குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன.
‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும். விரதத்தை முடிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவை முதலிலேயே தயாராக வைத்துக் கொள்வோம்’’ என்றது கிழட்டு தலைமைக் குரங்கு.
மற்ற குரங்குகளும் தலையசைத்து அதை ஆமோதித்தன. உணவு தேட இளம் குரங்குகள் புறப்பட்டன. பெரிய பெரிய ருசியான வாழைப்பழங்களோடு அவை திரும்பி வந்தன.
‘‘உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் முன்பாகவே அவரவருக்கான பழங்களைப் பங்கு போட்டுக் கொண்டுவிடலாம். ஏனெனில் ஒருநாள் முழுக்கப் பட்டினி கிடந்தால் எவ்வளவு களைப்பாக இருப்போம் என்று நினைத்துப் பாருங்கள், அப்போது பங்கு போட்டுக்கொண்டு இருக்கவேண்டாமே…’’ என்றது தலைமைக் குரங்கின் மனைவி.
எல்லாக் குரங்குகளுக்கும் இந்த யோசனை பிடித்துப்போயிற்று. அனைத்தும் பழங்களைப் பங்குபோட்டுக்கொண்டன.
ஓர் இளம் குரங்கு எழுந்து நின்றது. ‘‘நாம் ஏன் ஒரு வாழைப்பழத்தின் தோலை, தின்பதற்கு வசதியாக இப்போதே உரித்துவைத்துக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டது.
‘‘ஆமாம், ஆமாம்… அப்படியே செய்யலாம்’’ என்று உரத்த குரலில் சொன்னது ஒரு குண்டுக் குரங்கு. வாழைப்பழங்களைப் பார்த்த உடனேயே அதற்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது.
‘‘சரி’’ என்று தலையை அசைத்தது தலைமைக் குரங்கு. ‘‘பழத்தின் தோலை உரித்துக்கொள்ளலாம், ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை சாப்பிடக் கூடாது’’ என்றும் சேர்த்துக் கொண்டது.
எல்லாக் குரங்குகளும் பழத்தை உரித்து, மாலையில் உண்பதற்குத் தயாராக வைத்துக்கொண்டன.
ஒரு குட்டிக் குரங்கு தன் அப்பாவிடம், ‘‘அப்பா, நான் இந்தப் பழத்தை என் வாயில் வைத்துக் கொள்ளவா? ஆனால், அதை சாயந்திரம்வரை சாப்பிட மாட்டேன்’’ என்று அனுமதி கேட்டது.
‘‘ஏன் நாம் அனைவரும் ஒரு வாழைப்பழத்தை வாயில் வைத்துக்கொள்ளக்கூடாது? உண்ணாவிரதம் முடிந்த விநாடியே மென்று தின்ன வசதியாக இருக்குமே’’ என்றது அப்பாக் குரங்கு. ‘‘அதைச் சாப்பிடாமல் இருந்தால் சரி’’ என்றும் சேர்த்துக் கொண்டது.
எல்லாக் குரங்குகளும் உரித்த வாழைப்பழத்தை வாயில் வைத்துக்கொண்டன. அடுத்த குரங்கு, பழத்தைத் தின்கிறதா என்று ஒவ்வொரு குரங்கும் கண்காணித்தன. ஐந்தாவது விநாடி சொல்லிவைத் தாற்போல எல்லா வாழைப்பழங்களும் குரங்குகளின் தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு போயின.
இப்படியாக முடிந்தது குரங்குகளின் உண்ணாவிரதம்!
- வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006
தொடர்புடைய சிறுகதைகள்
மீன் விற்கும் பெண் அரண்மனைப் பக்கமாகப் போனாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த ராணி அவளை அழைத்தாள். அப்போது கூடையில் இருந்து ஒரு பெரிய மீன் வெளியே விழுந்து துள்ளியது. ‘‘இது ஆண் மீனா, பெண் மீனா? எனக்கு பெண் மீன்தான் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித் துப்பினார். ஒரு சிட்டுக்குருவியின் இறகு வந்து விழுந்தது. அது எப்படி தன் வாய்க்குள் வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் ...
மேலும் கதையை படிக்க...
ஊரில் அனைவருக்கும் அந்தத் துறவியைப் பிடிக்கும். ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக்கொண்டு தன் சிஷ்யனோடு எளிமையாக வாழ்ந்துவந்தார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லி ஆசீர்வதிப்பார்.
ஒரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அவரது மனக்கண்ணுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விவசாயி தன் குடும்பத்தோடு நகரத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தார். பயணத்தின் இரண்டாவது நாள் மதியம் அவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தைப் பார்த்தார்கள். அதன் கீழ் சற்று நேரம் ஓய்வெடுக்க நினைத்தார்கள்.
சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார் விவசாயி. ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக்கதை வரிசை-23 ஹரியானா மாநிலம்
அந்த விவசாயி தன் தொழிலின் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த நேரமும் வயல்காடே கதி என்று கிடப்பார். தன் வயல், தோட்டம் ஆகியவற்றின் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி.
விவசாயத்தில் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக் கதை வரிசை-21 (தமிழ்நாடு)
மரத்தின் மீது அமர்ந்து இனிய குரலெடுத்துப் பாடிக்கொண்டு இருந்தது குயில். அதன் தொண்டையில் இருந்து வெளிப்பட்ட குக்கூ, குக்கூ என்ற இசை, கானகம் எங்கும் பரவியது.
அந்த மரத்தின் அருகில் ஒரு குட்டை இருந்தது. அதில் ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக் கதை வரிசை-24 : பஞ்சாப்
ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே.... ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக்கதை வரிசை-19: மணிப்பூர்
அந்தப் பெண்ணுக்கு ஒரே மகன்தான். பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தாள். ஒருமுறை ஒரு வீட்டில் தானியம் அரைத்துக் கொடுத்தாள். பதிலுக்கு அவளுக்குக் கொஞ்சம் தானியம் கிடைத்தது. அதை விற்பதற்காக சந்தைக்குப் புறப்பட்டாள். ‘‘மகனே, உனக்கு ...
மேலும் கதையை படிக்க...
இது போச்சு… அது வந்தது… டிரம்..டிரம்..டிரம்!