கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,571 
 

தூங்கி எழும்போதே காலில் இடித்தது. எல்லாமே காலி பாட்டில்கள். பொதுவாக மாதம் 25 அல்லது 30 பாட்டில்கள்தான் சேரும்.

இந்த மாதன் எங்கள் பேச்சுலர் ரூமில் புதிதாய் ஒரு விருந்தினன் வந்தான்…தங்கினான்…செலவுகள் ஏற்றினான்…பாட்டில் எண்ணிக்கையைக் கூட்டினான், சென்று விட்டான்.

இப்போது மாதக் கடைசியில் பர்ஸ் பல்லைக் காட்டுகிறது.பர்ஸில் மூன்று ஐந்து ரூபாய் காயின்கள் தான் இருந்தன. ஒரு வேளை டீ, தம்முக்குத்தான் சரியாய் இருக்கும். மதியத்துக்கு?

மூணு தம் வாங்குவோம்…ஆபிஸ் கேன்டீன்லேயே டீயைக் குடிப்போம்( உவ்வே). முடிவெடுத்து பேண்டை மாட்டினேன்

‘தம்பி’ என்ற குரல் மேன்ஷனுக்குக் கீழே கேட்டது. பாட்டில் வியாபாரி. இப்போதைக்கு கடவுள்!

அவருக்கு நானும், எனக்கு அவரும் ரெகுலர் கஸ்டமர்ஸ். வழக்கம் போல பாட்டில்களை வாரி சாக்குப் பையில் போட்டார். பத்து ரூபாயை நீட்டினார்.

இன்னொரு பத்து ரூபாய் கொடுங்க, அதிகமா இருக்கு என்றேன். சிரித்துகொண்டே இருபது ரூபாய் தாளை நீட்டினார்.

ஏன் சிரிக்கிறீங்க?

ஒண்ணுமில்லை தம்பி…உங்க வயசுல நான் கூட அதிக பாட்டில் விலைக்கு போட்டிருக்கேன். அதான் இந்த நிலை..!

– டேனியல் வி.ராஜா (ஜூன் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *