மாற்றங்கள்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 5,530 
 

வண்டியிலிருந்து இங்கும்போதே கேசவன் பார்த்துவிட்டான்.

கடைசியாக எப்படி விட்டுச் சென்úனோ அப்படியேதான் இருக்கிது. எதுவும் மாறினார் போல தெரியவில்லை. போர்டில் இருந்த எழுத்துக்களில் இருந்து, உதிர்ந்துபோன ஒற்û எழுத்தைத் தவிர.

சரியாகச் சொன்னால் கடைசியாக விட்டுச் சென்தும் ஒரு பகல் வேளையில்தான். வெளியே ஒன்ன் மேல் ஒன்ாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட நாலு டேபிள்கள், மடிக்க முடியாத இரும்பு நாற்காலிகள் ஒன்றுக்குள் ஒன்ாக நுழைத்து வைக்கப்பட்டிருந்த உயரமான மூன்று வரிசைகளாக, எல்லாம் அப்படியேதான் இருக்கின்ன.

மரத்தால் செய்யப்பட்ட கவுண்டர் ஒன்று நான்கு மூலைகளிலும் குமிழ் சக்கரங்கள் பொருத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது புதிதாக இருந்தது.

வண்டியைப் பூட்டிவிட்டு சதீஷை இக்கிவிட்டதும், ஏதோ வெகுநாள் பழக்கப்பட்ட இடம் போல ஓடிப்போய் இடது மூலையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

புவனாவும் இந்த இடது மூலையை மட்டுமே தேர்ந்தெடுப்பாள். கடைசியாக அவளோடு இந்த டேபிளில் உட்கார்ந்து அவளுக்கு பிடித்த பாவ் பாஜியும், சென்னாþபட்டூராவும் சாப்பிட்டு இரண்டு நாட்களே ஆனதுபோல் இருக்கிது.

கருப்பும், சாம்பலுமாய்க் கலந்து புள்ளி, புள்ளியாகத் திட்டுத் திட்டாய் செவ்வக டைல்ஸ் ஒட்டப்பட்ட சற்ú வளைவான கேஷ் டேபிள். நின்ால் இடுப்பு உயர்திற்கும் கொஞ்சம் குûவாகவே இருக்கும். யாரோ இப்போதுதான் துடைத்திருக்கவேண்டும். மூன்று ஓவல் கிண்ணங்களைக் கொண்ட அந்த சோம்பு வைக்கப்பட்ட பாத்திரம் இடம் மாறியிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு கேஷ் டேபிள் வித்யாசமாயிருந்தது. அந்த கேஷ் டேபிளை விட்டு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மீண்டும் அந்த இடத்தில் ஒருமுû உட்கார்ந்து சுற்றிலும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அதுவும், வேறு மாதிரியிருக்கும். வட்ட வட்டமான மேஜைகள், இரும்பு நாற்காலிகள், சீட்டில் மாட்டியிருந்த உகைள் மாற்ப்பட்டிருந்தன.

ஒரு பானையைக் கொண்டு வந்து அந்தக் கவுண்டரில் வைத்த போதுதான் அது ச்சாட் கவுண்டர் எனத் தெரிந்தது. பழைய ஆட்கள் யார் யார் இருக்கிார்கள் என்று தெரியவில்லை. பானையைக் கொண்டு வந்தவன் புதியவனாகத் தெரிந்தான். எப்படியும் ஏழு பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள். அதற்கு மேல் கிச்சனில் இடம் இருக்காது. இராமகிருஷண்ன் இருப்பார், கேசவன், இன்னும் வேறு யாராவது இருக்கலாம். ஒரு சிலர் வேறு இடத்திற்குப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டதோடு சரி.

நான் சொல்வதற்குள்ளாகவே கேசவன் கொண்டு வந்து வைத்த பேல் பூரி மல்லித் தழையும், ஓம்ப்பொடியும் தூவலாக இருந்தத. அவனுக்கு இன்னும் நினைவிருக்கிது. எனக்கு என்னென்ன பிடிக்கும் என்று. புவனாவுக்கு இதெல்லாம் நினைவிருந்ததாகத் தெரியவில்லை. அவளிருந்தவரை எதையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்ததில்லை. அவளுடைய தேவைகளெல்லாம் பெரும்பாலும் லக்ஸரி சம்பந்தப்பட்டவை.

சௌரியம்லா எப்படி! என்று கேட்டுக்கொண்டே வெளியில் வந்தவர் இராமகிருஷ் ணன், ஏற் இக்கத்தோடு விசாரிக்கும் அவருடைய குரலுக்காகவே, “நல்லாயிருக்கோம்”. என்று பதில் சொல்லி புன்னகைக்க முடிந்தது. யார் நலன் விசாரித்தாலும் நல்லாயிருக்கோம் என்ú சொல்லத் தோன்றுகிது. ஹ÷ம் ஏதோ இருக்கோம் என்று சொல்ல முடிவதில்லை. முன்பு இருந்ததைவிட ஏதோ ஒரு வகையில் நன்ாகத்தான் இருக்கிúாம். அதையும் உண்மையாய்ச் சொல்ல முடிவதில்லை நியை பேருக்கு.

சதீஷ் இரண்டாம் முûயாக, அப்பா! பெப்ஸி என்று கேட்டபோதுதான் காதில் விழுந்தது. இராமகிருஷ் ணன் அதற்குள் இரண்டு பெப்ஸி கொண்டு வந்து வைத்தார். அவரும் எப்பொழுதும் போலவே இருக்கிார், கஸ்டமர்களை கவனிப்பதில்.

கூட்டம் குûவாக இருக்கும்போது அவருடைய கவனிப்புகள் சுவாரசியமானவை. கிச்சனுக்குள் இருந்துகொண்டே கஸ்டமர்கள் வருகையை, அவர்கள் உட்காரும் டேபிளை, அவர்கள் சொல்லப்போகும் ஆர்டர் முதற்கொண்டு எல்லாவற்ûயும் சரியாகச் சொல்வார். புவனாவுக்கு இவருடைய உபசரிப்பு ரொம்பவும் பிடித்திருந்தது. அவருடைய வார்த்தை உபசரிப்புகள் இன்னும் அருமையானவை. அவசியம் வீட்டுக்கு வரணும் என்று அவர் சொன்னபோது வசியம் செய்தது போலிருந்தது.

ஆனால், யாருடைய வீட்டுக்கும் அவள் வர விரும்பியதில்லை. அப்படிப் போக வேண்டுமென்ால், டாடா சியாரா வில் போய் இங்கவேண்டும் அவளுக்கு. என்னுடைய யாமஹாவோ, அவளுடைய கைனடிக் ஹோன்டாவோ திருப்தி அளித்ததில்லை. அவள் வண்டியை எடுப்பது யு.கே.ஜி. படித்துக் கொண்டிருந்த சதீஷை ஸ்கூல் கொண்டு போய் விடுவதற்கு மட்டும்தான்.

அதுவும் யாரையோ ஸ்கூல் கொண்ட போய் விடுவதுபோல நானென்ன ஸ்கூல் ஆயாவா? என்று ஒருநாள் கத்தியதில் சதீஷின் பிஞ்சு மனம் நசுங்கிப் போனது. அவளுக்குப் பிகு அந்த கைனடிக் ஹோண்டாவும் இல்லாமல் போய்விட்டது.

அவளோடு கடைசியாக இங்கு வந்தபோது அன்யை தினம் மிகவும் சந்தோஷமாக அமைந்துவிட்டது. இளையராஜாவின் ஹவ் டூ நேம் இட் புல்லாங்குழல் இசை மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. இன்னும் ஞாபகமிருக்கிது. இளையராஜாவின் இசையோ, இராமகிருஷ் ணனின் உபசரிப்போ அல்லது என்னுடைய தாராளமோ, எதுவோ ஒன்று அல்லது எல்லாமும் சேர்ந்து சந்தோஷம் அளித்ததா தெரியவில்லை. ஆனால், மக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்ாகிவிட்டது. எப்படிப் பெயரிடுவேன் அந்த நிகழ்வுக்கு ஹவ் டூ நேம் இட்.

கென்னிþஜியின் சாக்ஸஃபோன் இசை மிகவும் மெல்லிய பிளிலாய் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதோ பெரிய மாற்மாய்த் தெரிந்தது. கண்களை உறுத்தாத சில மாறுதல்கள் நிகழ்ந்திருந்தன. சுவரில் படரவிட்டிருந்த பிளாஸ்டிக் கொடிகள் எங்கே போனதென்று தெரியவில்லை. ஒவ்வொரு மூலையிலும் சின்னஞ்சிறு போன்சாய் வளர்க்கப்பட்டிருந்தன. வெளியில் அதிகப்படியாய் போடுவதற்கென்று மடித்து வைக்கப்பட்ட டேபிள்கள், யாரோ எடுத்து விரித்துப் போட்டுக் கொண்டிருந்தார்.

இனிமேல் கூட்டம் வர ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் காரில், வேனில் சமயங்களில் பைக்கில் வருபவர்கள்தான். மாலை நேரங்களில் மட்டுமே கூட்டம் இருக்கும். மதியம் இரண்டு மணிக்குத் திந்தவுடன் கூட்டம் வந்தால், தெரு முனையில் இருக்கும் அரசு அலுவலகத்தின் முன் உண்ணாவிரதம் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். சில சமயங்களில் பார்சல் வாங்கிக்கொண்டு போவார்கள். எப்படி மûத்து வைத்துக்கொள்வார்கள் என்றுதெரியவில்லை.

வாஷ் பேசின் கண்ணாடியைத் துடைப்பதற்கென்று நீர் தெளித்துத் துடைக்காமலே விட்டிருந்தார்கள். நியை நீர்த் துளிகளில் என்னைப் பார்த்துக் கொள்ள முடிந்தது. கை கழுவிவிட்டு நகர்ந்தவுடன் ஒருவன் வந்து கண்ணாடியைத் துடைத்தான். சதீஷ் கை கழுவினபோது அவனைத் தூக்கி கண்ணாடியைக் காண்பித்தான்.

ரெண்டு பேல்பூரி, ஒரு ஸ்மால் பிஸ்ஸா, ஒரு பட்டர் மசாலா, ரெண்டு பெப்ஸி சாப்பிட்ட ஐட்டத்தைக் கஸ்டமர்களிடம் படித்துக் காட்டிவிடுவது இராமகிருஷ் ணனின் வழக்கம்.

அவர் இன்னும் மாவில்லை. அப்படியேதான் இருக்கிார். கையால் எழுதிய பில்லாக இருந்தால் படித்துக் காட்ட வேண்டியிருக்கும். கம்ப்யூட்டர் பில்லிங்கைக் கூட இவர் படித்துக் காட்டியது இவரை மாற் முடியாது என்ú தோன்றியது. கேஷ் டேபிளை ஒட்டி ஒரு மர ஸ்டூலில் பில்லிங் கருவி உள்ளடங்கி இருந்தது.

எல்லாமே விலை ஏறியிருந்தன. நியைவே மாறியிருப்பதாகப் பட்டது. மெதுவாக சிரித்துக்கொண்டேன். கேஷ் டேபிளில் ஒரு மார்வாடி வந்து உட்கார்ந்தான். பணத்தை எடுத்து இராமகிருஷண்னிடம் கொடுத்தபோது மேனேஜ்மெண்ட் கை மாறிடுச்சாமே! என்úன்.மார்வாடியிடம் பணத்தைக் கட்டிவிட்டு மீதம் கொடுத்தார். அவருக்கு டிப்ஸாகக் கொடுத்த ஐந்து ரூபாய் நோட்டு செல்லுமா என்று சந்தேகமாயிருந்தது. அவர் அதை வாங்கிக்கொண்டே கை மாறுவது சகஜம்தானே என்ார்.

என்னால் புன்னகைக்க முடியவில்லை.

அந்த ஐந்து ரூபாய் நோட்டு சீக்கிரம் கை மாறிவிடும் என்று தோன்றியது.

– முத்துராமன்(ஏப்ரல் 2000)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *