“என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்… அதே புன்னகைதான்.
அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டுநாள் திடிரென்று லீவு போட்டு விட்டு போய்விடுவான். ஏங்கு போகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். யாரிடமும் மூச்சு விடுவதில்லை.
இவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.. புதிய மேனேஐர் வரப்போவதாய் பேசிக் கொண்டனர். அவரும் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்து போனது. அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் மாதாமாதம் தொழிலாளிகளின் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் அவர்களின் பணித்தரம் பற்றி ஆய்விடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுபோலவே, அன்றும் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு தொழிலாளியாய் முடித்து….இரகுராமன் முறை வரும்பொழுது..
“என்ன இரகுராமன், வேலையெல்லாம் நல்லா செய்யுறீங்க, எப்பவும் சந்தோஷமா இருக்கீங்க…. ஆனால் மாசமாசம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு காணாம போயிடுறீங்களே”அதுதான் பிரச்னையா இருக்கு, எனிதிங் பிராப்ளம்”கடுகடுத்த முகத்துடன் கேட்டார் மேனேஐர்.
புராப்ளம்-ல்லாம் இல்ல ஸார் “ஒரு அநாதை இல்லத்துக்கு போய் அங்கே இருக்கிற ரெண்டு பசங்களை வெளியே கூட்டீப்போய் வயிறாற சாப்பிடவைச்சு, டிரஸ் வாங்கி கொடுத்து ஏதாவது ஒரு சுற்றலா இடத்திற்கு கூட்டிபோய் அவர்களின் சந்தோஷத்தை பார்க்கிறதுக்குதான் அந்த ரெண்டுநாள் லீவு. அந்த சந்தோஷம்தான் எனக்கான உற்சாக டானிக், வேற எதுக்குமில்ல” என்றான்.
மேனேஐரின் கடுகடுத்த முகத்தில் ஒரு புன்னகைப் படர்ந்தது..
அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷத்திற்கும் மலர்ச்சிக்கான இரகசியம் எதுவென்று அன்றுதான் எல்லோருக்கும் புரிந்தது.
நன்றி – வளர்தொழில் ஜூலை 2015)
தொடர்புடைய சிறுகதைகள்
அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன.
அந்த மாட்டிடம் இருந்து பால் கறந்து ஊருக்கெல்லாம் அளந்து கொடுத்து தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வது அவனது வாடிக்கை.
அப்படி வியாபாரம் செய்து ...
மேலும் கதையை படிக்க...
“இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு
”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?”
”அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும், அதான், சந்திரபுரிக்கு போறேன், அங்க போனா ஏதாச்சும் தேறும்” எனக் கிளம்பினான்.
”ஏன்தான் ...
மேலும் கதையை படிக்க...
திரிலோக சஞ்சாரியான நாரதர் ஆப்பிள் போனை கையில் வைத்து பார்த்து கொண்டே…. தம்பூராவை மீட்டாமலும், நாராயணா பெயரை மறந்தும்… சிவலோகத்தில் நுழைகிறார்.
பூதகணங்கள் உடனே ஓடிப்போய் சிவனிடம்..வத்தி வைத்து விடுகிறார்கள்.
சிவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.. வரட்டும்..வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று உர்ரென்று ...
மேலும் கதையை படிக்க...
கதை கேளுங்கள்: பொறுப்பு
சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராத்து, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு.
மணி ஏழாகிவிட்டிருந்த்து. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன், அவங்களும் என்னோட கருத்துக்கு லைக்ஸ் தாராங்க” என பெருமிதப்பட்டுக் கொள்வாள் பொன்னி.
காலை எழுந்தவுடன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்காரரை ...
மேலும் கதையை படிக்க...
“உஷாரய்யா….உஷாரு” என்னைய காட்டிக் கொடுத்திட மாட்டியே” அலைபேசியில் கெஞ்சுகிற குரலில் மன்றாடிக் கொண்டிருந்தார்.
”தலைவரே!, கவலைப்படாதீங்க, என் உசிரே போனாலும், ஒங்களைக் காட்டிக் கொடுத்திட மாட்டேன்”
“ ரொம்பவும் நன்றி தம்பி! அப்புறம் நான் கொடுத்து வைச்ச அத்தனை மூட்டையும் மாத்தியாச்சா! பத்திரமா இருக்கா” ...
மேலும் கதையை படிக்க...
“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற பாடு இருக்கே, ஆதாங்க என்னால தாங்க முடியல!
“நான் அவளைத் தொடும் அடுத்த நொடியில்… என்னிடமிருந்து விலகி ஓடிறாள்“
இருங்க அவள் பேரைச் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சிவக்கொழுந்துவுக்கு போன் கால்கள் வந்தவண்ணம் இருந்தன. நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிரந்த்து. நான்கு பேரோடு ஆரம்பித்த கம்பெனி….இன்று நாடெங்கும் ஏராளமான கிளைகள். பாக்கி இல்லாமல், ஏமாற்றாமல் வரி செலுத்துவதில் இவருடைய நிறுவனம் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது.
பரிசு ...
மேலும் கதையை படிக்க...
”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு வைராக்கியமாய் இருந்த புண்ணியகோட்டிக்கு வந்த து சோதனை!
”பேய் காற்றுடன், பேய் மழையும் சுழற்றியடிக்க அவனின் வைராக்கியம் மழையில் கரைந்து வேறுவழியில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான்.
”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட திருச்சி வந்திருக்காராம், முடிச்சுட்டு நம்ம வீட்டுக்குத்தான் வர்றாராம்”!
”வரட்டும்…வரட்டும்…உன் அப்பா டிஸ்டிரிக்ட் லெவல்ல பெரிய சாம்பினயன்தானே? என்கிட்ட மோதி ஜெயிக்கட்டும், நான் ஜெயிச்சா ...
மேலும் கதையை படிக்க...
மகிழ்ச்சி என்ற சிறுகதையினை தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி