புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை.
தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் தோளில் யாரோ கைப்போட, திடுக்கென திரும்பிப் பார்த்தான். “இங்க என்ன பார்த்துக்கிட்டிருக்க?’ என்று கேட்டாள் பெண்மணி ஒருத்தி.
“அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷு வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்’ என்றான்.
அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மையும் இருப்பதை உணர்ந்தவர், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷு ஒன்றை அவனிடம் தந்தாள். அந்தச் சிறுவனுக்கோ ஒரே குஷியாகி விட்டது. அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அந்த பெண்மணி, சிறுவனிடம், “நான் யார்னு தெரியுமா?’ என்று கேட்டாள்.
தான்தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டுபிடித்து விடுவான் என்று எதிர் பார்த்திருந்த சமயத்தில்…
சற்றும் சளைக்காமல், அடுத்த நொடியே வந்தது பதில், “நீங்கதான் கடவுள்’
– பி.கே. அருணா, திருச்சிராப்பள்ளி. (திசெம்பர் 2013)
தொடர்புடைய சிறுகதைகள்
டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து இதுவரை எத்தனையோ பிரேதங்களைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் பரிசோதனைக்கு வந்த பிரேதத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியும் அனுதாபமும் என்றுமே அவருக்கு ஏற்பட்டதில்லை.
ஏன்?
அவருடைய உள்ளமறிந்த ஒரு ஜீவனின் பிரேதமாயிருந்தது அது!
அவன் எப்படி இறந்தான்?
‘போலீஸ் ...
மேலும் கதையை படிக்க...
forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற ஆடை போர்த்தியதான கோலம்.
பரந்த காட்டின் கரைகளில் சில வரண்ட பகுதிகள். அவை ...
மேலும் கதையை படிக்க...
தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும் தனது கவிதைக்காக இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு மூளையைக் கசக்கி கொண்டிருந்தான். ஊற்றெடுத்து பிரவாகமாகப் பொங்கி ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஊர் தன்னை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் கோர முகங்கொண்ட பெண்ணைப்போல ஒடுங்கிப் பதுங்கியிருந்தது. செம்பனையின் தரைதட்டும் பச்சை மட்டைகளால் தங்களைத் தாங்களே மூடிக் கொண்டதுபோல ஸ்கோட்சியா தோட்டப் பிரிவு ஏழு வெளியுலகத்திலிருந்து எட்டியும் விலகியும் நின்றிருந்தது. வயதோடி மூப்படைந்து மரத்தண்டை ...
மேலும் கதையை படிக்க...
கைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தாலும், பின்புறம் மடிந்த கைகளுடன் குந்த வைத்த நிலையில் அமர்ந்திருந்த செங்கோடனுக்கு உடம்பெல்லாம் அப்படி அதிர்ந்து கொண்டிருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்கவே அவனுக்கு கூசியது. அப்படி துக்கத்திலும் அவமானத்திலும் உறைந்து போயிருந்தான். நினைக்க நினைக்க ரோமக்கால் சிலிர்த்து, முக்கால் ஜடமாக, ...
மேலும் கதையை படிக்க...
சுகமான ஒரு பயணத்தின் முடிவு சமீபித்த கணத்தில்தான் அந்தச் செல்லிடப்பேசி செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து போய்விட்டது. சின்னக் குழந்தை கண்கள் விரிய ஊதிக்கொண்டிருக்கும் பலூன் அளவு பெரியதாகி திடீரென வெடித்து விடுகிறபோது ஏற்படுகின்ற வெறுமை உணர்வு ...
மேலும் கதையை படிக்க...
குமரேசனுக்கு சொந்த ஊர் தென்காசி.
சென்னையின் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலையில் இருக்கிறான். ஒருவாரம் முன்பு புதிதாக வந்து சேர்ந்த தன்னுடைய டீம்லீடர் கவிதாவின் மீது அவனுக்கு காதல் துளிர்விட்டது. ஒரு நாளில் குறைந்த பட்சம் பன்னிரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அந்த புற நகர் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன.
நவநீதம் அங்கு புது வீடு கட்டி, தன் மனைவியாடு குடி வந்து ஆறு மாசம் தானிருக்கும். நவநீதத்திற்கு அறுபத்தி ஐந்து வயசாகி விட்டது.
இந்த வருஷம் வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் ...
மேலும் கதையை படிக்க...
பஸ் வந்து நின்றதுமே, ஏறுவதற்கு புஷ்பவனம் பிள்ளை மிகவும் அவசரப்பட்டார்.
"ஏறாதே! எறங்கறவங்களுக்கு வழி விடு" என்ற கண்டக்டரின் மரியாதையான(!) அறிவிப்பு அவரைச் சற்றுத் தயங்கவைத்தது.
அது ஒரு டெர்மினல். அத்துடன் நின்று திரும்ப வேண்டிய பஸ்தான் அது. இன்னும் பதினைந்து நிமிஷங் களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
தளும்பத் தளும்ப பால் டம்ளரை நீட்டிய மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன்.
“பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?’
“என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம் போயிடலாம்!’
“என்ன சொல்றே நீ?’
“ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும் வர்றதில்லை.’
“கல்யாணம் ...
மேலும் கதையை படிக்க...
ஓட்டு வேட்டை! – ஒரு பக்க கதை
தனிக் குடித்தனம்!- ஒரு பக்க கதை