ஒரு சிறுவன் மரக்குச்சிகளை வண்டிலுக்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு தானியங்கியைச் சந்தித்தான்.
வணக்கம் கூறி, விளையாடுவோமா? என்று கேட்டான்.
தானியங்கி மின்னியது: ஆம்!
அவர்கள் விளையாடினார்கள். சிறுவன் மகிழ்ச்சியாக இருந்தான்.
இருவரும் இறக்கமான பாதையில் ஓடியதால் தானியங்கியின் பொத்தான் ஒரு கல்லில் அடிபட்டுவிட்டது. அதனால் தானியங்கி நிறுத்தப்பட்டுவிட்டது. என்ன நடந்தது? என்று சிறுவன் கேட்டான்.
தானியங்கி பதில் சொல்லவில்லை. வருத்தமாக இருக்கிறதா என்று சிறுவன் மீண்டும் கேட்டான். தானியங்கி அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நான் இவனுக்கு உதவி செய்யவேண்டும் என்று சிறுவன் நினைத்தான்.
சிறுவன் தானியங்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான். அதற்கு உணவாக ஆப்பிள் சாறு கொடுத்தான். பின்பு அதற்கு ஒரு புத்தகத்தை வாசித்துக் காட்டினான்.
அதன்பின்பு ஒரு போர்வையை அதற்கு மேலே போர்த்திவிட்டான்.
நல்லிரவு தானியங்கி என்று சிறுவன் மெதுவாகக் கூறினான்.
தானும் ஒரு போர்வையால் போர்த்துக்கொண்டு நித்திரை செய்தான். சிறுவனின் பெற்றோர் சிறுவனுக்கு நல்லிரவு கூறுவதற்காக அறைக்குள் எட்டிப்பார்த்தனர்.
அப்பொழுது சிறுவன் தூங்கிவிட்டான் என நினைத்தனர்.
தானியங்கியைக் கதவுக்குப் பின்னால் வைத்திருந்தான் சிறுவன். அவனது பெற்றோர் அதனைக் கவனிக்கவில்லை.
திடீரென்று கதவு தானியங்கியின் பொத்தானில் பட்டு அழுத்தப்பட்டது.
அப்பொழுது இயங்கு பொத்தான் போடப்பட்ட நிலையில் இருந்தது.
உறங்கிக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்து என்ன நடந்தது? என்று தானியங்கி கேட்டது.
சிறுவன் பதில் சொல்லவில்லை.
நீங்கள் பழுதடைந்து விட்டீர்களா? என்று மீண்டும் கேட்டது தானியங்கி. தொடர்ந்தும் சிறுவன் பதில் ஏதும் சொல்லவில்லை..
நான் அவருக்கு உதவி செய்யவேண்டும், என்று தானியங்கி நினைத்தது.
தானியங்கி சிறுவனை தனது வீட்டிற்குத் தூக்கிச் சென்றது.
பின்னர் சிறுவனுக்கு எண்ணெய் கொடுத்தது.
அதன்பின்னர் அறிவுறுத்தல்கள் புத்தகம் ஒன்றை சிறுவனுக்காக வாசித்தது.
சிறுவனுக்கு ஒரு புது மின்கலம் மாற்றிப்பார்ப்போம் என்று தானியங்கி முயற்சித்தது.
அப்பொழுது தானியங்கிக் கண்டுபிடிப்பாளர் அங்கு வந்தார்.
நிறுத்து! என்று கண்டுபிடிப்பாளர் சத்தமிட்டுக் கூறினார்.
அவன் ஒரு சிறுவன்!
அப்பொழுது சிறுவன் திடீரென்று எழுந்தான். தானியங்கியைப் பார்த்தான், அவன் புன்னகைத்தான்.
தானியங்கி! நீ குணமடைந்துவிட்டாய் என்று கூறி தானியங்கியைக் கட்டியணைத்தான்.
தானியங்கி தனது கண்களை உருட்டி மின்னியது. சிறுவன்! நீயும் குணமடைந்துவிட்டாய்! என்று கூறியது தானியங்கி.
கண்டுபிடிப்பாளர் சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார்.
பின்னர் சிறுவனை மகிழூந்தில் அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
நல்லிரவு என்று சிறுவன் தானியங்கிக்குக் கூறினான். நல்லிரவு சிறுவன்
நாங்கள் நாளைக்கு விளையாடுவோமா? என்று கேட்டது தானியங்கி.
ஆம் என்று சிறுவன் தலையசைத்தான்.
அடுத்த நாள் இருவரும் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார்கள்.
- இந்தச் சிறுகதை எனது “நண்பர்கள்” என்னும் சிறுவர் சிறுகதைப்புத்தகத்திற்காக எழுதியது. இந்தக் கதையின் ஆசிரியர் எனது மகன் “கேவின் கணேசன்” ஆகும்.
தொடர்புடைய சிறுகதைகள்
இன்று திங்கட்கிழமை, அதிகாலை நேரம் 6:30 மணியிருக்கும் அவசர அவசரமாக 6:35 ற்கு என் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இருக்கும் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஒஷ்லோ(Oslo) தலை நகரம் நோக்கி புறப்படும் பேரூந்தை பிடிப்பதற்காக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வீடு இரண்டு மகிழூந்து, ...
மேலும் கதையை படிக்க...
பென்குயின்( பறக்கமாட்டாது ஆனால் நீந்தும் தன்மை கொண்டது ) ஒரு சிறிய பறவை. அது எப்பொழுதும் பெரிய பொருட்களைப்பற்றியே கேள்விகேட்டுக்கொண்டிருக்கும்!
" கடல் எவ்வளவு ஆழத்திலிருக்கின்றது?”
“சூரியன் இரவில் நித்திரை செய்கின்றதா?” என்றெல்லாம் வினாவிக்கொண்டிருக்கும்.
இப்படித்தான் ஒரு நாள் அது வானத்தின் உயரம் எவ்வளவு? எனக்கேட்டுக்கொண்டிருந்தது.....
" ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு இலையுதிகாலத்தின் இதம் கலந்த மாலை வேளை. மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியில் ( கோட்டல்) வரவேற்பு மண்டபத்தில் இரவு நேர விருந்துபசாரத்திற்காக காத்திருக்கின்றார்கள். வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஓசைபோல் கேட்கிறது ஆங்காங்கே குழுமி நின்று பேசிக்கொண்டிருப்பவர்களின் இரைச்சலான பேச்சு. ...
மேலும் கதையை படிக்க...
ஒஷ்லோ மாநகரம் பல்லின மக்களை உள்வாங்கி தனித்துவமாய் ஓங்கி நிற்கின்றது நோர்வே நாட்டில். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்தவர்கள் முதலாம் தலைமுறையாகவும், இரண்டாம் மூன்றாம் தலைமுறையாகவும் வசிக்கும் இந்த நாட்டில்தான் லவனி பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள், பட்டமும் பெற்றாள் என்பது அவளுக்கே உரிய ...
மேலும் கதையை படிக்க...
காலை ஐந்து மணிக்கெல்லம் அவன் எழுந்துவிடுவான். கீழ் மாடியில் வரவேற்பறை, சமையலறை ஒரு குளியலறையையும் மேல் மாடியில் நான்கு படுக்கையறையோடு ஒட்டியதாக ஒரு உல்லாச அறையையும் ஒரு களிவறையோடு ஒரு குளியலறையையும் கொண்ட அந்த வீட்டின் கீழ் மாடிக்கு வந்து காலைக்கடமைகளை ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு மாலை நேரம், மூன்று நான்கு மணியிருக்கும் 1996 ஆம் ஆண்டு என நினைவிருக்கிறது.இன்று போலவே பெருத்த மழை சோ என்று பெய்துகொண்டிருந்தது. இடையிடையே இடி மின்னல் முழக்கம் காதை பிளந்து கொண்டிருந்தது. எப்பவும் போல இடிமின்னல் வந்தால் “ ...
மேலும் கதையை படிக்க...
என் பள்ளித்தோழி, பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள். உருண்டையான தன் கண்களை உருட்டியும் முத்துப்பற்களால் புன்னகையை எப்போதும் உதிர்த்தும் என்னை மயக்கியவள் அவள். என் ஊருக்கு அயல் ஊரில்தான் அவள் குடியிருந்தாள். 1994 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு ஆவணி மாதத்து வெள்ளிக்கிழமை. வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த ப்ரியா, அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வெளியில் புறப்படத் தயாரானாள். நானும் வருகின்றேன் என்று அடம்பிடித்தான் ஏழு வயதான மகன். இதோ அரை மணித்த்கியாலத்தில் வந்து விடுகின்றேன் ...
மேலும் கதையை படிக்க...
காயா, அவள்தான் வீட்டில் கடைசிப்பிள்ளை. அவள் இப்பொழுது மிகவும் கோவமாக இருக்கிறாள். காலையில் கனவு கண்டனீங்களா? என்று மிகவும் பயமுறுத்தும் குரலில் கேட்டார் அப்பா.
இல்லை, என்று சத்தமிட்டு கூறினாள் காயா. இல்லை, இல்லை இல்லை என்று கத்தினாள்.
வா இங்கே, காலை உணவு ...
மேலும் கதையை படிக்க...
1974 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 21 ஆம் திகதியன்று ஓர் அழகான ஜோடி தமது பதிவுத்திருமணத்தை பெற்றோரும் உற்றாரும் சூழ்ந்து நிற்க இனிதே நிறைவேற்றினர். அதனைத்தொடர்ந்து மஞ்சள் பட்டுச்சேலையில் மணமகள் மணமேடையேற, பட்டு வேட்டி சால்வையோடு அரும்பு மீசை தளிர்க்க ...
மேலும் கதையை படிக்க...
ஐரோப்பாவில் ஜாதிக்கலவரம்!