்தது.

வண்டியிலே மாடுகளைப் பூட்டிவிட்டால் கிராமத்தில் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்று கொஞ்சமும் வைத்தப் பார்க்கமாட்டார்கள். போர்க்களமேறிய வீரர்களைப் போலத் துடித்துக் கொண்டு நிற்பார்கள். அந்தச் சமயம் அவர்களுக் கிருப்பதெல்லாம் ஓரே ஒரு உணர்ச்சி. வெற்றியோ தோல்வியோ என்பதுதான்.

பொன்னுச்சாமி இதற்கு விதிவிலக்காகப் போய்விடவில்லை. அவரது மருமகனும் அவர்மாதிரியே ஒரு தீவிர சவாரிவாதியாக இருந்தான்.

வண்டிச் சவாரி

அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாளிரவு, செகசோதியான நிலவு காயும் காலம். யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யில் அக்கினக் குண்டமாகவே மாற்றிவிடும். வளர் பிறை காலத்த இரவுகளிலோ நிலை எதிர்மாறாகவிருக்கும். வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமிர்த கிரணங்களை வாரி இறைத்து அதை ஒரே குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக் கெட்டிய தூரம் பாற் கடலைப்போலப் பரந்து கிடக்கும் ஒரே மணல் வெளி. அந்த மணல் வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் தெரு வீதிவழியே நிலாக்காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணம் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப் பொருத்தம் என்று சொல்லவேண்டும்.

வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்த நாளும் மண்கிண்டி தண்ணீர் இறைத்து களைபிடுங்கி அலுத்துப்பொகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும் அறுதலுக்கும் ஏற்ற ஓர் அருமையான பிரயாணம் இது. வழி நெடுகிலும் பூமியைத் தோய்க்கும் பால்போன்ற வெண்ணிலவு@ வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி இவைகளைக் கடந்துபோய் கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் வெண்மணல் திட்டியும் பால் நிலவும், தென்றற் காற்றும் தான். கூட. கோயிலிலிருந்து நாதசுரம் இன்னிசையைப் பிழிந்து மிதந்துவரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். மனித உள்ளத்தின் குதூகலத்துக்கு இன்னும் என்னவேண்டும்?

வருஷா வருஷம் வல்லிபுரம் கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக மகாசனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம் வேறொன்றுமல்ல, வல்லிபுரப் பெருமாள் பேரில் கொண்ட தீவிர பக்தி சிரத்தை தான் காரணமல்ல. எல்லாம் அந்த மணற்காட்டுக்கும் அங்கே எறிக்கிற வெண்ணிலவுக்கும் ஆடல் பாடலுக்கும் தான்! சுருக்கமாகச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக்குக்கூடக் கோயிலின் கர்ப்பக் கிருகத்துள்ளே அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும் இன்னிசையும் வெண்மணலும் பால் நிலவும் சேர்ந்து வல்லிபுரக் கோயில் சுற்றுப் பிரகாரத்தை – பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத பாலைவனத்தை ஓர் அமர உலகமாகவே மாற்றி விடும்.

ஆமாம், மாசில் வீணை, மாலை மதியம், தென்றல் காற்று இளவேனில் பூங்குளம் – இவைகளை தெய்வத்துக்கே ஒப்பிட்டுப் பாடியவர்கள் புத்திசாலிகள் தான்.

ஐம்பது வருஷத்துக்கு முந்திய பயண வண்டி ஒன்று. அதுகூட பெருமாளைச் சேவிக்கக் கிளம்பி விட்டது. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாரளமாக வசிக்கக்கூடிய வீடு அது. மேல்மாடி கூட அதிலே இருக்கிறது. சட்டி பானை பெட்டி படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும் கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன் மனைவி தாய், பிள்ளை, பேரன் பேத்தி எல்லோரும் கூடியிருந்து கதைத்துச் சிரித்துக் குலாவுகின்றார்கள். அந்த மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் தூங்குகின்றன. கீழே ஒரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இன்னொன்று தனக்கு ஒரு உபகதை சொல்லும்படி அதன் பாட்டியைத் துன்புறுத்துகிறது! பாட்டி முகமலர்ச்சியோடு உபகதைக்குப் பதில் விடுகதை ஒன்று போடுகிறாள். இத்தனை வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது. உயர்ந்த ஜாதியான இரண்டு வெள்ளை வடக்கன் காளைகள் வண்டியை இழுத்துச் செல்லுகின்றன. இரண்டு காளைகளும் சாப்பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டே சாவகாசமாக வண்டியை இழுத்துப் போகும்படி வைக்கோலில் இரண்டு கத்தைகள் எடுத்து மாடுகளின் வாய் அருகே வண்டியின் நுகத்தோடு கட்டித் தொங்க விட்டிருக்கிறான் வண்டிக்காரன்.

ஆமைவேகத்தில் உல்லாசப் பிரயாணம் போகும் இந்தக் கர்நாடக புஷ்பக விமானத்தின் முன்னும் பின்னும் எல்லாம் வேகம் வேகமாகப் பறக்கின்றன. ஹ_ட் மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பாயந்து ஓடுகின்றன. அவற்றை பின்பற்றி சைக்கிள் வண்டிகள் ஒரு பக்கம் கிணுகிணுத்துக் கொண்டு ஓடுகின்றன. “அட பைத்தியங்களே! இந்த பொன் நிலவை விட்டு விட்டு எங்கே இவ்வளவு அவசரமாக ஓடுகிறீர்கள்? ஏன் அவசரம்?” என்று கேட்டுப் பரிகாசஞ் செய்வது போல் மாட்டுவண்டி ஆடி அசைந்து அவற்றுக்கெல்லாம் வழிவிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போகிறது. துடி மிகுந்த வாலிபப் பிள்ளைகளைக் கண்டால் வயசான பெரியவர்கள் ஒதுங்குவார்களே – அம் மாதிரி!

கால் நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி சிரிப்புக் கச்சேரி கூக்குரல் கச்சேரி குளறுபடி கச்சேரி எல்லாவற்றோடும் கூட்டம் கூட்டமாக யாத்திரை போகிறார்கள். வாலிபக் கூட்டம் வயசான கூட்டம் நடுத்தரக் கூட்டம் பஞ்சமர் கூட்டம் – இப்படிப்பல.

வழி நீளம் இப்படியே குதுகலம் நிறைந்த ஊர்வலம் இன்னும் சற்றே மேலே போனால் இயற்கை மோகனத்தினால் உற்சாகம் மேலிட்டு விட்ட கூட்டத்தினரைப்பார்க்கலாம். சுமார் அரைமைல் தூரத்துக்கு வளைவு திருப்பம் எதுவுமில்லாத நேரிய தெரு. அதன் ஓர் அந்தத்தில் வாலிபத் தோற்றங்கொண்ட நூற்றுக்கணக்கான மொட்டை வண்டிகள் குவிந்துபோய் நிற்கின்றன.

சவாரிக்காரர்களிடையே பொருத்தம் பேசுவதும் அது முடிய இரண்டு இரண்டு வண்டிகள் ஒன்றின்பின் ஒன்றாக வந்து நிற்பதும் பிறகு ஓட்டம் பிடிப்பதும் வெகுநேரமாக நடைபெற்று வரும் சங்கதி.

இதோ ஒரு சோடி பொருந்திவிட்டது. மொய்த்துப்போய் நின்ற ஜனக்கூட்டம் கலைகிறது. வண்டிகள் இரண்டு முன்னே வந்துவிட்டன. மாடுகள் பூட்டியாயின. குத்தூசி சவுக்கு துவரங்கம்பு எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஓட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறி மாட்டின் நாணயக் கயிற்றைப் பிடித்துவிட்டார்கள். குதிரையில் ஏறிய ராஜகுமாரனது கம்பீரமும் ஓய்யாரமும் அவர்களிடம் இப்போது காணப்பட்டன. அவ்விடத்தில் அதாவது சவாரி ரசிகர்களின் மத்தியில் இது வரையில் இல்லாத ஒரு ஆரவாரமும் பரபரப்பும் இப்பொழுது. ஏனென்றால் சவாரி உலகில் பிரபல நட்சத்திரங்களான சுட்டியன் சோடியும் பூச்சியன் சோடியும் பொருந்திவிட்டன. இது சாதாரணமாக நடைபெறகூடியக் காரியமல்ல.

சரி. இதோ எல்லாம் ஆயத்தம்.

“சின்னத்தம்பி” என்று ஒரு செருமல் செருமினான் முன் வண்டிக்காரச் சாரதி. “ஓம், ஓம்! எல்லாம் தெரியும் வென்று தருகிறேன் பயப்படாதே” என்றுமௌ;ளப் பதில் கொடுத்தான் அதே வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருவன்.

வண்டிகள் கிளம்பிவிட்டன. கடகடவென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று சருவிக்கொண்டு புழுதி எழும்ப அந்தர பவனியில் பறக்கின்றன. சவுக்குகள் ஙொய் ஙொய் என்று கீச்சிடுகின்றன. இதோ? அதோ? குத்தூசிக்காரன் வண்டியில் சவகாசமாகக் குப்புறப் படுத்துக்கொண்டு மாடுகளுக்கு ஊசி ஏற்றினான் அது போதாதென்று கருதியபோது அவைகளின் வாலைப்பிடித்து வாய் கூசாமல்கடித்தான். மாட்டின் முதுகிலே துவரங்கம்புகள் சடார் சடார் என்று விழுந்தன. வண்டிகளில் நின்றவர்களும். தெருவிலே அக்கம் பக்கத்தில் நின்றவர்களும் தங்கள் தங்கள் பக்க ஆதரவை கூச்சல் போட்டும் சீட்டி அடித்தும் தெரிவித்தார்கள்.

நுகப் பூட்டுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு விட்ட மாடுகள் மனிதனுடைய இத்தனை துண்டுதல்களுக்கும் மத்தியில் அந்நேரத்தில் அவற்றால் செய்யக்கூடிய ஒன்றே ஒன்றை அவற்றின் பலங்கொண்டமட்டும் சக்தி அடங்குமட்டும், செய்தன. அதாவது, கால்களை நிலத்தில் வைக்காமல் பாய்ந்து பாய்ந்து ஓடின!

கழுத்தில் வெள்ளைப் புள்ளிவிழுந்த பின் வண்டி மாடுகள் – இவைதான் பூச்சியன்களோ? – முன் வண்டியை விலத்திவிடுகிற சமயம் இரண்டு வண்டிகளும் விடாப்பிடியாக ஓடுகின்றன. பார்ப்பதற்குக் கண்கொள்ளாத காட்சி தெருவோரத்திலும் மரத்திலும் மட்டையிலும் தொங்கிக் கொண்டு நிற்பவர்களின் கூச்சல் வானமுகட்டைப் பிளக்கிறது.

ஓட்டப் பந்தயம் ஒரு முடிவுக்குவரும் சந்தர்ப்பம். பின்னுக்கு நின்று வந்த பூச்சியன்கள் சுட்டியன்களை…. இதோ… இதோ இன்னும் ஒரு நிமிஷத்தில்…
சவுக்கு ஒன்று “ஙொய்” என்றது
பூச்சியன் வண்டிச் சாரதி “ஐயோ!” என்று குழறிக்கொண்டு கீழே விழுந்தான்
பூட்டாங்கயிறு அறுந்து மாடுகள் நிலை தளர வண்டி மல்லார்ந்தது.

2

பழைய சம்பவங்களை இம்மாதிரி மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தேன்.

“என்ன ராமலிங்கம் யோசனையில் மூழ்கிப் போய்விட்டாய்? நீ யோசிப்பதை யெல்லாம் பிற்பாடு வைத்துக்கொள். இப்பொழுது நான் சொல்வதைக் கொஞ்சம் கேளப்பா” என்று இடைமறித்து புகையில் தெரிந்த முகம் மறுபடியும் கதையைத் தொடர்ந்தது.

“……. அப்பா எனக்குக் கல்யாணத்துக்கு நாள் வைத்துவிட்டார்….

கல்யாண தினம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் இரவு தூக்கம் கண்களைத் தழுவ மறுத்துவிட்டது. மனத்தில் ஒரே குழப்பமாயிருந்தது. மனச்சாந்திக்கு இந்த உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே கிடையாது போலத் தோன்றிற்று.

முற்றத்தில் இறங்கித் தோட்டப் பக்கமாக நடந்தேன்.

என்ன அதிசயம், ராமலிங்கம்! அங்கே என் அத்தான் இருந்தான். எந்தக் கிணற்றடியைத் தேடி நான் போனேனோ அந்த இதே கிணற்றடியில், சுவர்க்கட்டின்மீது நாடிக்குக் கை கொடுத்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்து போயிருந்தான்.

கிராமத்துப் பெண்களுக்குள்ளே நான் நெஞ்சழுத்தம் மிகுந்தவள், ஒரு துணிச்சல்காரி என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் மனசுக்குப் பிடித்த சாப்பாட்டைத் தட்டிவிட்டு இதைத்தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டளையை ஒரு நோயாளியிடம் வைத்தியர் போடமுடியும். பால்புட்டியில் பாலை ஊற்றி கம்புங்கையுமாக நின்று பால் புகட்டுவது குழந்தைப் பிள்ளைக்கு.

குழந்தைப் பிள்ளையையும் ஆட்டுக் குட்டியையும் போல ஒரு வயசுவந்த பெண்ணை வைத்து நடத்துவதை எத்தனை நாளைக்குப் பொறுத்திருக்க முடியும்? கல்யாணம் அவளுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்த விஷயமில்லையா? வருங்காலத்தில் அவள் வாழுவதா அல்லது மாள்வதா என்ற பெரியதொரு பிரச்சனையை அவளே தான் தீர்த்துக் கொள்ளவேண்டும். இம்மாதிரிப் பேசுகிறவள் நான் ஒருத்திதானல்ல. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சொல்லவும் தெரியாமல் எத்தனையோ பெண்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நான் சொல்லித்தானா தெரியவேணும் உனக்கு. நீதான்நாலு விஷயங்களையும் அலசி ஆராய்ந்து பார்க்கிறவனாயிற்றே! அதிகப் பிரசங்கித்தனம் செய்கிறேன் என்று எண்ணிக்கொள்ளாதே. இதோ மேலே நடந்ததைச் சொல்லுகிறேன்.

கிணற்றுக் கட்டில் அத்தான் இருந்தான் என்று சொன்னேனா? மௌ;ளமாக அவன் பின் பக்கம் போய் மெதுவான குரலில் ‘அத்தான்!’ என்றேன்.

அவன் திடுக்கிட்டுப் போனான். நல்ல சமயம் கிணற்றுள் விழவில்லை.

“என்ன காந்தி. நடுச்சாமத்தில் இப்படி எங்கே வெளிக்கிட்டாய்?” என்று பதட்டத்தோடு கேட்டான்.

“நடுச்சாமத்தில் நீ ஏன் இப்படி கிணற்றுக் கட்டில் வந்து இருக்கிறாய்?” என்று பதிலுக்கு நான் அவனிடம் கேட்டுக்கொண்டே அவன் தோள்களில் கைவைத்தேன்.

கைவைத்த இடத்தில் ஒரு காயத்தின் தழும்பு கையில் தட்டுப்பட்டது. அரைச்சாண் நீளத்தில் தடித்துக் காய்த்துப்போயிருந்த அந்தத் தழும்பு விரல்களில் தட்டுப்பட்டபோது… சுடு நெருப்பில் கை வைத்ததுபோல பதைத்துப் போய்விட்டேன்.

எவ்வளவோ பேசவேண்டுமென்று எண்ணியிருந்தேன். மனத்திலிருப்பதை எல்லாம் அவன் முன் கொட்டிவிடவேண்டுமென்று காத்திருந்தேன். ஆனால் என்னவோ அந்தச் சமயம் என்வாயடைத்துப்போய்விட்டதப்பா!

மெதுவானகுரலில் “அத்தான்” என்றேன். என் குரல் தழதழத்தது.

“காந்திமதி – !” அதற்குமேலே அவனுக்கு வார்த்தைகள் வெளிக்கிளம்பவில்லை: நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அவன் கண்களில் நீர் துளித்திருந்தது. நிலா வெளிச்சத்தில் அது பளிச்சென்று தெரிந்தது. அவன் கண்களில் துளித்த கண்ணீர் என் இதயத்தில் ஈயத்தை உருக்க வார்த்தாற் போல ஒரே வேதனையை உண்டாக்கிற்று.

பட்டகாலிலே படும் என்பது அவன் விஷயத்திலே எவ்வளவு உண்மையாயிருந்தது! மனிதர்களிடம்தான் அக்கிரமமும் கொடுமையும் என்றால் இயற்கையிடம் கூடவா? ஈவிரக்கமற்ற கொடூரபாவம் அதனிடம் கூடவா இருக்கிறதப்பா?

வண்டில் சவாரியில் விழுந்து முறிந்து சவுக்கடிபட்டு படுகாயத்தோடு ஒட்டகைப்புலம் வைத்தியர் வீட்டில் ஒரு மாதகாலம் கிடந்து ஓரளவு சுகமாகி வீட்டுக்கு வந்தவன் மீது மற்றொரு பேரிடி விழக் காத்திருந்தது. அவன் வந்த மறுதினம் மேகம் கறுத்து ஊரிலே மழை பெய்யத் தொடங்கிற்று. மழை என்றால் அது அப்படி இப்படி மழையல்ல எங்கள் ஊரிலே இருந்த நூற்றுக் கணக்கான ஆடுகளும் மாடுகளும் அந்த மழை வெள்ளத்துக்கு இரையாயின. மூன்று தினங்களாக விடாமல் பெயத அந்தப் பெரு மழையில் எத்தனையோ ஏழைத் தோட்டக்காரர்களின் பயிர் பச்சைகள் நாசமாயின.

அத்தான் முருகேசனுடைய இரண்டாயிரம் கன்று புகையிலைத் தோட்டம் அந்த வெள்ளப்பெருக்கில் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனக்கோட்டைகள் கட்டியவண்ணமே ஐம்பது அடித் துலாவிலே மேலும் கீழுமாக மாதத்தில் பதினைந்து நாட்கள் ஏறி இறங்கி ஆழக்கிடந்த தண்ணீரை பயிர்களுக்கு அள்ளி ஊற்றிப் பாடுபட்டவனுக்கு இந்த சம்பவம் எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று யோசித்துப் பாரப்பா!

அவன் இரவிலே நிம்மதியாகப் படுத்து உறங்க முடியுமா?

நிலவு வெளிச்சத்தில் பளிச்சிட்ட கண்ணீர்த் துளிகளில் இந்தச் சம்பவங்களினால் அவன் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

அகத்தின் மெய்ப்பாடு முகத்தில் பிரதிபலிக்காமல் மறைத்து வைக்க அவன் ஒரு நடிகனல்ல. வானந்துளங்கிலென், மண் கம்பமாகிலென்? என்று வீறாப்புப் பேச அவன் தாபாரந்துறந்த ஒரு தேவார நாயனாரல்ல அல்லது, உச்சிமீது வானிடிந்து விழுந்தபோதிலும் அச்சமில்லை என்று கர்ச்சிக்க அவன் ஒரு தேசீயக் கவியுமல்ல முருகேசு ஒரு சாதாரண மனுஷன். மலர் இதழ்களைப்போன்றிருக்கும் உள்ளங் கால்களில் நாகதாளி முள்ளு ஏறினால் குழந்தைப்பிள்ளை அழாமல் என்ன செய்யும்? அந்தமாதிரி குழந்தை சுபாவம் கொண்ட கிராம மக்களின் வழித் தோன்றல்தான் என் அத்தான்.

சமூகத்தின் கொடும் முள்ளுகள் அவனைக் குத்தியபோது அவன் இதயம் நொந்தது.

……….. எனக்கு மறுபடியும் யோசனை ஓடிற்று

சவுக்குத் தழும்பு! முருகேசனுக்குப் புதிதாக உண்டான இந்தச் சவுக்குத் தழும்பைப்ற்றி அந்த நாளில் ஊர்முழுவதும் பேச்சு அடிபட்டது எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது. அது பொன்னுச்சாமியின் கொடூர சுபாவத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஓர் தழும்பு – மாறாத அடையாளம் என்றுதான் சில பலபேர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் இந்தப் பெண் காந்திமதிக்கு அந்தத் தழும்பு என்றைக்கும் அழியாதபடி அவளது மனதிலேயே பட்டுவிட்டாற்போல் அல்லவா பதைபதைக்கிறாள்! கிராமத்துப் பெண்களின் மனப்போக்கே ஒரு தனியானதுதான்! அவர்களிடம் பெண்மையைவிடத் தாய்மைதான் அதிகமாக இருக்கும். சல்லாப பண்புக்கு மேலாக தொண்டு மனப்பான்மையைத்தான் அவர்களிடம் அதிகமாக எதிர் பார்க்கலாம்.

மழை பெய்ததும் அதனால் அந்தப் பையனது பயிர்களுக்குச் சேதம் உண்டானதும் எனக்குச் சரியாக ஞாபகமில்லை. கிராமங்களிலேதான் இந்த மழைக் கொள்ளை பிரதி வருஷமும் நடக்கும் சமாச்சாரமாயிற்றே!

வண்டிற் சவாரியில் விழுந்து முறிந்து காயப்பட்டு ஒரு மாசத்துக்குமேல் ஒட்டகப் புலத்தில் வைத்தியம் செய்துகொண்டு முருகேசன் வீட்டுக்குத் திரும்ப கிராம சங்கத் தேர்தல் வந்தது.

அவனுடைய வட்டாரத்தில் இரண்டுபேர் போட்டிக்கு நின்றார்கள்

பொன்னுச்சாமியின் மூதாதையர்களது குல தெய்வம் வைரவர். அப்படியானால் வைரவ சுவாமி கிராமச் சங்கத் தேர்தலுக்கு நின்றார் என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் அவருக்கும் இந்தத் தேர்தலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஊரில் அவருக்கிருந்த கோயில் சில வருஷங்களாக இடிந்து சிதைந்து பாழடைந்து போய்க் கிடந்தது. அந்த வட்டாரத்தில் போட்டிக்கு நின்ற அபேட்சகர் பொன்னுச்சாமியைப்பற்றி நன்றாக அறிந்தவர். ‘எனக்கு இந்த தேர்தலில் உதவி செய்தீரானால் பாழடைந்து போய்க் கிடக்கும் வைரவர் கோயிலைப் புதுப்பித்துக் கட்டித் தருவேன்” என்று ஆரம்பத்திலேயே பொன்னுச்சாமியிடம் சொன்னார்.

இரண்டு ரூபாவுக்கு விளக்கு செய்து அதைக் கோயிலில் வைக்க இருநூறு ரூபா செலவழித்து மேளதாளத்தோடு பூiஐ கட்டுவித்து விளம்பரம் தேடும் பொன்னுச்சாமி தேர்தல் அபேட்சகரின் ஆசைவார்த்தையில் வெகு எளிதில் எடுபட்டு விட்டார்.

கிராமச் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அவரது மருமகன் முருகேசன் யாரை ஆதரித்தானோ அவர் பொன்னுச்சாமியின் அபேட்சகருக்கு மாறாக நின்றார். மாமனுக்கும் மருமகனுக்கும் இங்கேயும் போட்டியில்தான் விஷயம்வந்து முடிந்தது. முருகேசன் ஆதரித்த அபேட்சகர் அவனைப் படிப்பித்த ஓர் ஏழைத் தமிழாசிரியர்.

ஆனால் சமூக அரசியல் வாழ்க்கைப் போராட்டங்களிலே போட்டியிடும் தமிழ் ஆசிரியர்கள் என்றைக்காவது வெற்றி அடைந்ததுண்டா?

கிராமச் சங்கத் தேர்தலின் முடிவும் அப்படித்தானிருந்தது.

பொன்னுச்சாமியின் கையாளுக்குத்தான் வெற்றி கிடைத்தது.

பொன்னுச்சாமியை இனிமேல் கையால் பிடிக்கமுடியாத ஒரே உற்சாகம் அவருக்கு.

இப்படியான சமயங்களிலே கிராமத்தில் நடைபெறும் சம்பங்கள் தமிழ் சினிமாப் படங்களில் வரும் சம்பவங்களைப் போலத் தேங்கி நிற்பதில்லை. விறுவிறு என்று ஒன்றின்பின்னொன்றாக நடைபெற்றன.

கிராமச் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அபேட்சகர், பொன்னுச்சாமிக்கு வாக்களித்தபடி வைரவர் கோயிலைப் புதுப்பித்துக் கட்டிக் கொடுத்துவிட்டார்.

பொன்னுச்சாமி அதற்குக் கும்பாபிஷேகம் நடத்தி பெரியதொரு திருவிழாச் செய்யத் திட்டம் போட்டார்.

திருவிழா

பொன்னுச்சாமி தாம் செய்யப் போகும் பெரிய திருவிழாவைப் பற்றி அறிவித்தல்கள் அச்சிட்டு ஊரெங்கும் விளம்பரப்படுத்திவிட, தூரத்துக் கிராமங்களி லிருந்தெல்லாம் சனங்கள் திரள்திரளாக வந்து கூடினர்.

வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாளும் கனத்த அந்தகாரத்தில் மூழ்கிப்போய்க் கிடந்த கோயிலின் முன்பக்கம், சுற்றுப்புறங்கள் எங்கும் ஒரே மின்சார சோதியாக இருந்தது. கோயிலின் முன்னாலே அமைக்கப்பட்ட பெரிய கொட்டகைப் பந்தலின் அலங்காரத்தைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஊரிலேயுள்ள அலங்காரகை கலைஞர்கள் – பண்டாரங்கள் அதில் தங்கள் கைவரிசைகளைக் காட்டியிருந்தார்கள். தோரணங்களிலே தான் எத்தனைவகை! வெள்ளை வெளேரென்றிருக்கும் இளம் தென்னோலைத் தோரணம், புஷ்பத்தோரணம், தாளங்காய் தோரணம், செவ் இளநீர் தோரணம், ஈச்சங்குலைத் தோரணம் இப்படி அநேகம். பெரிய பெரிய வாழைக் குலைகளை அப்படியே அடி வாழையோடு பெயர்த்துக் கொண்டுவந்து பந்தல் கால்களோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். முந்திய எட்டு நாட்களிலும் நடைபெற்ற திருவிழாக்களுக்குக் கட்டிய பந்தல்களோ, சோடனைகளோ, யாதென்றையும் இவர்கள் தொட்டுப் பார்க்கவில்லை. அவ்வளவையும் வெட்டிக் கொட்டித் தள்ளிவிட்டு புத்தம் புதிதாக எல்லாம் நிர்மாணித்தார்கள். முந்திய சோடனைகளை ஒதுக்கிவைக்கும்படி அவ்வளவு நேர்த்தியாக அமைத்தார்கள். அண்ணாந்து மேலே பார்த்தால் ஒரே வெண்மையும் மினுக்கமுமாயிருக்கும். சுற்றிவரப் பார்த்தால் எங்கும் கொத்துக் கொத்தாகச் சேர்த்துக் கட்டிய பூங்கிளைகளும் கொப்புகளுமாயிருக்கும். பசுமை சொட்டும் அவற்றுள்ளே சிவப்பு, பச்சை, நீல நிறத்தில் விதவிதமான மின்சார ஒளி. சுற்றி ஒரு வட்டம் பார்த்தால் அழகான ஒரு பூங்காவனத்தின் மத்தியிலே நிற்பதுபோல தோன்றும். வடக்கும் தெற்குமாக அமைந்த இந்த அலங்காரப் பந்தலிலே வடக்குக் கோடியில் வைரவ சுவாமியின் திரவிக்கிரகம் எழுந்தருளப்பண்ணியிருக்கிறது. விக்கிரகத்தின் முகம் இன்று அற்புதக் களையோடு nஐhலிக்கிறது. எலக்ட்ரிக் வெளிச்சத்திலே அதன் முகம் உருக்கிய தங்கம் போலப் பிரகாசிக்கிறது. சாத்துபடி என்ற சம்பிரதாயத்தில் வைரவத் தேவர் மலர்க்குவியலுள்ளே ஆழ்ந்துபோய் விட்டார்.

சுவாமி எழுந்தருளப்பண்ணியிரப்பதற்கு நேரே முன்னாக பந்தலின் மறுகோடிவரை நீட்டாக ஒரு விசாலமான பாதை விடப்பட்டிருக்கிறது. இதுதான் கலைஞர்களுக்குரிய அரங்கம்.

பகல் திருவிழா முடிய ஐந்து மணியாகிவிடவே, இடையே இரண்டு மணி நேரம் அவகாசம் விட்டு இரவுத் திருவிழா பின்னர் எட்டுமணிக்கு ஆரம்பமாயிற்று. கோயில் மேளம் அரங்கத்தில் வந்து வாசித்து முடிய ஏறுபடி மேளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வாசிகக் ஆரம்பித்தன. சபையில் ஆண்களுக்கு, பெண்களுக்கு பஞ்சமர்களுக்கு என்று வகுத்து வகுத்துக் கயிறு கட்டிவிட்டிருந்தார்கள். பஞ்சமர்களுடைய பிரிவு பந்தலுக்கு வெளியே பரந்த ஆகாயத்தின் கீழே இருந்தது. விசேஷ மேளங்கள் இரண்டு மூன்று கூட்டம் வாசித்து முடிய பதினொரு மணியாகிவிட்டது. மேலும் நாலைந்து செட் வாசிப்பதற்கு இருந்தன. ஆரம்பத்தில் உற்சாகமாயிருந்த சபை இப்போ சற்றுச் சோர்வடைய ஆரம்பித்தது. சபையில் முன்வரிசையில் இருந்தவர்களுக்கு இரண்டுதரம் கொட்டாவி எழும்பியதும் மௌ;ள எழும்பி வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே வந்தவுடன் பின்னுக்கு இருந்த வரிசை உடனே பாய்ந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விடும். அப்படியே இருந்து கொஞ்ச நேரம் எலக்ட்ரிக் வெளிச்சத்திலே புதிதாக மாவிட்டபுரம் ராசாவுக்கும் அப்புலிங்கத்துக்கும் உருத்திராபுரம் ராசாவுக்கும் இந்தியாவிலிருந்து வந்த தவுல்காரனுடைய காதுக் கடுக்கன்கள் ஒளி வீசும் நேர்த்தியையும் சின்னப் பழனிக்கும் பெரிய பழனிக்கும் வந்த நாயனக்காரன் கைவிரல் மோதிரங்கள் பளிச்சிடும் nஐhலிப்பையும் பார்ப்பார்கள். சிலர் தவுல்காரன் திறமை சாலிதானா என்பதை அறிவதற்கு அவனுடைய தலை ஆட்டத்தைக் கவனமாக அவதானிப்பார்கள். இன்னுஞ்சிலர் நாயனக்காரனுடைய சூழலின் சுழட்டுதலைக்கொண்டு அவன் திறமை எவ்வளவு என்று அளந்தகொள்வார்கள். வேறும் சிலர் ஒத்துக்காரன் விடாமல் ஊதும் அபூர்வ வித்தையைப் பார்த்துப் பார்த்து வியப்பார்கள். இப்படிப் பார்த்துக் கொண்டேயிருக்க அவர்களையும் அறியாமலே வாய்திறந்து மூடத்தொடங்கும். நிலைமையை உணர்ந்த முன்யோசனைக்காரர் அந்த இடத்தைப் பின்னுள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டு உடனே எழுந்து வெளியேறிவிடுவர். அப்படி இல்லாதவர்கள் வாயைத் திறந்து மூடிக்கொண்டு சிலநேரம் அப்படியே இருப்பார்கள். பின்னர் சங்கீதத்துக்குத் தலையாட்டுவது போல் அவர்களுடைய தலைகள் மௌ;ள ஆடத்தொடங்கும். பிறகு தேகமும் சேர்ந்து ஆடும். அதற்கும் பிறகு இசைப் பெருக்கிலே மயங்கி மூர்ச்சையாகி விட்டவர்கள் போல சாய்ந்து கீழே விழுந்துவிடுவார்கள்.

வெளியே வந்தவர்கள் தூக்கத்தைக் கலைப்பதற்குரிய பிரயத்தனங்களில் இறங்குவார்கள். இரண்டு சிமிட்டாப் பொடி, சூடான ஒரு பேணி கோப்பி, வெற்றிலை, சுருட்டு, வீதியைச் சுற்றி ஒரு நடை ஆகிய முறைகளினால் கொட்டாவியை அடக்கிவிட்டு மறுபடியும் பந்தலுக்குவந்து பின்னுக்கு நிற்கும் கடைசி வரிசையில் சேர்ந்துகொள்வார்கள்.

பந்தலுக்கு வெளியே சற்றுத் தூரமாக மடங்களின் திண்ணைகளிலும், மரங்களின் கீழும் இன்னும் மனிதன் நீட்டி நிமிர்ந்து கிடக்கக்கூடிய பலவிடங்களிலும் பார்த்தால் கோயிலுக்கு அன்று வந்ததின் நோக்கத்தையே மறந்துவிட்டவர்கள் போல மெய்மறந்து தூக்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக புரண்டுபோய் கிடப்பவர்களைக் காணலாம். திருவிழாவில் அவர்கள் வேண்டும் பகுதி இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்கு, முதலில் மேளக்கச்சேரி முடிய வேண்டும். அதுவரைக்கும் ஒரு சிறு நித்திரை போட்டுவிடலாமல்லவா?

கடைசி மேளம் வாசித்துக்கொண்டிக்கிறது. கீர்த்தனம் ஒன்றை வாசித்து முடித்து விட்டு மேளம் கட்டிவர ஜோடி நாதஸ்வரம் பல்லவி ஒன்றைப் பிய்த்துவாங்கத் தொடங்கிற்று. கச்சேரி வெகு கச்சிதமாக அமைந்துவந்தது. இந்தச் சமயம் திருவிழாக்காரர் பொன்னுச்சாமி அரங்கத்துக்கு வந்து நாயனக்காரர் காதோடு ஏதோ சொல்லி விட்டுப் போனார். நாயனக்காரர் தவில்காரரைப் பார்த்துச் சிரித்தார். அது ஒருமாதிரியானசிரிப்பு. புகையிலை வியாபாரிக்கு பல்லவி வாசிக்க வந்தோமே என்று ஒரு சமயம் அவர்கள் எண்ணியிருக்கலாம். விறுவிறுப்பாக மேலே மேலே போய்க்கொண்டிருந்த பல்லவி நிரவல் திடீரென்று கீழே விழுந்து உடைந்து அலங்கோலமாயிற்று. அதைத் தொடர்ந்து ஒரு “சில்லறை” கிளம்பிற்று. ஆயிற்று, இதோ மேளக் கச்சேரி முடிவடையப் போகிறது.

எங்கிருந்தோ மத்தளமும் ஹார்மோனியமும் சபையுள் வந்து நுழைந்தன. மத்தளக்காரன் அதை அவிழ்த்து லேசாக அதில் ஒரு தட்டுத் தட்டினான். அவ்வளவுதான், அந்த மத்தள நாதத்திலேதான் என்னமந்திர சக்தியிருந்தது அப்படி! இங்கிலீஷ் கதை யொன்றிலே மந்திரவாதி ஒருவன் குழலை எடுத்து ஊதியவுடனே ஊரிலேயுள்ள எலிகளும் குழந்தைகளும் அவன் பின்னே சென்றுவிட்டதாகப் படித்திருக்கிறோம். இங்கே மத்தளக்காரன் எழுப்பிய நாதத்தைக் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அந்த வட்டாரம் முழுவதுமே விழித்துக் கொண்டது. தூரத்தே மரங்களின் கீழும் மடத்துத் திண்ணைகளிலும் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள், பந்தலுள்ளே அரைத் தூக்கத்தோடு உட்கார்ந்தபடியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தவர்கள் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தவர்கள், ஒருவர் முதுகில் மற்றொருவராகச் சாய்ந்து குறட்டை விட்டவர்கள், குழந்தைகள், குஞ்சுகள் பெரியவர்கள் சிறியவர்கள் பெண்கள் ஆண்கள் எல்லா வகுப்பினர்களுமே நிமிர்ந்து எழுந்து ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு முன் இடம் பிடிக்கத் தொடங்கினார்கள். இடத்துக்கு முந்துவதில் இப்படி ஓரே ஆரவாரமும் குழப்பமுமாகப் போய் விடவே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் போல ஒழுங்கை நிலைநாட்ட பொன்னுச்சாமியும் இன்னும் இரண்டொருவரும் முன்வந்தார்கள். முன் வந்து சனம் விலத்தத் தொடங்கினார்கள்.

இருந்திருந்துவிட்டு நடுநடுவே ஒரொரு தலைகள் மௌ;ள மேலே எழும்பும். ‘ஓய், இரு அங்கே’ என்று அதட்டிய குரலில் சத்தம் வந்ததும் சன சமுத்திரத்துள்ளே அவைகள் மறுபடி மறைந்து விடும். ‘அப்படியில்லை’ என்று யாராவது சிறிது முரண்டினால் உடனே அவருக்குக் கோயில் கடத்தல் தண்டனை கிடைக்கும்.

சரி, இத்தனை ஆரவாரத்துக்கும் காரணமான சம்பவம் நடைபெறும் சமயம் இப்போ வந்து விட்டது.

‘கலீர் கலீர்’ என்று சலங்கை ஒலி கேட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு இளம் நாட்டியப் பெண்கள் வந்தார்கள். சபையில் ஒரு சத்தம் கிடையாது.

வந்தவர்கள் முதலில் அப்போது பிரபலமாயிருந்த சில சில்லறைகளைப் பாடினார்கள். அது முடிய ஆடினார்கள். ஆட்டத்தில் பரத நாட்டியமும் கஞ்சியில் பயறு போட்டதுபோல் கொஞ்சம் இருந்தது. பின்னர் அபிநயம் பிடித்தார்கள். எல்லாம் நாட்டியக் கலையின் ஒரு நுனிப்புல் மேய்ச்சலாக இருந்தது. காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றபடி சும்மா ஒரு ‘ஷோ’ போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் போக மறு சோடி வந்தது. உடை அலங்காரத்தில் முந்தியதை இது வென்றுவிட்டது. முதலாவது ஜோடியின் கௌன் முழங்காலோடு நின்றிருந்தால் இது முழங்காலுக்கு மேலே போய்விட்டது. சோளகக் காற்றின் குழப்பத்தினால் அவர்களது அபிநயத்தில் ஒரு அம்சமாய்ப் போய்விட்டது. துகிலுரிதல் என்று ஒரு அபிநயம் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு அது பொருத்தமாயிருந்திருக்கும். சின்ன மேளங்களுக்கு சோளக் காற்றோடு இன்னுமொரு சிறு தொந்தரவு குறுக்கே நின்றது. உபயகாரர் பொன்னுச் சாமி தாமேதான் திருவிழாக்காரர் என்பதை சனங்களின் மனத்தில் பதியச் செய்வதற்கு வேண்டியோ என்னவோ சபையில் சின்னமேளம் ஆடிக்கொண்டிருக்கும் போது பல தடவை அவர்களை மருவிக்கொண்டு போய்வந்தார்.

சின்ன மேளம் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென்று கோயில் பெரிய மணி அடித்தது. உட்கார்ந்திருந்த சனங்களெல்லாம் குபீரென்று எழுந்தார்கள். இது சின்னமேளக்கச்சேரி முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளம். இனிமேல் சாமி தூக்கி வீதியைச் சுற்றி ஊர்வலம். சன சமுத்திரம் இம்மாதிரி குழம்பி எழுந்த அமளியில் ஒரு சிறு சம்பவம் நடந்தது.

பஞ்சமருக்கென்று கயிறு கட்டி வகுக்கப்பட்டிருந்த பிரிவிலிருந்து ஒரு சிறு குழந்தை தவறி உள்ளே வந்துவிட்டான். அதாவது கொட்டகைப் பந்தலுக்குள்ளே அவன் கால் வைத்து விட்டான். இதைக் கண்டதும் தாய் பதைபதைத்துப்போய் ஓடிவந்து அவனை தூக்கி எடுத்தாள்.

காரியம் கெட்டுப்போய் விட்டது. தீண்டத்தகாத கீழ் சாதிப் பிள்ளையும் அதன் தாயும் உயர்ந்த சாதி மக்கள் இருந்த பந்தலுள்ளே வந்து விட்டார்கள். ‘திருவிழாவைக் குழப்ப வந்து சனியன்கள்’ என்று திட்டிக்கொண்டே பொன்னுசாமி பாய்ந்து விழுந்து ஓடிவந்து பிள்ளையின் கன்னத்திலும், தாயின் கன்னத்திலும் இரண்டு இறைகொடுத்தார். குழந்தை அலறிற்று. தாய் தூக்கியணைத்துக்கொண்டு வெளியே ஓடினாள். பொன்னுச்சாமி கம்பீரமாகச் சபையை ஒரு பார்வை பார்த்தார்.

தீண்டாச்சாதிச் சிறுவன் கோயில் வாசலில் கால் வைத்த அபசாரத்திற்கு அவனுக்குப் பலத்த பூசைக்காப்புக்கொடுத்து, துஷ்ட நிக்கிரகம் பண்ணிமுடிய சுவாமி வீதி வலத்திற்கு எழுந்தருளும் சமயமாயிற்று. இப்பொழுது கோயிலில் ஒரு பூசை நடைபெற்றது. குருக்கள் கற்பூர தீப தட்டை எடுத்து ஒருசுழட்டுச் சுழட்டினார்.

கோயில் வெளி வாசலிலே மொய்த்துப்போய் நின்ற பஞ்சமர் கூட்டத்தில் ஒருவன் ம்….. ஹம்…. என்று உறும ஆரம்பித்தான் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்துபோய்நின்ற பக்தகோடிகளது கவனம் அவன் பக்கம் திரும்பிற்று. உறுமியவன் தன் தேகத்தை உலுப்பத் தொடங்கினான். வலிப்பில் துடிப்பவனைப்போல அவனது காலும், கையும் வெட வெடவென்று நடுங்கின. சாவிகொடுத்த பொம்மை நகருவதைப்போல அவன் நகர்ந்து நகர்ந்து கோயில் படிக்கட்டுகளில் ஏறினான்.

திரண்டுநின்ற பக்தகோடிகள் விலகி இரண்டாகப்பிரிந்து பயபக்தியோடு அவனுக்கு வழிவிட்டுக்கொடுத்தார்கள்.

சுவாமி கலை ஏறிய பஞ்சமன் அந்தக்கலைக்குரிய நடுக்கத்தோடும் குதிப்போடும் கோயிலுக்குள் மேலும் மேலும் முன்னே போனான். அவனை யாரும் தடுக்கத் துணியவில்லை. கற்பூர தீபம் காட்டிய குருக்கள் பக்தி விசுவாசத்தோடு இரண்டாவது முறையாக பஞ்சாலாத்தி காட்டினார்.

இந்தச் சமயம் கன்னத்தில் அறைபட்ட குழந்தையின் அழுகைக்குரல், சனக்கூட்டத்தின் நடுவே சற்று தொலைவாக அடங்கி அடங்கிப் போவது கேட்டது.

இதுமுடிய சுவாமி வீதிவலம் ஆரம்பமாயிற்று. அலங்காரமான முத்துச்சப்பறம் எலெக்டரிக் பல்ப்புகளால் மூடி மின்னலின் ஒளியைப்போல ஒரே சோதி மயமாகப் பிரகாசித்தது. கண்களைப் பறித்த அந்த வெளிச்சத்தில் சப்பறத்தின் கலை நுட்ப வேலைப்பாடுகள் மறைந்து போய் விட்டன. ஆடையாபரணாலங்காரம் அதிகமான செல்வச் சீமாட்டி ஆடி அசைவதுபோல சப்பறம் நகர்ந்தது. நான்கு வீதியிலும் அது ஒவ்வொரு தடவை தங்கியபோது, சின்னமேளக் கும்மி, தவில்சமா, வாணவேடிக்கைகளெல்லாம் நிமிர்த்தூளிப்பட்டன. சூரிய உதயமாகி இரண்டு மணிக்கு மேலாகியும் இரவுத் திருவிழா முடிந்தபாடில்லை! பொன்னுச்சாமி அண்ணையின் பேரான திருவிழாவைப்பார்த்துப் பார்த்து கேட்டுக் கேட்டு, கிராமத்தவர்களுக்கு வயிறு நிரம்பியதுபோலாகி விட்டது.

பொன்னுச்சாமி புகையிலை விற்றுத்தேடிய ஆயிரமாயிரம் ரூபாக்கள் மத்தாப்பு வாணமாகவும், ஆகாசவாணமாகவும், அவுட்டு வாணமாகவும் ஆகாயத்திலே நின்று பளிச்சென்று ஒரு அலங்கார வெளிச்சம் போட்டுவிட்டு புகையாகப் போன சமயங்களில் கூட்டத்திலே ஒரு கலகலப்பும், இரைச்சலும் உண்டாகும். இந்த ஆரவாரம் பொன்னுச்சாமியின் காதிலே விழுந்தபோதெல்லாம் அவருக்கு உள்ளம் குளிர்ந்து ஆகாசத்திலே பறப்பதுபோன்றதொரு இன்ப உணர்ச்சியில் ஆழ்ந்தார்.

ஒரே இடத்தில் சேர்ந்துபோயிருந்த பணம் திருவிழா என்ற பெயரில் இந்தமாதிரிப் பிரிந்து நாலாபக்கத்திலும் விநியோகமாயிற்று.

பல வருஷங்களுக்குமுன் நடைபெற்ற பழைய சம்பவங்களை எண்ணிப்பார்க்க கோர்வை கோர்வையாக ஒன்றன்பின்னொன்றாக சினிமாப் படம்போல் அவைகள் மனக் கண்ணின்முன் தோன்றுகின்றன. அப்படிப் பார்ப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. பத்து வருஷங்களுக்கு முன்னே கிராமத்தில் இப்படித்தான் பொன்னுச்சாமியின் ஆட்சிநடைபெற்றுக்கொண்டிருந்தது. வண்டிச் சவாரிகளினாலும் கோயில் திருவிழாவினாலும் அவர் பெயர் கிராமத்தில் மூலை முடுக்குகளிலெல்லாம் அடிபட்டது. ஊரிலே அவர் ஒரு பெரிய மனுஷனாகிக்கொண்டுவந்தார். அவரது அபிப்பிராயத்தின்படி அவருடன் எதிரி சாதித்த அவரது மருமகப் பொடியனோ தேய்பிளை போல் மங்கிக்கொண்டு போனான்.

அந்தக்காலத்தில் கிராமத்திலிருப்பவர்கள் பொழுது போக்க சினிமாவுக்குப் போவதில்லை. ஓய்வு நேரங்களில் வீட்டிலும் வெளியிலும் நாலு ஐந்து பேர்களாகக் கூடிக் கதைப்பார்கள். ஊர் வம்புகளெல்லாம் கதைப்பார்கள். ஆண்களும் கதைப்பார்கள். பெண்களும் கதைப்பார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்திருந்தும் கதைப்பார்கள். வேறு வேறாக தனித்திருந்தும் கதைப்பார்கள்.

இந்தமாதிரியானதொரு திண்ணைப் பேச்சில் அடிபட்ட ஊர்வம்பு ஒரு சமயம் எங்கேயோ போய்க்கொண்டிருந்தபோது காதில் விழுந்தது ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு வீட்டின் முற்றத்தில் நிலவு வெளிச்சத்தில் மாட்டுக்குப் பனைஓலை கிழித்துக்கொண்டிருந்தார்கள். அதில் கலந்து கொண்ட நாலைந்து பேர்களுக்கிடையே கீழ்க்காணும் சம்பாஷணை நடைபெற்றது.

“பொன்னுச்சாமி அண்ணையின் மகளுக்கு அவரது மருமகன் பொடியனைக் கட்டிவைச்சாலென்னவாம்?” என்று ஒருத்தி கேட்டாள்.

“அது நடவாதசங்கதி பிள்ளை. பொன்னுச்சாமியாருக்கு ஊரிலேயிருக்கும் நடப்புக்கும் சங்கைக்கும் அவருடைய மகளுக்கு இவன்தான் மாப்பிள்ளையோ?” என்று அதற்கு ஒரு பெரியவர் பதிலளித்தார்.

“அவருடைய நடப்பையும் சங்கையையும் பார்த்து கிளிபோல ஒரே ஒரு பிள்ளையைக் கொண்டுபோய் முன்பின் தெரியாத காடன்மோடனுக்கு கட்டிவைத்தால் அந்தக் குடும்பம் வாழுகிறதில்லையோ? அந்தப் பிள்ளையும் நாலு நாளைக்கு சந்தோஷமாய் இருக்க வேணுமல்லோ”

“காடனும் மோடனும் ஏன் வரப்போகிறார்கள்? பொன்னுச்சாமியார் இலக்க வைத்திருப்பதெல்லாம் கால்சட்டை போட்ட ஒரு பெரிய உத்தியோகப் பெருச்சாளிமேலேதான்.”

“கால்சட்டை போட்ட மாப்பிள்ளைகள் மீது பொன்னுச்சாமி ஐயாவுக்கு மோகமிருப்பதுபோல அந்தப் பிள்ளைக்குமிருக்கவேணுமே. அது என்னென்னத்தை எண்ணிக்கொண்டிருக்கிறதோ.”

“இதென்ன கதை சொல்லுகிறாய் நீ, ஆடு நினைத்த இடத்தில் பட்டி அடைப்பவர் பொன்னுச்சாமியாரல்ல. அதுவுமல்லாமல் அவரது பொடிச்சியைப்பற்றி நீ என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாய்? ‘தகப்பன்’ கீறிய கோட்டைத் தாண்டாத குடும்பம் அது. அப்படி இப்படி உந்தப் பள்ளிக்கூடத்துப் பொடிச்சிகளைப்போல அவளையும் எண்ணிக்கொள்ளாதே”

“எல்லாச் சங்கதியும் அறிஞ்சுதான் பேசுகிறேன். தகப்பன்மார்கள் கீறுகிற கோடு வெளும் கோடுகளாயில்லாமல் அகழிகளாய்ப் போய்விடுகிற சமயத்தில் பிள்ளைகள் அதில் விழாமல் தப்ப மார்க்கம் தேடாமல் வேறு என்ன செய்வார்கள்? பொன்னுச்சாமி ஐயாவுக்குள்ள பிடிவாதக் கணம் அவரது பிள்ளையிடமும் இருக்காமல் போகுமோ? வீட்டில் நிற்கும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் சோடி சேர்ப்பதுபோல கல்யாணம் செய்து வைக்க இந்தக் காலத்துப் பிள்ளைகள் சம்மதப்படுகிறதாமோ? பொன்னுச்சாமி ஐயாவின் மருமகனுக்கு இந்தக் கல்யாணம் நடக்காது போனால் ஏதாவது விபாPதமோ வினையோ நடக்கக்கூடமென்றுதான் எனக்குப் படுகிறது. என்னவோ இமெல்லாம் உன்காதோடே இருக்கட்டும். நடக்கிறதை இருந்து பார்ப்போம்.”

இந்தச் சம்பாஷணையில் பொதிந்திருந்த அபிப்பிராயமே அப்போது ஊரில் பலவிடங்களில் நிலவியிருந்தது என்றுகூடச் சொல்லலாம்.

இதன்பின் ஒரு வாரத்திற்குள்ளாக பொன்னுச்சாமியின் மகள் அவனுடைய மச்சானோடு கூடிக்கொண்டு ஓடிப்போய்விட்டாள் என்று ஊரெங்கும் கதை புகைந்தது. அந்த நாட்களிலே கிராமத்தில் அது எத்தனை பெரிய நியூஸ் ஆக அடிப்பட்டது….!

5

….என்ன ராமலிங்கம் மீண்டும் ஒரே யோசனையில் மூழ்கிப்போய்விட்டாய். பழைய காலத்துச் சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறாயோ, அந்தக் குப்பைகளை ஏனப்பா கிளறுகிறாய்? நான் சொல்லுகிறதைக் கொஞ்சம் கேள்-

கல்யாணத்திற்கு முதல் நாள் நாங்கள் இருபேரும் எங்கேயாவது கண்காணத் தேசத்துக்கு ஓடிவிடுவதென்று பேசித் தீர்மானித்துக்கொண்டோம்.

முகூர்த்தம் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு வீட்டில் அப்பா இல்லை, மாப்பிள்ளைக்கு சோமன் சோடி எடுக்கப் பட்டணம் போய்விட்டார். மற்றவர்கள் பலகாரம் செய்வதில் சமையலறையில் அமளிப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

நான் இதுதான் சமயமென்று கிளம்பிவிட்டேன.

தோட்டத்தில் அத்தான் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். மணி பன்னிரண்டுக்கு மேலிருக்கும் ஆனால் ரயில் விடியப்புறம் நாலரை மணிக்குத்தான் வருமென்றும் இப்போதே அங்கு போய் நிற்பது பாதுகாப்பாக இருக்காதென்றும் அத்தான் சொன்னார்.

தோட்டத்து வரம்போரமாக பள்ளமான ஒரு இடத்தில் அவன் மடிமீது தலையை வைத்து நான் சாய்ந்துவிட்டேன். காதோடு காதாக எவ்வளவு பேசினோம், ராமலிங்கம்! எத்தனை மனக்கோட்டைகள் கட்டினோம்! ஆனால் எங்களது அத்தனை நேரப் பேச்சும் மனோரதமும் ஒரு சாம வாழ்க்கையாகவே முடிந்துவிட்டது.

வேட்டி சால்லை எடுக்கப்போன அப்பா சீக்கிரமாகவே வீடு திரும்பிவிட்டார். அதை எனக்கு காண்பிப்பதற்காக என்னைக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறார். வீட்டில் என்னை காணமல் போகவே தோட்டம் துரவெல்லாம் தேடிக் கொண்டு கடைசியில் நாங்கள் இருந்த பக்கமே வந்து சேர்ந்துவிட்டார்.

பிரத்தியட்சமாக எங்களைப் பார்த்தும் விட்டார். நாங்கள் இருந்த அவருக்கு ஒரே கோபாவேசத்தை உண்டாக்கிவிட்டது. அம்பிகாபதி – அமாரவதி சல்லாபத்தைக் கண்டு சீறி எழுந்த முரட்டுக் குலோத்துங்கனாகவே அப்பாவும் ஆகிவிட்டார். அவர்தான் இரும்பு ஜென்மம் என்று சொன்னேனே! ஆத்திரக்காரனுக்குப் புத்தி அற்றே போய்விட்டது. முன்கோபச் சுவாலையில் மூளையில் தீட்சண்யம் கருகிப்போயிவிட்டது.

புகையிலைக் கன்றுகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிய மண்வெட்டி எங்களுக்குப் பக்கத்திNலு தானிருந்தது அதன்மீது அவர் பார்வை போயிற்று. “பொல்லாப்பிள்ளை இல்லாப் பிள்ளையாகப் போகட்டும் இரண்டு பேரும் ஒரேயடியாத் தொலைந்துபோங்கள்” என்று குழறிக்கொண்டே அந்த மண்வெட்டியைத் தூக்கி எங்கள் இருபேர் தலையிலும் ஓங்கிய வீச்சில் ஒரே போடாகப் போட்டார்.

அவ்வளவோடு எங்கள் வாழ்க்கை முடிந்தது ராமலிங்கம்! எங்கள் இருபேரது உடலும் புகையிலைத் தோட்டத்துக்கு உரமாயிற்று.

எங்களைக் குழி தோண்டிப் புதைத்த அந்தத் தோட்டத்தில் வளர்ந்த புகையிலையின் சுருட்டுத்தான் உனக்கு இப்போது மயக்கம் கொடுக்கிறது. அது, இரு காதலர்களின் கண்ணீரிலே வளர்ந்த புகையிலை என்பது உனக்கு எப்படித் தெரியும்?

அந்தத் தோட்டத்தில் வளர்ந்த ஒவ்வொரு புகையிலைக் கன்றுகளிலும் அதன் அடிவேர் தொட்டு குருத்து இலைகள் வலை ஒவ்வொரு அணுவிலும், இருபேரது சதையும் எலும்பும், இரத்தமும் செறிந்து போயிருக்கின்றன. ஆகாயத்திலே மிதக்கும் உனது சுருட்டுப் புகையின் ஒவ்வொரு அணுவிலும் இரு காதலர்கள் எந்நேரமும் மிதந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். நிறைவேறாத காதல் எரிமலையைப்போல வெடித்துக் கக்கும் புகைதான் உனது சுருட்டுப்புகை.

பார்த்தால் ஒரு ஐந்து சதத்துச் சுருட்டு. ஆனால் அதிலே எவ்வளவு சங்கதி இருக்கிறது பார்த்தியா?”

6

கதையை முடித்துவிட்டு புகையில் தெரிந்த முகம் கண்ணைச்சிமிட்டிற்று

சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்த நான் விறுக்கென்று எழுந்து உட்கார்ந்தேன். ஒரு நொடிப்பொழுதுதானிருக்கும். அதற்குள்ளாக அந்த முகம் மறைந்து போயிற்று.

திறந்திருந்த ஜன்னலூடாக குளிர்காற்று வீசியது.

சுவரில் தொங்கிய மணிக்கூட்டில் ஒரு மணி அடித்தது. அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன்.

அடடே… இது எப்போ மழை பெய்தது? முற்றத்தில் வெள்ளம் ஓடுகிறதே…!

அவ்வளவு தூரம் யோசனையில் ஆழ்ந்திருந்தேனா என்று எனக்கே வெட்கமாய் போய்விட்டது. இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் நாண்பர்கள் கிண்டல் பண்ணடாட்டார்களா? வீட்டிலோ வீட்டைச் சுற்றி வெளியிலோ என்ன நடக்கிறது என்று தெரியாமல் இந்த மாதிரி பிரமை பிடித்துப் போயிருக்கிறவனுக்கு யாரடா பெண் கொடுக்க முன்வருவார்கள்? என்றெல்லாம் அவர்கள் தமாஷ் பண்ணத்தொடங்கி விடுவார்கள். பரவாயில்லை. அது அவ்வளவு பெரிய காரியமல்ல. ஆனால்…. புகையில் தெரிந்த முகம் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் மறைந்து விட்டதே பொன்னுச் சாமிக்கும் முருகேசனது அப்பா அம்மாவுக்கும் ஏற்கனவே குடும்ப விவகாரங்கள் ஏதும் இருந்ததுண்டா?

இதன் விபரங்கள் முழுவதும் தெரியாமல் போனால் எனக்குத் தூக்கமே வரமாட்டாதுபோலவிருந்தது. அறைக் கதவுகளைப் படீரென்று அடித்து மூடினேன். நாற்காலியில் போய் மறுபடியும் உட்கார்ந்து அணைந்துபோன குறைச் சுருட்டை எடுத்து மீண்டும் பற்றவைத்துப் புகையை வட்டமாக மேலே ஊதினேன்….

எனக்குக் கொடுத்த சுருட்டில் கடைக்காரன் கஞ்சாப் புகையிலை வைத்துச் சுருட்டி கொடுத்தானோ என்ன இழவோ தெரியவில்லை. நான் மனதில் நினைத்ததை அது எதிரேகாட்டிற்று!

மறுபடியும் என் எதிரே ஒரு முகம்! ஆனால் அது பெண்ணின் முகமல்ல, ஆண்பிள்ளை முகம் யௌவன முறுக்கெறிய வாலிபனின் முகம். எங்கோ ஒரு சமயம் பார்த்த ஞாபகமிருக்கிறது கனவு கண்டது போலிருக்கிறதேயொழிய தெளிவாகவில்லை.

அதோ அந்த முகத்தின் வாயசைகிறது அது பேசுகிறது…..

முருகேசன்

“நான் தானப்பா முருகேசன். முன்னே பங்@ரிலிருந்து தமிழ்ப் பள்ளிக் கூடத்திலே நீயும் நானும் ஒரு வகுப்பில் படித்தோமே ஞாபகமிருக்கிறதா? உனக்கு அது எங்கே ஞாபகமிருக்கப் போகிறது? நீதான் வீட்டுக் கணக்கை செய்து அந்த நாட்களில் வீட்டிலேயே மறந்துபோய் வைத்துவிட்டு பள்ளிக்கூடத்தில் வந்து வாத்தியாரிடம் பிரப்பம்பழம் சாப்பிடுவாயே. அவ்வளவு அசதியும் மறதியும் பிடித்த சோம்பேறியாகிய நீ முருகேசன் என்று ஒருவனும் காந்திமதி என்று ஒருத்தியும் கூட ஒரு வகுப்பில் படித்தார்கள் என்பதை சொப்பனத்தில்கூட எண்ணியிருக்க மாட்டாய். தையல் பெட்டிக்குள் கொண்டுவந்த இலந்தைப் பழத்தை யாருக்கும் தெரியாமல் எனக்குக் கொடுக்கும்போதெல்லாம் நீ பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு விட்டு என்வேட்டி மடிப்புக்குள் கொட்டியதில் கைவிட்டு அள்ளி உனக்கும் கொண்டுவந்து கொடுப்பாளே புறாப்போல ஒரு சிறுமி அவளையும் நீ நினைப்பில் வைத்திருக்க மாட்டாய். அவள்தான் காந்திடதி – என்மாமன் மகள்.

மாமன் மச்சான் என்ற இந்த உறவு முறையும் இன பாந்தவ்யங்களும் சும்மா ஒரு வெளிப்பேச்சே அல்லாமல் கனத்தைக் கனம் நாடுவதுதான் உண்மையான சங்கதி. பணம் பந்தியிலும் குலம் குப்பையிலும் இனம் எங்கோ பாழ் கிணற்றிலும் கிடக்கிறது. எல்லாமே அப்படித்தான் அரசியல்வாதி சுதந்திரம் சுதந்திரம் என்று பிரசங்க மேடையிலே கூச்சல் போடுகிறான் வீட்டிலே அவன் குடும்பத்தில் எந்த அளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று போய்ப்பார்.

சிவராத்திரி யன்றைக்கு கிராமத்திலே நடைபெற்ற சுபத்திரை -அர்ச்சுனன் நாடகத்தைப் பார்த்த பொன்னுச்சாமியார் என்ன குதிகுதித்தார்! சுபத்திரையை அர்ச்சுனன் களவாகக் கூட்டிக்கொண்டு ஓடிய காட்சி நாடகத்தில் நடிக்கப்பட்டபோது கொட்டகைக்குள் இருந்த பொன்னுச் சாமியார் இருப்புக் கொள்ளாமல் எழும்பி நின்று சீட்டி அடித்து சந்தோஷ ஆராவாரம் செய்ததை இதோ இந்தக் கண்களாலே பார்த்தேன். ஆனால் வீட்டிலே அவரது மகள் இஷ்டமில்லாத ஒருவனைக் கட்டிக்கொள்ள மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தபோது அவர் எப்படி நடந்து கொண்டார்? நாடகத்தே காவியத்தே காதலைப்பார்த்து நன்றாயிருக்கிற தென்று சுவைப்பவர்கள் வீட்டிலும் கிணற்றோரத்திலும் அதைப் பார்த்தபோது பதறுகிறார்கள் பாடை கட்டி அதைக் கொன்று விட வழி தேடுகிறார்கள் என்று பாரதி ஏங்கியது இந்த ஜென்மங்களைப் பார்த்துத்தான்….

என்ன ராமலிங்கம் முழிச்சுப் பார்க்கிறாய்! பாரதி பாட்டு எனக்கு எப்படித் தெரியும் என்று யோசிக்கிறாயோ? நான் ஒன்பதாவது வகுப்புரை தமிழ் படித்திருக்கிறேனப்பா. அந்த நாட்களிலே ஒன்பதாவது வகுப்புப் படித்து விட்டால் அது பெரிய காரியமாகத்தான் கருதப்பட்டு வந்தது. ஆனால் மலையிலே விளைஞ்சதானாலும் உரலிலே மசிந்துதான் ஆகவேணும் என்று சொல்லுவதைப் போல அந்த நாட்களில் தமிழ் எவ்வளவு படித்திருந்தாலும் வாத்தியார் வேலை எடுக்க வேணுமானால் ஒரு ஆசிரிய கலாசாலைக்குள் நுழைந்துதான் வெளிவரவேணும். ஆனால் அதற்குள் நுழைகிறது எனக்கென்னவோ சங்கடமான காரியமாக விருந்தது. முதலில் ஆசிரிய கலாசாலை அதிபரின் தயவு வேண்டும். அதைப் பெற்று உள்ளே போய்விட்டாலும் மாசம் மாசம் பணம் அழுதாகவேண்டும். எனக்கும் என் தாயாருக்குமிருந்தது ஒரே ஒரு தோட்டக்காணி. அதை விற்றுச் சுட்டுவிட்டுப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்தாலும் பிறகு எங்கேயாவது வேலை பார்ப்பதற்கு மற்றொரு பாடசாலை மனேஜரிடம் போய் பல்லைக் காட்டவேணும். இதெல்லாம் சரிவராது போகுமானால் சரித்திரத்;தில் பூதத்தம்பி காட்டிய வழியை பின்பற்ற வேணும். இந்தத் தொல்லைகளெல்லா எனக்குப் பிடிக்காது. பேசாமல் எனக்கிருந்த பூமித்தாயின் ஏதோ நான் பாடுபட்டதுக்குக் கூலி கிடைக்கத் தான் கிடைத்தது. இயற்கை பாடுபட்டவன் வயிற்றில் ஏன் அடிக்கப்போகிறது? உழைப்பாளியின் வியர்வையை சுய நலத்தக்குப் பயன்படுத்திக் கொள்ளும் குண விசேஷம் மனிதனுக்குத் தான் உண்டு. பூமியிடமிருந்து எதையாவது எதிர் பார்த்துத்தான் வானம் பூமிக்கு மழையைக் கொடுக்கிறதா? மழையைத் தருவது வானத்தின் கடமை. அந்த அளவுக கடமை உணர்ச்சி. பரோபகார சிந்தை மனித சமுதாயத்தில் இப்போதைக்கு உண்டாகப் போவதில்லை. அதற்கு இன்னும் எத்தனை ஊழிக்காலம் செல்லவேண்டுமோ, எவ்வளவு உலகப் பிரளயங்கள் நடைபெற வேண்டுமோ தெரியவில்லை.

பிரளயம் என்றதும் என்வாழ்க்கையில் ஒரு சமயம் இயற்கை ஏற்படுத்திய ஒரு பிரளயம் நினைவுக்கு வருகிறது

அதுதான் அந்த மழை

சுடர்விளக்கு அணையப் போவதற்குமுன் ஒரு தடவை பிரகாசித்து எரிவதைப்போல, என் தோட்டத்தில் அந்த வருஷம் புகையிலைக் கன்றுகள் குளுகுளுவென்று செழித்து வளர்ந்திருந்தன. தலை வாழை இலையைப்போல வாட்ட சாட்டமாக வளர்ந்துகொண்டு வந்த ஒவ்வொரு புகையிலையிலும் பசுமை சொட்டிற்று. காலை இளந்தென்றலிலே அவைகள் சிறகடித்துப் பாடும் பட்சியைப்போல சிலுசிலுத்து ஆடும் காட்சியை நான் தினம் தவறாமல் போய் பார்த்து மகிழ்வேன். அப்பொழுது என் மனத்தில் எவ்வளவு யோசனைகள் தோன்றின! அடுத்தாற்போலிருந்த காணியிலே அந்த வேளையில் காந்திமதியின் தரிசனமும் கிடைத்து விட்டதென்றால்… மனக்குதிரையில் பாய்ச்சலைச் சொல்லவாவேண்டும்? விடுதலைபெற்ற காற்றைப்போல, திறந்துவிட்ட கூண்டுக் கிளியைப்போல அது கட்டுவரம்பில்லாத உல்லாச சஞ்சாரம்செய்யத் தொடங்கிவிடும். வாழ்க்கையில் அது காரிய சித்தியாகக் கூடியதா இல்லையா என்ற விசாரம் அதற்குக் கிடையாது. கவிஞர்களின் கற்பனையைப்போல! ஆனால் அவர்களது கற்பனை ஒரே வெறும் கற்பனைதான். சாதாரண குடியானவனது கற்பனையிலோ நம்பிக்கையும் கலந்திருக்கிறது. குடியானவனுக்குக் கிடைக்கக்கூடிய செலவில்லாத ஒரு பொழுது போக்கு (லக்ஷரி) அது! அவன் அதில் ஒரு தனி மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். நம்பிக்கையே இல்லாமல் போய்விடுமானால் மனிதன் முன்னேறுவது – வாழ்வதுதான் எப்படி? நமது நாட்டின் வடக்குப் பிரதேசத்திலே பூமி திருத்தி உண்ணும் புதல்வர்கள் இந்த நம்பிக்கை என்ற மகத்தான பலத்தை துணைக்கொண்டு தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஐப்பசி மாசம் தொடக்கம் மழை பெய்யும் என்ற நம்பிக்கையோடுதான் அவன் வயலை விதைக்கிறான். தை மாசத்துக்குப்பின் மழை பெய்யாது என்ற நம்பிக்கையோடுதான் அறுவடைக்குக் காத்திருக்கிறான்.

இந்தமாதியான நம்பிக்கையோடு நானும் தினந்தோறும் கனவுக் கோட்டைகள் கட்டிக் கொண்டு வந்தேன்.

அந்த வருஷம் புகையிலை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் வீட்டைப் புதுப்பித்துக் கட்டவேணும், அம்மாவுக்கு ஒரு கும்பகோணம் சுங்கடிச் சேலை வாங்கவேணும், எனக்கு ஒரு சேலங் குண்டஞ்சி – அதைக் கட்டிக்கொண்டு காந்திமதி பார்க்கக் கூடியதாக தோட்டத்தில் உலாவவேணும் – என்றெல்லாம் ஏதேதோ எண்ணினேன்! இதெல்லாம் இயற்கைக்கு மாறான எண்ணம் என்று இயற்கைகூட எண்ணியதோ என்னவோ- ஒரே ஒரு நாள் அது காட்டிய விஸ்வரூபத்தில் எல்லாம் பாழாகிப் போயிற்று.

என் கிராமத்தில் என்னைப்போல எத்தனையோ புகையிலைத் தோட்டக்காரர்களின் நம்பிக்கைக் கோட்டைகளும் அந்த ஒரு நாள் மழையில் இடிந்து கதைந்துபோயின.

இரவு இரவாக சோனாவாரியாக வானம் ஓட்டையாகிவிட்டதுபோல மழை பொழிந்து தள்ளிற்று.

விடிய, ஓடோடியும்போய் புகையிலைத் தோட்டைத்தைப் பார்த்தேன். அங்கே நான் கண்டது ஒரே வெள்ளப் பெருக்குத் தான்.

அந்த வெள்ளம் புகையிலைக்க ன்றுகளை மட்டும் வாரி அடித்துக்கொண்டு போகவில்லை என் மனத்திருந்த அற்ப சொற்ப நம்பிக்கைகளையும் வாரிக்கொண்டு போயிற்று.

இரண்டு மூன்று தினங்கள் நான் வீட்டுப் பக்கமே திரும்பவில்லை. அம்மா என்னைத் தேடுவாளே என்றே எண்ணவில்லை. ஊர் முழுக்கத் திரிந்துகொண்டேயிருந்தேன்.

இந்தச் சமயம் பார்த்து காந்திமதிக்கு வெள்ளிக்கிழமை கல்யாணம் நடக்கவிருக்கிறது என்ற சேதியும் காதில் விழுந்தது.

என் மன நிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாரப்பா.

ஒரே குழப்பமடைந்த மன நிலையோடு ஓர் இரவு தோட்டத்துக் கிணற்றுக் கட்டில் போய் யோசித்தபடியே உட்கார்ந்திருந்தேன்.

தோட்டத்தில் தேங்கியிருந்த வெள்ளம் களகளவென்ற சத்தத்தோடு இன்னும் வடிந்து கொண்டேயிருந்தது. அது என் காதுகளில் நன்றாகக் கேட்டது. என் வாழ்க்கையின் நிறைவும் அந்தமாதிரியே படிப்படியாகக் குறைந்துகொண்டு போவது போல ஒரு பிரமை எனக்குத் தட்டிற்று.

இன்னும் சில பொழுதில் எங்கோ அதல பாதாளத்தில் விழுந்து விடுவேன்போல ஒரு எண்ணம் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ந்து கொண்டு வந்தது.

திடீரென்று ‘அத்தான்!’ என்று குரல் கேட்ட போது நான் திடுக்கிட்டேன். முதலில் என் காதுகளையே நான் நம்பவில்லை. தோள்களில் மெல்லிய கைகளின் ஸ்பரிசம் பட்டபோதுதான் திரும்பிப் பார்த்தேன்.

அவள் வேறுயாருமல்ல. காந்திமதி! எந்தன் கலி தீர்க்க வந்தவள்……….

(7)

ஒரு தீக்குச்சியைத் தட்டிப் பற்றவைத்து விட்டால் புகையிலைச் சுருட்டுப் பகபகவென்று எரிகிறது. காந்தம் ஏறுவதுபோல உனக்கும் மயக்கம் தலைக்கேறுகிறது. இவ்வளவு எளிதாக இன்பத்தை கொடுக்கும் புகையிலையில் எத்தனை பாட்டாளிகளின் வியர்வையும் தண்ணீரும் கலந்துபோயிருக்கிறதென்பதை நீ எப்பொழுதாவது எண்ணியதுண்டா?

உலகத்திலே எல்லாத் தொழில் துறைகளிலும் மாற்றம் அபிவிருத்தி என்ற பேச்சு அடிபடுகிறது. இந்த யாழ்ப்பாணத்துத் தோட்டக் காரனுக்கு மட்டும் அது என்றைக்கும் வெறும் கானல் நீர் தானா?

“பச்சைப் பெட்டிக்குள்போடு@ சிவப்புப் பெட்டிக்குப் போடு” என்ற ஐந்த வருஷம் ஆறு வருஷத்துக்கொருதடவை வந்து கழுத்தை ஆறுத்தார்கள். ஆகாய மார்க்கமாக கங்கை நதியைக் கொண்டுவந்து உங்கள் வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சப் போகிறோம் எங்களுக்கும் வாக்களியுங்கள். எங்களை உங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்து சட்ட சபைக்கு அனுப்பிவையுங்கள்” என்று வயல்களிலும் தோட்டங்களிலும் உச்சி வெய்யிலில் கலப்பை பிடித்து நின்றவர்களிம் போய் தினமும் நச்சரித்தார்கள். காரியம் ஆகும் வரை அண்ணை வா தம்பி வா என்று அளவளாவினார்கள். ஆயிற்று. அவர்கள் காரியம் முடிந்தது. அவர்களுக்குப் பட்டம் கிடைத்தது. பதவி கிடைத்தது. பணம் கிடைத்தது. இன்னும் சவாரி போக உல்லாசமான கார், ஒய்யாரமான மனைவி – எல்லாம் குறைவில்லாமல் கிடைத்தன.

ஆனால், எங்களுக்குக் கிடைத்தது என்ன?

நமது மூதாதையர் அதாவது எங்களது பாட்டனும் அவனது பாட்டனும் ஏறி இறங்கிய அந்தஅதே ஐம்பது அடி உயரமான துலாவில்தான் நாங்கள் இன்னமும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். பூமிக்குள் வெகு ஆழக்கிடக்கும் தண்ணீரை புருஷனும் மனைவியும் பிள்ளையும் மாறி மாறி ஒவ்வொரு பட்டையாக இன்றைக்கும் அள்ளி ஊற்றிக்கொண்டு தானிருக்கிறார்கள். நாங்கள் பாடுபடப் பிறந்Nதூம். அவர்கள் பட்டமாளப் பிறந்தார்களா? எங்களுக்குப் பட்டம் பதவி பற்றி அக்கறையில்லை. உடலில் வலுவுள்ள வரையில் கிராமத்துத் தோட்டக்காரர்கள் பாடுபட்டே மடிவார்கள். அல்லும் பகலும் பாடுபட்டு உழைப்பதில் அவர்கள் இன்பம் காண்கிறார்கள் பிரமாத பலனை எதிர்பார்க்காமல் ஓய்வில்லாத தேனீக்களைப் போலப் பாடுபடுவது ஒவ்வொரு தோட்டக்காரனது வாழ்க்கையின் லட்சியமாகி விட்டது. அந்தளவுக்கு அவர்களது வாழ்க்கை பண்பட்டுப் போயிருக்கிறது. நித்திய க்ணடம் பூரண ஆயுசு என்பார்களே அது போல வானம் பார்த்த பூமியிலே வாழும் தோட்டக்காரனுக்கு நித்திய கஷ்டமான வாழ்க்கை சர்வசாதாரணமாகப் பழகிப் போய்விட்டமு. உழுதுண்ணும் வாழ்க்கையில் வீசும் சுதந்திரக் காற்றுத்தான் அவனுக்கு இம்மாதிரித் தெம்பைக் கொடுக்கிறதோ என்னவோ! கஷ்டப்பட்டாலும் அவர்கள் பரம திருப்தியோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள் மனப் பூரணமாகச் சீவிக்கிறார்கள். உலகத்திலே எந்த ஒரு மனிதனது லட்சியமுமே இந்த மனப் பூரணத்துவத்தை நாடித்தான் போய்க்கொண்டிருக்கிறது? அவைகள் வேறு வேறு ரூபங்களில் தோற்றமளிக்கின்றன@ அவ்வளவுதான் வித்தியாசம். குடிகாரன் போத்தல் தலையை தட்டுவதிலும், அரசியல்வாதி மேடையிலே ஏறிக் தொண்டை கிழியக் கத்துவதிலும் மரக்கிளையிலே இருக்கும் குயில் கரல் எழுப்புவதிலும் மலரைச் சுற்றி வண்டுகள் பாடுவதிலும் – நோக்கம் ஒன்றுதான் மனத்திருப்தி. இந்த மனத்திருப்தியை சாதாரண மனுஷர்கள் எளிதில் அடைந்து விடுகிறார்கள். மற்றவர்களுக்கு அது அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. அது காசு கொடுத்த வாங்கக்கூடிய பொருளா என்ன? தனது அசகாய சூரத்தனத்தினால் உலக சாம்ராஜ்யங்களை நடுங்க வைத்த நெப்போலிய மகாவீரன் கடைசியில் என்ன சொன்னான், “……எனக்கு மாடமாளிகை வாழ்க்கை வேண்டாம். கொடிகள் படர்ந்த ஓலைக் குடிசை வாழ்க்கையே போதுமானது….” என்று பிற்காலத்திலே அவன் ஏங்கவில்லையா?

“…. ராமலிங்கம், நான் பிரசங்கம் செய்கிறேனென்று அலுத்துக் கொள்ளுகிறாயா? இதோ கதைக்கு வருகிறேன். உணர்ச்சி வசப்பட்டுவிட்டால் மனிதன் இந்த மாதிரித்தான் நிதானம் தப்பிப் போய்விடுகிறான். புல்லும் பூண்டும் கூட உணர்ச்சி வசப்படுகிறதே. மனிதன் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதெப்படி? மனிதன் உணர்ச்சிக்கு அடிமைப்படத்தான் செய்வான். அது அவன் சுபாவம். நீ அறிய ஆவலோடிருக்கும் விஷயத்துக்கும் இப்பொழுது நான் சொல்வதற்கும் தொடர்பு இருக்கிறது. பொன்னுச்சாமியாருக்கும் எங்களுக்குமிடையில் ஏற்கனவே குடும்ப விவகாரங்கள் ஏதாவது இருந்ததுண்டா என்றுதானே கேட்கிறாய்? ஆம், விவகாரங்கள் இருக்கத்தானிருந்தன. அதாவது என் தயார் மனுஷ உணர்ச்சிவசப்பட்டு ஒரு சமயம் நடந்துகொண்டாள். அதுதான் அந்த விவகாரம்.

மாக்ஸிம் கோர்க்கி என்ற நாவலாசிரியன் தனது கதையொன்றில் ஒரு தாயைச் சிருஷ்டித்திருக்கிறானே நீ படித்திருக்கிறாயல்லவா? என்னுடைய தாய் அந்தமாதிரியான வீரத்தாயல்ல@ தமிழ் நாட்டு எழுத்தாளன் கு.ப.ரா. தனது சிரஞ்சீவிச் சிறுகதை ஒன்றிலே ஒரு தாயைச் சிருஷ்டித்தாரே அதையும் நீ படித்திருக்கிறாயல்லவா? என்னுடைய தாய் அப்படிப்பட்ட ஒரு பிறவிதான். தாய்மையே உருவெடுத்தவள்.

கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன் என்ற குருட்டு நம்பிக்கையோடு ஒரு மரக்கட்டையையோ மாமிச பிண்டத்தையோ வாழ்நாள் முழுவதும் கட்டிக்கொண்டு மாரடிக்க அவளால் முடியாமல் போய்விட்டது. அவளது அண்ணன் பொன்னுச்சாமியார் அவளுக்குக் கல்யாணம் என்ற பெயரில் புருஷன் என்ற வடிவில் ஒர் அபத்தத்தை தேடிவைத்தார். அது அவளுக்குத் தீராத சனியனாக விடிந்தது பொன்னுச்சாமியார் பொறுக்கி எடுத்த மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்று சொல்ல வேணுமா?

அவனுக்கு – என் தகப்பனுக்கு, எந்த நாளும் ஒரே சீதனப் பைத்தியமாகவிருந்ததாம். பொன்னுச்சாமியிடம் வெளி வெளியாகக் கேட்கப்பயம். அப்படி விடாப் பிடியாக கேட்டிருந்தாலும் விடாக் கண்டனுக்கேற்ற கொடாக் கண்டனாகியிருப்பார் பொன்னர். ஆகவே நாளுக்குநாள் என் அம்மாவுக்குத்தான் உபத்திரவம் அதிகமாயிற்று. “போடி உன் வீட்டுக்கு! உன் அண்ணன் உனக்கு வாக்கிளத்த சீதனத்தைக்கேட்டு வாங்கிக்கொண்டு வாடி!” என்று ஒரு நாள் அடியும் உதையும் பலமாகிவிடவே. அவள் வெளியேறினாள். அண்ணன் வீட்டுக்குப் போன போது ….. அங்கே அவளுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போடப்பட்டது. அவள் அங்கேயும் போகவில்லை. திரும்ப அந்த சீதனப்பேயிடமும் போகவில்லை.

தன்னந் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கிருந்த ஒரு துண்டு தோட்டக் காணி அவளுக்குச் சோறுபோட்டது.

பொன்னுச்சாமிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உண்டான தகராறு இதிலிருந்து ஆரம்பமானதுதான்…..”

அட…..சட்…… புகையிலைச் சுருட்டு எரிந்துபோய்விட்டமே…!

புகையும் அதில் தெரிந்த முகமும் என் பிரமையும் – எல்லாம் கலைந்தன. கடிகாரத்தில் இரண்டு மணி அடித்தது. விளக்கை அணைத்து விட்டுப் படுத்துவிட்டேன்.

(8)

மறுநாள் ஊரிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. என் தங்கைக்கு விவாகம் நிச்சயமாகிவிட்டதென்றும் அன்றைக்கு மாலை ரயிலிலேயே என்னைப் புறப்பட்டு வரும்படியும் அதில் கண்டிருந்தது.

ஊருக்குப் போய் பல வருஷங்களாயிருந்தபடியால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு வார லீவில் ஊருக்குப் பிரயாணமானேன். இந்த முறை அவசியம் பொன்னுச்சாமியைப்பற்றி விசாரிக்க வேணும் என்று போகிற பொழுது வழியில் எண்ணிக்கொண்டேன்.

கல்யாணம் முடிந்த நாலாவது தினம் வீட்டில் மத்தியானம் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாவிடம் பொன்னுச்சாமியைப் பற்றி விசாரித்தேன். அந்த மனுஷன் இன்னும் உயிரோடிருக்கிறரா என்று கேட்டேன்.

“மலைபோல இருக்கிறார். கொஞ்சம் மூளைக் கோளாறு இப்பொழுது உண்டாகியிருக்கிறது” என்று அம்மா தெரிவித்தாள். பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் மைத்துனச் சிறுவன் இந்தச் சமயம் “ஆர் அத்தை, விசர் பொன்னுச்சாமியோ? அவர் வீட்டில் இரண்டு கிளிப்பிள்ளைகள் இருக்கின்றன. முருகேசு, காந்திமதி என்று அதுகளுக்குப் பேர் வைச்சிருக்கினம். ‘முருகேசு!’ ‘காந்திமதி!’ என்று ஒன்றையொன்று பார்த்து அதுகள் கூப்பிடுகிறது” என்று தகவல் தந்தான்.

பொன்னுச்சாமியின் வீட்டுக்கு அவசியம்போக வேணும் என்று அப்பொழுதே நான் மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டேன்.

அன்று பின்நேரமே பொன்னுச்சாமியின் வீட்டுக்குப் போக ஆயத்தமானேன். போகிறதற்கு ஒரு காரணம் வேணுமல்லவா? கிளிப்பிள்ளைகள் காட்டுவதாகச் சொல்லி என் மைத்துனச்சிறுவனை கூட அழைத்துச் சென்றேன்.

பொன்னுச்சாமியின் வீட்டு வாசலில் கால் வைத்தபொழுது “முருகேசு காந்திமதி” என்ற குரல்கள் காதில் விழுந்தன.

உள்ளே போய்ப் பார்த்தால் கிளிகள் இருந்த கூண்டுக்குப் பக்கத்தே வாடி நலிந்த ஒரு வயோதிக உருவம் நின்றுகொண்டு ‘காந்திமதி முருகேசு’ என்று நாமாவளி பாடுவதும் கிளிப்பிள்ளைகள் திரும்ப அதைப் பாடுவதும் தெரிந்தது.

“எப்படி பாட்டா சுகமாய் இருக்கிறீர்களா?” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.

கிழவனுக்கு என்னை யார் என்றே தெரியவில்லை. விலாசத்தைச் சொன்னேன்.

“ஓகோ நீயாடா தம்பி? கொழும்பிலிருந்து எப்போ வந்தே?” என்று தளதளத்த குரலில் பேசினார்.

இந்தமாதிரி எவ்வளவோ பூர்வ பீடிகைகளெல்லாம் பேசி சுற்றி வளைத்துக் கொண்டு கடைசியாக கிள்பபிள்ளைகளைப் பற்றிய பேச்சுக்கு வந்தோம்.

“ஊரைவிட்டு எங்கேயோ கண்காண தேசத்துக்கு ஓடிப்போன அந்த இரண்டு பேர்களின் நினைவு நான் மண்ணில் மடிந்துபோகிறவரையில் என்னை விட்டு தொலையப் போவதில்லை. கனவிலும் நனவிலும் சரி அவர்கள் எண்ணமாகத்தானிருக்கிறேன் இதனால்தான் இந்த இரண்டு கிளிப்பிள்ளைகளையும் பிடித்து அவர்களது பெயரை இட்டு வளர்த்து வருகிறேன். பத்து வருஷங்களுக்கு முன்னெ என் கிணற்றடிப் பக்கமாகத் தோட்டத்துக்குள் வைத்த தென்னம்பிள்ளையின் உள்ள ஒரு பொந்தில்தான் இந்த கிளிக் குஞ்சுகளைப் பிடித்தேன். இப்போ கொஞ்சம் பேசப் பழகிவிட்டன. இதோபார் முருகேசு காந்திமதி என்று கூப்பிடுவதை”

பொன்னுச்சாமி சொல்லியபடி கிளிப்பிள்ளைகள் பேசின.

பொன்னுச்சாமியோடு நான் பேசி முடிந்து வீட்டு வாசலைத் தாண்டி தெருவில் ஏறியபோதும் முருகேசு காந்திமதி என்ற கிள்ளைமொழிகள் என் காதில் கேட்டபடியே இருந்தன.

“அந்த மனுஷன் செய்த வினைக்குப் பேரக் குழந்தைகளாகக் கொண்டாட கடைசிக் காலத்தில் இந்தக் குருவிக் குஞ்சுகள் தான் கிடைத்தன” என்று எனக்குக் கொஞ்சம் சபலம் தட்டிற்று.

வீட்டுக்குப் போகிறபோதே அந்தத் தென்னம் பிள்ளையையும் பார்த்தவிட மனம் தூண்டிற்று.

போய்ப் பார்த்தேன்.

அடக்குமுறை அக்கிரமத்துக்குப் பலியான இரு கிராமக் காதல்களின் உயிரற்ற உடல்கள் மீது அது தழைத்தோங்கி நின்று எத்தனை கம்பீரமாக வான வெளியிலே ஆட்டம் போடுகிறது!

மனிதன் அக்கிரமஞ் செய்த போதிலும் அவனது மனச்சாந்திக்காக இரண்டு கிளிப்பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டேனே என்ற இறுமாப்போ என்னவோ அதற்கு!.

—————————
வெளியிடுவோர் :
நவலட்சுமி புத்தகசாலை,
136, செட்டியா தெரு,
கொழும்பு.

முதற் பதிப்பு ஓகஸ்ட் 1950

நமது முதலாவது வெளியீடாக இலங்கையின் நவயுக எழுத்தாளர் திரு. அ. செ. முருகானந்தனின் இச் சிறு நவீனத்தை வெளியிடுகிறோம்.

கொழும்பிலிருந்து வெளியாகும் “சுதந்திரன்” ஞாயிறு வெளியிட்டில் இக் கதை தொடர்ச்சியாக வெளிவந்தது. இதைப் புத்தகமாக வெளியிட அநுமதி கொடுத்த “சுதந்திரன்” நிர்வாகிகளுக்கு நமது நன்றி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *