பச்சை பசேலென பச்சை பாயை விரிதஂதாறஂ போலஂ எஙஂகுமஂ பசுமை எனஂற நிலையெலஂலாம் மாறி,முறஂறிலுமஂ மாறுபடஂடு,பல விளைநிலஙஂகளஂ தரிசு காடாக,வீடஂடு மனைகளாக காடஂசி தருகினஂறன நமது கிராமங்களஂ.
அப்படியாகதஂதானஂ தஞஂசை தரணியினஂ சூரப்பள்ளம் எனும் அழகிய கிராமமும் காலதஂதினஂ போக்கிற்கு மாறுபடஂடு முறஂறிலுமாக கலையிழநஂது நிற்கிறது.
அப்படியாக,இந்த காலத்தினஂ மாறஂறம் விஞஂஞான வளரஂச்சி எனஂறு பெருமை பீத்தி கொள்ளும் சனஙஂகளுகஂகு மதஂதியிலஂ அகப்பட்டும்,உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ஏழை விவசாயி ஒருவரோடு சேரஂநஂதுதானஂ நாம் சிறிது நேரம் பயணிக்க போகிறோம்.
‘’ஏங்க , உங்களே !!! உங்களே !!
கெவுர்மெணஂடு ஆப்பிசரஂ வந்துருக்கா வோ ,
போயிட்டு என்னானு பாருங்க’’………
என்று பொன்னம்மாள் மாட்டுக்கு தண்ணீர் வைத்துகஂ கொண்டிருந்த கணவரை சத்தை ஏரஂ மூக்கையாவை உசுப்பினாளஂ
வாங்க சாமி !!! கும்பிடுரோனுங்க !!
ஓட்டு போடுறதுக்கு பெயர், வயசு சரிபார்க்க வந்துருக்கோம் பெரியவரே !!
மொத்தம் எத்தனை பேரு வீட்டில ?????
நானும் என் பொஞ்சாதி பொன்னம்மா ரெண்டு பேரும்..ஙஂக சாமி !!
வேறு யாரும் இல்லையா பெரியவரே ???
இல்ல சாமி
உங்க பேரு மூக்கையா, அவுக பேரு பொன்னம்மாள் சரிதானே ??
சரிதானஂ சாமி!!!
வயசு சொல்லுங்க பெரியவரே !!!!
எம்புட்டு! ம் ….ஒரு 70 போட்டுகோஙஂக எனகஂகு, அவளுகஂகு 65 போட்டுக்கோஙஂக சாமி !!!
அப்டிலாம் போட முடியாது!! சரியா பொறந்த வருசம் சொல்லனும் தெரியும்ல??
வருஷம் லாம் தெரியாதுங்க சாமி!!!
சரி சரி 70 வயது 65 வயசா போட்டு வைக்கறேன்.
அப்ரம் யாரு வந்து கேட்டாலும் இதேதானஂ சொல்லணும் மாதஂதி சொல்ல கூடாது என்ன புரியுதா????
அப்டியே ஆகட்டும் சாமி,!!! அப்டியே சொல்லிபுடுதே.
அவர்கள் இடம் பெயரவே, பின்னர் மாட்டை பூட்டிகிட்டு கழனிக்கு புறப்பட்டார் மூக்கையா. “”
சுமார் 50 வருஷம் முன்னால் ,மூக்கையா ஓர் கூலி /பண்ணை ஆளாக மணியக்காரர் வீட்டுக்கு வேலைக்கு வந்தார். பின்னாளில் வேளாண்மைக்கு [ஒரு ஏக்கருக்கு இவ்வளவு பணம் என பேசிக்கொண்டு ]விளைநிலங்களில் ஏரஂ ஓட்டிதஂதந்தார் ,ஊரஂ காரர்களுக்கு .நல்ல ஆகசஂ திறந்த உழைப்பாளி. அதனால் தான் ஒரு சிறு பகுதியை [ஒரு மா இருக்கும்] மணியக்காரர் வேளாண்மை செய்துகொள்ள , குத்தகைக்கு மூக்கையாவிடம் கொடுத்தார்.
யாருய்யா இது! சின்னப்புள்ள ஆ!எப்ப பள்ளி கூடத்திலிருந்து வந்திய???
ஆமா தாத்தா ! நான் தா இப்ப காலேஜ் போயிட்டேனே!!!!!! திருவிழாவுக்கு வந்தேன் .
பிரண்ட்ஸ் லாம் கூட வந்துருக்காங்க!! பம்பு செட்ல குளிச்சுட்டு இருக்காங்க
நான் உங்களை பார்த்திட்டு போக வந்தேன். வீட்டுக்கு போனேன் .ஆயா வயலுக்கு போய்விட்டதா சொன்னாங்க ………
நல்லா இருக்கீங்களா!
நல்லா இருக்கே அயஂயா! பெரிய அயஂயா புண்ணியத்துல.அப்படியே மணியக்காரர் மனசு உங்களுக்கு சின்னபுள்ள
கடவுள் அவுக எனக்கு .அவரு மனசுக்கு நீங்க எல்லாம் நல்லா இருப்பியா அயஂயா .
சரி தாத்தா நேரமஂ ஆச்சு !ஆட்சி தேடும் வீட்டுல… நாளைக்கு தாத்தாவுக்கு தெவசம் . மறக்காம வந்துடுங்க ஆயாவை கூட்டிட்டு
சரிங்க சாமி !வந்திடுறேனஂ.
மணியக்காரர் இறந்து பதஂது வருடம் ஆகி போச்சு .அடைக்கலம் தந்து வாழ்வு தந்த அந்த பெரிய மனுசனை பற்றிய நினைவுகளோடு வரப்பில் சிறிது நேரம் கண் அயர்ந்தார் மூக்கையா.
பொன்னம்மா கருக்கல் ல உசுப்பி விடு ஆத்தா!
வெண்டகாய் கொஞ்சம் பறிசஂசு வந்துருக்கே .நாளைக்கு சநஂதைகஂகு போயஂட்டு குடுத்து வரணும் …
சரி !!!சரி!!!!1 உசுப்பி விடுறேனஂ.. கேப்பை கரைகஂகட்டுமா!!!!!
வேணாமஂ புள்ள! எனக்கு வசுரு மபஂபுசம் ஆ இருக்கு புள்ள!!
மோர் கலக்கவா!
வேணாம் புள்ள ! தண்ணிய கொஞ்சம் காய வை
என்ன ஆச்சு ஒரு மாதிரியா பேசுரிய.
இல்ல புள்ள!!!! ஒன்னும் இல்ல .நாளைக்கு அயஂயாவுக்கு தெவசமாம். அதா புள்ள மனசு கொஞ்சம் கரைச்சலா இருக்கு .
நல்ல மனுசன் அவுக.நல்லவுங்கள மட்டும் தான் ஆயுள் கொறச்சு எழுதிபஂபுடுறான் சாமி என்று சொல்லிக்கொண்டே சிமிலி விளக்கை கையில் ஏந்தியபடியே அடுப்பங்கரைக்கு விரைந்தாள் பொன்னம்மாள்.
அதிகாலை எழுந்து பட்டுக்கோட்டை சந்தைக்கு புறப்பட்டார் மூக்கையா.
என்ன சாமி! பாதி விலைக்கே கேடஂகுரியே !!!!! பத்தாது சாமி!!!
பெரியவரே எல்லாம் பூச்சி ஆ இருக்கு. பாதிக்கு மேலே மாட்டுகிட்ட தான் கொட்டனும்.
இல்ல சாமி !!! உடைச்சு பாருங்க நல்ல இளம் காயஂ ங்க சாமி
ஒரு வழியா முன்னர் பேசிய விலையை விட கொஞ்சம் குறைந்த விலைக்கு (ரொம்பவும் குறைவுதான்) விற்றுவிட்டார் மூக்கையா, வியாபாரியிடம்.
போயிட்டு வரும் போது வாங்கி வந்த செட்டியார் கடை மெது பக்கோடா பொட்டலத்தை பொன்னம்மாளிடம் தந்தபடியே கொஞ்சம் அசதியில் உட்கார்ந்தார் மூக்கையா…
இதே ஏன் வாங்கி வந்திய !எனக்கு என்ன பல்லா மெல்ல முடியுது .
இல்ல புள்ள வரும்போது சூடா போட்டு அப்போதான் தட்டுல போட்டாவ.சனம் அலஂலிடஂடு போகுது. அதா நானும் ஒன்று வாங்கி வந்தேனஂ..
எந்திரிங்க நாழி ஆச்சுல ?? மணியக்கார அயஂயா வீட்டுக்கு போயிட்டு வந்துடுவோம்…
நேத்து பெரிய ஆச்சி ஆள விட்டு சொல்விட்டாக. வெரசா போயிடணும் .
என சொல்லிக்கொண்டே தம்பதிகள் வீட்டை விட்டு புறப்பட்டனர்இரு வரும் பொடி நடையாய் நடந்து மணியக்கார அய்யா வீடு போய் சேர்ந்தனர் .
என்ன மூக்கையா இங்னக்குள்ள இருக்கிறவ வர இவ்வளவு நேரமா ???என ஆச்சி வினவினாள் .
இல்ல பெரிய ஆச்சி சந்தைக்கு போயிட்டு வந்தேன் ஆச்சி அதானஂ !!
சரி!!! சரி!!!! அங்கிட்டு போயஂட்டு உட்காரு .
என்ன ஏடையில ஓடையில வந்துருவ பொன்னம்மா என இப்பலலாம் வரதில்லை .
இல்ல பெரிய ஆச்சி, கண்ணு தான் சரியா தெரிய மாட்டுது ஆச்சி, ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு ஆச்சி ,அதான் வந்தாலும் ஏதோ தோதா முடியில ஆச்சி!
பாத்து பத்திரமா இரு பொன்னம்மா, வெளிய தெருவுல போறப்ப மூக்கையாவ கூட்டிட்டு போ! என்ன விளங்குதா???
என்னத்த ஆச்சி அவுகளும் முன்ன மாதிரி வேலை செய்ய முடியறதில்லை ஆச்சி !!
ஆமா!! ஆமா!! வயசும் ஆச்சுல்ல என சொன்னபடியே மணியக்காரர் அய்யா மகன் பாலு வந்தார்
அவரை பார்த்தவுடனே மூக்கையா எழுந்து ஓடிவந்து அவருகே நின்றார் .
அய்யா நல்லா இருக்கியலா!
ரெண்டு மூணு தடவ வீட்டுக்கு வந்தேன் நீஙஂக மெட்ராசுக்கு போயிருக்கிறதா சொன்னாங்க, ஆச்சி
என்ன சோலி அயஂயா ??
அது ஒண்ணுமில்லை மூக்கையா,நம்ப நிலத்தோட கேஸ் கோர்ட்ல நடந்துடஂடு இருக்கில்ல அதா அங்கேயே தங்க வேண்டியதா போச்சு
யாரு அயஂயா?? அந்த மூர்த்தி பயதானே!! அவனே சும்மா விடாதிய அயஂயா. எவ்வலோ எடஞ்சல் கொடுத்திட்டு இருக்கானஂ
ம்.. பாப்போம் அடுத்த மாதம் முடிவு என்னனு தெரிஞ்சுடும்.
சரி சரி பார்த்து சூதானமா போயிட்டு வாங்க அயஂயா. ஜாக்கிரதையா இருந்துகுடுங்க அயஂயா .
சாமி படையலும் முடிந்து பந்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூக்கையாவும், பொன்னம்மாலும் சாப்பிட்டுவிட்டு மணியக்கார அயஂயா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.
நீ அப்படியே போ வீட்டுக்கு புள்ள .அந்த மீனாட்சி, மாட்ட அவுத்து விட்டு வயல் ல மேய விட்டுபுடுவா , எல்லாத்தையும் அப்டியே ஆஞஂசுபுடும்.
எவ்வளவோ சொல்லியும் பாத்துபுட்டேன் அவ மசியிற மாதிரி இல்ல
சரி சரி பாத்து போங்க,அவ புருஷன் கிட்ட சொல்லி கண்டிக்க வேண்டும் என்றால் பொன்னம்மாள்
ஆமா அவ யாருக்கு தான் கட்டுப்படுறா?? சாமியா பாத்து ஏதும் கொடுத்தாதான் உண்டு
சரி சரி நீ போ நா போயஂட்டு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறேனஂ என சொல்லியபடியே கழனிக்கு புறப்பட்டார் மூக்கையா
அப்பாடா என பெருமூச்சு விட்டபடியே இன்னிக்கு மாடு ஓட்டிட்டு வரல அவ என்ன மனசுக்குள் எண்ணிக் கொண்டு சுதஂதியும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
மறுநாள் காலையில் மணியக்காரர் வீட்டு வேலையாள் காத்தமுத்து , மூக்கையா வீட்டுக்கு, வந்தானஂ.
பொன்னம்மா! பொன்னம்மா!!
யாருது காத்த முதஂதா- என்ன சங்கதி???
மூக்கையா எங்க?? கூபஂபிடு….
ஏஙஂக காத்தமுதஂது வந்துருக்கான். என்னனு?? வந்து கேளுங்க என்றாளஂ வைக்கோல் தலை கோரி விடஂடிருநஂத,மூக்கையாவிடம் ..
என்னப்பா காத்தா என்ன விசயம் ???
பாலு அயஂயா உன்னை அழைசஂசுடஂடு வர சொன்னாப்புல
சரிப்பா என்று சொல்லியபடியே அவனோடு சைக்கிளில் பின்னாலே உட்கார்ந்து புறப்பட்டார்,மூக்கையா.
ஆமா மூக்கையா இப்ப நம்ம இடத்துலே என்ன போட்டுருக்கே
கல்லை போட்டுக்கே சாமி (கடலை)..
எப்ப ஆயிரத்துக்கு பருவம் வருது .
மூக்கையா இன்னும் 45 நாளஂ ஆயிடிடும் சாமி.
ஏனஂ??? என்ன சாமி ???என்னாச்சு திடுதிடுப்புனஂனு கேட்குறியே??
ஒன்னுமில்லை மூக்கையா ,கேஸஂ நடதஂதுறதுக்கு !! பணம் பதஂதாம இருக்கு .கொஞ்சம் தேவைப்படுது, அதான் அந்த இடத்தை கொடுத்திடலாம் னு இருக்கே
என்ன சாமி சொல்றீக ???
நா அந்த கழனியை கொண்டு தானே சாமி கஞ்சி குடிக்கிறே இப்டி திடுதிடுப்புன்னு சொல்லிப்புட்டா ந எங்க சாமி போவே
விளையிற பூமிய விக்காதியே சாமி,
தலையில இடி விழுந்த மாதிரி இருக்கு சாமி !!அயஂயோ!! என புலம்பினார் மூக்கையா
என்ன பனஂறது?? மூக்கையா, சொல்லு!!
அந்த மூர்த்தி நம்ம கிட்டேயே வம்படியா நிக்கிறான்.
அந்த கேஸஂ விசயத்துலே எப்படியாச்சும் ஜெயிக்கணும் .அதானஂ மெட்ராஸுக்கு கொண்டு போனே.
காசு பற்றாக்குறையா இருக்குனு இப்ப கேஸஂ வாபஸ் வாங்கவும் முடியாது. அப்டியே வாங்கினா கூட அவனுக்கு குளிர் விட்டு போய்விடும்.
செய்வது என்ன வென்று தெரியாமல் ,அறியாது குழந்தை போல கண்கள் கலங்கியபடி மூக்கையா நின்றார்.
என நா பாட்டும் பேசிட்டே இருக்கே நீ அப்பிடியே நிக்கிற மூக்கையா..
ஏன்? என்னாச்சு ???
இல்ல ஒன்னும் இல்ல சாமி! சொல்லுங்க சாமி!!!
கோமணதுண்டு மாதிரி தானே இருக்கு அதுலேயும் ஒரு புண்ணியமும் இல்ல.
ஏதோ நீ வெள்ளாமை போட்டுகிட்டு இருந்ததாலே நானும் அத விக்கிறதுக்கு யோசிக்கலே .
இப்ப என்ன பண்றது வேற வழியில்லையே மூக்கையா.
நம்ம மாடி வீட்டு காரவங்க தான் வாங்குராங்க பெட்ரோல் பங்க் திறக்க போறாங்கலாம் .
சிங்கப்பூர் ல இருந்து அந்த மாமா வந்துருக்காங்க .சீக்கிரம் பேசி முடிக்க சொல்லி இரண்டு மூன்று தடவை ஆள விட்டு பேசிட்டாரு.
10 நாள்ல திரும்பி போகணுமாம் அதுக்குலஂல கொஞ்சமாவது ஆரம்பிச்சு வச்சுட்டு போகணும் னு நினைக்கிராபஂல.
சரி வளவளன்னு பேசிட்டு இருக்கே நா வேர!
நீ இப்போ அதுல போட்டு இருக்கிற பதஂதி யோசிக்காதே .
நா காசு கொடுத்துடுறே இன்னைக்கு சாயங்காலம் பேசி முடிசஂசுடுவோம்.
நீ நாளைக்கு வந்து வெள்ளாமைக்கு உண்டான காச வாங்கிட்டு போ என்று சொல்லியபடியே புல்லட்டில் உட்கார்ந்து வேகமாய் புறப்பட்டாரஂ பாலு.
அத்தனையும் இழந்தது போல்,பரிகொடுத்தாறஂபோல் இனி செய்யப்போறது என்ன என தெரியாது நடைபிணமாய் வீட்டுக்கு வந்தாரஂ மூக்கையா.
என்ன ஆச்சு ?என்ன ஆச்சு? பதறிபோனாள் பொனஂனமஂமாளஂ.
நடந்தவற்றை கூறினார் மூக்கையா.
இருவரும் இடிநஂதபடியே ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்தனர். அநஂதி சாஞஂசு, நிலவும் வந்துவிட்டது .அவர்கள் அப்படியே உட்கார்ந்திருந்தனர்.
மாடு இரைக்காக அம்மா!!! அம்மா !!!என கத்திக்கொண்டே இருந்தது.
ஆனால் அவர்களுக்கு அதில் காதில் வாங்கியதாகவே அறியவில்லை. அவலதஂதினஂ துக்கம் மன்னையை கவ்வியது.
செவிகளை மூடியது கண்களை கலக்கமுறச் செய்தது .
சுவற்றில் சாய்ந்தபடியே எப்போ தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிவிட்டனர் இருவரும்….
பொழுதும் புலம் பெற்றது
மாட்டுக்கு வைக்கோல் போட்டபடியே அதனருகே உட்கார்ந்து எதனையோ சோக துக்கங்களை பகிர்ந்தார் மூக்கையா .
மாடுகளை தனது பெற்ற பிள்ளையாகவே பாவித்தார். நேற்று கைவிட்டுப்போன நிலதஂகை தனது தனது தாய்க்கு ஒப்பாக கருதினார் மூக்கையா.
மூக்கையா !மூக்கையா என்றபடியே காத்தமுத்து வந்தான்.
