கிராமத்திலிருந்து அண்ணன் மணியைப் பார்க்க வந்திருந்த சத்யா. அவருடைய மளிகைக் கடைக்கு விஜயம் செய்தான்.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செய்தித் தாள்களை ஒவ்வொன்றாக உருவி, கூம்பு வடிவத்தில் லாவகமாக மடித்து.
அவைகளில் பலவகையான மளிகைச் சாமான்களைப் போட்டு, சணல் நூலால் கட்டி வாடிக்கையாளர்களுக்கு மணி கொடுத்துக் கொண்டிருந்ததை அவன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கடையில் சற்று கூட்டம் குறைந்தவுடன், தன் சந்தேகத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தினான்.
“சென்னையின் முக்கியப் பகுதியில் மளிகைக் கடை வச்சு நடத்திக்கிட்டு இருக்கிற நீங்க.பழைய முறைகளையே கடைப்பிடிச்சு. கஷ்டப்படறீங்க. சாமான்களை, பாலீதீன் பைகளில் போட்டுக் கொடுத்தா, பொட்டலம் கட்டற வேலை குறையுமில்ல’ என்றான்.
அப்போது, “நேற்று நீங்க மிளகாய் கட்டிக் கொடுத்த பேப்பரில் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன் அண்ணாச்சி. இறந்துபோன் ஒரு இந்து இளைஞனின் குடும்பம், அவரோட கண்களை ஒரு இஸ்லாமிய இளைஞனுக்கு தானமா கொடுத்த அந்தச் செய்தியைவிட, மனித நேயத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கு வேறு உதாரணமே தேவையில்லை. அதை உற்றார் உறவினர்களுக்கு படித்துக் காட்டியதும் கேட்டவங்க கண்கள் கலங்கிடுச்சு’ என்று, வந்த வாடிக்கையாளர் தன் அனுபவத்தை விவரித்துவிட்டு, சர்க்கரை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
“பாலிதீன் பையினால் சுற்றுப்புறச்சூழலுக்குக் கெடுதல் தான் நேர்கிறது. அது மட்டுமல்ல, செய்தித் தாள்கள் படிப்பவர்கள்
குறைந்துவரும் இந்தக் காலத்தில், ஒரு சிலராவது, மனித நேயம் சம்பந்தப்பட்ட நல்ல செய்திகளைப் படித்தால், அது அவர்களுடைய மனதை பதப்படுத்தும்’ விளக்கமித்த அண்ணன் மணி, சத்யாவுக்கு ஒரு ஆச்சரியப் பெட்டகமாகத் தெரிந்தார்.
- ஜூன் 2014
தொடர்புடைய சிறுகதைகள்
“பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக வசதியானவங்களா இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது.
பையனோட அப்பா, இருபது கார் வச்சுக்கிட்டு, நல்லா டிராவல் பிஸினஸ் சைடில் ஓடிக்கிட்டு இருக்கு. ஒன்றுக்கு நாலுவீடு வச்சிருக்காங்க. ஒரே பிள்ளையானதால், அப்பாவின் சம்பாத்தியம் முழுவதும் பையனுக்குத்தான்.
அவங்க வசதிகளைப் ...
மேலும் கதையை படிக்க...
”உங்க மருமகள் சொல்றதுக்கு நேர்மாறாகத்தான் எதையும் செய்வேன்னு போன தடவை வந்திருந்த போது சொன்னீங்க. இப்ப அவள் இன்னும் கொஞ்ச நாள் தங்கிட்டு போங்கங்கறா, நீங்களும் கிளம்பறா மாதிரி தெரியலையே…?”
பக்கத்து வீட்டு பாகியம் தன் பங்குக்கு ,தனியாக பங்கஜத்திடம் தனியாக வம்பு ...
மேலும் கதையை படிக்க...
“ஃபேக்டரியை என்கிட்ட நீங்க ஒப்படைச்சு ஆறு மாசம் ஆயிடுச்சு. ஆனா, இந்த கால கட்டத்தில, உற்பத்தி குறைஞ்சுக்கிட்டு வருது. அதுக்கான காரணம் என்னன்னு
புரியலை’ என்று எம்.பி.ஏ. படித்து முடித்த மகன் சித்தார்த், தந்தை சதுர்வேதியிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டான்.
“உற்பத்தியைப் பெருக்க ...
மேலும் கதையை படிக்க...
“என்னப்பா அரைகுறையா பெயிண்ட் அடிச்சிருக்கே…? உன்னோட சூப்ரவைசர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணி கூலியை குறைக்கச் செல்றேன்…’ என்று பெயிண்டர் ஆறுமுகத்திடம் கோபமாக கத்தினேன்.
உள்ளே வந்து அந்தச் சுவற்றை எட்டிப் பார்த்து, “ஓ அதுவா… அங்க நான் வேணும்னுதான் பெயிண்ட் செய்யலை. அதுக்கு காரணத்தைத் ...
மேலும் கதையை படிக்க...
சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம் இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட் வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு.
வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க. அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு ...
மேலும் கதையை படிக்க...
பார்வையை மாற்று! – ஒரு பக்க கதை
தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை