கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 3,278 
 

வழக்கம்போலக் கலாசாலை விட்டதும், ஸாஸாவைப் பார்த்து விட்டுப் போவதற்காக மாமா வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பொழுது மாமி சமையலறைக்கு அடுத்தாற்போல் ஒரு வெள்ளிக் கும்பாவில் சாதம் பிசைந்து கொண் டிருந்தாள். ஆனால் யாருக்காக அதைப் பிசைந்துகொண் டிருந்தாளோ அந்த நபர் மட்டும் அருகே காணப்படவில்லை. “ஸாஸா! சாப்பிடவறயா, இல்லையா? அப்புறம் நான் சாதத்தை வெள்ளைக்குப் போட்டுடுவேன் தெரியுமோ? பேசாமே வந்துடு” என்று கோபக்குரலில் அம்மாமி கூறிக்கொண் டிருந்தது மட்டும் என் காதில் விழுந்தது.

நான் கூடத்திற்கு வரவும், என் காலடிச் சப்தம் கேட்கவே, அம்மாமி என் பக்கம் திரும்பி, “வாடாப்பா, சமய சஞ்சீவி! உனக்கு நூறு வயசு; இந்த இரண்டு வாய்ச் சோறு உன் அம்மங்காள் சாப்பிடறத்துக்குள்ளே என் பிராணனை வாங்கிடறாளப்பா. இனிமே என்னாலே இவளோடே பிராணனைக் கொடுத்துக்க முடியாது. இன்னும் 5, 6 வருஷங் கழித்து நீ இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு, உனக்குப் புண்ணியம் உண்டு, இப்போதே கல்யாணம் பண்ணிக் கூட்டிண்டு போயிடு. உபத்திரவம் விட்டு துன்னாவது இருக்கும்” என்று கோபம் ஒரு புறமும், பரிகாசம் ஒரு புறமும் ததும்பும் முகத்தோற்றத்துடனே, சரேலென்று எழுந்து தோட்டப் பக்கம் கையலம்பி வரச் சென்றாள். போகும்பொழுதே உரத்த குரலில், “ஸாஸா! இதோ கூடத்திலே உன் அத்தான் வந்திருக்கான் பார் – இந்த அழகியைப் பார்க் கிறதுக்கு – அழுகுணியை!” என்று சொல்லிக் கொண்டே சென்றாள்.

நான் இதையெல்லாம் கேட்டுக்கொண்டே, வந்த சிறுநகைப்பையும் அடக்கியபடியே சமையலறையை நோக்கிச் சென்றேன். ஸரஸாவின் கோபத்திற்கு, ஆளாவதற்குத் தாங்கள் செய்த குற்றம் இன்னதென்று அறியாமல், சிதறி உருண்டோடிக்கொண் டிருக்கும் பாத்திரங்களையும், கைகளில் கிழிபட்டுக் கொண் டிருக்கும் பழைய காலண்டரையும், அவள் வாய் முணு’ , முணுப்பையும், கண்களில் நீர் மல்கி இருந்ததையும் பார்த்த உடனே மாமி அங்கலாய்த்துக்கொண்டதில் . ஒரு சிறிதும் தப்பி தமில்லையே என்று என் மனத்திற்பட்டது.

“ஸரஸா! என்ன இது? இப்படி இன்னிக்கு அசடு மாதிரி; பார்த்தியா, ஐய ஐயே… இங்கே வா” என்று மிருதுவாக அழைத்தேன். நான் வந்திருப்பதாக அம்மாமி கூறியதும், நான், “ஸரஸா!” என்று அழைத்ததுமாகிய இரண்டும் ஏககாலத்தில் ஸரஸாவின் காதுகளில் ஒலிக்கவே, சரேலென்று சுருட்டி • மடக்கி எழுந்து, ‘கௌனி’ன் ஓரத்தால் கன்னங்களில் வழிந் தோடிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மெதுவாக அடி மேல் அடியெடுத்து வைத்து என்னை நோக்கி வந்தாள். அழுகையும் கோபமும் வீம்பும் பறந்து. போன இடம் தெரியவில்லை.

ஸாஸாவை அப்படியே அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்துத் தேற்றி, பிரிந்து கலைந் திருந்த தலையைக் கோதி, “ஸாஸா! சாப்பிடறதுக்கு இப்படியா முரண்டு பண்ணுவா? அட அசடே! …. உட்கார்ந்து சாப்பிடு! சமத்தோல்லியோ?” என்று சமாதானப் படுத்திக் கும்பாவிற்கு நேராக உட்கார வைத்தேன். இதற்குள் கூடத்திற்குத் திரும்பிவந்த அம்மாமி, “ஆமடாப்பா, உன் அம்மங்கா அசடு இல்லாமே ரொம்பச் சமத்தோ இல்லியோ? கோயில்லே வச்சுத் தான் கும்பிடணும். ஐய! கட்டினவன் கடைத்தேறிப் போவான்!” எனக் கூறிக்கொண்டே ஜாடையாக ஸாஸாவைக் கோபங்கொள்வது போன்ற பாவனை யாகப் பார்த்தாள். . – ‘போ அம்மா! நான் அசடுன்னா இருக்கட்டும். போ’ என்றாள் ஸரஸா, பதிலுக்கு விட்டுக் கொடுக்காமல்.

“இதாவது வேண்டாமோ? குறைச்சல் இல்லை!” என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு – அம்மாமி அப்புறம் போய்விட்டாள்.

சாந்த குண ஸரஸா சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வாய்க்கு நாலு பருக்கைக்கு மேல் எடுக்கவே இல்லை. அதிலும் பாதி திரும்பக் கும்பாவிற்கு வந்து விடும். இந்த லக்ஷணத்தில் ஒரு வாய்க்கும், மற்றொரு வாய்க்கும் இடையே எத்தனை கேள்விகள்! என்ன பேச்சு! ஒன்றுக்கொன்று சம்பந்தம் சிறிதாவது இருக்க வேண்டுமே? குழந்தைகள் பேச்செல்லாமே அப்படித் தானே!

“அம்மாமி! உங்களுக்கெல்லாம் ஸரஸாவை அழ விடத்தான் தெரியும். சமாதானப்படுத்தவே தெரி யாது” என்றேன். .

“நீ ஒருத்தன் – அருமை அத்தான் – இருக்கயே. போராதோ?” என்றாள், அம்மாமி சிரித்துக்கொண்டு;

அதற்குத்தான் அவளை நீயே கல்யாணம் பண்ணிண்டு டுன்னு சொல்றது. ஏண்டி ஸரஸா, இந்த அத்தானை யே கல்யாணம் பண்ணிண்டுடறியா?” என்றாள்.

“ஸாஸா, என்னைக் கல்யாணம் பண்ணிண்டு டறியா?” என்று நானும் சிரித்துக்கொண்டே ஸாஸாவைப் பார்த்துக் கேட்டேன்.

ஸாஸா குனிந்த தலை நிமிராமலே, “நான் உன்னைத் ‘தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ; வேறே ஒத்தரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் போ” என்று கொஞ்சும் மழலைக் குரலில் பதில் கூறினாள்.

“ரொம்பச் சரியாய்ப் போயிடுத்தே! அம்மாமி, மாப்பிள்ளை தேடவேண்டிய கவலை இன்னமே உங்களுக்கு வேண்டாம். ஒரு நிமிஷத்திலே சம்பாதித்தாகி விட்டது” என்று சொல்லிச் சிரித்தேன்.

“பின்னே என்ன போ!” என்று நிர்விசாரமாகக் கூறிய அம்மாமி தணிவான குரலில், “வயசு வித்தியாசம் ரொம்பக் கொஞ்சந்தான்” என்று சொல்லிச் சிரித்தாள். எனக்கு வயது இருபத்திரண்டுக்குமேல்! ஸரஸ்ாவுக்கோ இன்னும் ஆறு நிரம்பிய பாடில்லை : அவள் என்னைத் தான் கல்யாணம் செய்து கொள்ளுவேன் என்று மூர்க்க மாகக் கூறினால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்? இருந்தாலும் அதை ஸாஸாவிடம் சொல்லமுடியுமா?

ஸரஸ்ா விரைவில் சாப்பிடுவ தாகக் காணோம், எனக்கோ அறைக்குப் போக நேரமாகிக்கொண் டிருந்தது. “சரி, அம்மாமி. நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து புறப்படத் தயாரானேன். அரைகுறையாகச் சாப்பிட்டுக்கொண் டிருந்த ஸரஸாவும் கூட எழுந்து விட்டாள். நான் திடுக்கிட்டு, “ஸாஸா, நீ சாப்பிடு. நான் ‘ரூமு’க்குப் போயிட்டு அப்புறம் வறேன்” என்று உட்காரச் சொன்னேன். அதையெல்லாம் அவள் காதுகளில் ‘ போட்டுக்கொள்ள வில்லை. “நீ இப்போ போகக் கூடாது. இங்கேதான் இருக்கணும் போ” என்று சிணுங்க ஆரம்பித்தாள். இன்னும் ஓர் ஆவர்த்தத்திற்கு அவள் அடிபோடுகிறாள் என்பதை ஊகித்த அம்மாமி, “அப்பா, இருந்தது இருந்தே; அவள் சாப்பிட்டு எழுந்திருக்கிறவரைக்கும் இருந்துட்டுப் போயிடு. உனக்குப் புண்ணியம் உண்டு” என்று வேண்டிக் கொண்டாள். வேறு வழி ஒன்றும் இல்லாமையால், “ஸாஸா, போகல்லே ; சட்டுனு சாப்பிடு” என்று சொல்லி உட்கார்ந்தேன்.

ஸரஸா சாப்பிட்டான பின்பு, மறுநாள் கட்டாயம் சீக்கிரம் வந்து விடுகிறேன் என அவளுக்கு வாக்குக் கொடுத்து விட்டு, அறைக்குத் திரும்புவதற்குள் தப்பித் தால் போதுமென்றாகி விட்டது.

அன்றுவரை குழந்தை ஸரஸா என் கண்ணிற்கும் மனத்திற்கும், இதாக் குழந்தைகள் போலவே தான் தோற்றினாள். ஆறு வயது நிரம்பப் பெற த ஸரஸாவின் உருண்ட முகமும், உப்பிய கன்னங்களும், நெற்றியும், எடுப்பான மூக்கும், சூஷ்மப் பார்வை பொலியும் கண்களும், தோள்களிலும் நெற்றியிலும் விழுந்து புரண்டுகொண் டிருக்கும் கரிய சுருண்ட மயிரும், கொன்னிப் பேசும் மழலைச் சொற்களும் அன்று முதல் அதுவரை எனக்குக் – கொடுத்திராத ஒருவகை இன்பத்தை அளித்துப் பரவசப்படுத்திவிட்டன. அவளது மோஹனப் பேச்சும், சுந்தர வடிவமும், மனோஹர நடத்தையும் என்னை அப்படியே கவ்வி விட்டன. என் மனம் பூரணமாக அவளிடத்தில் சென்று லயித்து விட்டது.

ஊரில் இருக்கும்வரை நாள் தவறாது – நான் ஸாஸாவைப் போய்ப் பார்த்து வருவதுண்டு. அநேக ஸமயங்களில் அவளது முரணும், பிடிவாதமும் முன் வந்து வீட்டில் இருப்பவருக்கு வெகு சிரமத்தைக் கொடுத்து விடும். ஆனால் அதற்கெல்லாம் ஒரே மருந்து என்னிடம் இருந்தது. அவசியமானபோதெல்லாம் அதைக்கொண்டு ஒரு விநாடியில் அவளைப் பழைய ஸாஸ்ாவாக ஆக்கி விடுவேன். “ஸரஸா, நீ இப்படி முரண்டு பண்ணினால் அப்புறம் நான் உன்னைக் -கல்யாணம் பண்ணிக்க….” என்று இழுத்து முடிப்பதற்குள், “ஆட்டும், ஆட்டும். இனிமே இல்லை” என்று பலத்துக் கூ.வித் தன்னைத் தேற்றிக்கொண்டு கட்டின கன்றாகி விடுவாள். – இந்த மருந்தினால், நான் வீட்டிற்கு வராத சமயங்களிலும் குணம் ஏற்படுகிறது என்பதையும் அம்மாமியிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

நாளாக நாளாக எங்கள் இருவரிடையேயும் அன்பும், பாசமும், நட்பும் வளர்ந்து கொண்டே வந்தன. ‘ஸாஸாவைக் காணாவிட்டால் எனக்குப் பொழுதே போகாது. ஸாஸாவுக்கும் அப்படியே, என்னைக் கண்டு விட்டால் இதர வேலைகள் எல்லாம் அவளுக்கு அல க்ஷிய மாகப் போய்விடும். போட்டது போட்ட வாக்கில் தான். குடும்பத்திலேயே எங்கள் நட்பைக் கண்டு வியப்புறா தவர் களும் பொறாமைப்படாதவர்களும் இல்லை.

அதே வருஷம் எனக்கு மணம் நடை பெற்றது. அந்தச் சமயம் நிகழ்ந்த சம்பவங்களும் காட்சிகளும் இன்னும் என் மனக்கண் முன் அப்படியே தோன்றிப் பிரதிபிம்பிக்கின்றன. நான் மணப் பலகையில் உட்கார்ந்து கொண் டிருந்தேன். அருகே என் புது மனைவி உட்கார்ந்திருந்தாள். அவளை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. எனது அப்போதைய எண்ணங்களும் நினைவுகளும் அவளைப்பற்றியனவாகவே இருந்தன.

திடீரென்று என் அருகில் ஒரு சிறுகுரல் சிணுங்கி அழும் சப்தம் கேட்கவே, தலை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாமி இடுப்பில் ஸரஸாவுடன் எனக்குச் சமீபமாக நின்றுகொண் டிருந்தாள். ஸரஸாவின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண் டிருந்தது.

“அம்மாமி, ஏன் ஸரஸா இப்படி அழுகிறாள்?” என்று ஸரஸாவின் பக்கம் கையை நீட்டியவண்ணம் சிறிது பதற்றத்துடன் கேட்டேன்.

“எதுக்கு அழுவாள்? நீதான் அவளையே நேரிலே கேளேன்” என்று, அம்மாமி சிரித்துக்கொண்டே கூறினாள். அருகில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

அம்மாமி ஸரஸாவைக் கீழே இறக்கி விட்டாள். ஸரஸாவை என் அருகே அழைத்துக்கொண்டு, “ஸாஸா, எதுக்கு அழறே? உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டேன்.

விம்மல்-விக்கல்-தேம்புதல்-அழுகை. வேறு பதிலே இல்லை. அம்மாமியின் முகத்தைப் பார்த்தேன்.

“இன்னும் ஒருதரம் கேளேன் நீதான்” என்றாள் அம்மாமி மறுபடியும். பொறுமையை இழந்து விடாமல் மறுபடியும் கேட்டேன். கொஞ்சங் கொஞ்சமாக ரொம்ப மந்தஸ் தாயியிலேயே பதில் வந்தது. காதோடு காது வைத்துத்தான் கேட்க வேண்டியிருந்தது.

“நான் – உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ” என்று இழுத்து இழுத்து விக்கல் விம்மல் களுக்கு இடையே சொல்லி விட்டு, ஸரஸா கண்ணைக் கசக்கிக்கொண்டு தேம்பினாள். அவள் அதைச் சொல்லி முடிக்கும்வரை சிரிப்பை அடக்கிக்கொண் டிருந்த நாங்கள் எல்லோரும், சொல்லி முடிக்கவும் கொல் லென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் மட்டும் சட்டென்று சிரிப்பை அடக்கிக்கொண்டு, “இதுக்குத் தானா பிரமாதம்? நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அழாதே, அழாதே” என்று தேறுதல் மொழிகள் பல கூறி என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். ஸாஸாவின் அழுகை நின்று விட்டது. அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. கூடி இருந்தவர் செய்யும் கேலியையெல்லாம் அவள் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. பேதைக் குழந்தை! கல்யாணம் என்றால் இன்னதென்று தெரியாத குழந்தை! தான் விரும்பிய அத்தானைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டோம் என்ற ஆனந்த சாகரத்திலே மூழ்கிக் கிடந்தாள்.

கல்யாணம் ஐந்து தினங்களிலும் ஸாஸா என்னை விட்டு அப்புறம் இப்புறம் நகரவே இல்லை. மணப் பலகையில் என் புது மனை வியுடன் நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம், அவளும் அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பாள் — நலங்கு, ஊஞ்சல், எப்பொழுதும். எல்லோருக்கும் இது வெறும் வேடிக் கையாக மட்டும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியையும் அளித்தது. என் மனைவிக்கு நலங்கு இடும்பொழுது அவளுக்கும் இடவேண்டும். இல்லாவிட்டால் அவளுக்கு வந்துவிடும் கோபம்!

இப்படியாகக் கல்யாணம் வெகு குதூகலமாக நடந்த பின்பு, அவரவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பி விட்டார்கள். ஸாஸாவுக்குச் சாக்குப் போக்குச் சொல்லிப் பெற்றோருடன் அவளை அனுப்பி வைப்ப தற்குள் நான் பட்ட பாடு போதுமென்று ஆகி விட்டது. குழந்தை உள்ளத்தில் பதிந்துபோன அன் புருவத்தை அழித்து விடுவது முடியக்கூடிய காரியமல்ல என்பது அப்பொழுது தான் நிதர்சனமாயிற்று.

மேற்கூறிய சம்பவங்கள் நிகழ்ந்ததற்கப்பால் ஐந்தாறு வருஷங்கள் கழிந்துபோய்விட்டன. ஐந்தாறு வருஷங்கள் மனித வாழ்க்கையிலே சாதாரணமான அளவுக்காலம் அல்ல. அதற்குள்ளாகவே, மலைக்கும் மடுவுக்கும் உள்ள எத்தனையோ பெருத்த மாறுதல் களும் நிகழ்ச்சிகளும் ஏற்பட்டு நிலைமையைத் தலை கீழாய்ப் புரட்டி விடுகின்றன. சற்றேனும் எதிர்பாராத சம்பவங்களைக் காலம் நம் முன் கொணர்ந்து நடத்திக் காண்பித்துச் சென்று விடுகிறது, ஸ ர ஸ்வைப் பொறுத்த மட்டில் முன்போல், “அத்தான், உன்னைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று முரணும் குழந்தை ஸாஸ்ாவாக இல்லை. கல்யாணத்தைப்பற்றிய விவரம் முழுதும் அறிந்த ஸரஸாவாகி விட்டாள்.

இந்த மாறுதலை அவள் ஒரே நாளில் திடீரென்று அடைந்து விடவில்லை. சிறிது சிறிதாக இடையே கழிந்து போன ஆறு வருஷங்களில்! அத்தானுக்கு மணமாகி விட்டபடியால், ‘அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்பது வெறும் கேலிப் பேச்சேயன் றிச் சாத்தியமாகக் கூடிய தல்லவென்றும், பிறர் நகைத்துப் பரிகசிக்க இடமே யொழிய வேறொன்றும் இல்லை யென்றும் அறிந்து கொண்டாள். நான் ஸ்ரஸாவைச் – சந்திக்கும்போதெல்லாம்,”ஸரஸா, என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்டால், போ, அத்தான், கேலி பண்ணிண்டு!” என்று வலிப்புக் காட்டி , விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவாள்.

என்னைப்போலவே, அவளும் முன் பின் பார்த்திராத ஒருவனுடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள விரைந்து கொண்டிருந்தாள்!

இந்த இடைக்காலத்தில் என் வாழ்க்கையிலும் அசாதாரணமான மாறுதல்கள் ஏற்படவில்லை. என் மனைவி வீட்டிற்கு வந்து விட்டாள். நான் இப்போது ஒரு கிருஹஸ்தன். இந்த ஆறு வருஷத்திலே எங்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். குடும்பச் சக்கரம் ரொம்ப ஒய்யாரமாகச் சுழன்று கொண்டிருந்தது.

அடுத்த வருஷம் ஸரஸாவுக்குக் கல்யாணம் கடந்தது. பக்கத்து ஜில்லாவிலிருந்து வந்து சேர்ந்தான் – அவளுக்குக் கணவன். அப்போது நான் குடும்பச் சுமையைத் தூக்கிக்கொண்டு ஸரஸாவிடமிருந்து நெடுந் தூரத்தில் வேறு ஊரில் இருந்தேன். அவள் கல்யாணத் திற்குக் குடும்பத்துடன் போய் விட்டு வந்தேன்.

அதற்கு அடுத்த தடவை நான் ஸரஸாவைப் பார்க்க நேர்ந்தபொழுது அவள் பழைய ஸரஸாவாக இல்லை. முற்றம் மாறிப் போயிருந்தாள். உருவத் திலும் தேக வளர்ச்சியி ஓம் மட்டுமல்ல; மனவளர்ச்சி பயில் தான் அதிகமாக. முன்னெல்லாம் என்னோடு கைதொட்டு விளையாடினவள் இந்தத் தடவை என் முன் நின்று ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. நான் வலிய வழிமறித்து ஏதாவது கேட்டாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் சுருக்கமாகப் பதில் சொல்லி விட்டுத் தப்பித்துக்கொண்டு ஓடி விடப் பார்ப்பாள். அவளுடைய இந்த நடத்தை எனக்கு ஒருமாதிரி விநோதமாகத்தான் இருந்தது.

முன்னெல்லாம், “உன்னை த்தான், அத்தான், நான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று முரணின ஸாஸாவா இவள் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்திலும் உருவத்திலும் காலச் சக்கரம் உண்டாக்கி விட்ட மாறுதலைக் கண்டு அதிசயப்பட்டேன்.

அன்று சாப்பாடு முடிந்தபிறகு வீட்டுக் கூடத்தில் எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்தோம். அம்மாமி இருந்தாள். ஸாஸாவும் கூட இருந்தாள்.

“அம்மாமி! ஏது, ஸரஸா நான் கூப்பிட்டால் கூடப் பேசமாட்டேன் என்கிறாள்! யாரோ முன்பின் பார்த்திராத ஒருவனை விரட்டுவதுபோல விரட்டுகிறாளே” என்றேன் விளையாட்டாக.

“ஆமாம்; உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாளோ இல்லையோ? அதனால் தான் வெட்கப்படறாள்” என்று கணீரெனச் சொல்லிச் சிரித்தாள் அம்மாமி. கூட இருந்தவர்களும் கொல்லென்று சிரித்தார்கள்.

ஸரஸாவுக்கு இந்தக் கேலி தாங்க முடியவில்லை. சரேலென்று எழுந்து நின்று, என்னையும் மாமியையும் ஒரு தடவை வெருட்டிப் பார்த்து, உதட்டைச் சொடுக்கி வலிப்புக் காட்டி விட்டு உள்ளே ஓடிப்போய்விட்டாள்.

அப்பொழுது தான் என் மனத்தில் ஒளி பிறந்தது என்றே சொல்லவேண்டும். குழந்தை ஸரஸாவுக்கும் இந்த ஸாஸாவுக்கும் எவ்வித ஸம்பந்தமும் இல்லை. ஆனால் குழந்தை ஸாஸாவுக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவை உணர்ந்தவுடன் தான் என் மனத்தில் திடுக்கென்றது. அவ்வளவு வருஷங்களாக நான் ஸரஸாவின் ஒரு விளையாட்டுப் பொம்மையாகவே இருந்திருக்கிறேன்! அப்படித்தான் : அவள் கருதி என்னிடம் நடந்து வந்திருக்கிறாள். எத்தனையோ பொம்மைகள் இல்லையா: யானை, குதிரை, வண்டி முதலியவை? அவற்றோடு நானும் ஒரு பொம்மை; ஆம்படையான் பொம்மை!

குழந்தை ஸரஸாவின் பொம்மையாக இருந்ததில், எனக்குப் பரம திருப்திதான். ஆனால் அதைப்பற்றி நினைக்கும்போது என் அந்தரங்கத்தில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த ஓர் உணர்ச்சி எழாமல் இருப்பதில்லை.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

***

“சரசாவின் பொம்மை” என்ற ஒரு புத்தகம். அதை எழுதியவர் சி.சு.செல்லப்பா. ஆனால் அந்த நாளில் அவர் பெயரைக் கேட்டதே இல்லை. சரசாவின் பொம்மை கதைகள் மனத்தை உருக்குவதாக இருந்தன. முதல் கதையில் “அவளது சூம்பிய கால்கள்தான் கிடைத்தன” என்ற முடிவைப் படிக்கும் போது கண்ணில் நீர் வந்து விட்டது. பின்னர், சி.சு. செல்லப்பா எனக்குச் செய்த உதவியால் நான் எழுத்து உலகிற்கு வந்த போது, அவர் “யார்யார் கதைகளைப் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். என் நினைவில் வந்த பல பெயர்களைச் சொன்னேன். “என் கதைகளைப் படித்ததில்லையா?” என அவர் கேட்ட போது அவர் புத்தகம் என் நினைவுக்கு வரவேயில்லை. பின்னர் வெகுநாள் கழித்து சி.சு.செல்லப்பா எழுதியதுதான் “சரசாவின் பொம்மை” என்று யாரோ ஒருவர் தெரிவித்த போது தான் நான் அவர் புத்தகத்தைப் படித்திருக்கிறேன் என்று சொல்லாதது எனக்கு பெரிய வருத்தத்தை தந்தது – புஷ்பா தங்கதுரை

செல்லப்பாவின் சரசாவின் பொம்மை என்ற கதை உலகின் அதியற்புதமான கதை. மௌனி கதைகள் மொத்தத்தையும் அந்த ஒரு கதை வீழ்த்தி விடும். முதலில் ஏதோ அது ஒரு குழந்தைக் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அல்ல. அது ஒரு Freudian கதை. படித்துப் பாருங்கள். மேலும், தமிழின் முதல் தலித் கதையை எழுதியவர் பாரதி. அதற்கு அடுத்த தலித் கதையை எழுதியவர் செல்லப்பா. – சாரு நிவேதிதா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *