“என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?” ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
“அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ….மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?” கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.
“நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க ”
“அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?”
“என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க” அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம்.
“”சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்” சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.
தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்
“எம்மாம் பெருசுங்க…என்னால நம்பவே முடியலை … சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?” ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.
தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது
“வழிவிடுங்கள்…ஓரம்போங்கள்” என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.
வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்று கொண்டிருந்தார் ஷாஜஹான்
- Thursday, September 20, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது ...
மேலும் கதையை படிக்க...
மும்பை,அந்தேரி ரயில்நிலையம்.
கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது.
வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா.
"மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை பத்தி எனக்குத் தெரியும் நீ ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை செய்கிறார் அப்பா. எங்கள் வீடும் மலையடிவாரத்தில்தான் இருக்கிறது. பானதீர்த்தம் அருவியில் குளிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அவரது வேலை. பலமுறை ...
மேலும் கதையை படிக்க...
ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது.
ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்.
எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பவன்.
"அண்ணா அண்ணா" என்று என்னிடம் பாசம்பொழியும் நல்லிதயம் கொண்டவன்.
அவனுக்கு இது நிகழ்ந்திருக்ககூடாது. பேருந்து விபத்தில் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. எப்படி பேசுவது? பேசுவதற்கு ஆள் வேண்டுமே?
தொடர்ச்சியான மழையில் வெள்ளம் வந்ததில் மொத்த நாடும் அழிந்துபோனது. கடல் கொந்தளிப்பும் சேர்ந்துகொண்டதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்.
ஆபத்து காலத்தில் பயன்படுமென்று நான் வாங்கி வைத்திருந்த ரப்பர் படகு ...
மேலும் கதையை படிக்க...
ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)