இது பாம்புக்கதை அல்ல

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 23,981 
 

”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து குரல் வந¢தது.

நான¢ த¤ரும்பிக் குன¤ந¢து பார்ப¢பதை அற¤ந¢து, பாம்புகளைத் தவ¤ர வேறு எதையும¢ பத¢த¤ரப¢படுத¢த¤வைக¢க முடியாத அந்தப் பிரத்யேக மூங¢க¤ல¢ கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காட்டினான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்துஇருந்தது.

அவ்வளவு நெருக்கத்தில் இது வரை நான் எந்தப் பாம்பையும் பார்த்தது இல்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.

”கடிச்சிடப்போகுதுப்பா… தள்ளிப் புடி.”

”கடிக்காது சார்… ரெண்டு நாளா அது சாப்புடாமப் பட்னியாக் கெடக்குது சார்.”

அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் நம்மைக் கவ்வி விட்டால்?

பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதைச் சீறும்படி செய்தான் பாம்பாட்டி.

”பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ணச்சொல்றே?”

”முட்டை வாங்கித்தந்தா அதுக்குக் கொடுப்பேன் சார்.”

அவனுக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும். ஆனால், பார்க்க மேலும் பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.

ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன¢. பஸ் க¤ளம்புக¤ற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸ¤ல¢ என்னைத் தவ¤ர வேறு யாரும¢ இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் எனக் கீழே இறங்கினேன். போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக்கொண்டு இருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ”ஆ…..று மணிக்கித்தான்” என¢றார¢. ஆ….று மணிக்கு இன்னும¢ ரொம்ப நேரம் இருந்தது.

நேரத்தைக¢ கடத¢த உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால், அதற்கு அவசியம¢ இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் அருகே முட்டையை வைத்துக்கொண்டு காத்திருப் பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முட்டையை விழுங்குமோ என்று ஆச்சர்யமாக இருந்தது.

அவன் என்னைப் பார்த்துவிட்டான்.

”உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம¢ லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும¢ வெளிய துப்பிடுவான்… பாம்பு டாக்டர் யார்னா தெரியுமா சார் உங்களுக்கு?”

”எதுக்குப் பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தைப்பட்றே? காட்ல வுட்டா அது பொழைச்சுப்போவுது.”

அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.

”என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்… அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார் பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜ¦வனைத் தொரத்த¤ அடிச்சா எங்க சார் போவும¢?”

ஆரம்பத்தில் இருந¢தே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும்… என எல்லாமே விசித்திரமாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தன. ஆறு மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் இருந்த ஒரு கட்டையில் உட்கார்ந்¢தேன்.

”நான் பாம்பாட்டி கெடையாது சார். கொத்து வேலதான¢ செஞ்சிக்கினு இருந்தேன். வூடு கட்றதுக்குப் பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுனு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான் வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துக்குனு இருந்தவன் பராக்குப் பாக்கப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப, நானு முன்னாடி போயி சின்னதும் பெருசுமா பதினாறு நல்ல பாம்பை அடிச்சுப்போட்டேன். அதாங்க ஃபர்ஸ்ட்டு. அப்புறம் எங்க பாம்பு அடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவாங்க.”

பிறகு, அவன் பேசியதில் இருந்து நான் தெரிந்துகொண்டது இதுதான்.

அவன் பெயர் சித்திரை. சொந்த ஊர் செங்கல்பட்டு பக்கம் ச¤றுனியம். பாம்பை விரட்டி விரட்டி, ஒரு கட்டத்தில் பாம்பு பிடிப்பதில் தேர்ந்தவன் ஆகிவிட்டான். இப்போதுதான் புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இப¢படிப் பொழுதுக்கும் பாம்பு விரட்டுகிற வேலையில் தீவிரமாக ஈடுபடுவதில் அவளுக்கு எரிச்சல¢. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை.

அன்றைக்குப் பாம்பு பிடிக்க வருமாறு அழைத்தான் பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக் குரலில் இருந்த பதற்றத்தை சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத்து விட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ”எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா, நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ் ஏறிடுவேன்… சொல்லிட்டேன்” – தீர்மானமாகச் சொன்னாள்.

சித்திரை மனைவியின் பேச்சைத் தட்ட முடியாமல், ”அவன்கிட்ட வர முடியாதுனு சொல்லிட¢டு வந்துடறேன்” என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ”எங்கே இருக்குது?” என்பதாகத்தான் கேட்க முடிந்தது.

வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்ததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தை யும் கொண்டையை முடிந்துகொண்ட வேகத்தையும் பார்த்தபோது, அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.

வனிதாவின் அம்மா இது விஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.

”நாக தோஷம் பொல்லாததுப்பா… நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்குவெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.”

”நான் இங்க சோறு, தண்ணி இல்லாத கஷ்டப்படுறேன். பாம்பு புடிக்கிறனாங்காட்டி யும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுகீது. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ணச் சொல்றே?” என்ற அவனுடைய தர்க்கரீதியான கேள்வியில் வாய் அடைத்துப்போனாள் மாமியார்.

அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை. வனிதா அடிக்கடி தாய் வீட்டுக்குக் கிளம்பிப்போவதும் வருவதுமாக இருந்தாள்.

வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒரு தரம் அருவருப்பாகச் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

நடுவே ஒருதரம¢ சித்திரையைப் பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரை தள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள்.

ஆனால், அதன் பிறகு அவனுக்குப் பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்த முறை அவனைப் பாம்பு தீண்டியபோது வ¤ஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்துவிட்டதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணிப் பாம்பு போலத்தான். அவள் பாம்புக்¢கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால், ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள்.

இதுதான் சித்திரை சொன்ன கதை.

அவன் இன்னும் சொல்லிக்கொண்டு இருப்பவன்போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ் புறப்படவே நான்தான் கிளம்பிவிட்டேன்.

இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சென்னையில் தேவநேயப் பாவாணர் அரங்கத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங்கம். மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி-சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சை நிறத்திலும் இருந¢தது. முன் வரிசை யில் அமர்ந்துகொண்டு அவருக்காகத்தான் மேடையில் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவதுபோல வேகமாகத் தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக்கொண்டு இருந்தார்.

பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்து இருந்தேன். ச¤ல பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு. அவை எப்போதும் அவற்றின் உடலுக்குள் பதுங்கிக்கொண்டு இருக்கும். எதையாவது பற்றிக்கொள்ளும் தேவை ஏற்படும் போதுதான் அந்தக் கால்கள் வெளிப்படும். நல்லப் பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் பிடித்துக்கொள்ளும் என்றார். இது ஒரு விஷயம்.

ஒரு பாம்பைக் கொன்றுவிட்டால், அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று பார்வையாளர் ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவர் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக்கொள்ளும் வசதிகொண்டவராக இருப்பார். பெண் ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சி யான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக் கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பார். பாம்பு வந்¢து பழிவாங்குவது என்பது இப்படி சினிமா அளவுக்குத்தான் நம்பகத்தன்மை கொண்டதாக நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஆனால், அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவது உண்டு என்றார்¢.

”பாம்புகள் இனப்பெருக்கத்துக்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன்ஸ் என்ற ஹர்மோன் ரசாயனத்தை வெளியிடு கின்றன. அந்¢த வாடையைக்கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடை கின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாகப் பாம்பின் உடம்பில் இருந்¢து பிரோமோன்ஸ் வெளியாகி விடுகிறது. அந்த வாடையைப் பிடித்து, அடுத்த நாளில¢ அந்த இடத்துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்புகள் ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழிவாங்க வருவதாக நினைத்துக்கொள் கிறார்கள்” என்ற தகவலைச் சொன்னார். இது இரண்டாவது விஷயம்.

அப்புறம் ஒரு சம்பவத்தைச் சொன்னார். ”ஒரு க¤ராமத்தில் ஒருவனைப் பாம்பு தீண்டிவிட்டது. அவன் இறந்துவிட்டான். அங்கு இருந்த பாம்பைக் கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். ஒரு வாரம் கழித்து அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்துபோனாள். மக்கள் உடனே நாக தோஷம் என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன” என்று அவர் பேசிக்கொண்டு போனார்¢.

கூட்டத்தில் வேட்டி-சட்டையில் அமர்ந்து இருந்தவர், ”எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக் குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்றது இல்ல. சும்மா கொஞ்சம் சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளோதான். அதெப்படி?”- ஏதோ புதிர் போட்டுவிட்டு வ¤டை கண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.

”ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும். அதேபோல, ஒரு நல்லப் பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும். அடுத்து, பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாவதொரு காரணத்தால் தப்பித்து இருக்கலாம்” என்று பொறுமையாகப் பதில் சொன்னார் பேச வந்தவர்.

பெரியவருக்கு இந்தப் பதில் போதுமானதாக இருந்தது. ”அவன் எமகாதகனாச்சே… பதறவே மாட்டான்” எனச் சமாதானம் சொல்லிக்கொண்டார்.

கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ளக் கலைந்தபோது, வேட்டிக் காரரிடம் எனக்குப் பேசுவதற்கு விஷயம் இருப்பதுபோல¢ இருந்தது.

”நீங்க சித்திரைங்கிறவரைப் பத்திதானே பேசினீங்க?” என்று ஆரம்பித்தேன்.

”அட! அவனைத் தெரியுமா… அவனை எப்பிடித் தெரியும்?”

”செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்..”

”அவன் பொண்டாட்டி பாம¢பு கடிச¢சு செத¢துப்போன பொறவு அவன் ஊர¢லயே தங்கறது இல்ல. அவனாச்ச¤; அவன் பாம்பாச்ச¤. எங்கேயாவது சுத¢த¤க¢க¤ட¢டு இருப¢பான். நான் இங்க டிவி.எஸ்-ல பேர¤ங¢ வாங¢கறதுக¢கு வந¢தேன்… பாத்தாக¢கா பாம¢புபத¢த¤ப் பேசறதா போர்டுல எழுத¤வெச¢ச¤ருந¢தாங்க. சர¤… இன்னான்னு பாக¢கறதுக்கு வந¢தேன¢. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம¢பந¢தம¢ வூடுன்னா, யார்னாலும¢ சொல்லுவாங்க” – மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங் களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்.

அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோவித்துக்கொண்டு போனதாக சித்திரை சொன்னது ஏன் என்ற கேள்வி மட்டும் வ¤ஷம்போல ஏறிக்கொண்டே இருந்தது.

இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல் வரி கிடைத்துவிட்டது.

வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

…இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை!

– பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *