ஒரு பாம்பு வயல்வெளியில் ஊர்ந்து சென்றபொழுது, தூரத்தில் பெருத்த எலி ஒன்றைக் கண்டது.
பாம்பு தன்னை சாப்பிட வருவதைக் கண்டுவிட்ட எலியால் உடனடியாகத் தப்பிக்க இயலவில்லை. அதற்குக் காரணம் வாய்க்கால் நீரில் தவறி விழுந்து, அதன் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது.
எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்றெண்ணிய எலிக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
அருகில் வந்துவிட்ட பாம்பைப் பார்த்து, அஞ்சாமல் தைரியமாகப் பேசியது:
“”பாம்பண்ணே… என்னைச் சாகடிச்சிடாதீங்க… இப்ப என்னை விட்டுவிட்டால் ஆயுள் முழுக்க உங்களுக்கு உதவி செய்வேன்” என்றது.
ஒருகணம் திகைத்து நின்ற பாம்பு, “”என்ன உதவி செய்வாய்?” என்று கேட்டது.
“”எனக்கு ஏராளமான எலி நண்பர்கள் இருக்கிறார்கள். அருகில் ஒரு குளம் உள்ளது. அதில் நிறைய தவளைகள் வாழ்கின்றன. அன்பாகப் பேசுவது போல நடித்து, உங்கள் புற்றுக்கு அவர்களை அழைத்து வந்துவிடுகிறேன்… எங்கேயும் அலைந்து திரியாமல் இருந்த இடத்திலேயே உங்களுக்கு உணவு கிடைக்கும்படி செய்துவிடுகிறேன்… என்னை மட்டும் விட்டுவிடுங்கள்” என்றது.
எலியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது பாம்பு.
“”துரோகி எலியே, ஒரு உயிரை விழுங்கினால்தான் எங்கள் இனம் உயிர்வாழ முடியும் என்பது இறைவன் வகுத்தது. இது என்றும் மாறாது. ஆனால், உனக்கு அப்படியல்ல என்றாலும், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உன் இனத்தாரையும் மற்ற இனங்களையும் அழிக்க நினைக்கிறாயே… இது மாபெரும் துரோகம்! எனக்கு நன்மை செய்வதாக நினைத்து மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய முயல்வது மன்னிக்க முடியாத குற்றம்! உன்னைவிட்டு வைப்பது நல்லதல்ல” என்று கூறியபடியே அந்த எலியைப் பிடித்து விழுங்கியது பாம்பு.
-எஸ்.செüமியா,
10-ஆம் வகுப்பு, தேவனாங்குறிச்சி.
ஜூலை 2012
தொடர்புடைய சிறுகதைகள்
முன்னொரு காலத்தில் மிகப்பெரிய செல்வன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். வேலையாட்களை வருத்தி வேலை வாங்குவான். ஆனால் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவான். செல்வன் மாதத் தொடக்கத்தில் வேலையாளை அமர்த்துவான். பெரியத்தொகையை சம்பளமாகக் கொடுப்பதாக சொல்லுவான். வேலையாள் மகிழ்ச்சியாக வேலையில் சேருவான். ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் தபால்காரப் பெண் வந்திருந்தாள். நஸ்தியா வாசலுக்குச் சென்று தபால்காரப் பெண்ணிடம் அன்றையப் பத்திரிகையை வாங்கினாள். அந்தத் தபால்காரப் பெண்ணுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியிருந்தது. அவள் புருவப் பகுதியைத் துடைத்துவிட்டுக் கொண்டாள்.
நஸ்தியா கேட்டாள், ""மரீனா அத்தை அவர்களே, நீங்கள் ரொம்பப் பெரிய ...
மேலும் கதையை படிக்க...
கழற்றாத கண்ணாடியுடன் முகவாய் நெஞ்சைத் தொட நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்ப்பதற்கு, ப்ளஸ் டூ படிக்கும் அவரது மகள் சவிதாவுக்குக் கஷ்டமாக இருந்தது. சொன்னால் கோபப்படுவார் அல்லது அறிவுரை சொல்லுவார். இரண்டுமே அவஸ்தை.""உக்காந்து தூங்கறதுக்கு படுத்து தூங்கலாமில்லையா?'' என்ற ...
மேலும் கதையை படிக்க...
முதுகில் ஓர் அடி விழுந்தது.
தொடர்ந்து ""டேய் இடியட் எப்படி இருக்க?''.
திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது.
""ஹலோ மிஸ்டர்! முன்பின் தெரியாத ஆளை இப்படி அடிக்கலா....'' - சொல்லி முடிக்கவில்லை. அவனைத் தெரிந்துவிட்டது. ""டேய் பாலு! வாட் எ சர்ப்ரைஸ்! எப்படிடா ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தார் அவர். அப்படியே அதைக் காட்டில் ...
மேலும் கதையை படிக்க...
அஞ்சல் பெட்டியில் அலர்ந்த மலர்கள்..