தான் பொறந்து வளர்ந்து வாழ்ந்த கிராமத்தை நோக்கி ரெண்டு கால்கள் நடந்து கொண்டிருந்தன…
நடந்து கொண்டிருந்த பாதையோ சரியான பொட்டல் காடு…
சூரியனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சியோ…
நன்றாகவே சுட்டெரித்துக்கொண்டிருந்தான் நிலத்தை…
கூட பேச்சுத்துணைக்கு கூட யாருமின்றி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தன கால்கள்…
சிறிது வயதாகிவிட்ட காரணத்தால் நடையில் ஒரு தடுமாற்றம் இருந்தது…
கால்கள் சிறிது சிறிதாக முன்னொக்கிச் செல்ல… மனது அதுபாட்டுக்கு பின்னோக்கி சென்றது…
அப்பொழுது இவருக்கு சொந்தமா எக்கச்சக்கமான வயற்காடும் தோட்டமும் இருந்துச்சு…
ஊருலேயே இவரு ராஜா மாதிரி…
அதிலேயும் கொஞ்சம் பேச்சுத்திறமையும் இருக்க… மெல்ல மெல்ல கிராமத்திலேயிருந்து ஆரம்பிச்சு ஒவ்வொரு அடியா வச்சு… அரசியல்ல ஒரு நிலைக்கு போயிட்டாரு…
அப்புறம் என்ன.. அமைச்சராக கூட ஆயிட்டாரு…
அப்புறம் தான் ஒரு பெரிய ஆட்டமே போட்டாரு…
ஊருக்கு ஏதோ தொழிற்சாலை கொண்டுவரேனு சொல்லி இருந்த வயக்காட்டெல்லாம் சமமாக்கி… தோட்டத்தையெல்லாம் அழிச்சு… இருந்த கொஞ்ச நஞ்ச மரங்களையும் வெட்டிபோட வச்சிட்டாரு…
ஊரே எதிர்த்தும் ஒண்ணும் பண்ண முடியல…
ஒவ்வொருத்தரா ஊர விட்டு கெளம்ப ஆரம்பிச்சிட்டாங்க…
அப்பத்தான் புதுசா ஏதோ சட்டம் வர… இவரு ஒரு பெரிய ஊழல்ல மாட்டிக்கிட்டாரு…
எவ்வளவு தப்பிக்கபாத்தும் இவருக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சிருச்சு…
கூட நின்ன ஒண்ணு ரெண்டு பேரும் விட்டுட்டு போயிட்டாங்க…
இப்பத்தான் தண்டனை எல்லாம் முடுஞ்சு… ஊருப்பக்கமா வந்துட்டு இருக்காரு…
ஊரை வெறுமனே பார்க்க பார்க்க… அவரு கண்ணுரெண்டுலேயும் தண்ணி தண்ணியா கண்ணீர் கொட்டுச்சு…
மரமே இல்லாத இடத்திலேயும் ஆ ஊ ன்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு… இலைகள் எல்லாம் உரசுர மாதிரி…
இத்தன நாளா இவரு எப்படா வருவாருன்னு பார்த்துக்கிட்டு இருந்த எல்லா மர ஆவிகளும் ஒண்ணுகூடி வந்த மாதிரி… இவருக்கு தோணுச்சு…
தண்ணிக்கும் வழியில்லாம, ஒதுங்க நிழலுக்கும் மரமில்லாம, நாக்கு வரண்டுபோயி… அவரால அழிக்கப்பட்ட அந்த நல்ல பூமியிலேயே… அவரு அப்படியே சுருண்டு விழுந்தாரு…
பாவம் அவர காப்பாத்தத்தான் அந்த ஊருலேயே இப்ப யாருமே இல்லை…
தொடர்புடைய சிறுகதைகள்
கட்சி அலுவலகம்.
தேர்தல் அறிவித்த தேதி முதலே கலகலப்பாக மாறிவிட்டது. யாரோ ஒருத்தர் வந்து போன இடமாக சில நாட்களுக்கு முன்பாக இருந்தது, இப்போது கூட்டம் கூட்டமாக கட்சிப்பணியாளர்கள் வந்து போகும் இடமாக மாறி இருந்தது.
கட்சித்தலைமை ஒரு வழியாக கூட்டணி பேச்சு வார்த்தையை ...
மேலும் கதையை படிக்க...
அமெரிக்காவின் அழகிய நகரமொன்றின் நதிக்கரை ஓரத்தில், மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்க, ரம்யமான அந்த பொழுதில் அவன் கையை இறுகப்பற்றிய அவள், ஏதோ சொல்ல வாய் திறந்தாள்..
"எது வேணா சொல்லு... ஆனா நீ இப்போ சொல்லப்போறத மட்டும் சொல்லாத"
"இல்ல.. அதெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா யாருமா இவங்க? இப்படி இருக்காங்க!"
"ஓய்... சத்தம் போட்டுப் பேசாத.. அவங்க அசிங்கம்... அவங்களப்பத்தி பேசறோம்னு தெரிஞ்சா நம்மல அசிங்க அசிங்கமா திட்டுவாங்க.. அவங்க பக்கம் பார்க்காத?"
"அப்ப அவங்க மனுஷங்க இல்லையாமா?", என்று கேட்ட விக்னேஷின் கேள்விக்கு, பதில் சொல்லத் திணறி, ...
மேலும் கதையை படிக்க...
திடீரென கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சம்.. கண்களின் முன்னே.. அவனால் கண்களையே சரியாக திறக்க முடியவில்லை.. எப்படியோ கஷ்டப்பட்டு திறந்த பார்த்தால்.. அவனால் நம்பவே முடியவில்லை. முன்னே கடவுள் நின்று கொண்டிருந்தார். அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. கடவுள் அவனைப் பார்த்து..
"தைரியம் ...
மேலும் கதையை படிக்க...
"என்னங்க.. என்னங்க.. ராத்திரி பூரா குழந்தை அழுகற சத்தம் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்?"
"என்ன.. குழந்தை அழுகற சத்தமா.. எனக்கு அப்படி ஒன்னும் கேக்கலையே..!"
"என்னங்க சொல்றீங்க? அப்பறம் எனக்கு மட்டும் எப்படி கேட்டுச்சு..?", என்று பயந்தபடியே கேட்ட மனைவியை நானும் பயந்தபடியே பார்த்தேன்...
எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
"என்ன சொல்றீங்க? கொடுக்கற பணம் அஞ்சு வருஷத்துல அஞ்சு மடங்காகுமா? நம்பற மாதிரி இல்லையே! பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தற மாதிரி சொல்லுங்கண்ணா"
"சில விஷயங்கள நம்ப முடியாது தான். ஆனா இதுல நான் பணம் போட்டு இப்படி பணம் எடுத்திருக்கேனே தம்பி!"
"அண்ணே.. ...
மேலும் கதையை படிக்க...
1,800 களின் பிற்பகுதி, அன்றைய பேச்சுத்தமிழே, காதில் தேன்வந்து பாய்ந்தது போல் சுவைக்கும்.
மண்மணக்கும் அந்த அழகிய கிராமத்தின் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டே புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவை ரசித்து நின்றவள் காதில், உரக்கக்கேட்டது...
“பூ... எங்கம்மா இருக்க....?”
ஆனால் பூங்குழலி அக்குரலை சட்டை செய்யவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
"வாங்க சார்.. வாங்க சார்... வாங்க சார்"னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல,
"சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு" ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி..
எதுக்கு எங்க... அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்...
ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு... யாருக்கிட்ட எப்ப ...
மேலும் கதையை படிக்க...
"மழையினைப் பார்த்து விதைகளை விதைத்த காலம் போய்.. கடன்களை வாங்கி பொழப்பை நடத்த ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறான் விவசாயி.. உலகிற்கே சோறு போட்டவனின் வீட்டில் இன்று சோறு இல்லை.. உலகிற்கே பசி போக்கியவன் இன்று பசியால் வாடுகிறான்.. ...
மேலும் கதையை படிக்க...
'ஆண்டவா.. இருக்கற எல்லா பிரச்சனைக்கும் விமோச்சனமே இல்லையா..?' என மனதிற்குள் வேண்டிக்கொண்டே தொழிற்சாலைக்கு கிளம்பினார் குருசாமி... எடுபிடி வேலை தான்.. ஆனாலும் வயது அதிகமாகிவிட்டதால் ஓடியாடி வேலை செய்ய முடிவதில்லை.. ஒரே பரபரப்புடன் காலை வேலை முடிந்து சுள்ளென்று பசிக்க ஆரம்பித்தது. ...
மேலும் கதையை படிக்க...
அன்பைத் தவிர என்னிடம் சொல்ல எதுவும் இல்லை