புரோட்டா சால்னா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 6,653 
 

கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய வைத்திருந்த பணம் கரைந்து போகிறசமயங்களிலும் கூட இவன் இப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. மணிகண்டனின் கடை இருக்க பயமேன் என்கிற சொல்லாக்கம் உருப்பெற்று விட்ட நிலைத்துவிட்டபொழுது இவன் இப்படி அனாவசியமாய் வருத்தம் கொள்வதேன்.

சலனமான மதிய வேளையில் கண்மாய் கரையில் அமர்ந்திருந்த மணிகண்டன் புரோட்டா கடைக்கு சாப்பிடப் போயிருந்தான். பஸ்டாப்பை அடுத்ததாய் அமைந்திருந்த வெளி யில் கூரை வேயபட்டிருந்த கடை.

அவரது மனைவியும் அவருமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்,மனைவியின் அருகில் அவர்களது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. இன்னொன்று பள்ளிக்கு போயிருப்பதாய் சொன்னாள்.

“என்ன ஆச்சியும் அய்யருமா இந்நேரம் பேச்சிக்கால்ல” என்கிற இவனது கேள்விக்கு எங்க சார் இவ்வளவு பெரிய கடைய வச்சிக்கிட்டு காலையில இருந்து ஈ ஓட்ட வேண்டியிருக்கு.காலையில இருந்து ஒருபொட்டு யேவாரம் இல்ல, இப்பிடி யிருந் தா ரெண்டு பொட்டப்புள்ளைகள வச்சிக்கிட்டு என்ன செய்யன்னு தெரியல.வயசு வேற போயிக்கிட்டு இருக்கு சார்,32 ஆச்சி,இன்னும ,,,,,ஒடம்புல தெம்பு இருக்கும் போது சம்பாதிச்சிக்கிட்டாதான, போற போக்கப் பாத்தா இந்த சம்பாத்தியத்துலயும் மண்ணு விழுந்திரும் போலயிருக்கு. பேசாமஓட்டல் வேலைக்குசப்பளைக்கு ப்போ யிரலாம்போலயிருக்கு. என்றார் வருத்தமாக.

வேயப்பட்ட கிடுகளின் மீது தார் அட்டை போர்த்தியிருந்ததாய் காட்சிப்பட்ட அதில் வெயில் நேரத்தில் உள்ளே உட்காரயோசிக்க வேண்டும்.கூடவே தார் அட் டை கிளப்பும் வாடை வேறு.கூரையின் கிடுகளையும் மூங்கில்களையும் இணைத் துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் தொங்கிய தூசியும்,நூலாம் படையும் அடை சேர்ந்த கூடாய் காட்சியளிக்கும். சாப்பிடுபவர்களின் இலை மீது அது எந்நேரம் வந் து விழுமோ என்கிற ஐயப்பாட்டுடனோ, பயத்துடனோ சாப்பிட வேண்டியிருக்கும். கடையின் கூரை முழுவதுமாய் வித்தை காண்பிக்கிற வெற்றுக்கூடுகளாய் ஆங்கா ங்கே தொங்கிக்கொண்டிருக்கிற நூலாம் படைகளின் அணி சேர்க்கையை துடைத் தெரிந்து சுத்தம் செய்தால் என்ன?என்கிற இவனது 105 தடவையான பேச்சுக்கு ”எங்கண்ணே, நமக்குயே வாரத்த கவனிக்க, புரோட்டாப்போட, டீப் போட,,,,,,,,, அங்கிட்டு,இங்கிட்டு போயிட்டு வர இதுக்கே நேரம் சரியா போயிரப்ப ,,,,,,,,, , இதையெல்லாம் கவனிக்க நமக்கு பொழுது ஏதுன்னே. வர்ற வட்டமெல்லாம் வேற சொல்லிக்கிட்டே இருக்கீங்க,மொத வேலையா ஒரு ஆளவுட்டு சுத்தம் பண்ணீ ட்டுதாண்ணே மத்த வேல” என்பதுதான் மணிகண்டனின் உடனடி பதிலாயும் எதிர் வினையாயும் இருக்கும்.

பெருமாள் கண்ணன் இருந்தவரை மணிகண்டன் கடையில் ஆளைப் பார்ப்பது அரிதுதான். ஆனால் அது பற்றி அவன் கவலைப்பட்டவனாய் இல்லை,அவனது கடைக் கு சாப்பிட எனதண்ணிவாடையுடன் வருகிறவர்களுக்கு புரோட்டா பிய்த்துப் போட்ட நேரம் தவிர கோழிக்கறி யேவாரம் பார்க்க நேரம் சரியாய் இருக்கும்.

மொச்சை வடை,இட்லி,தோசை டீ என்கிற ஜபர்தஸ்துடன் காணப்பட்ட காலையி லேயே காட்சிப்பட்டு விடுகிறபெருமாள் கண்ணனின் கடை இப்பொழுது இல்லாமல் ஆகிப்போன பின்பு மணிகண்டனின் கடையில் கொஞ்சம் யேவாரம் மிகுதியாகிப் போனது.

ரெண்டு வருடங்களுக்கு முன்பாய் ஊரை விட்டு பிழைப்பு தேடி போய்விட்ட பெரு மாள் கண்ணன் இப்பொழுது என்றாவது ஊருக்கு வருகிற நேரங்களில் சாப்பிடு வது மணிகண்டன்கடையில்தான்.

மாமா, மாப்பிள்ளை என்று தான் இருவரும் பேசிக்கொள்வார்கள், ”என்ன மாமா சின்னப் புள்ளையில இருந்து ஒங்ககிட்ட தொழில் கத்துக்கிட்ட நா இங்கயே நெலச்சிட்டேன், நீங்க பொழப்புக்காகஊரவுட்டுப்போயிட்டீங்களே, மாமா, என்கிற மணி கண்டனின் ஆதங்க கேள்விக்கு ”எங்க மாப்புள பொம்பள சகாவாசம் எந்த ஆம்பளயாவது எந்திரிக்கவுட்டதா கேள்வி இருக்கா ,கூடாத சகவாசத்தாலஇப்பசொந்தமண்ணுல நிக்க முடியாம நாயா அலைஞ்ச்சிட்டுத் திரியிறேன், கட்டுனதாரமும்,புள்ளைகளும் ஒருபக்கமுமா இருக்க நான் ஒரு பக்கமா கெடந்து அல்லாடுறேன். நமக்கு வேற என்ன தொழில் தெரியும் மாப்புள ஓட்டல்தான்.திருப்பூர்ல ஒரு ரோட்டோரக் கடை யில வேலைக்கு இருக்கேன் மாப்புள”

”எங்க ஒதவின்னு கேட்டு வந்தவள பக்கத்துல அண்டவிட்டது தப்பா மாப்புள, சொன்னாங்ககூட அப்பயே எல்லாரும்,நாந்தான் கேக்கல.நானும் கொஞ்சம் ஆடிட்டேன்னு நெனைக்கிறேன்.எல்லாம்அந்த,,,,,,,வந்தவெனை,தண்ணிண்னு கேட்டு வந்தவள தண்ணி குடுத்து வாசலோட அனுப்பாம வீட்டுகுள்ள விட்டதுக்கு இப்ப அனுபவிக்குறேன் மாப்புள.சொந்த ஊர்ல சண்ட,பொழப்பு தேடி வந்துருக்கோம், தங்கத்தூங்கக்கூட இடமில்ல, கொஞ்சம் ஒத்தாசபண்ணுங்கண்ணு புருசனும், புள்ள யுமா அனலடிச்சிவந்து நின்னா ங்க.நானும் ஊர்ல ஒரு வீட்டப்பாத்து குடியிருந்துக் கிட்டு வேலைவெட்டியப் பாருங்கன்னு சொல்லியிருக்கலாம்,பாவம் பாத்து ஏங் தலையில அள்ளிப்போட்டுக் கிட்டது வம்பாப்போச்சி என்பார் பெருமாள் கண்ணன். இருக்குற இருப்பு தெரியாம ஆடிகிட்டு திரிஞ்சா இப்பிடித்தான் மாப்புள”,,,,,,,,

இருபத்து மணி நான்குநேரமும் அணையா அடுப்புபோலஎந்நேரமும் நெருப்பெரிந் து கொண்டிருக்கிற அடுப்பின் மேல் காய்ந்து கொண்டிருக்கிற கல்லில் இவனுக் குத் தெரிய எந்நேரமும் புரோட்டா வெந்து கொண்டே இருந்திருக்கிறது.

அப்படியெல்லாம் எத்தனை புரோட்டாக்களை யாருக்காக சுட்டெடுப்பார் எனத்தெரியவில்லை.அதுவும் நன்றாக இருந்தால் கூட பரவாயில்லைஒரு புரோட்டாவை மெல்ல ஒரு நாள் ஆகிப்போகலாம் அல்லது கைக்கும், வாய்க்கும் ஏதாவது கடின மானபயிற்சிகொடுக்கநினைத்தால் மணிகண்டனின் கடை புரோட்டாவை சாப்பிட லாம்.

