கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 6,900 
 

“சும்மா இருந்தா…ரொம்ப போர் அடிக்குது!……..நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேண்டா!…….”

“என்னடா…..கருப்புசாமி….ஏதாவது வேலைக்குப் போகப் போறாயா?….”

“ச்சே!….ச்சே!…..நமக்கு வேலையெல்லாம் ஒத்து வராது!…நம்ம தமிழ் சினிமாவிலே ஹீரோவா நடிக்கலாமென்று முடிவு செய்திட்டேன்!”

“ ஹீரோவாக நடிக்க உனக்கு என்னடா தகுதி இருக்கு?….”

போடா!…பைத்தியகாரா…எனக்கு இல்லாத தகுதியா?…காஜர் அகர்வால், ஹன்சிகா,அமலா பால், நயன்தாரா இந்த நாலு பேரில் இரண்டு பேர் ஹீரோயின்….பாடலுக்கு வைரமுத்து, இசைக்கு இளைய ராசா…இருந்தா ரொம்ப நல்லா வரும் என்று எனக்குத் தோன்றுகிறதுடா!……”

“அதெல்லாம் சரி……உனக்கு நடிப்பைப் பற்றி என்னடா தெரியும்?….”

“நடிப்பு தெரிந்தா தான் ஹீரோ ஆக முடியுமா? பெரிய டைரக்டரும், நல்ல கதை, வசன கர்த்தாவும் அமைஞ்சிட்டா……அதையும் அவங்களே பார்த்துப்பாங்க!….”

“தப்பா நினைச்சுக்காதே!…..உனக்கு அனுபவம் என்பது கொஞ்சம் கூடக் கிடையாது!…உனக்கு ஒரு படத்திலே ஹீரோவாக நடிக்க என்ன தகுதி இருக்கு?….”

“இது கூடத் தெரியாம தான் ….நீ இத்தனை வருஷம் எனக்கு ‘பிரண்டாக’ இருக்கே?….அதை நெனைச்சாத்தான் எனக்கு வருத்தமாக இருக்கு!….எங்கப்பா சொத்து மதிப்பு எவ்வளவு என்று உனக்குத் தெரியுமல்ல…சுமார் நூறு கோடி இருக்கும்!….நான் ஆசைப் பட்டா எங்கப்பா எதையும் செய்வார் என்றும் உனக்கே தெரியும்!….இதை விட என்னடா தகுதி வேண்டும்?…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *