மதுரையிலிருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து திருச்சியைத் தாண்டி சென்று கொண்டிருந்தது
இருள் சூழ…இரவு உணவிற்காக ஒரு ரோட்டோர ஓட்டலின் முன்பு பேருந்து நிறுத்தப்ப்பட்டது
ஓட்டவில் இலவசமாக வழங்கப்பட்ட கிடாக்கறி பிரியாணியையும், நாட்டுக் கோழி புரோட்டாவையும் பீஃப் வறுவலையும் ஒரு வெட்டு வெட்டிய பேருந்தின் ஓட்டுநர் உலகநாதன் பேருந்தில் தனது சீட்டில் வந்து அமர்ந்தார்.
பயணிகள் அனைவரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பேருந்துக்குள் வர, பேருந்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்தபடி ஓட்டுநர் உலகநாதன், கண்டக்டரிடம், ‘மாரியப்பா, வண்டியை எடுக்கப் போறேன். பஸ்ஸூக்கு அடியிலே நாய் எதுவும் படுத்திருக்கான்னு பாரு. இருந்தா விரட்டி விடு. பாவம் அடிகிடி பட்டுடப் போவுது’ என்றார் பெரிதாக ஏப்பம் விட்டபடி.
அவரது ஏப்பத்தில், கிடா, பீப், கோழி அயிட்டங்களின் வாசனை தூக்கலாக இருந்தது.
- ஜி.ராதா (11-1-12)
தொடர்புடைய சிறுகதைகள்
அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி ஓட்டினேன். பொதுவாக யாரிடத்தும் அவ்வளவு ஈர்ப்போ ஈடுபாடோ ஏற்படாது எனக்கு.
ஆனால் அவள் ஓட்டிச் சென்ற விதம் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
''யாரு மச்சி போட்ருப்பா?''
''எவனுக்குடா இவ்ளோ தில்லு ஊர்ல?''
''எவனோ இந்த எடத்த உஷார் பண்றான் மச்சான்.''
''கிரவுண்ட வுட்ட மாதிரி இத வுட்ரக் கூடாது.''
''யாருனு ஆளப் பாத்துகினு நைட் கொளுத்திரலாம் மச்சி''- பொது இடத்தில் இருந்த கொட்டாயைச் சுற்றி இளைஞர்களின் கோபக் குரல்கள்.
அரசாங்கத்தால்ஒதுக்கப்பட்ட விளையாட்டு ...
மேலும் கதையை படிக்க...
திடீரென்று வந்த மழையால் குளிர்ந்திருந்தது பூமி மட்டுமல்ல தீபாவின் மனதும் தான். அலுவலக வேலைக்கு நடுவில் அவள் கண்கள் ஜன்னலில் முட்டி மோதி நின்றது. அங்கே சில புறாக்கள்.
அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தாள் தீபா. அவை மழையில் நனைந்துகொண்டிருந்தன. நனைந்ததென்னவோ அவை தான். இவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே உற்சாகத்துடன் பாடங்கள் நடத்துவார்.
ஒவ்வொரு பாடம் துவங்கும் போதும் அதன் பின்னணிக்கு ஒரு கதையோ அல்லது வரலாற்றுத் துணுக்கோ, ஆச்சரியப் படவைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
1. கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலக வரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின் துணைகொண்டு தேடுவதை விடுத்து எடுத்தயெடுப்பில் நேரடியாக கதையைப் படிக்கத் தொடங்குதல் நலம். இந்த நாடு மூன்றுபக்கமும் சூழ்ந்திருக்கும் கடலில் மூழ்கப் ...
மேலும் கதையை படிக்க...
மழையில் நனையும் புறாக்கள்
உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்..