ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. நந்தனிடம் வரனாசி என்ற ஒரு அமைச்சன் இருந்தான். அவன் நல்ல மதியூகி, கல்விமான, உலக அனுபவம் உடையவன், சிறந்த இராஜ தந்திரி.
அரசனும் அமைச்சனும் சிறந்த பண்பும் புகழும் பெற்றவர்களாக இருந்தாலும் மனைவியரிடம் அடங்கிக் கிடப்பவர்கள். மனைவியர் என்ன சொன்னாலும் தட்டாது செய்து பழகிவிட்டவர்கள்.
ஒருநாள் அமைச்சருக்கும் அவன் மனைவிக்கும் சிறு சச்சரவு மூண்டது. சச்சரவை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அமைச்சன் அன்பே அர்த்தமற்ற சிறு விஷயத்துக்காக இப்படி நீ சண்டை பிடிப்பது நல்லதல்ல. உன்னுடன் சமரசமாகப் போக எண்ணுகின்றேன். நான் என்ன செய்தால் திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாய் என்று சொன்னால் அவ்வாறே செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றான்.
உங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு என் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாள் மனைவி.
அமைச்சன் அவ்வாறே செய்த ஒரு வகையாக மனைவியைச் சமாதானப்படுத்தினான்.
பிறிதொரு நாள் மன்னனுக்கு அவன் மனைவிக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
என்ன முயற்சியெடுத்தும் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாத அரசன் அவளிடம் சரணாகதியடைந்துவிடத் தீர்மானித்தான்.
அன்பே நீ தொடர்ந்து சண்டை போட்டால் ஊர் சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இது நம் இருவருக்கும் நல்லது அல்ல. அதனால்தான் என்ன செய்தால் நீ திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாயோ அதைச் சொல். அப்படியே செய்து விடுகின்றேன் என்று கூறினான்.
தொடர்புடைய சிறுகதைகள்
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்
ஒருநாள் அவனை அழைத்து, ""நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட நெடுங்காலத்துக்கு முன், பாக்தாத் என்ற நகரத்தில், சந்துரு என்ற வணிகன் ஒருவன் வசித்து வந்தான். பெரும் செல்வந்தனாகிய அவனிடம், ஏராளமான ஆடு, மாடுகள், எருமைகள், கன்றுகள், கோவேறு கழுதைகளும் இருந்தன.
அவனுக்கு, பிடிவாத குணம் கொண்ட மனைவி இருந்தாள். அவள் பெயர் ...
மேலும் கதையை படிக்க...
பொன்னியூர் என்ற ஊரில் ஜனா, சுருதி என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். ஜனா திறமையாகச் சம்பாதித்துக் கொண்டு வருவான். சுருதி அதை வாங்கி நிம்மதியாகச் சாப்பிடுவான்.
உள்ளூரில் பஞ்சம் ஏற்பட்டது. கட்டுபடியாகவில்லை. ஆதலால் வெளியூர் ...
மேலும் கதையை படிக்க...
வாத்து முட்டைகளுடன் அன்னப்பறவை ஒன்றின் முட்டையும் கலந்துவிட்டது. இதை அறியாத வாத்து எல்லா முட்டைகளையும் அடை காத்தது. முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவந்தன.
ஒரு குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதையும், அழகாக நடப்பதையும் கண்டு தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் பொறாமை ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தார் அவர். அப்படியே அதைக் காட்டில் ...
மேலும் கதையை படிக்க...
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு நிலச் சுவான்தாரரின் மகனாகப் பிறந்தார். அவர் வளர்ந்து பெரியவரான போது அவரது குடும்பம் நிறைய பணம் கொண்டு செழித்தது. அவருக்கு ஒரு தம்பியும் இருந்தான்.
கொஞ்ச நாட்களில் நிலச் சுவான்தாரர் இறக்கவே அண்ணணும், தம்பியும் ...
மேலும் கதையை படிக்க...
பெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் இருந்த ஊர் ஒன்று அவருக்குத் தெரிந்தது. அங்கே சென்ற அவர் ஒரு வீட்டின் ...
மேலும் கதையை படிக்க...
ரோட்டோ ஒரு விறகு வெட்டும் தொழிலாளி. மிகவும் நல்லவன். விறகுகளை அதீத லாபத்திற்கு விற்று பணம் சேர்க்க மாட்டான். கிடைத்த லாபம் போதும் என்ற நல்லெண்ணத்தால் வாடிக்கையாளர்களிடம், "நீங்கள் கொடுப்பதை கொடுங்கள்... நான் மகிழ்வோடு வாங்கிக் கொள்கிறேன்...' என்பான். ஏழைகளை துன்புறுத்த ...
மேலும் கதையை படிக்க...
புன்னகைபுரி என்ற ஊரை தயாளன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனிடம் விலை மதிக்க முடியாத ஒரு பெரிய வைரக்கல் இருந்தது. அது அவர்களது மூதாதையர் வைத்துச் சென்ற பரம்பரை சொத்து. அதைத் தன் நாட்டின் பெருமையாக அவன் கருதினான். இந்நிலையில் ...
மேலும் கதையை படிக்க...
சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர்.
பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
புதிர்கதை – ஏன் மணக்கவில்லை