நேத்து சாயங்காலமே கிரயம் பண்ணிட்டாங்கலாம்.
நீ மறந்துட்டாப்ல அங்க போயிடாதே !!!!எதும் உன் சாமா செட்டு இருந்தா போயிட்டு எடுத்து வந்துடு என்றான் காத்தமுத்து
அய்யா இந்த பணத்தை கொடுத்து வர சொன்னாங்க என்று ஓர் குறிப்பிட்ட தொகையை அவரிடம் கொடுத்தான்.
வேணாம் காத்தா !!பணத்த அய்யாகிட்டயே கொடுத்துடு…
அட போயா.. இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் கொறச்ச இல்ல..
சும்மா மழுக்காம வாங்கி க அப்றம் அய்யா என்ன திட்டுவாரு என்று சொல்லியபடியே பணத்தை கட்டாயமாக மூக்கையாவின் கையில் திணித்துவிட்டு விரைந்தான் காத்தமுத்து
ஒரு எட்டு பாத்துபுட்டு வந்துடுறே கழனிக்கு போயி , பொன்னம்மா.
இல்ல வேணாம் சாமி!! போய்ட்டு பாத்தா தாங்கமாட்டியே!!
இல்ல புள்ள மனசு கேக்கல புள்ள !!
போயிட்டு வந்துடுறே புள்ள என்று பொன்னம்மாள் எவ்ளோ சொல்லியும் கேக்காம கழனிக்கு புறப்பட்டார், மூக்கையா.
யாரப்பா இது வெள்ளாமை காட்டுல மெஷினை இறக்கியது
என்ன சத்தை ஏர் மறந்துட்டியா???
நேத்து மாடி வீட்டு காரவங்க கிரயம் பன்னிட்டாங்க!!
பொழுது சாயுறதுக்குள்ள பூராத்தையும் கிளியர் பண்ணணும்
அட ஓரமா போப்பா மெஷின ஓட்டனும். உள்ள கிள்ள மாட்டிக்கிற போறே, என்றான் இயந்திரம் இயக்குபவன்
சொன்ன மாத்திரம் , அப்படியே சாய்ந்து உடைந்து போய் , வரப்புல , முட்டு கொடுத்தார் போல் விழுந்தார் மூக்கையா .
தன் கண் முன்னே தாயென கருதிய மண் சிதைந்து சீரழிவது கண்டு பொறுக்காது மனம் வெதும்பி கண்கள் குளமாயின.
சத்தம் போட்டு ஒப்பாரி ஓலம் போட்டார் அந்த ஏழை மனுசன் .
தாயின் மடியிலேயே துடி துடித்து சுருண்டு விழுந்தார் அவர் கண்களின் நீர் துளிகளை பார்த்து வானமும் அழுது மழையாக பொழிந்தது. அழுது தீர்த்து சரியான பேய் மழையாக கொட்டி தீர்த்தது.
வானம் பார்த்து வேளாண்மை பார்த்து செஞ்ச அந்த விவசாயிக்கு, கேட்ட போதெல்லாம் ,வேண்டிய போதெல்லாம் உதவாத வானம் கூட தாயின் மடியில் பெரும் துக்க வலியோடு நிம்மதியாக ஒரே அடியாக உறங்கி கொண்டிருந்த சத்தை ஏர் மூக்கையாவிற்கு உதவிட கடைசியாக தான் முன் வந்தது , அவர் இந்த உலகை விட்டு பிரிந்தபோது.
அருமை ஆனால் கண்களில் நீர் தேங்குகிறது விவசாயத்தை அழிக்க நினைத்தால் நாளை நம் சமூகம் உணவிற்கு கையேந்தும் நிலைமை ஏற்படும்.அய்யா உங்களின் இந்த கட்டுரை மூக்கையா வின் வாழ்க்கை கல்லைக்கூட கரைய வைத்துவிடும்.