இல்லாதஊருக்கு,,,,,,,என்கிறகதையாய்,அவர் சுடுகிற புரோட்டவையும்,அதன் மேல் படரவிடுகிற சால்னாவையும் அள்ளிச் சாப்பிட தனிமனம் தேவைப்பட்டிருக்கிறது இது வரை, இல்லையெனில் மனசாட்சியை அடகு வைத்து விட்டுதான் சாப்பிடவேண்டும்.

இத்தனைக்கும் மணி கண்டனின்கடையைத்தாண்டிஇன்னொரு கடைஇருக்கிற து. அங்கும் புரோட்டாவே. ஆனால் அது கொஞ்சம் ருசியாக இருக்கும்.புரோட்டா தவிர தோசை கேட்டாலும் ஊற்றித்தருவார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் மணிகண்டனின் கணக்கு வேறு தோசையென்றால் இரண்டு அல்லது மூன்றுடன் எழுந்து விடுவார்கள். புரோட்டா என்றால் பிய்த்துப் போட்ட மூன்றுடன் ஒற்றை ஆம்ளேட்டையும் சேர்த்து விடலாம். முன்னதானால்3 தோசைக்கு 15 ரூபாய்கள்தான். பின்னதானால் புரோட்டாக்கள் மூன்றுக்கும் ஆம்ப்ளேட்ஒன்றுக்குமாய்சேர்த்து28ரூபாய் வாங்கி விடலாம். எல்லாம் தெரிந்துருந் தும் கூட பழக்கத் தின் கைகோர்ப்பை மனதில் கொண்டு அடுத்தகடைப்பக்கம் போக மனம் அனுமதி ப்பதில்லை.மணிகண்டனின் கடைக்கு மேலாய் இருக்கிற புளிய மரத்தில் இருந்து விழுகிற மரத்திலைகளைப்போல/

பஸ்ஸிற்காய் காத்து நின்ற மாமி இவன் சாப்பிட போகையில் பாத்து சிரிக்கிறாள். சிறிது நேரத்திற்கு முன்பாய் இவனதுஅலுவலகத்திற்குநகைவைத்து பணம் கடன் வாங்க வந்திருந்தவள்.

அவள் அலுவலகம் விட்டு போன இந்நேரத்திற்கு பஸ் ஏறி இருக்க வேண்டியிருக்குமே ”வரவேண்டிய பஸ் இன்னும் வரல மாமா,சடுதியா வந்து சடுதியா போயிறலாம்ன்னு நெனைச்சா முடியாம போச்சு மாமா, இனிம நான் போயிதான் அங்கன ட்ராக்டருக் காரருக்கு அட்வான்ஸ் குடுக்கனும், சீக்கிரம் போகலைன்னா அவரு வேறபக்கம் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கிறுவாரு,அவர சொல்லியும் குத்தம் இல்லை மாமா,அவுங்க ளும் இப்பிடி வேல சமயங்கள்ல நாலு காசு பாத்தாத்தான உண்டு. போன வருசம் செம்மையா மழை தண்ணி இல்லாம வெள்ளாம இல்ல.இந்த வருசமாவது வெதைச் சிப் பாப்போம்ன்னு இருக்கோம் மாமா.காடு கரைகள நம்பித்தான் எங்க பொழப்பு மாமா.இதவுட்டா எங்களுக்கு வேற தெரியாது. எப்பிடியும் நீங்க குடுத்த பணம் போதாது மாமா இன்னும் ஒரு ரெண்டாயிரமாவது தேவை இருக்கும் என்றவளின் பையில் ஒரு புரோட்டா பார்சல் இருந்ததாய் தெரிந்தது.

மணிகண்டனின் கடையை ஒட்டியே அமர்ந்திருந்தாள்.அடர் நிறசேலையில் பூத்துத் தெரிந்த வெள்ளை பூக்களும்,ப்ரௌன் சட்டையும் அவளது நிறத்திற்கு ஒத்துப் போனதாய்.கரிய தார் ரோடும் ஓரத்து மண்ணும் அவளையும் பஸ்ஸிற்காய் காத்து அமர்ந்திருந்தவர்களையும் சேர்த்து படம் பிடித்துக்காட்டியதாய்.

காலையிலிருந்து மாமி முதல் யேவாரம், நீங்க இரண்டாவதுயேவாரம் என்ற மணிக ண்டன் எனக்கு புரோட்டா எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

பஸ்ஸிற்காய் காத்திருந்த மாமி அதை அர்த்தமாய் பார்ப்பதாய்ப்பட்டது.

– ஆகஸ்ட் 18, 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *